ஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் மனைவியாக செட் பண்ணி ததஜவுக்கு பணம் கொடுத்தால் வள்ளல்

கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு, ஜிஹாது கூடாது என பகிரங்கமாக பேசி வரும் லுஹா  ஜீனத் என்ற பெண் மீது குற்றம் கூறினார். கொலைகாரர்களை அனுகிய லுஹா மார்க்க ரீதியாக தண்டனை வழங்கும்படி கூறினார். ஜீனத் என்ற அந்தப் பெண் யார் என்றால் த.த.ஜ. மாநில பேச்சாளர் அலி றஹ்மானியின் மனைவியும் லுஹாவின் தங்கையும் ஆவார். பணத்திற்காக ஒருத்தன் மனைவியை  இன்னொருத்தன் மனைவியாக செட் பண்ணி அந்நிய இருவரை கணவன் மனைவியாக  வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கீழ்தரமான தொழில் செய்பவனை பி.ஜே. தன் அணியில் சேர்த்துக் கொண்டார். அவரை தவ்ஹீதுக்காக அள்ளிக் கொடுத்த வள்ளல் என பி.ஜே. வர்ணித்தார். இது இன்று எழுதியது அல்ல. 11.12.11அன்று கூட இருந்த ததஜ பொதுக்குழுவுக்கு சவால் விடுத்து அன்றைய ஆண்மையற்ற மேலாண்மைக்கு 9.12.11ல் எழுதியது. இதன் லிங்கையும் 26.11.17 அன்று கூத்தாநல்லூர் ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தின் கடைசியில் இணைத்து இருக்கிறேன். படத்தில் உள்ளவர்தான் கூத்தாநல்லூர் ஜின்னா.


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் 26.11.17
குவைத் மண்டல TNTJ செயலாளர் கண்ணியத்திற்குரிய கூத்தாநல்லூர் ஜின்னா அவர்களுக்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்லாமு அலைக்கும் வரஹ்.. எல்லாவற்றையும் பேசுவோம் என்று தாங்கள் சொன்னதன் அடிப்படையில் லுஹாவுக்கு நாம் மெயிலில் அனுப்பிய (மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்புபடி நடவடிக்கை எடுப்பீர்களா?)  கடிதத்தையும் உங்கள் பார்வைக்கு அனுப்பி தந்திருந்தேன்.

கப்பல் உட்பட எல்லாம் பேசுவோம். விவகாரம்  2002ல் லுஹா துபைக்கு  என்னிடம் வந்து சொன்னதில் இருந்துதான் ஆரம்பம். (பி.ஜே.யை விமர்சித்து எழுதிய கடிதங்களெல்லாம் பிளாப்பியில் போட்டு லுஹாவுக்கு அனுப்பி உள்ளோம். கடிதத்தைப் பார்க்கமலேயே தாங்கள் இதில் வேகமாக சென்று விட வேண்டாம் என லுஹா கைப்பட எழுதியுள்ளார். பி.ஜே. பற்றிய செய்திகளை தந்தவர் லுஹா என்பதற்கு இதுவும் ஆதாரம்)


இது உண்மையா என்று விசாரித்து விட்டு அல்லாஹ்வுக்காக பதில் தாருங்கள் என்று எழுதி இருந்தேன். நீங்கள் கேட்டு விட்டு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். அதனால்தான்

முபாஹலா பின் வாங்கியது யார்? நெல்லிக்குப்பம் தாஜுதீன் அவர்கள் பி.ஜே.க்கு அனுப்பிய கடிதம்.

பணம் வாங்கவில்லை என்று பி.ஜே. சொல்வது பொய்யா? பி.ஜே. பணம் வாங்கினார் என்றுள்ள லுஹா கணக்கு பொய்யா?

