
fromKeelakarai Anjal
toKeelakarai Anjal
dateSat, Oct 31, 2009 at 10:27 PM
subjectஇன்னும் இவர்களை நம்பனுமாம்!!! எச்சரிக்கை! எச்சரிக்கை.........
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 10:27 PM (2 hours ago)
---------- Forwarded message ----------
From: umar sherief
Date: 2009/10/31
Subject: Fwd: இன்னும் இவர்களை நம்பனுமாம்!!! எச்சரிக்கை! எச்சரிக்கை.........
To:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சமுதாய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
'நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுககு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!(அல்அஹ்ஸாப் :70)
உணர்வு வார இதழின் உரிமை 14 குரல் 9, 8-ம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் எங்களது நாச்சியார்கோயில் திருநரையூர் உமர் (தவ்ஹீத்) பள்ளிவாசல் நிர்வாகிகளான ஜாஃபர் அலி மற்றும் ஒலி முஹம்மது ஆகியோர் குறித்து வெளியான செய்திகள் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
நபி(ஸல்) அவர்கள்; மூன்று விஷயங்கள் வெற்றி தரக்கூடியவை, மூன்று விஷயங்கள் அழிவை தரக்கூடியவை என கூறினார்கள்.
வெற்றி தரக்கூடியவை – 1. தனிமையிலும், சபையிலும் அல்லாஹ்விற்கு அஞ்சுவது, 2. விருப்பு வெறுப்பு இரு நிலைகளிலும் உண்மையை பேசுவது, 3. வறுமையிலும், செழிப்பிலும் நடுநிலையை மேற்கொள்வது.
ஆழிவை தரக்கூடியவை - 1. மனோ இச்சையை பின்பற்றுவது, அதற்கு அடிமையாவது, 2. தன்னை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு பேராசை கொள்வது, 3. இருமாப்பு கொள்வது, இந்த மூன்று நோய்களில் இதுவே மிகவும் ஆபத்திற்குரியது.(அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), நூல்: பைஹகி, மிஷ;ஹாத்)
யார் இந்த ஜாஃபர் அலி?
ஏகத்துவ பிரச்சாரங்கள் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் அறிமுகமான ஆரம்ப காலத்தில், சுன்னத்துவல் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளால் குர்ஆன்-ஹதீஸ் வழிமுறையில் தொழ விரும்பியவர்கள் சந்தித்த சொல்ல இயலாத துன்பங்களும், இடையூர்களும் நாமனைவரும் அறிவோம். அதுபோன்ற ஒரு நிலை எங்கள் ஊரில் ஏற்பட்டபோது, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆன்-ஹதீஸ் வழியில் ஊர்தவ்ஹீத் சகோதரர்கள் தொழ, தான் குடியிருந்த வீட்டை காலி செய்து கொடுத்து ஏற்படுத்திய பள்ளி தான் இந்த உமர் பள்ளிவாசல். சென்ற 14-08-2009 அன்று இப்பள்ளி புதிய கட்டிடமாக கட்டி திறப்பதற்கு முன்பு வரை ஜாஃபர் வீடு தான் உமர் பள்ளிவாசலாக இயங்கியது. டி.என்.டி.ஜெ உருவாவதற்கு முன்பே எங்கள் ஊர் சகோதரர்களால் இஸ்லாமிய கல்வி கலாச்சார நல அறக்கட்டளை என்ற பெயரில் பதிவு செய்து, மார்க்க பிரச்சாரங்கள், நல உதவிகள், சமூக பணிகள் இன்னும் ஏராளமான செயல்பாடுகளை டி.என்.டி.ஜெவுடன் இணைந்தே செயலாற்றி வந்தோம். வல்ல அல்லாஹ்வின் கிருபையால் இந்த ஜாஃபர், ஒலி முஹம்மது மற்றும் எங்களுரைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் சகோதரர்களாளும் எடுத்த பெரும் முயற்சிகளின் விளைவாக கூரையில் இயங்கிய பள்ளியை இன்று பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த உமர் பள்ளிவாசலை முகவை சகோதரர் ஒருவரே முழுவதும் கட்டி தந்து இந்த பள்ளிவாசல் எந்த ஜமாஅத்திற்கோ, இயக்கத்திற்கோ உட்படாமல் முழுக்க முழுக்க ஊர் மக்களுக்கு குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் பயன்பட வேண்டும் என்று மேற்கண்ட அறக்கட்டளைக்கு வக்ஃபு செய்தார்கள்.
மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(வடக்கு-தெற்கு) தலைவராக இந்த ஜாஃபர் இருக்கும் போதுதான் குடந்தை குலுங்கும் அளவுக்கு ஜனவரி'9,2006-ல் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடுப் பேரணி-மாநாடு நடத்தப்பட்டது. மக்கள் மீண்டும் ஜாஃபரை மாவட்ட தலைவராக தேர்ந்தெடுத்த போது, நீண்ட நாட்களாக நானே தலைவராக இருக்க விரும்ப வில்லை என்று உறுதியாகக் கூறி, வேறு ஒரு சகோதரரை தலைவராக நியமித்து கும்பகோணம் பகுதிகளில் நிறைய டி.என்.டி.ஜெ கிளைகள் உருவாக அல்லாஹ் இவரை காரணியாக்கினான். சமீபகாலமாக தனி நபர்களின் கண்ணியத்தை குலைப்பதையே கொள்கையாக கொண்டு செயலாற்றி வருகிற டி.என்.டி.ஜெ பட்டியலில், ஜாஃபர் அலியையும் சேர்த்துள்ளனர். மேற்கண்ட உண்மைகளை மறைத்து அவருடைய கண்ணியத்தை சிதைக்கும்விதமாக இப்போது இவருக்கு பதவி இல்லை என்பதால் அவரே மீறுகிறார் என்று உண்மைக்கு புறம்பாக இட்டுகட்டியுள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் இவ்வளவு பணிகளை செய்துள்ள சகோதரர் ஜாஃபர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிளை செயலாளராக பணியாற்றி வந்தார். இதுதான் டி.என்.டி.ஜெ பார்வையில் பதவி ஆசையா?
மேலும் டிரஸ்ட் மூலம் நடத்தும் பள்ளிவாசல் தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் செயல்படுகிறது என்று எண்ணி உதவிகள் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறார்களாம். ஒவ்வொரு முஸ்லிமும் பள்ளிவாசல்களுக்கு உதவி செய்யும்போது, எவரும் இயக்கத்திற்காக எண்ணி உதவி செய்வது கிடையாது, முழுக்க முழுக்க அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்துதான் உதவி செய்கிறார்கள். சகோதரர்களே! இவர்களுடைய கீழ்தரமான எண்ணங்களை சிந்தியுங்கள்! அல்லாஹ்வுடைய பள்ளிவாசலுக்கு உதவும் சகோதரர்களை தடுப்பதோடு, இவர்களுடைய நோக்கம் என்ன என்பதை வல்ல அல்லாஹ் அவர்களை கொண்டே சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்! இந்த பள்ளிவாசல் உருவாக எந்தவகையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை அல்லது மாநில தலைமையுடைய எந்த பரிந்துரையும் பெறாமல் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால் எங்கள் டிரஸ்டின் பெயரை மாத்திரமே பயன்படுத்தி இப்பள்ளியை உருக்கி இருக்கிறோம். ஆகவே, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடி உதவக்கூடிய கொள்கை சகோதரர்களை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதான் கடந்த கால வரலாறு.
ஜாஃபர் மற்றும் ஒலி முஹம்மது மட்டும்தான் தனி டிரஸ்டாக இயங்குகிறார்களா?
முக்கிய அறிவிப்பு என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் - கடந்த காலங்களில் டிரஸ்ட் என்ற பெயரில் இயங்கக் கூடாது என்றும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் தான் இயங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்களாம். அதனால் ஜாஃபர் மற்றும் ஒலி முஹம்மது மட்டும் தான் தனி டிரஸ்ட் அமைத்து செயல்பட்டு வருவது போன்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த டி.என்.டி.ஜெ மாநில நிர்வாகிகள் பொய்யர்கள் என்பதற்கு நமது கேள்விகள் இதோ?
1. முஸ்லிம் டிரஸ்ட் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய பெயரில் ஒரு டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த டிரஸ்டிற்கு மதுரையில் நூர் பள்ளிவாசல், சென்னை ராயப்பே;டையில் ஒரு கட்டிடமும், சென்னை மண்ணடியில் தமுமுக அலுவலக கட்டிடமும் சொத்துகளாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, பொது மக்களுடைய பொதுப் பணத்தில் வாங்கப்பட்ட தமுமுக அலுவலக கட்டிடத்தில் ஒரு தளம் நீண்ட நாட்களாக யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது. இந்த பொது மக்களின் பணத்தில் வாங்கிய சொத்தை வீணாக பூட்டி போட்டு வைத்துள்ள டிரஸ்டிகள் மீது இந்த டி.என்.டி.ஜெ மாநில நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது. இந்த டிரஸ்டை ஏன் டி.என்.டி.ஜெ பெயரில் இன்னும் பதிவு செய்யவில்லை.
2. முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய பெயரில் ஒரு டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த டிரஸ்டிற்கு உணர்வு வார இதழ் என்ற பத்திரிக்கையும், ஒவ்வொரு வருடமும் ஸஹர் நேரத்தில் டிவியில் நடத்தப்படும் நிகழ்ச்சியின் மூலம் வரும் வருவாய்களும், டி.என்.டி.ஜெ விஷன் நெட்வொர்க் என்ற பெயரில் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் வரும் வருவாய்களும் சொத்தாக உள்ளது. இந்த சொத்துகள் யாவும் கொள்கை சகோதரர்கள் பங்களிப்பில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?
3. தஃவா செய்வற்காக மதுரையில் கொள்கை சகோதரர் ஒருவர் அளித்த ஒரு நிலத்தை பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதே. இன்னும் இந்த சொத்தை டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?
4. ஜமாஅத்துத் தவ்ஹீத் டிரஸ்ட் என்று எம். அப்துல்(சாகுல்)ஹமீது அவர்ளுடைய பெயரில் ஒரு டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த டிரஸ்டிற்கு ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகிய மாத இதழ்கள் சொத்தாக உள்ளதே. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?
5. கும்பக்கோணத்தில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி என்ற நிறுவனம் இஸ்லாமிய கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை என்ற டிரஸ்டின் பெயரில் இயங்கி வருகிறது. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?
6. மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் என்ற பள்ளிவாசல், அல் இர்ஷhத் மகளிர் கல்லூரி ஆகிய இரண்டும் மஸ்ஜிதுர் ரஹ்மான் கட்டிட கமிட்டி - சம்சுல் லுஹா அவர்களுடைய பெயரில் இயங்குகிறதே. இன்னும் இந்த கமிட்டி டி.என்.டி.ஜெ. பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?
7. கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரி மற்றும் மஸ்ஜிது முபாரக் ஆகிய இரண்டும் வௌ;வேறு பெயர்களில் ஸைபுல்லா ஹாஜா அவர்களுடைய பொறுப்பில் இயங்கி வருகிறதே. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?
இப்படியாக இவர்களின் டிரஸ்ட் பட்டியல் நீண்டுகொண்டேப் போகிறது. கும்பக்கோணத்தில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரியைத்தவிர மேலே உள்ள அனைத்து டிரஸ்டுகளும் டி.என்.டி.ஜெ. தலைமைபீட நிர்வாகிகள் தான் நிர்வாகிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் உருவாக்கிய இயக்கத்திற்கு அவர்களின் டிரஸ்ட்டையே சேர்க்காத இவர்கள், அடுத்தவர்களின் டிரஸ்டை தங்களின் இயக்கத்திற்கு அபகரிக்க நினைப்பது ஏன்? சிந்தியுங்கள்! ஆக இவர்கள் உஷhராக இருப்பார்களாம். நாம் மட்டும் பள்ளியையும் அதன் சொத்துக்கயையும் எழுதிக்கொடுத்துவிட வேண்டுமாம். இவர்களுடைய நேர்மையையும், நீதியின் லட்சனத்தை பாருங்கள்.
(நபியே!) உமக்கு ஏவபட்டதை நோக்கி அழைப்பீராக! உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! 'அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை. அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான். அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.' என்று கூறுவீராக!. (அஷ;ஷ{அரா:15)
சமுதாய சகோதரர்களே சிந்தியுங்கள்!
தமிழகத்தின் அனைத்து ஊர் கொள்கை சகோதரர்களும் அவரவர் பிறந்த மண்ணில் இந்த இஸ்லாமிய தூய மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காக சுயமாக சுழன்று பணியாற்றி வருகிறோம். உதாரணதிற்கு வாடகை கட்டிடத்தில் இயங்கும் மர்கஸிற்கு வாடகை செலுத்துவது, தஃவா பணிகள், சமூக நல உதவிகள், பள்ளிகள் உருவாவதற்கு நிலம் வாங்குவது, அந்நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தனவந்தர்களின் உதவியை தேடுவது, என்று எண்ணற்ற பணிகளுக்கு நாம் ஒவ்வொருவரும் தங்களுடைய உதிரத்தை வியர்வையாக சிந்தி உருவாக்குகிறோம். இப்படி அல்லாஹ்வுக்காக நமது சொந்த ஊர்களில் உருவாக்கப்படுகிற நம்முடைய சொத்துக்களை இந்த சொத்துகள் உருவாவதற்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத, எந்த பங்களிப்பும் அளிக்காத இவர்கள் நம்மை ஆட்டுவிக்க எண்ணுகிறார்கள்.
