Wednesday, November 11, 2009

திருவாளர் முகம்மது அலி எங்கே?

பழுலுல் இலாஹி சம்பந்தமாக தௌiவுப்பட வேண்டிய விசயம்-என் கருத்து
fromMohamedFazlul Ilahi
tosmalli786@gmail.com
dateSat, Oct 24, 2009 at 11:45 AM
subjectமுஹம்மது
mailed-bygmail.com
hide details Oct 24 (9 days ago)

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நமது தாய் மொழி தமிழ் என்பதால் அதை நேசிக்கலாம். அந்த நேசிப்பை வெளிப்படுத்த இன்பத் தமிழ்இ இனிய தமிழ்இ எளிய தமிழ் எங்கள் மொழியாகும் என சொல்லலாம். ஆனால் அந்த தமிழ் எங்கள் வழியாகும் என சொல்ல முடியாது. சொல்லக் கூடாது. அந்த அடிப்படையில் செயல்படவும் கூடாது. இஸ்லாம்தான் முஸ்லிம்களின் வழியாகும். இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆனும் ஹதீஸும் அரபியில்தான் உள்ளது. அரபி எழுத்துக்களில் உள்ள ஸேஇ ஃஸே, ஜீம், ஹே, ஃஹே, ஷPம் போன்ற எழுத்துக்களுக்கு நிகரான எழுத்து தமிழில் இல்லை. அதனால் ஓரளவு ஒத்துப் போகும் வட மொழி எழுத்துக்களை சரியான உச்சரிப்புக்காக தமிழாக விபரமுள்ள முஸ்லிம்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
உலகத்திலுள்ள அனைத்தும் மனிதனுக்காகத்தான். மொழிகளும் மனிதனுக்காகத்தான். மொழிகளுக்காக மனிதன் அல்ல. முஹம்மது என்ற அரபி வார்த்தையில் உள்ள ஹ வுக்கு நிகரான எழுத்து தமிழில் இல்லாததால் ஓரளவு ஒத்துப் போகும் ஹ என்ற வட மொழி எழுத்தை தமிழாக பயன்படுத்துகிறோம். நீங்கள் அதை நீக்கி விட்டு க வை பயன்படுத்தியுள்ளீர்கள்.
ஷhர்ஜா என்பதில் உள்ள ஷ என்ற வட மொழி எழுத்தை தவிர்த்த நீங்கள் அதில் உள்ள இன்னொரு வட மொழி எழுத்தான ஜா வை பயன்படுத்தியுள்ளீர்கள். ஜா வை நீக்கி க வை பயன்படுத்தி இருந்தால் எல்லா வழிகளிலும் சரியாகவும் பொருத்தமாகவும் இருந்திருக்கும். ஷhர்கா என்பதுதான் அரபியில் அதன் பெயராகும். தேவையில்லாத இடத்தில் வட மொழி எழுத்தை பயன்படுத்திய நீங்கள் தேவையுள்ள இடத்தில் குறிப்பாக முஹம்மது என்பதில் க புகுத்தி கருத்துச் சிதவை ஏற்படுத்தியுள்ளீர்கள். இறுதி இறைத்தூதரின் பெயரான முஹம்மது என்பதைத்தான் உங்களுக்கு பெயராக உங்கள் பெற்றோர் வைத்துள்ளார்கள். எனவே அதில் தமிழை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரால் கருத்துச் சிதைவு ஏற்படுத்துவதை விட்டு விடுங்கள்.
முகம்மது அலி சார்ஜா என்ற பெயரில் மெயில் அனுப்பி இருக்கும் தாங்கள் என்னிடம் கேள்வி கேட்பதாக எண்ணிக் கொண்டு நுனிப் புல் மேய்ந்த அரை குறைகளான யார் யாரோ ஏதேதோ எழுதியதை எழுதி இருக்கிறீர்கள். அதை உங்கள் கேள்வியாக ஆக்கி எழுதினால் பதில் தருகிறேன். நான் என்னைப் பற்றிய முழு விபரத்தையும் ஏற்கனவே வெளிட்டு விட்டேன். ஒவ்வொரு வெளியீடுகளையும் முழு முகவரியுடன்தான் வெளியிட்டிருக்கிறேன். எனவே தாங்களும் தங்களைப் பற்றிய முழு விபரத்தை முதலில் வெளியிட வேண்டும்.



2009/10/18 mohammed ali

சலாம் சகோதரர் கீழை ஜமீல் அவர்களே தாங்களiன் ஆலோசனைக்க நன்றி. முபாஹுலா சம்பந்தமாக சகோதரர்கள் இருவர்களும் விவாதம் தொடரட்டும் அதில் குறுகீடு வேண்டாம் அதை ஏற்று கொள்கிறேன்.
எனவே தனிதலைப்பு இழை மாற்றி விட்டேன்.
இடையில் இலாஹி சம்பந்தமாக பதில் எழுதியதற்கு மன்னிக்கவும். அவரை பற்றி தனிஇழையில் கருத்துகளை பதிவோம். அவர் பதில் தரட்டும்.
அலி




---------- Forwarded message ----------
From: Keelakarai Anjal
Date: Oct 18, 2009 9:26 AM
Subject: {TMB} Re: சாதாரண கொடுக்கல் வாங்கல்களுக்கு முபாஹலா செய்யலாமா?
To: tamilmuslimbrothers@googlegroups.com


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் முஹம்மது அலி அவர்கள் சகோதரர் பழுலுல் இலாஹி அவர்கள் சம்பந்தமான விஷயத்தை வேறு ஒரு இழையில் வைக்கலாமே. முபாஹலா சம்பந்தமாக சகோதரர்கள் அபூஸுமைய்யா மற்றும் விமர்சனம் ஜஃபர் விவாதம் நடைபெறும் இந்த இழையில் தேவையில்லையே.

அன்புடன் கீழை ஜமீல்

Saturday, October 31, 2009

ஒப்பாரி சத்தத்தைதான் கேட்க முடியும்.

பாம்பு படமெடுத்து ஆடும்போது பார்க்க நன்றாகத்தான் இருக்கும். அப்பொழுது கொட்டிக் கொன்று விடும் என்று யார் எச்சரிக்கை செய்தாலும் கேட்க மாட்டார்கள். படமெடுத்து ஆடும் பாம்பை கண்டு ரசிப்பதிலேயே ருசியாக இருப்பார்கள். பாம்பு கொட்டிய பின் என்ன செய்ய முடியும். ஒப்பாரி சத்தத்தைதான் கேட்க முடியும்.

fromKeelakarai Anjal
toKeelakarai Anjal

dateSat, Oct 31, 2009 at 10:27 PM
subjectஇன்னும் இவர்களை நம்பனுமாம்!!! எச்சரிக்கை! எச்சரிக்கை.........
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 10:27 PM (2 hours ago)




---------- Forwarded message ----------
From: umar sherief
Date: 2009/10/31

Subject: Fwd: இன்னும் இவர்களை நம்பனுமாம்!!! எச்சரிக்கை! எச்சரிக்கை.........
To:



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சமுதாய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
'நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுககு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!(அல்அஹ்ஸாப் :70)

உணர்வு வார இதழின் உரிமை 14 குரல் 9, 8-ம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் எங்களது நாச்சியார்கோயில் திருநரையூர் உமர் (தவ்ஹீத்) பள்ளிவாசல் நிர்வாகிகளான ஜாஃபர் அலி மற்றும் ஒலி முஹம்மது ஆகியோர் குறித்து வெளியான செய்திகள் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

நபி(ஸல்) அவர்கள்; மூன்று விஷயங்கள் வெற்றி தரக்கூடியவை, மூன்று விஷயங்கள் அழிவை தரக்கூடியவை என கூறினார்கள்.

வெற்றி தரக்கூடியவை – 1. தனிமையிலும், சபையிலும் அல்லாஹ்விற்கு அஞ்சுவது, 2. விருப்பு வெறுப்பு இரு நிலைகளிலும் உண்மையை பேசுவது, 3. வறுமையிலும், செழிப்பிலும் நடுநிலையை மேற்கொள்வது.
ஆழிவை தரக்கூடியவை - 1. மனோ இச்சையை பின்பற்றுவது, அதற்கு அடிமையாவது, 2. தன்னை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு பேராசை கொள்வது, 3. இருமாப்பு கொள்வது, இந்த மூன்று நோய்களில் இதுவே மிகவும் ஆபத்திற்குரியது.(அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), நூல்: பைஹகி, மிஷ;ஹாத்)

யார் இந்த ஜாஃபர் அலி?

ஏகத்துவ பிரச்சாரங்கள் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் அறிமுகமான ஆரம்ப காலத்தில், சுன்னத்துவல் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளால் குர்ஆன்-ஹதீஸ் வழிமுறையில் தொழ விரும்பியவர்கள் சந்தித்த சொல்ல இயலாத துன்பங்களும், இடையூர்களும் நாமனைவரும் அறிவோம். அதுபோன்ற ஒரு நிலை எங்கள் ஊரில் ஏற்பட்டபோது, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆன்-ஹதீஸ் வழியில் ஊர்தவ்ஹீத் சகோதரர்கள் தொழ, தான் குடியிருந்த வீட்டை காலி செய்து கொடுத்து ஏற்படுத்திய பள்ளி தான் இந்த உமர் பள்ளிவாசல். சென்ற 14-08-2009 அன்று இப்பள்ளி புதிய கட்டிடமாக கட்டி திறப்பதற்கு முன்பு வரை ஜாஃபர் வீடு தான் உமர் பள்ளிவாசலாக இயங்கியது. டி.என்.டி.ஜெ உருவாவதற்கு முன்பே எங்கள் ஊர் சகோதரர்களால் இஸ்லாமிய கல்வி கலாச்சார நல அறக்கட்டளை என்ற பெயரில் பதிவு செய்து, மார்க்க பிரச்சாரங்கள், நல உதவிகள், சமூக பணிகள் இன்னும் ஏராளமான செயல்பாடுகளை டி.என்.டி.ஜெவுடன் இணைந்தே செயலாற்றி வந்தோம். வல்ல அல்லாஹ்வின் கிருபையால் இந்த ஜாஃபர், ஒலி முஹம்மது மற்றும் எங்களுரைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் சகோதரர்களாளும் எடுத்த பெரும் முயற்சிகளின் விளைவாக கூரையில் இயங்கிய பள்ளியை இன்று பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த உமர் பள்ளிவாசலை முகவை சகோதரர் ஒருவரே முழுவதும் கட்டி தந்து இந்த பள்ளிவாசல் எந்த ஜமாஅத்திற்கோ, இயக்கத்திற்கோ உட்படாமல் முழுக்க முழுக்க ஊர் மக்களுக்கு குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் பயன்பட வேண்டும் என்று மேற்கண்ட அறக்கட்டளைக்கு வக்ஃபு செய்தார்கள்.

மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(வடக்கு-தெற்கு) தலைவராக இந்த ஜாஃபர் இருக்கும் போதுதான் குடந்தை குலுங்கும் அளவுக்கு ஜனவரி'9,2006-ல் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடுப் பேரணி-மாநாடு நடத்தப்பட்டது. மக்கள் மீண்டும் ஜாஃபரை மாவட்ட தலைவராக தேர்ந்தெடுத்த போது, நீண்ட நாட்களாக நானே தலைவராக இருக்க விரும்ப வில்லை என்று உறுதியாகக் கூறி, வேறு ஒரு சகோதரரை தலைவராக நியமித்து கும்பகோணம் பகுதிகளில் நிறைய டி.என்.டி.ஜெ கிளைகள் உருவாக அல்லாஹ் இவரை காரணியாக்கினான். சமீபகாலமாக தனி நபர்களின் கண்ணியத்தை குலைப்பதையே கொள்கையாக கொண்டு செயலாற்றி வருகிற டி.என்.டி.ஜெ பட்டியலில், ஜாஃபர் அலியையும் சேர்த்துள்ளனர். மேற்கண்ட உண்மைகளை மறைத்து அவருடைய கண்ணியத்தை சிதைக்கும்விதமாக இப்போது இவருக்கு பதவி இல்லை என்பதால் அவரே மீறுகிறார் என்று உண்மைக்கு புறம்பாக இட்டுகட்டியுள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் இவ்வளவு பணிகளை செய்துள்ள சகோதரர் ஜாஃபர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிளை செயலாளராக பணியாற்றி வந்தார். இதுதான் டி.என்.டி.ஜெ பார்வையில் பதவி ஆசையா?

மேலும் டிரஸ்ட் மூலம் நடத்தும் பள்ளிவாசல் தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் செயல்படுகிறது என்று எண்ணி உதவிகள் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறார்களாம். ஒவ்வொரு முஸ்லிமும் பள்ளிவாசல்களுக்கு உதவி செய்யும்போது, எவரும் இயக்கத்திற்காக எண்ணி உதவி செய்வது கிடையாது, முழுக்க முழுக்க அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்துதான் உதவி செய்கிறார்கள். சகோதரர்களே! இவர்களுடைய கீழ்தரமான எண்ணங்களை சிந்தியுங்கள்! அல்லாஹ்வுடைய பள்ளிவாசலுக்கு உதவும் சகோதரர்களை தடுப்பதோடு, இவர்களுடைய நோக்கம் என்ன என்பதை வல்ல அல்லாஹ் அவர்களை கொண்டே சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்! இந்த பள்ளிவாசல் உருவாக எந்தவகையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை அல்லது மாநில தலைமையுடைய எந்த பரிந்துரையும் பெறாமல் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால் எங்கள் டிரஸ்டின் பெயரை மாத்திரமே பயன்படுத்தி இப்பள்ளியை உருக்கி இருக்கிறோம். ஆகவே, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடி உதவக்கூடிய கொள்கை சகோதரர்களை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதான் கடந்த கால வரலாறு.
ஜாஃபர் மற்றும் ஒலி முஹம்மது மட்டும்தான் தனி டிரஸ்டாக இயங்குகிறார்களா?

முக்கிய அறிவிப்பு என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் - கடந்த காலங்களில் டிரஸ்ட் என்ற பெயரில் இயங்கக் கூடாது என்றும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் தான் இயங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்களாம். அதனால் ஜாஃபர் மற்றும் ஒலி முஹம்மது மட்டும் தான் தனி டிரஸ்ட் அமைத்து செயல்பட்டு வருவது போன்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த டி.என்.டி.ஜெ மாநில நிர்வாகிகள் பொய்யர்கள் என்பதற்கு நமது கேள்விகள் இதோ?
1. முஸ்லிம் டிரஸ்ட் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய பெயரில் ஒரு டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த டிரஸ்டிற்கு மதுரையில் நூர் பள்ளிவாசல், சென்னை ராயப்பே;டையில் ஒரு கட்டிடமும், சென்னை மண்ணடியில் தமுமுக அலுவலக கட்டிடமும் சொத்துகளாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, பொது மக்களுடைய பொதுப் பணத்தில் வாங்கப்பட்ட தமுமுக அலுவலக கட்டிடத்தில் ஒரு தளம் நீண்ட நாட்களாக யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது. இந்த பொது மக்களின் பணத்தில் வாங்கிய சொத்தை வீணாக பூட்டி போட்டு வைத்துள்ள டிரஸ்டிகள் மீது இந்த டி.என்.டி.ஜெ மாநில நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது. இந்த டிரஸ்டை ஏன் டி.என்.டி.ஜெ பெயரில் இன்னும் பதிவு செய்யவில்லை.

2. முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய பெயரில் ஒரு டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த டிரஸ்டிற்கு உணர்வு வார இதழ் என்ற பத்திரிக்கையும், ஒவ்வொரு வருடமும் ஸஹர் நேரத்தில் டிவியில் நடத்தப்படும் நிகழ்ச்சியின் மூலம் வரும் வருவாய்களும், டி.என்.டி.ஜெ விஷன் நெட்வொர்க் என்ற பெயரில் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் வரும் வருவாய்களும் சொத்தாக உள்ளது. இந்த சொத்துகள் யாவும் கொள்கை சகோதரர்கள் பங்களிப்பில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

3. தஃவா செய்வற்காக மதுரையில் கொள்கை சகோதரர் ஒருவர் அளித்த ஒரு நிலத்தை பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதே. இன்னும் இந்த சொத்தை டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

4. ஜமாஅத்துத் தவ்ஹீத் டிரஸ்ட் என்று எம். அப்துல்(சாகுல்)ஹமீது அவர்ளுடைய பெயரில் ஒரு டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த டிரஸ்டிற்கு ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகிய மாத இதழ்கள் சொத்தாக உள்ளதே. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

5. கும்பக்கோணத்தில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி என்ற நிறுவனம் இஸ்லாமிய கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை என்ற டிரஸ்டின் பெயரில் இயங்கி வருகிறது. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

6. மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் என்ற பள்ளிவாசல், அல் இர்ஷhத் மகளிர் கல்லூரி ஆகிய இரண்டும் மஸ்ஜிதுர் ரஹ்மான் கட்டிட கமிட்டி - சம்சுல் லுஹா அவர்களுடைய பெயரில் இயங்குகிறதே. இன்னும் இந்த கமிட்டி டி.என்.டி.ஜெ. பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?
7. கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரி மற்றும் மஸ்ஜிது முபாரக் ஆகிய இரண்டும் வௌ;வேறு பெயர்களில் ஸைபுல்லா ஹாஜா அவர்களுடைய பொறுப்பில் இயங்கி வருகிறதே. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

இப்படியாக இவர்களின் டிரஸ்ட் பட்டியல் நீண்டுகொண்டேப் போகிறது. கும்பக்கோணத்தில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரியைத்தவிர மேலே உள்ள அனைத்து டிரஸ்டுகளும் டி.என்.டி.ஜெ. தலைமைபீட நிர்வாகிகள் தான் நிர்வாகிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் உருவாக்கிய இயக்கத்திற்கு அவர்களின் டிரஸ்ட்டையே சேர்க்காத இவர்கள், அடுத்தவர்களின் டிரஸ்டை தங்களின் இயக்கத்திற்கு அபகரிக்க நினைப்பது ஏன்? சிந்தியுங்கள்! ஆக இவர்கள் உஷhராக இருப்பார்களாம். நாம் மட்டும் பள்ளியையும் அதன் சொத்துக்கயையும் எழுதிக்கொடுத்துவிட வேண்டுமாம். இவர்களுடைய நேர்மையையும், நீதியின் லட்சனத்தை பாருங்கள்.

(நபியே!) உமக்கு ஏவபட்டதை நோக்கி அழைப்பீராக! உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! 'அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை. அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான். அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.' என்று கூறுவீராக!. (அஷ;ஷ{அரா:15)

சமுதாய சகோதரர்களே சிந்தியுங்கள்!

தமிழகத்தின் அனைத்து ஊர் கொள்கை சகோதரர்களும் அவரவர் பிறந்த மண்ணில் இந்த இஸ்லாமிய தூய மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காக சுயமாக சுழன்று பணியாற்றி வருகிறோம். உதாரணதிற்கு வாடகை கட்டிடத்தில் இயங்கும் மர்கஸிற்கு வாடகை செலுத்துவது, தஃவா பணிகள், சமூக நல உதவிகள், பள்ளிகள் உருவாவதற்கு நிலம் வாங்குவது, அந்நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தனவந்தர்களின் உதவியை தேடுவது, என்று எண்ணற்ற பணிகளுக்கு நாம் ஒவ்வொருவரும் தங்களுடைய உதிரத்தை வியர்வையாக சிந்தி உருவாக்குகிறோம். இப்படி அல்லாஹ்வுக்காக நமது சொந்த ஊர்களில் உருவாக்கப்படுகிற நம்முடைய சொத்துக்களை இந்த சொத்துகள் உருவாவதற்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத, எந்த பங்களிப்பும் அளிக்காத இவர்கள் நம்மை ஆட்டுவிக்க எண்ணுகிறார்கள்.

கடந்த காலங்களில் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், கடையநல்லூர் மஸ்ஜிது முபாரக் ஆகிய பள்ளிகளின் சொத்துக்கள் ஜாக் பெயரில் பதிவு செய்ததின் விளைவு அன்மைகாலங்களில் நிகழ்ந்து வருகிற நிகழ்வுகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டோம். அதோடு இயக்கங்கள் உருவாக்கிய நோக்கமே, உள்ளூர் விவகாரங்களில் தலையிடமாட்டோம், சமுதாயம் இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற உரிமைகளை காக்கவும், சமுதாயத்திற்கு எதிரான அடக்குமுறையின்போது பாதுகாக்கவுமே தவிர, சொத்துகளை அபகரிக்க அல்ல. இன்று சமுதாயத்தவர்கள் அவரவர் ஊர்களில் தூய இஸ்லாமிய பணிகள் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கிய டிரஸ்டுகளில் நிகழ்காலத்தில் இல்லாத பிரச்சனைகள், எதிர்காலத்தில் நிர்வாக நடவடிக்கைகளில், கணக்கு வழக்குகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால் கொள்கை சகோதரர்களின் சொத்துகளை பாதுகாக்க வருகிறோம் என்று கூறி சமுதாயத்தவர்களின் உரிமைகளிலும், நிர்வாக சுதந்திரத்திலும் தலையிட எத்தனிக்கிறார்கள். இந்த வாதம் பொருந்த காரணமும், நடைமுறைக்கு சாத்தியமற்றதுமாகும். இது மட்டுமல்ல நல்ல நிர்வாகிகளாக இருப்பவர்கள் மாநில நிர்வாகிகள் கூறும் விஷயங்களுக்கு உடன்படாவிட்டால் 'நன்றாக இயங்குகிற நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள்' என்று கூறி, வெளியூர் ஆட்களை நிர்வாகிகளாக நியமித்து கஸ்டப்பட்டு உருவாக்கியவர்களை வெளியேற்றக் கூடும். இன்னும் இதுபோன்ற பல காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டு.
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்பகரா:44
நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள டிரஸ்டுகளும் அதனை இயக்குகிறவர்களும் யார் யார் என்பதை நீங்கள் கவனிப்பதன் மூலம் டி.என.டி.ஜெ மாநில நிர்வாகிகள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளை எந்த அளவு அவர்கள் பேணி வருகிறார்கள் என்பதை நீங்கள் உணரலாம். அவர்களுக்கு ஒரு நீதியாம், அப்பாவி கொள்கை சகோதரர்களுக்கு ஒரு நீதியாம். சகோதரர்களே! இவர்களை இன்னும் இவர்களை நம்ப வேண்டுமா? எச்சரிக்கை!