போன்றவற்றை உங்களுக்கு அனுப்பவில்லை. நீங்கள் என்னை அட்ரஸ் இல்லாதவர் என்று சொல்லி வருவதாக குறிப்பிட்டீர்கள். எனது அட்ரஸ் மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானின் முதல் 2 மூல பத்திரங்களில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நீக்கப்பட்டதால் குறை சொல்வதாக சொல்லி உள்ளீர்கள். அது உண்மை அல்ல. உள்ளிருந்தே பல தீமைகளை தடுத்து இருக்கிறேன். ஜாக்கிலிருந்து ஜிஹாது செய்ய என்று வெளியேறிய பிறகு. பி.ஜே. பக்கம் போதிய மவுலவிகள் இல்லை. அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, எம்.எஸ் சுலைமான் போன்றவர்கள் ஜாக்கில் இருப்பதற்கு காரணம் வருமானம்தான். ஆகவே நாம் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வழி செய்ய வேண்டும் என்று பல அமைப்புகளை உருவாக்கினார்கள்.

அதில் ஆலிம்கள் மட்டுமே இருந்தார்கள். ஏனெனில் அவை பி.ஜே. உடனான ஆலிம்களுக்கு உதவுவதற்காக உருவான அமைப்புகள். ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமிய்யாவை மதனிகள் மட்டுமே உள்ள அமைப்பு என்று விமர்சித்தீர்களே என்று பி.ஜே.யிடம் நேரில் நான்தான் எதிர்த்து கேள்வி கேட்டேன். அதன் பிறகு Er சபியுல்லாஹ்கான், ஹுசைன் கனி, சங்கரன் பந்தல் சிராஜ் போன்ற வசூலித்து தருபவர்களை மட்டும் 2000ல் திருச்சி வைத்து சேர்த்தார்கள்.  

தவ்ஹீது பிரச்சாரக் குழு, இஸ்லாமிய கல்விச்சங்கம் போன்ற பல பெயர்களில் வசூலித்தார்கள். சரியாக வசூல் ஆகவில்லை என்றதும் பி.ஜே. வேறு ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தார். அதுதான் தஃவா பணி என்ற பெயரால் வசூலிக்க வேண்டும் என்ற திட்டம். தஃவா என்றால் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தில் அழைப்பது என்று விளங்கி வைத்துள்ளார்கள். எனவே தஃவா என்ற பெயரால் கேட்டால் சுன்னத் ஜமாஅத் காரனும் தருவான். அதை வாங்கி நாம் பயன்படுத்தலாம் நாம் செய்வதும் தஃவா தானே. பொய் சொல்லி வாங்கியதாக ஆகாதே என்று தஃவா பணி பெயரால் வசூலிக்க மவுலவிகள் இறக்கி விடப்பட்டார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் தஃவா என சுன்னத் ஜமாஅத்தாரிடம் காட்டுவதற்காக சில காட்சிகளும் இருக்கணும். அதற்காக (PJ அமைப்பாளராக இருந்த) த.மு.மு..வின் முஸ்லிம் டிரஸ்ட் செய்து வந்த தஃவா பணியை 65 ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். இனி முஸ்லிம் டிரஸ்ட் தஃவா பணி செய்யக் கூடாது என்றும் ஒப்பந்தம் போட்டார்கள். இப்படி எல்லாமே பி.ஜே. உடன் இருந்த ஆலிம்களுக்கு உதவத்தான் இந்த திட்டங்கள்.  இதை எதிர்த்தேன்.

லுஹா மொழி பெயர்க்க உள்ள அபூதாவூது மொழி பெயர்ப்புக்காக ஷேர் சேர்த்து லுஹாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதை எதிர்த்தேன். இதுவும் லுஹாவுடன் நட்பாக இருந்த காலத்தில்தான். (ரோஷமுள்ள ரோஷன்களே) இதில் எனக்கு நீதி வேண்டும் என்று கேட்கவில்லை. நீங்கள் உண்மையாளர்களை ஆதரித்து நிற்கிறீர்களா? நீங்கள் வசூலித்துக் கொடுக்கும் பணம் அல்லாஹ்விடம் நன்மை பெற்றுத் தருமா? எனவே நான் சொல்வது உங்களுக்குப் பொய்யாகத் தெரிந்தால்  http://mdfazlulilahi.blogspot.ae/2011/12/blog-post_9.html இந்த லிங்கில் உள்ளபடி எனக்கு எதிராக துஆச் செய்யலாம். வஸ்ஸலாம். 

(லிங்குகனை கிளிக் செய்து பாருங்கள் மானம் கப்பல் கப்பலாக ஏறுவது தெரியும்.

 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.