கடந்த காலங்களில் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், கடையநல்லூர் மஸ்ஜிது முபாரக் ஆகிய பள்ளிகளின் சொத்துக்கள் ஜாக் பெயரில் பதிவு செய்ததின் விளைவு அன்மைகாலங்களில் நிகழ்ந்து வருகிற நிகழ்வுகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டோம். அதோடு இயக்கங்கள் உருவாக்கிய நோக்கமே, உள்ளூர் விவகாரங்களில் தலையிடமாட்டோம், சமுதாயம் இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற உரிமைகளை காக்கவும், சமுதாயத்திற்கு எதிரான அடக்குமுறையின்போது பாதுகாக்கவுமே தவிர, சொத்துகளை அபகரிக்க அல்ல. இன்று சமுதாயத்தவர்கள் அவரவர் ஊர்களில் தூய இஸ்லாமிய பணிகள் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கிய டிரஸ்டுகளில் நிகழ்காலத்தில் இல்லாத பிரச்சனைகள், எதிர்காலத்தில் நிர்வாக நடவடிக்கைகளில், கணக்கு வழக்குகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால் கொள்கை சகோதரர்களின் சொத்துகளை பாதுகாக்க வருகிறோம் என்று கூறி சமுதாயத்தவர்களின் உரிமைகளிலும், நிர்வாக சுதந்திரத்திலும் தலையிட எத்தனிக்கிறார்கள். இந்த வாதம் பொருந்த காரணமும், நடைமுறைக்கு சாத்தியமற்றதுமாகும். இது மட்டுமல்ல நல்ல நிர்வாகிகளாக இருப்பவர்கள் மாநில நிர்வாகிகள் கூறும் விஷயங்களுக்கு உடன்படாவிட்டால் 'நன்றாக இயங்குகிற நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள்' என்று கூறி, வெளியூர் ஆட்களை நிர்வாகிகளாக நியமித்து கஸ்டப்பட்டு உருவாக்கியவர்களை வெளியேற்றக் கூடும். இன்னும் இதுபோன்ற பல காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டு.
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்பகரா:44
நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள டிரஸ்டுகளும் அதனை இயக்குகிறவர்களும் யார் யார் என்பதை நீங்கள் கவனிப்பதன் மூலம் டி.என.டி.ஜெ மாநில நிர்வாகிகள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளை எந்த அளவு அவர்கள் பேணி வருகிறார்கள் என்பதை நீங்கள் உணரலாம். அவர்களுக்கு ஒரு நீதியாம், அப்பாவி கொள்கை சகோதரர்களுக்கு ஒரு நீதியாம். சகோதரர்களே! இவர்களை இன்னும் இவர்களை நம்ப வேண்டுமா? எச்சரிக்கை!
மொத்தத்தில் அவர்களுக்கு என்று ஒரு கூட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், யாரும் இவர்களை கேள்வி கேட்டுவிட கூடாது, இவர்கள் செய்யும் தவறுகளை கண்டுக் கொள்ளாதவர்கள் தான் இப்போது இவர்களுக்கு தேவை. ஆகவே சகோதரர்களே! இவர்கள் போடும் இதுபோன்ற சூழ்ச்சி வலைகளில் நம்மில் எவரும் விழுந்துவிட கூடாது என்ற ஒரு நோக்கத்தை தவிர நாங்கள் இதை எழுதுவதற்கு வேறு நோக்கமில்லை. அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய முறையில் நாம் ஒவ்வொருவரும் நமது ஊருகளில் உள்ள உற்றார், உறவினர்கள், ஊர் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். சமுதாயத்தில் ஒற்றுமையுடனும் அதேசமயம் மார்க்க விஷயங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமலும் செயல்படுவோம்.
.....நம்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்மாயிதா:2)
இப்படிக்கு,
நாச்சியார்கோயில்-திருநரையூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு,துபை.
050-3118322 ஃ 050-9737002 ஃ 055-3073765
---------- Forwarded message ----------
From: Noorul ameen
Date: 2009/10/31
Subject: இன்னும் இவர்களை நம்பனுமாம்!!! எச்சரிக்கை! எச்சரிக்கை.........
To:
Assalamu alaikum,
Dear brother Please find the file attached herewith,
--
Thanks&Regards
M.NOORULAMEEN
DUBAI
050 /3118322
055 /3073765