மொத்தத்தில் அவர்களுக்கு என்று ஒரு கூட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், யாரும் இவர்களை கேள்வி கேட்டுவிட கூடாது, இவர்கள் செய்யும் தவறுகளை கண்டுக் கொள்ளாதவர்கள் தான் இப்போது இவர்களுக்கு தேவை. ஆகவே சகோதரர்களே! இவர்கள் போடும் இதுபோன்ற சூழ்ச்சி வலைகளில் நம்மில் எவரும் விழுந்துவிட கூடாது என்ற ஒரு நோக்கத்தை தவிர நாங்கள் இதை எழுதுவதற்கு வேறு நோக்கமில்லை. அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய முறையில் நாம் ஒவ்வொருவரும் நமது ஊருகளில் உள்ள உற்றார், உறவினர்கள், ஊர் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். சமுதாயத்தில் ஒற்றுமையுடனும் அதேசமயம் மார்க்க விஷயங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமலும் செயல்படுவோம்.

.....நம்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்மாயிதா:2)

இப்படிக்கு,
நாச்சியார்கோயில்-திருநரையூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு,துபை.
050-3118322 ஃ 050-9737002 ஃ 055-3073765





---------- Forwarded message ----------
From: Noorul ameen
Date: 2009/10/31
Subject: இன்னும் இவர்களை நம்பனுமாம்!!! எச்சரிக்கை! எச்சரிக்கை.........
To:



Assalamu alaikum,

Dear brother Please find the file attached herewith,






--
Thanks&Regards

M.NOORULAMEEN
DUBAI
050 /3118322
055 /3073765

Friday, October 23, 2009

த.மு.மு.க. வின் முதல் பொதுச் செயலாளர்.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பிற்பகல் சென்னையில் காலமானார்கள். [இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்] அவருக்கு வயது 78 ஆகும்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்த ஹெச். அப்துஸ் ஸமது அவர்கள் ஒரு பொறியாளர் ஆவார். பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பொறியியல் கல்லுரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் அமைப்பின் முதல் பொதுச் செயலாளராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் துடிப்புடன் செயலாற்றினார். பின்னர் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். சமுதாய மற்றும் மார்க்கப்பணியில் அதிக நாட்டம் உடையவராக விளங்கிய இஞ்சினியர் அப்துஸ் ஸமது அவர்கள் தமது கடைசி மூச்சு வரை அப்பணிகளை ஆற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல மார்க்க நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் அறங்காவலர்களில் ஒருவராகவும் அவர் விளங்கினார்.


அக்டோபர் 18 அன்று காலை சென்னை அமைந்தக்கரை பள்ளிவாச­ல் ஜனாசா தொழுகை நடைபெற்று பிறகு அங்குள்ள அடக்கத்தலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.இறைவன் அன்னாருக்கு மறுமையின் நற்பேறுகளை அளப்பரிய அளவில் வழங்க பிராரத்தனைச் செய்வோமாக.
நன்றி; தமுமுக வலைத்தளம்

இன்ஜினியர் அப்துஸ்ஸமது அவர்கள் த.மு.மு.க. வின் முதல் பொதுச் செயலாளர் ஆவார். 1977லிருந்து அந்நஜாத் மாத இதழில் பல தொடர் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.
நெல்லை சமுதாய நலச் சங்க துணைத் தலைவராக இருந்தபொழுது அரும்பணியாற்றி நெல்லையில் பல வக்பு நிலங்களை மீட்டார்.

ஏகத்துவ பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பும் எதிர்ப்புகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்க பொதுவான ஒரு அமைப்பு ஏற்படுத்த 1992ஆண்டு கும்பகோணத்தில் மாநிலம் தழுவிய ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அபுஅப்துல்லாஹ், கமாலுத்தீன் மதனி, பி.ஜெய்னுல் ஆபிதீன், மைதீன் உலவி, நமது சார்பில் ஆர்.எஸ். முஹம்மது காஜா, சிபகதுல்லாஹ் என பலர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய பிரச்சார பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக இன்ஜினியர் அப்துஸ்ஸமது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்ட ரீதியான நடவடிக்கைக்கு பெயரளவில் ஒரு அமைப்பு என வைத்து விட்டு ஒரு பிரச்சாரகர் சட்டத்தை தன் கையில் எடுத்து செயல்படுவதை அறிந்ததும் ஒதுங்கிக் கொண்டார். த.மு.மு.க. புணர்நிர்மானம் செய்யப்பட்டதும் த.மு.மு.க. வின் முதல் பொதுச் செயலாளர் ஆனார்.

இன்ஜினியர் அப்துஸ்ஸமது அவர்கள் இஸ்லாமிய பிரச்சார பாதுகாப்பு பேரவை தலைவராக இருந்தபொழுது பி.ஜெ, அபு அப்துல்லாஹ், இக்பால் மதனி இடையே ஒற்றுமை ஏற்படுத்த இஸ்லாமிய பிரச்சார பாதுகாப்பு பேரவைக்கு எழுதப்பட்ட கடிதம் காண

http://mdfazlulilahi.blogspot.com/1993/08/blog-post.html

http://mdfazlulilahi.blogspot.com/search?updated-min=1993-01-01T00%3A00%3A00-08%3A00&updated-max=1994-01-01T00%3A00%3A00-08%3A00&max-results=7
அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை கொடுப்பானாக

Monday, September 28, 2009

த.மு.மு.க. ஏர்வாடி கிளை




Thursday, September 24, 2009

இந்த பெண்கள் முஸ்லிம்களா?


இப்படியும் சில சகோதரிகள் ஈமான் அடிப்படையை மறந்து வழிதவறி போய் உள்ளார்கள். அல்லாஹு தான் இவர்களுக்கு அல்லாஹுfவின் பயப்பக்தியை தரவேண்டும்.
நம்மிடையயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சகோதரர் ஏபி.முஹும்மது அலி இந்த செய்தி புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.
எந்த ஒரு சிறு உதவி என்றாலும் அல்லாஹுfவின் மூலமே வருகிறது என்ற உணர்வு நம் சமுதாய மக்களiடம் வர வேண்டும். அதற்கு நம் சமுதாயம் நன்கு கல்வி பெற்ற சமுதாயமாக மாற வேண்டும் அந்த கல்வி உலகம் மற்றும் மார்க்க கல்வியாக இருக்க வேண்டும். அப்போது தான் இம்மை மற்றும் மறுமையில் efவற்றி பெற முடியும்.
இளைய சமுதாயம் நல்வழியில் செல்ல அல்லாஹுf துணை புரிய வேண்டும். நாமும் முயற்சி செய்வோம். நம் சமுதாயத்தையும் முயற்சி செய்ய ஊக்கம் கொடுப்போம்.
கடைசியில் இதுபோன்ற வழிக்கேட்டிலிருந்து விடுதலை பெற்று அல்லாஹுfவிடம் நன்மதிப்பை பெறுவோம். ஆமீன்
Photo News: Deccan Chronicles (23/9/2009) Br.AP Mohammed Ali (mdaliips@yahoo.com)
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகில் கிளி ஜோசியம் பார்க்க புர்கா அணிந்து வந்துள்ள இந்த பெண்கள் முஸ்லிம்களா? முஸ்லிம் பெண்களும் கோயில் அருகில் குறி கேட்க வருகிறார்கள் என்று காட்ட போடும் நாடகமா?

Wednesday, August 19, 2009

21-08-2009 வெள்ளி அன்று ரமழான் ஆரம்பிக்கிறது.

ஜாக் சார்பில் 21ல் ரமலான் தொடக்கம்

ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆகஸ்டு 20ம் தேதி சந்திரன் முழுமையாக தேய்ந்து அமாவாசை ஏற்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வளர்பிறை ஆகும். இதை கவனத்தில் கொண்டு 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்புடன் ரமலான் மாதத்தை கண்ணியப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: நெல்லை தினகரன் (19-08 09)


In the name of Allah, the Most Gracious the Most Merciful.
According to Ahillah/Manaazil of the moon. (Quran 2:189)
First day of Ramadan 1430H falls on Friday, August 21, 2009
And
First day of Shawwal Eid-Al-Fithr falls on Saturday, September 19, 2009


21-08-2009 வெள்ளி அன்று ரமழான் ஆரம்பிக்கிறது, வெள்ளி பகலில் நோன்பு நோற்க வேண்டும்.

18-09-2009 வெள்ளி அன்று 29 நோன்புகளுடன் ரமழான் முடிவடைகிறது.

19-09-2009 சனியன்று நோன்புப் பெருநாள்.


***************


புரோகிதர்களின் கேடுகெட்ட புத்தி!
– அபு அப்தில்லாஹ்

மனிதனைப் படைத்த இறைவன் அன்றிலிருந்து அதாவது முதல் மனிதரும் நபியுமான ஆதம் (அலை) அவர்களிலிருந்து மனிதனுக்கு கொடுத்தது 'இஸ்லாம்' என்ற சாந்தி, நேர்வழி மார்க்கத்தையே. அந்த இஸ்லாம் மார்க்கம் 1430 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வால் சம்பூர்ணமாக நிறைவு பெற்றுவிட்டது. அதன் பின்னர் 'இஸ்லாம்' என்ற சாந்தி மார்க்கத்தில் மேல் அதிகமாகச் சேர்ப்பதற்கு எள்முனை அளவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த மறுக்க முடியாத உண்மையை அல்குர்அன் 5:3, 3:19,85, 33:36, 59:7 இறைவாக்குகளை சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் அணுவத்தனையும் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக்கொள்வார்கள்.

இறைவானால் நாளை மறுமையில் மார்க்கமாக ஒப்புக்கொள்ளப்படும் 'இஸ்லாம்' சாந்தி-நேர்வழி மார்க்கத்தில்தான் எவ்வித மாற்றமும் செய்ய யாரும் அனுமதி பெறமாட்டர்களே தவிர, இவ்வுலக வாழ்க்கையில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படும் அனுகூலங்களை வசதி வாய்ப்புகளை மனிதன் ஏற்று நடப்பதில் மறுப்போ, ஆட்சேபணையோ இஸ்லாம் மார்க்கத்தில் இல்லவே இல்லை.

உதாரணமாக 1430 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கதை வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்து அது மக்களிடையே அல்குர்ஆனாக இருந்து வருகிறது. இது நபி (ஸல்) அவர்களுக்கு ஒலி வடிவில் ஜிப்ரயீல் (அலை) என்ற மலக்கின் மூலம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. அல்குர்ஆனின் உச்சரிப்பின் அடிப்படையில் அது கூறும் கருத்தின் அடிப்படையில் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அன்றிலிருந்த வசதிக்கேற்ப, தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் அரபியில் பதிவு செய்யப்பட்டது. அன்று அரபி லிபி எவ்வாறு இருந்ததோ அதே அரபி லிபியில் பதியப்பட்டது.

அதன் பின்னர் அரபி லிபியில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப எழுத்து வடிவில் மாற்றம் ஏற்பட்டதே அல்லாமல், அதன் ஒலியில் அதாவது உச்சரிப்பில் அணுவளவும் மாற்றம் ஏற்படவில்லை. எழுதிப்பாதுகாக்க தாள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தாளில் அல்குர்ஆன் எழுதிப்பாதுகாக்கப்பட்டது. பின்னர் அச்சடிக்கும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் அல்குர்ஆன் அச்சுப் பதிப்பில் வெளியானது.

இஸ்லாம் உலகலாவிய அளவில் பரவிய பின்னர் அல்குர்ஆன் அந்தந்தப் பகுதி மக்கள் விளங்கிக் கொள்ள வசதியாக அவரவர்களின் மொழியில் அரபி மூலத்துடன் மொழி பெயர்த்துக் கொடுக்கபட்டது. மொழி பெயர்ப்புகளில் சிறிய பெரிய தவறுகள் காணப்பட்டனவே அல்லாமல் அரபி மூலத்தில் யாராலும் எப்படிப்பட்ட திரிபு வேலையையும் செய்ய முடியவில்லை.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று அல்குர்ஆன் அரபி மூலமும், அதன் மொழி பெயர்ப்புகளும் ஒலி, ஒளி நாடாக்களிலும், குறுந்தகடுகளிலும் இன்னும் பல வடிவுகளிலும் வந்துவிட்டன. இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்படலாம். ஆனால் நாம் விளங்க வேண்டியது இப்படிப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல. அன்று அல்குர்ஆன் எப்படி உச்சரிக்கப்பட்டதோ, எப்பொருள்களைத் தந்ததோ அவற்றில் அணுவளவும் மாற்றம் இல்லவே இல்லை. அவற்றைப் பதிந்து பாதுகாப்பதில்தான் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றை பித்அத்-வழிகேடுகள்-நரகில் கொண்டு சேர்ப்பவை என்று ஒரு போதும் சொல்ல முடியாது.

ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் தங்களின் சுயநலம் கருதி, இப்படிப்பட்ட உலகியல் மாற்றங்களைக் காட்டி, அல்குர்ஆன் கூறும் அசலான கருத்துக்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து தங்களின் மத்ஹபுகள், தரீக்காக்கள், மஸ்லக்கள், இயக்கங்கள், கழகங்கள், அமைப்புகள் போன்ற பித்அத்களை-வழிகேடுகளை-நரகில் சேர்ப்பவகைளை நியாப்ப படுத்த முற்படுவர்.

இன்னொரு தந்திரத்தையும் இப்புரோகிதர்கள் கையாளாவர். அதாவது எவை எல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவை இல்லையோ, கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடைபிக்கப்பட்டவையோ அவற்றை மார்க்கமாகச் சொல்லி குரங்குப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பாங்கு சொல்வது, ஜும்ஆ உரையின்போது கையில் ஒரு தடியையோ, வாளையோ பிடித்துக் கொண்டு நிற்பது, அரபி மொழி தெரியாத தமிழ் மட்டும் தெரிந்த மக்களை நோக்கி நின்று கொண்டு, அவர்களுக்கு விளங்காத நிலையில் அரபியில் ஜும்ஆ உரை நிகழ்த்துவது, சூரியனின் ஓட்த்தைக் கண்ணால் பார்த்துதான் தொழுகை நேரத்தை அறிந்து தொழ வேண்டும் என்று முன்னர் அடம் பிடித்தது, சந்திரனைப் புறக்கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைப் தீர்மானிக்க வேண்டும் என்று இப்போது அடம் பிடிப்பது இத்தியாதி, இத்தியாதி பொருள்களில் அதாவது மார்க்கத்திற்கு உட்படாத பொருள்களில் அவற்றறைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அதே சமயம் மார்க்கத்திற்கு இடமே இல்லை என்று திட்டமாக அல்குர்ஆன் கூறுபவற்றில், மனம் போன போக்கில் மாற்றத்தை உண்டாக்குவதில் புரோகிதர்கள் முன்னிணியில் இருக்கின்றனர்.

எண்ணற்ற அல்குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுத்து, மார்க்கதைப் பிழைப்புக்குரிய வழியாக அவர்கள் கொண்டிருப்பதால்தான் அவர்களுக்கு இப்படிப்பட்ட கேடுகெட்ட புத்தி ஏற்படுகறது.

விஞ்ஞான வளர்ச்சி இல்லாத 1430 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் இருந்து நிலையில், சூரியனின் ஓட்டத்தைப் பார்த்து நேரத்தை அறியும் கட்டாய நிலை இருந்தது. சந்திரனின் ஓட்டத்தைப் பார்த்து மாதத்தை அறியும் கட்டாய நிலை இருந்தது. தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் செல்லும் கட்டாய நிலை இருந்தது. தொலைவில் ஏற்படும் மரணம் போன்ற முக்கிய சம்பவத்தையும் காலம் தாழ்ந்த நிலையில் ஆள் நேரில் வந்து சொல்லி அறியும் கட்டாய நிலை இருந்தது. அன்றைக்கு அவை தவிர வேறு மாற்று வழி இல்லை. மேலும் இவை அனைத்தும் மார்க்கத்தின் சில கடமைகளை நிறைவேற்ற உதவும் வழிகளாக இருந்தனவே அல்லாமல் மார்க்கத்திற்கு உட்பட்டவையாக இருக்கவில்லை, இல்லவே இல்லை.

அதனால்தான் அன்று சூரிய ஓட்டத்தைப் பார்த்து நேரத்தை அறிந்து தொழுதவர்கள், இன்று கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை அறியும் வகையில் விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டதால் சூரியனைப் பார்ப்பதை விட்டு விட்டார்கள்.

அன்று தொலைவிலிருந்து ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குப் போனவர்கள், நவீன வாகன வசதிகள் ஏற்பட்டுவிட்டதால், ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குச் செல்வதை விட்டுவிட்டார்கள், அன்று மரண செய்தியை காலம் தாழ்ந்து நேரில் ஆள் வந்து சொல்வதன் மூலம் அறிந்து செயல்பட்ட நிலை மாறி, தொலை தகவல்கள் மூலம் சுடச் சுடக் கிடைப்பதால், ஆளை எதிர் பார்த்துக் காத்திருப்பதில்லை.

அதேபோல் அன்று மாதம் பிறந்ததை முதல் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்ததற்கு மாறாக இன்று கணினி கணக்கீட்டின் மூலம் எதிர்வரும் நூறு ஆண்டுகளின் 12 மாதங்களின் தலைப் பிறையை இன்றே மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறும் அளவில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதால், இன்று பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் காத்திருக்கத் தேவையே இல்லை.

2009 ஜுலை 22 அன்று இடம் பெற்ற நீண்ட நேர முழு சூரிய கிரகணம், அடுத்து 2132 ஜுன் 13-ல் இடம்பெறும் என கணக்கிட்டுச் சொல்லும் அளவிற்கு இன்று விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. மாதம் முடிந்து புது மாதம் ஆரம்பிக்கும்போது தான் (New Moon) சூரிய கிரகணம் இடம் பெறுகிறது என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில நடுநிலை அறிஞர்கள் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) போன்ற பேரறிஞர்கள் கணிப்பின் அடிப்படையில் மாதம் பிறப்பதை அறிவது ஏற்கதக்கதல்ல என்று கூறி இருப்பதை பெரிய ஆதாரமாகக் கொண்டு நிலை தடுமாறுகிறார்கள். உண்மை இதுதான், அந்த அறிஞர்கள் காலத்தில் கணினி (Computer) கண்டுபிடிக்கபடவில்லை. துல்லியமாகக் கணக்கிடும் கணக்கு முறையும் இருக்கவில்லை. நபி (ஸல்) காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வரும் கணிப்பு முறையைத்தான் அந்த அறிஞர்கள் மறுத்துள்ளனர். தோராய கணிப்பிற்கும் துல்லிய கணக்கீட்டு முறைக்குமுள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டால் இப்படி தடுமாற்றம் நடுநிலை அறிஞர்களுக்கு ஏற்படாது.

ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள், தங்களின் தொழிலுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு விஞ்ஞான கண்டு பிடிப்பின்போதும் அதை மறுத்து அலறுவது வாடிக்கை. காலப்போக்கில் வேறு வழியின்றி அவர்களும் அந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சூரியனைப் பாத்து நேரம் அறிந்து தொழும் நிலை முதன் முதலாக மாறி கடிகாரத்தைப் பார்த்து தொழும் நிலை ஏற்பட்டவுடன் இப்படி அலறினார்கள். பின்னர் அதை ஒப்பக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதேபோல் ஒட்டகத்தில் பிரயாணம் செய்யும் நிலை முதன் முதலாக மாறி நவீன வாகனத்தில் ஹஜ்ஜுக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் இவ்வாறே அலறினார்கள். பின்னர் அதை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். மரணச் செய்தியை ஆள் நேரில் வந்து சொன்ன நிலை முதன் முதலாக மாறி தகவல் தொடர்பு மூலம் உடனடியாக அறிந்து செயல்பட முற்பட்ட போதும் இவ்வாறே அலறினார்கள், பின்னர் அதை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.



அதேபோல் இன்று கணினி கணக்கீட்டின் மூலம் முன்கூட்டியே மாதம் பிறப்பதை துல்லியமாக அறிவிக்கும் நிலையை மறுத்து அலறுகிறார்கள். காலம் போக போக அவர்களே இக்கணக்கீட்டை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தாள்ளபடுவார்கள். எனவே இந்த சுயநலப் புரோகிதர்களின் வெற்றுக் கூச்சலை முஸ்லிம்கள் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. எனவே!

21-08-2009 வெள்ளி அன்று ரமழான் ஆரம்பிக்கிறது, வெள்ளி பகலில் நோன்பு நோற்க வேண்டும்.

18-09-2009 வெள்ளி அன்று 29 நோன்புகளுடன் ரமழான் முடிவடைகிறது.

19-09-2009 சனியன்று நோன்புப் பெருநாள்.

25-11-2009 புதன் அரஃபா தினம்.

26-011-2009 வியாழன் ஹஜ்ஜு பெருநாள்.

இந்த மிகமிகத் துல்லியமான மறுக்க முடியாத கணக்கீடுகளை முன்கூட்டியே அறிந்து அதன்படி செயல்படுவோமாக. நன்மைகளை முழுமையாக அடைவோமாக. அல்லாஹ் அருள்புரிவான்.


Courtesy : Annajaath Monthly,

Tuesday, July 28, 2009

உயிரை பறித்த பள்ளி தாளாளரின் பேராசை.



நெல்லை டவுணை சேர்ந்தவர் சாகுல் அமீது. சிறியதாக நகைக்கடை நடத்தி வந்ததோடு த.மு.மு.க-வின் நெல்லை நகர பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அன்பான மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அமைதியாக சென்று கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் பேரிடியாக, ஒருநாள் மதிய வேளையில் இவருடைய மூத்த மகன் முகம்மது ஆசிக் (8) 3-ம் வகுப்பு படித்து கொண்;டிருந்த லிட்டில் பிளவர் பள்ளியிலிருந்து ஒரு தொலைபேசி வந்தது. 'உங்கள் மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்' என கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

குமுறும் நெஞ்சத்தை கட்டுப்படுத்தியபடி பள்ளிக்கு விரைந்த சாகுல் தம்பதியினர், பின்பு பாளை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு காண கிடைத்தது அந்;த பாலகனின் உடல் மட்டுமே.

செய்தி கேள்விபட்டு அங்கு குழுமிய த.மு.மு.க-வினருக்கு கிடைத்த செய்தி, பள்ளியின் சார்பாக நீச்சல் பயிற்சி என அனைத்து மாணவர்களும் கட்டாயபடுத்தப்பட்டு ரூ.300 பெற்று கொண்டு, சுமார் 35 மாணவர்கள் ஒரு வேனில் பத்து தினங்கள் முன்பே பள்ளியில் பணிக்கு சேர்ந்த ஒரு ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியருடன். அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள அரசு நீச்சல் பயிற்சி கூடத்தில் பயிற்சிக்கென சேர்க்கப்படுகின்றனர்.

மாணவர்கள் அனைவரும் மார்பளவு தண்ணீரில் இறக்கி விட்டுவிட்டு, பயிற்சியாளர்கள் புகைபிடிக்கவும், அலைபேசியில் பேசவும் என அவ்விடத்தை விட்டு அகன்று விட்டனர். மாணவன் ஆசிக் அந்த குளத்தில் வழுக்கி விழ, மாணவர்களின் கூக்குரலை கேட்டு பயிற்சியாளர்கள் வந்து பார்த்த போது ஆசிக்கின் சடலம் மட்டுமே கிடைத்துள்ளது.

அன்றைய தினம் சனிக்கிழமை மாலை நேரம் ஆகிவிட்டதால் போஸ்ட்மார்டம் மறுநாளே செய்யப்படும் என்று கூற, த.மு.மு.க மாவட்ட நிர்வாகிகள் உயர் அதிகாரிகளிடம் நிலைமையை விளக்கி உடனடியாக பிண பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.

இதற்கிடையே ஏராளமான த.மு.மு.க தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அன்று இரவு கூடிய அப்பகுதி கான்மியான் ஐமாத் இப்பிரச்சனையில் த.மு.மு.க எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பது என தீர்மானம் நிறைவேற்றினர்.

மரணச் செய்தி பத்திரிக்கைகள் மற்றும் த.மு.மு.க-வின் கண்டன சுவரொட்டிகள் வாயிலாக தெரிந்து கொண்ட மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் சாரை சாரையாக ஐனாஸாவை பார்க்க வந்த வண்ணம் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் பள்ளியின் தாளாளர் பற்றிய ஏராளமான புகார்களை கூறி இதை உங்களை தவிர யாரும் தட்டி கேட்க இயலாது என்றும் த.மு.மு.க நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். ஆனால் காவல்துறை எங்கிருந்தோ வந்த நிர்பந்தத்தால் பள்ளி நிர்வாகத்தை வழக்கில் சேர்க்காமல் நீச்சல்குள பயிற்சியாளர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்ததோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக திருப்தி அடைந்தனர்.

ஐனாஸா அடக்கம் முடிந்ததும், ஐமாத்தார்கள் அனைவரும் த.மு.மு.க-வினருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் பொதுமக்கள் அதிகமாக பங்கு கொண்டதை அறிந்த மாவட்ட ஆட்சி தலைவர் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் எதை பற்றியும் கவலைபடாத பள்ளி தாளாளர் தன்னுடைய பணபலத்தால், உள்ளுர் ஊடகங்கள சிலவற்றை மவுனமாக்கியதை போல், இவ்வழக்கையும் நீர்த்து போக செய்திட முனைந்துள்ளார்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தி;த்து ஆறுதல் கூறிய த.மு.மு.க தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லா மற்றும் துணை பொதுசெயலாளர் J.S.ரிபாயி ஆகியோர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளியின் தாளாளர் மரிய சூசையின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் வரை த.மு.மு.க ஒயாது.

Tuesday, June 09, 2009

காஃபிர்கள், அநியாயக்காரர்கள், பாவிகள்

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல. இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்ற இந்த ஆயத்து.

நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு.

இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம்.

இதுவரையிலும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) என்பதை ஆதாரமாகக் காட்டி ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று எழுதியவர் இன்று அந்த கருத்தில் இல்லை. இருந்தாலும் இன்றும் சிலர் அந்த கருத்தில் இருக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடியவர்களிடமிருந்து இதுவரையிலும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை. இதை நாம் நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த ஒரு வசனமே போதுமான ஆதாரம்தான்.

இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம். இது நமது முந்தைய வெளியீடு. அந்த வெளியீட்டில் நான் இஸ்லாமிய ஆட்சி செய்கிறேன். நான்தான் தீர்ப்பு சொல்வேன். இஸ்லாமிய முறைப்படிதான் தீர்ப்பு சொல்வேன் என கச்சை கட்டிக் கொண்டு நிற்கச்சொல்லவில்லை அல்லாஹ். இந்த வசனத்தில் அல்லாஹ் சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறான் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு அல் குர்ஆன் 5:42ஆவது வசனத்தை ஆதாரமாகக் காட்டி இருந்தோம். இது போதுமான ஆதாரமாக இல்லை என்று சிலர் கருத்து கூறி உள்ளனர். இது அவர்களுடைய கருத்து. அந்த ஒரு வசனமே போதுமான ஆதாரம்தான். இருந்தாலும் இன்னும் தெளிவாகவும் வலுவாகவும் உள்ள வசனங்களை இந்த வெளியீட்டில் காண்போம் இன்ஷhஅல்லாஹ்.

இதே அத்தியாயத்தில் மூன்று இடத்தில் வருகிறது.

இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன? இஸ்லாமிய ஆட்சி என்பது எப்படி இருக்க வேண்டும். ஒரு இஸ்லாமியன் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது உட்பட அனைத்துக்கும் முன் மாதிரி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான். அந்த இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனாவை ஆட்சி செய்தபொழுது எந்த மாதிரி சட்டங்களை அமுல்படுத்தினார்கள். இஸ்லாமிய சட்டங்களை திணித்தார்களா? விரும்பி வந்தவர்களுக்கு எந்த முறையில் தீர்ப்பளித்தார்கள் என்பதில் ஒரு பகுதியைப் முன்பு பார்த்தோம். அதன் தொடரை இப்பொழுது பார்ப்போம். வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் (யார்) என்பது பற்றிய வசனம் இதே அத்தியாயத்தில் மூன்று இடத்தில் வருகிறது.

வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். அல் குர்ஆன் 5:44

வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் ழாளிமூன் எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! அல் குர்ஆன் 5:45

வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் பாஸிகூன். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். அல் குர்ஆன் 5:47


காஃபிர்கள், அநியாயக்காரர்கள், பாவிகள் என மூன்று விதமாக குறிப்பிட்டுள்ளான்.

யூதர்களுக்கு எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும்படி அல்லாஹ் கூறுகிறான்.

தவ்ராத் வேதத்தின் சில பகுதிகளை உமர்(ரலி) அவர்கள் படித்துக் காட்டியபோது, ரஸுல்(ஸல்) அவர்கள் கோபமடைந்து, 'மூஸா(அலை) அவர்கள் உயிருடன் தற்போது தோன்றினால் (அவர்கள் கூட) என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) நூல்:-அஹ்மது, பைஹகீ, தாரிமீ. இந்த ஹதீஸை அனைவரும் அறிவோம். இப்படிச் சொன்ன இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் இருக்கும் யூதர்களுக்கு எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும்படி அல்லாஹ் கூறுகிறான் என்பதைப் பாருங்கள்.

நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி அருளினோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டதாலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாக அவர்கள் இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். (அல்குர்ஆன் 5:44.)

அவர்களுக்கு நாம் அதில், (தவ்ராத்தில்)''உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்குச் சமமான காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதியாக்கினோம். எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாக ஆகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! அல் குர்ஆன் 5:45

சட்ட சலுகை எதுவும் இல்லை என்று வாதிடக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்த யூதர்களுக்கு தவ்ராத்திலிருந்து தீர்ப்பு அளிப்பதை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான். அவர்களிடம் இஸ்லாமிய சட்டத்தை திணிக்கக் கூறவில்லை. ''உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் என்பது இஸ்லாமிய சட்டமும் கூட. அதனால்தான் அந்த சட்டம் இடம் பெற்றிருந்த தவ்ராத்தின்படி யூதர்களுக்கு தீர்ப்பு வழங்க கூறி உள்ளான். இதில் தனியார் (சிவில்) சட்ட சலுகை எதுவும் இல்லை என்று வாதிடக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்த கிறிஸ்தர்களுக்கு.

இதற்கும் பதில் அளிக்கும் விதமாக அடுத்தடுத்த வசனங்கள் உள்ளன. இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களது அதாவது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்த கிறிஸ்தர்களுக்கு எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும்படி அல்லாஹ் கூறுகிறான் என்பதைப் பாருங்கள். தெளிவான விளக்கம் கிடைக்கும்.

இன்ஜீலுக்குரியவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். அல் குர்ஆன் 5:47

எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்கள் மதப்படி நடந்து கொள்ள எந்த தடையும் போடவில்லை.

இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்த கிறிஸ்தர்களுக்கு இன்ஜீலிpலிருந்து தீர்ப்பு அளிப்பதையும் அல்லாஹ் அங்கீகரித்துள்ளான். அவர்களிடமும் இஸ்லாமிய சட்டத்தை திணிக்கக் கூறவில்லை. முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருக்கும் எந்த மதத்தவராக இருந்தாலும்; அவர்கள் மதப்படி நடந்து கொள்ள எந்த தடையும் போடவில்லை. இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்கள் மதப்படிதான் வாழ்ந்தார்கள். அவர்கள் மதப்படிதான் வணக்க வழிபாடுகள் செய்தார்கள்.

இவையெல்லாம் தெளிவாகவும் வலுவாகவும் உள்ள ஆதாரங்களாகும்.

மதீனா ஹரம் எல்கையாக அறிவிக்கப்படும் முன் வந்த நஜ்ரான் நாட்டு கிறிஸ்தவ பாதிரிகள் மஸ்ஜிதுன்நபவியில்தான் தங்க இருந்தார்கள். மஸ்ஜிதுன்நபவியிலேயேதான் அவர்களது வணக்க வழிபாடுகளை செய்தார்கள் என்பதை ஹதீஸ்களில் காண்கிறோம். அல்லாஹ்வால் அங்கீகரிக்கபட்ட மார்க்கம் இஸ்லாம்தான். அந்த சாந்தி மார்க்கத்தில் நிர்ப்பந்தம் என்பது கிடையாது. இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டங்கள் என்பதற்கு இவையெல்லாம் தெளிவாகவும் வலுவாகவும் உள்ள ஆதாரங்களாகும்.
அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்.

அல்குர்ஆன் 5:44 வசனத்தில் யூதர்களைப் பற்றி சொல்லி வந்த அல்லாஹ் முஸ்லிம்களை நோக்கி சொல்கிறான்.

மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள். எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்.(அல்குர்ஆன் 5:44.)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநியாயக்காரர்கள் என்று யூதர்கள் விஷயத்திலும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் பாவிகள் என்று கிறிஸ்தவர்கள் விஷயத்திலும், அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் காபிர்கள் என்று முஸ்லிம்கள் விஷயத்திலும் கூறி உள்ளான்.

இந்திய தாகூத்திய சட்டங்கள் இதற்கு தடையாக இருக்கவில்லை.

முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் தீர்ப்பு வழங்க வேண்டும். மறுத்தால் காபிர்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவிலுள்ள பள்ளிவாசல் ஜமாஅத்களிடமோ, ஊர் ஜமாஅத்களிடமோ அல்லது இன்றுள்ள ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்புகளிடமோ தலாக், மறுமணம், முதல் மனைவி இருக்க இரண்டாவது மூன்றாவது அல்லது நான்காவது திருமணம், பாகப்பிரிவினை, இப்படி ஏராளமான பிரச்சனைகள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் எந்த அடிப்படையில் தீர்ப்பு சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறார்கள். இந்திய தாகூத்திய சட்டங்கள் இதற்கு தடையாக இருக்கவில்லை.

இந்திய சோசலிஸப்படி தீர்ப்பு வேண்டும் என்று ஒரு முஸ்லிம் கேட்டால்.

இதே பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு முஸ்லிம்கள் இந்தியாவிலுள்ள எந்த கோர்ட்டுக்கு போனாலும் இஸ்லாமிய அடிப்படையில்தான் தீர்ப்பு கிடைக்கும். அதற்கு முஹம்மடன் லா என்று எழுதி வைத்திருக்கிறார்கள். முஹம்மடன் லா படி அதாவது இஸ்லாமிய சட்டப்படி தீர்ப்பு வேண்டாம். இந்திய சோசலிஸப்படி தீர்ப்பு வேண்டும் என்று ஒரு முஸ்லிம் கேட்டால் அவன் காபிர். முஸ்லிமாக இருக்கக் கூடியவர்கள் முஸ்லிம்களிடையே இஸ்லாமிய அடிப்படையில் தீர்ப்பு வழங்க எந்த தடையும் இல்லை.

Monday, May 25, 2009

ம.ம.க.வினர் மீது பொய் வழக்குகள்

மனிதநேய மக்கள் கட்சியினர் சென்னையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (15.6.09) தமுமுக, மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங் களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திமுக ரவுடிகளுக்கு எதிராகவும், காவல்துறையைக் கண் டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எனினும் அனைத்து ஆர்ப்பாட் டங்களும் அமைதியான முறையில் நடந்து முடிந்தன.


ஆனால் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் தூண்டுதல் பேரில் காவல்துறையினர் மற்றும் ம.ம.க.வினர் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகளை புனைந்து வருகின்ற னர். ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத் தில் கலந்து ம.ம.க. வேட்பாளரும், மாவட்டச் செயலாளருமான சலிமுல்லா கான் உட்பட 100 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வந்தவாசியில் ததஜ அலுவலகத்தை தாக்கியதாக 30 பேர் மீதும், சேலத்தில் 20 பேர் மீதும் என ம.ம.க.வினர் மீது வழக்குகளைப் பதிவு செய்யும் அடக்குமுறையைக் கையாள ஆரம்பித்துவிட்டது ஆளுங் கட்சியான தி.மு.க.


தமுமுகவின் ஆரம்ப காலங் களில் அடக்குமுறையைக் கட்டவிழ்த் தது இதே திமுகதான்.. ஆயினும் தமுமுக வீறு கொண்டு எழுந்தது. மக்களின் பேரியக்கமாக மாறியது. இப்போது ம.ம.க. மீதான வழக்கு களும், அடக்குமுறைகளும் ம.ம.க. வின் எதிர்கால அரசியல் எழுச்சி யையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
from syed nawfal reply-to tamilmuslimbrothers@googlegroups.com
to tm

Monday, May 18, 2009

இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம்.

இனியாவது சட்டம் இயற்றும் அவைகளில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிட முயற்சிகள் செய்வோம்.

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அல்லது அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. மொழி பெயர்ப்பை எப்படி வைத்துக் கொண்டாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல இந்த ஆயத்து.

நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு.

இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம்.

இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம்.

யார் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் இறைவனை மறுக்கக் கூடியவர்கள். இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம் இது. அதற்கு ஆதாரம் (சூரத்துல் மாயிதாவில் உள்ள) 5:44 என்பதாகும். இப்படி குறிப்பிட்டு விட்டு 5:44.இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. அல்குர்ஆன் 12:40இல் கூறியது போலவே 5:44.இல் உள்ள வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் என்று மட்டுமே சொல்வார்கள். இதுவும் 5:44யின் முழு வசனம் இல்லை. 5:44ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது. இந்த ஒரு சிறு பகுதியான எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். என்று அல்லாஹ் அல்குர்ஆன் 5:44இல் கூறி உள்ளான். எனவே எப்படி மனிதர்களின் சட்டங்களை கொண்டு செயல்படுத்த முடியும். தீர்ப்பளிக்க முடியும் என்பார்கள்.

காலமும் நேரமும் வரும்போதுதான் செயல்படுத்த முடியும்.

இந்த வசனம் யாரைப் பார்த்து பேசுகிறது? அல்லாஹ்வுடைய தூதரை மட்டும் பார்த்து பேசுகிறதா? ஒரு சில வசனங்கள் அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பார்த்து பேசும். ஒரு சில வசனங்கள் அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பார்த்து பேசுவது போல் இருக்கும். அப்படி இருந்தாலும் அது ஒவ்வொரு முஃமினுக்கும் பொருந்தும். ஒரு சில வசனங்கள் எல்லோரையும் பார்த்து பேசுவதுபோல் இருக்கும். அப்படி இருந்தாலும் அதற்கு தகுதி உடையவர்கள்தான் அதுவும் காலமும் நேரமும் வரும்போதுதான் செயல்படுத்த முடியும்.

நேரம் காலம் தகுதி இதுவும் அல்லாஹ் அளித்துள்ள அனுமதிதான்.

அல்லாஹ் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டுள்ளான். எனவே ஏன் நோன்பு நோற்கவில்லை என எப்பொழுதுமே கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? ரமளான் மாதம் வந்தால் நோன்பு வையுங்கள் என்று அல்லாஹ்வே சொல்லி இருக்கிறான். ஏன் நோன்பு நோற்கவில்லை என ரமளான் மாதம் வந்தால்தான் கேட்க முடியும். அதுவும் நோன்பு காலத்திலும் இரவு நேரத்தில் இப்பொழுது ஏன் நோன்பு நோற்கவில்லை என கேட்க முடியுமா? நோயாளிகளிடமோ பிரயாணிகளிடமோ போய் ஏன் நோன்பு நோற்கவில்லை என கேட்க முடியுமா? நேரம் காலம் தகுதி இதுவும் அல்லாஹ் அளித்துள்ள அனுமதிதான்.

அத்தனை பேரும் ஆட்சி செய்யக் கூடியவர்களா?

யார் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் இறைவனை மறுக்கக் கூடியவர்கள் என்று சொன்னால். இந்த வசனம் ஒவ்வொருத்தரையும் பார்த்து பேசுகிறது என்றால். இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேரும் நீதிபதிகளா? அத்தனை பேரும் ஆட்சி செய்யக் கூடியவர்களா? என்று கேட்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இந்த வாதத்தை ஏற்றால்.

அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பார்த்து சொல்லக் வசனம். எனவே அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பொருந்தும். என்று சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். இந்த வாதத்தை ஏற்றால் இந்த மாதிரி உள்ள வசனங்கள் மூலம் பாதி குர்ஆன் செயல்படுத்த முடியாமல் போய் விடும். எனவே இப்படியும் பார்க்கக் கூடாது. அப்படியும் பார்க்கக் கூடாது. அல்லாஹ்வுடைய தூதருக்கு சொன்னால் நமக்கும் பொருந்தும் என்றே இந்த வசனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி பேசுகிறது என்பதை விளங்கி புரிய முடியும்.

இந்த வசனம் யாரைத்தான் பார்த்து பேசுகிறது எப்படி பேசுகிறது என்பதை அறிய இந்த வசனத்தை முழுமையாக படிக்க வேண்டும். தொடர்புடைய வசனங்களையும் படிக்க வேண்டும். அப்படி படிக்கும்போது இந்த வசனம் யாரைத்தான் பார்த்து பேசுகிறது. எப்படி பேசுகிறது என்பதை விளங்கி புரிய முடியும். எனவே இதற்கு தொடர்புடைய வசனமான இதே அத்தியாயத்தில் முன்பாக உள்ள வசனமான 38ஆவது வசனத்தை பார்க்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் அந்த வசனத்திலிருந்து சட்டங்களை ஆரம்பிக்கிறான். இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியில் அமர்ந்த பின் இறக்கியருளிய சட்டமாகும். அதனால் அந்த வசனத்திலிருந்து பார்க்க வேண்டும்.

திருடுபவன், திருடுபவள் ஆகியவர்களின் கைகளை வெட்டி விடுங்கள். இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும் அல்லாஹ்வின் தண்டணையுமாகும். அல்குர்ஆன் 5:38

திருடியவன் மனம் திருந்தி விட்டால்.

திருடுவது, அடுத்தவனது பொருளை அபகரிப்பது தீய செயல் - அநீதி. இந்த தீய செயலை அநீதியை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உள்ள ஒருவன் செய்து விட்டான். அதாவது திருடி விட்டான் என வைத்துக் கொள்வோம். அவன்தான் திருடன் என்பது யாருக்குமே தெரியாது. அந்த திருடன் மனம் திருந்தி விட்டான். இப்பொழுது அவன் என்ன செய்ய வேண்டும். இஸ்லாமிய ஆட்சியாளரிடம் போய் என் கையை வெட்டுங்கள் என்று சொல்ல வேண்டுமா? என்று கேட்டால் என்ன சொல்வார்கள். வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் ஏக இறைவனை மறுப்பவர்கள்தான்- காபிர்கள்தான். எனவே இஸ்லாமிய ஆட்சியாளரிடம் போய் என் கையை வெட்டுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்பார்கள்.

அல்லாஹ் அடுத்து என்ன சொல்கிறான்.

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான். என்று திருட்டுக்குரிய தண்டனை சட்டத்தை 5:38இல் சொல்லிய அல்லாஹ் அடுத்து என்ன சொல்கிறான். அநீதி இழைத்த பிறகு ஒருவர் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான். என்று சொல்கிறான்.

அல்லாஹ்வே அதை மறைத்து விட்டான்.

திருடியவன் மனம் திருந்தி விட்டால் இஸ்லாமிய ஆட்சியாளரிடம் போய் என் கையை வெட்டுங்கள் என்று சொல்லத் தேவை இல்லை என்பதுதான் இந்த வசனத்தின் விளக்கமாகும். விபச்சாரம் செய்து விட்டவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து தண்டனை வழங்குங்கள் என்று கேட்ட உடன் வமன் லம் யஹ்கும் பிமா அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் ஏக இறைவனை மறுப்பவர்கள்தான்- காபிர்கள்தான். எனவே தண்டனை வழங்குகிறேன் என்று கூறி விடவில்லை. மூன்று முறை முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். அல்லாஹ்வே அதை மறைத்து விட்டான் நீ ஏன் அதை சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கூட சொல்கிறார்கள். மீண்டும் மீண்டும் கூறிய பின்தான் தண்டனை வழங்குகிறார்கள். இதை நாம் ஹதீஸ்களில் காண்கிறோம்.

முஸ்லிம்களின் கையில் முழுமையான ஆட்சி இருந்தால்.

எனவே திருடிவிட்ட எவரேனும் பிடிபடாத நிலையில், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 5:39. பிடிபட்டவன் என்று சொன்னால் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட பின் தண்டணை வழங்க வேண்டும். முஸ்லிம்களின் கையில் முழுமையான ஆட்சி இருந்தால் கையை வெட்ட வேண்டும் இதுதான் சட்டம்.

யூத கிறிஸ்தவர்கள் விஷயத்தில்.

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் யூதர்களும் இருந்தார்கள். கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். அந்த சூழலில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சிக்கு சட்டங்களை சொல்லி வந்த அல்லாஹ் யூத கிறிஸ்தவர்கள் விஷயத்தில் எந்த மாதிரி சட்டங்களை சொல்கிறான் என்பதை பாருங்கள்.

யூத கிறிஸ்தவர்கள் பொய்யையே அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்தால், அவர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். இது அதே சூரத்துல் மாயிதாவில் உள்ள 42ஆவது வசனத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த வசனத்தில் அல்லாஹ் சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறான்.

நன்கு கவனிக்க வேண்டும். அவர்கள் உம்மிடம் வந்தால். அதாவது வந்தால்தான். தீர்ப்பு வழங்கலாம். அல்லது உங்கள் பிரச்சனையை நீங்களே உங்களுக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்றும் விட்டு விடலாம். நான் இஸ்லாமிய ஆட்சி செய்கிறேன். நான்தான் தீர்ப்பு சொல்வேன். இஸ்லாமிய முறைப்படிதான் தீர்ப்பு சொல்வேன் என கச்சை கட்டிக் கொண்டு நிற்கச்சொல்லவில்லை அல்லாஹ். இந்த வசனத்தில் அல்லாஹ் சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறான்.

இஸ்லாத்தில் இருந்துதான் திருடி இருக்கிறார்கள்.

இதுதான் இந்த அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் இன்று இந்தியாவில் உள்ள தனியார் சட்டம் அதாவது சிவில் சட்டம். இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம். இதனால்தான் பி.ஜெ.பி. போன்ற இஸ்லாமிய விரோத அமைப்புகள் சிவில் சட்டம் இருக்கக் கூடாது. பொது சிவில் சட்டம் வேண்டும் என்கின்றன. நன்கு புரிய வேண்டும். இந்தியாவில் சட்டம் இயற்றிவர்கள் மக்களுக்கு பயன் தரக் கூடிய எல்லா சட்டங்களையும் இஸ்லாத்தில் இருந்துதான் திருடி இருக்கிறார்கள்.

பட்டம் பதவி பெயர் அவர்களுக்கு கிடைத்திருக்காது.

இது இஸ்லாத்தில் இருந்து எடுத்த சட்டம். குர்ஆனில் இப்படி கூறப்பட்டு இருக்கிறது. அதிலிருந்துதான் சிவில் சட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் மதப்படி சட்டம். முஸ்லிம்களுக்கு அவர்கள் மதப்படி சட்டம். என தனியார் சட்டம் கண்டு பிடித்தோம் என்று கூறி இருந்தால் சட்டம் இயற்றிய நிபுணர்கள் என்ற பட்டம் பதவி பெயர் அவர்களுக்கு கிடைத்திருக்காது. எனவே கூறாமல் மறைத்து விட்டார்கள். சட்டம் இயற்றும் அவையில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தால் இந்த உண்மையை உலகுக்கு கூறி இருப்பார்கள். இனியாவது சட்டம் இயற்றும் அவைகளில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிட முயற்சிகள் செய்வோம்.

அத்வானி கூட இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு வேண்டும் என்று சொன்னார்.

அவர்களாக முன் வந்து இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு தாருங்கள் என்று கேட்டால் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு கூறலாம். அவர்களாக முன் வந்து இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு கேட்பார்களா? என்ற சந்தேகம் பலருக்கு வரும். பொது சிவில் சட்டம் பூச்சாண்டி காட்டி புதி சதி திட்டம் போட்ட அத்வானி கூட துணை பிரமராக இருந்தபொழுது என்ன சொன்னார். கற்பழிப்புக்கு மரண தண்டணை கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். இது யாருடைய சட்டம். இஸ்லாமிய சட்டம் அல்லவா. முஸ்லிம்களின் எதிரியாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கும் அத்வானி கூட இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு வேண்டும் என்று சொன்னார் அப்படி இருக்கும்பொழுது பொது மக்கள் சொல்ல மாட்டார்களா?

5:42இன் தொடரை பாருங்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்தால், அவர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்த தீங்கும் தர முடியாது. ஆனால், நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.

இங்கும் நன்கு கவனிக்க வேண்டும். அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்லவில்லை. தீர்ப்பளித்தால் என்றுதான் சொல்லி உள்ளான். தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக என்று சொல்லி உள்ளான்.

அல்லாஹ்வும் அப்படி கட்டளையிடவில்லை.

இஸ்லாமிய ஆட்சிகளுக்கெல்லாம் முன் மாதிரியான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூட எங்கு தப்பு நடந்தாலும் நான்தான் தீர்ப்பு கூறுவேன். இஸ்லாமிய சட்டப்படிதான் தீர்ப்பு கூறுவேன். நீ எந்த மதத்தவனாக இருந்தாலும் எனது ஆட்சியின் கீழ் இருக்கும்போது இஸ்லாமிய சட்டப்படிதான் தீர்ப்பு பெற வேண்டும் என்றெல்லாம் அதிகாரம் செலுத்தவில்லை. அல்லாஹ்வும் அப்படி கட்டளையிடவில்லை.

தொடரும் இன்ஷhஅல்லாஹ்

Saturday, May 16, 2009

இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே

இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.

3:200 .முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.

3:118 .நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்;. நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;. அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).

3:119 .(முஃமின்களே!) அறிற்து கொள்ளுங்கள்;. நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்;. ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது ''நாங்களும் நம்புகிறோம்'' என்று கூறுகிறார்கள்;. எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்''.

3:120 .ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.

2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

2:153 .நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்

2:155 .நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).2:177

''எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்'' என்று கூறினார்கள்.2:249

3:146 .மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.

3:153 .(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

3:154 .பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; ''இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?'' (என்று, அதற்கு) ''நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; ''இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;'' ''நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!'' என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.

3:186 .(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும;

3:165 .இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், ''இது எப்படி வந்தது?'' என்று கூறுகிறீர்கள். (நபியே!) நீர் கூறும்; இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,''

3:166 .மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன. இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.

8:46 .இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

8:47 .பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.

8:65 .நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

8:66 .நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

11:11 .ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.

7:128 .மூஸா தம் சமூகத்தாரிடம்; ''அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்'' என்று கூறினார்.

11:49. (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).

11:115. (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
12:111 .(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது


20:132. (நபியே!) உம் குடம்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.

Saturday, May 09, 2009

த.த.ஜ.வினர் அடித்த அடியில்.

அடிபட்ட இமாம் முஸ்லிமுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்க மாட்டேன் என்றார்.


Friday, May 08, 2009

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி யார் முன் மாதிரி.

யாருக்கு யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள்.

அல்லாஹ்வின் சட்டங்களையே அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஆயத்துக்கள் அனைத்தும் முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்த பின் செயல்படுத்துவதற்கே சான்றாக உள்ளன. அவற்றையும் அடுத்தடுத்து பார்ப்போம் என்று முந்தைய வெளியீட்டை முடித்து இருந்தோம். அதன் தொடருக்கு முன்னதாக இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறி;ந்தவன் பேணிக் காப்பவன் என்று( 12:55) கூறிய யூசுப் (அலை) அவர்களிடம் உள்ள அரசியல் முன் மாதிரிகளை நினைவு கூறுவது இன்றைய சூழலுக்கு பொருத்தமான ஒன்று. தேர்தல் நேரமாக - சாதனை பிரச்சார நேரமாக இருப்பதால் மிக பொருத்தமானது. எனவே அதனை முதலில் பார்ப்போம்.

ரேஷன் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன் மாதிரி அரசியல்வாதி.

ரேஷன் முறையை கொண்டு வந்தது காங்ரஸ் ஆட்சிதான். இல்லை திமு.க. ஆட்சிதான். இல்லை இல்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் ரேஷன் முறையை கொண்டு வந்தார்கள். இப்படி வயதுக்கு தக்கவாறு வாதிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு தேவைப்படும் பொருள்களில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டால் பஞ்சம், தட்டுப்பாடு வரும். எனவே அந்த பொருள் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் அரசாங்கமே வினியோகிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் பணக்காரர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும். ஏழைகளுக்கு கிடைக்காது. எனவே ரேஷன் முறை அவசியம். இந்த ரேஷன் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன் மாதிரி அரசியல்வாதி யூசுப் (அலை) அவர்கள்தான் என்பதை அறிகிறோம்.

முன் மாதிரி உணவு அமைச்சராக இருந்து காட்டியவர்.

பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களை ஏற்படுத்த வேண்டும் என்ற வழி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். உணவு அமைச்சர் என்று இன்று நாம் சொல்கிறோமே அந்த உணவு அமைச்சர் என்ற பதவியை முதலில் வகித்தவர். முன் மாதிரி உணவு அமைச்சராக இருந்து காட்டியவர் யூசுப் (அலை) அவர்கள்தான்.

தகுதி உடையயவர்கள் பதவியை கேட்டுப் பெற வேண்டும்.

தகுதி உடைய பலர் உள்ளத்தில் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசக் கூடியதைப் பார்க்கிறோம். அப்படி செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என வானளாவ ஆய்வுரை அறிவுரை வழங்குவார்கள். பிறரை ஏவி விடுவார்கள். பலன் கிடைத்தால் நான் சொன்ன யோசனை என்பார்கள். பிரச்சனை என்றாகி விட்டால் சொல்லைக் கேட்டு செயல்பட்டவனின் தலையில் கட்டி நழுவி விடுவார்கள். இதுதான் இன்றைய தகுதி உடையவர்கள் எனப்படுவோர் நிலையாக உள்ளது. மக்கள் நலன் காப்பதற்காக தகுதி உடையயவர்கள் பதவியை கேட்டுப் பெற வேண்டும். இதற்கு உளத்தூய்மைமிக்க முன் மாதிரி அரசியல்வாதியாக யூசுப் (அலை) அவர்கள் இருந்துள்ளார்கள்.

உங்களை சிறையில் அடைத்தவன் ஆட்சியில் பொறுப்பு வகிக்கலாமா?

நடுநிசியில் முன்னெச்சரிக்கை கைது செய்தவன் ஆட்சியில் பொறுப்பு கேட்கலாமர்? உங்களை தடாவில் தள்ளியவன் பொடாவில் போட்டவன் ஆட்சியிலா பொறுப்பு கேட்கிறீர்கள்? உங்களை சிறையில் அடைத்தவன் ஆட்சியில் பொறுப்பு வகிக்கலாமர்? என்றெல்லாம் கேள்விகள் உள்ளது. அசிங்கமான கற்பழிப்பு முயற்சி என்ற பொய் குற்றச்சாட்டுக் கூறி சிறையில் தள்ளப்பட்டவர் நபி யூசுப் (அலை) அவர்கள்.

எந்த ஆட்சி சிறையில் தள்ளியதோ அந்த ஆட்சியில் பதவி வகிக்கலாம்.

எந்த ஆட்சி சிறையில் தள்ளியதோ அந்த ஆட்சியின் போது பஞ்சம் வரும் என்பதை முதன் முதலில் தெளிவாக தெரிந்தார்கள் யூசுப் (அலை) அவர்கள். உடனே நம்மை சிறையில் தள்ளிய ஆட்சியில் பஞ்சம் வரட்டும். அதன் மூலம் அந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வரட்டும் என பழி தீர்க்க நாடவில்லை. பஞ்சத்தை சமாளிக்கும் பொறுப்பை ஏற்றார்கள். நிரபராதியை சிறையில் அடைத்த ஆட்சியாக இருந்தாலும் சமுதாய நலன் கருதி அந்த ஆட்சியில் பங்கு வகிக்கலாம். எந்த ஆட்சி சிறையில் தள்ளியதோ அந்த ஆட்சியில் பதவி வகிக்கலாம். இந்த பரந்த மனப்பான்மையுடன் கூடிய தூய அரசியல் வழி காட்டலை சிறந்த அரசியல்வாதி யூசுப் (அலை) அவர்களிடம் காண்கிறோம்.

முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் முஸ்லிம்கள் பதவி வகிக்கலாம்.

முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் முஸ்லிம்கள் பதவி வகிக்கலாமா என்ற கேள்விகளும் உள்ளது. தான் ஒரு நபியாக இருந்தும் கவுரவம் பாராமல் சமுதாய நலன் கருதி முஸ்லிம் அல்லாத மன்னரின் கீழ் அமைச்சராக இருந்து சமுதாயத்துக்கு பணியாற்றினார் நபி யூசுப் (அலை) அவர்கள். இதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் முஸ்லிம்கள் பதவி வகிக்கலாம். அதன் மூலம் சமுதாயத்துக்கு பணியாற்றலாம் என்பதற்கும் நபி யூசுப் (அலை) அவர்கள் அரசியல் வாழ்வு முன்னுதாரணமாக உள்ளது.

அகில உலகுக்கும் முன் மாதிரி.

15ரூபாய்க்கு பெறுமான கிலோ அரிசியை இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என ஆரம்பித்து ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குகிறார். இதைப் பார்த்து ஆந்திரா அறிவிக்கிறது. ஆந்திராவுக்கு முன் மாதிரி கலைஞர் கருணாநிதிதான். அகில இந்திய கட்சியினரும் அறிவிக்கிறார்கள். அகில இந்தியாவுக்கும் முன் மாதிரி கலைஞர் கருணாநிதிதான். ஏன் அகில உலகுக்கும் முன் மாதிரி கலைஞர் கருணாநிதிதான் என்று பேசுகிறார்கள். இப்படி மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, தயாநிதி மாறன் பேசினால் நாம் வருத்தப்பட வேண்டியதில்லை.

வேதனைப்படுகிறோம். வெட்கித் தலை குணிகிறோம்.

இப்படி யார் பேசுகிறார்கள். ஓட்டுப் போடுவது ஹராம், அரசியல் ஹராம், தேர்தல் களத்தில் ஈமான் போய் விடும் என ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு அவதாரம் எடுத்தவர்கள். இட ஒதுக்கீடு தந்தாலும் கோவையில் 19 பேர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்காதவரை கருணாநிதியை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்று பேசியவர்கள். அந்த சந்தர்ப்பத்துக்கு தகுந்தவாறு குர்ஆன் ஹதீஸ்களைக் கூறிய அந்த அறிஞர்கள்? 15ரூபாய்க்கு பெறுமான கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு தர கலைஞர் கருணாநிதிதான் அகில உலகுக்கும் முன் மாதிரி என்று பேசுவதால் நாம் வேதனைப்படுகிறோம். வெட்கித் தலை குணிகிறோம்.

வழி காட்டியவர் யார்?

வாங்கும் சக்தி குறைந்து வறுமையில் வாடும் மக்களிடம் குறைவான பணம் வாங்கி விட்டு ரேசன் மூலம் அரசாங்கத்தின் சார்பாக நிறைவாகக் கொடுக்கவும் தானமாகக் கொடுக்கவும் வழி காட்டியவர் யார்? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிக்கு மட்டுமல்ல ரூபாய்க்கு மூன்று படி அரிசிக்கும் யார் முன் மாதிரி. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் யூசுபிடம் வந்து அமைச்சரே எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. அற்பமான சரக்குகளையே கொண்டு வந்து இருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக. எங்களுக்கு தானமாகவும் தருவீராக. 12:88

யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள்.

இன்று ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருள் வாங்குகிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட பண்டமாற்று முறை இருந்து வந்துள்ளது. இப்பொழுதும் கூட கிராமங்களில் பண்டமாற்று முறை இருக்கத்தான் செய்கிறது. நபி யூசுப் (அலை) அவர்கள் காலத்தில் பண்டமாற்று முறைதான். வாங்கும் சக்தி குறைந்து வறுமையில் வாடிய மக்களிடம் மிகக் குறைந்த சரக்குகளை பெற்றுக் கொண்டு (அதாவது மிகக்; குறைந்த விலையில்) உணவுப் பொருள் வழங்கி இருக்கிறார்கள். அதனால்தான் உரிமையுடன் அற்பமான சரக்குகளையே கொண்டு வந்து இருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக. 12:88 என்று கேட்டுள்ளார்கள். ரூபாய்க்கு மூன்று படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என வழங்க அகில உலகுக்கும் யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள்.

அரசு சார்பாக தானங்கள் செய்ய யார் முன் மாதிரி.

இது மட்டுமா அரசு சார்பாக வறுமையில் வாடிய மக்களுக்கு தானமும் செய்துள்ளார்கள். எனவேதான் எங்களுக்கு தானமாகவும் தருவீராக. 12:88 என்றும் கேட்டுள்ளார்கள். இன்று அரசு சார்பாக தானமாக இலவச வேட்டி, சேலை, என பல்வேறு தானங்கள் வழங்கப்படுகிறது. இப்படி அரசு சார்பாக தானங்கள் செய்ய யார் முன் மாதிரி. நபி யூசுப் (அலை) அவர்கள்தான் முன் மாதிரி. யாருக்கு யார் முன் மாதிரி புரிகிறதா? இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள். மானங்கெட்டவர்கள்.

இந்த இலவச வீடுகள் திட்டத்துக்கு முன் மாதிரி யார்?

நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், சமத்துவபுரம், காவலர் குடி இருப்பு என அரசாங்கமே வீடுகளை அமைத்துக் கொடுப்பதை பார்க்கிறோம். இந்த இலவச வீடுகள் திட்டத்துக்கு முன் மாதிரி எது? அல்குர்ஆன் கூறுகிறது.

நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள் என்று மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் வஹீ அறிவித்தோம். 10:87. என்று அல்லாஹ் கூறுகிறான். அனைத்துக்கும் முன் மாதிரியாக இஸ்லாமும் இஸ்லாமிய அரசியலும்தான் இருக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தை மூலையில் முடங்க வைத்து விட்டார்கள்.

சமுதாயத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள், பிரபலமானவர்கள் என்ற ஒரே பலத்தை சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு தவறாக பயன்படுத்தி விட்டார்கள். இஸ்லாமிய விரோதிகளும் இவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். பேண்டு போடுவது ஹராம். ஆங்கிலம் ஹராம். அரசியல் ஹராம். ஓட்டுப் போடுவதும் ஓட்டுக் கேட்பதும் தேர்தலில் நிற்பதும் ஹராம் என முஸ்லிம் சமுதாயத்தை மூலையில் முடங்க வைத்து விட்டார்கள்.

அரசியல் சாக்கடை என்று சொன்னது யார்?

அதோடு மட்டுமன்றி அரசியல் சாக்கடை என்ற பிரச்சாரம் வேறு. அரசியல் என்றால் என்ன? ஆட்சி அதிகாரத்தில் இருந்த, இருக்கின்ற, இருக்க முயற்சிக்கின்ற கட்சிகளை அரசியல் கட்சி என்போம். தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை அரசியல் சார்பற்றது என்போம். அவர்கள் தங்களை சமுதாய அமைப்பு என்பார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அரசியலை சாக்கடை என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்வார்கள். அரசியல் சாக்கடை என்று சொன்னது யார்? அன்றைய அண்ணன் சொன்னார் அரசியல் சாக்கடை என்று. அரசியல் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்.

அரசியல் பற்றி அல்லாஹ்.

அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்றாஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். இன்னும் அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்4:54.

வேதத்தை ஞானத்தை தனது அருள் என்று சொன்ன அல்லாஹ் நன்கு கவனிக்க வேண்டும் அதே வரிசையில் ஆட்சி அதிகார அரசியலை தனது அருள் என்று குறிப்பிட்டுள்ளான்.

அண்ணன் வழியா? அல்லாஹ் காட்டிய வழியா? எது சரி சிந்தியுங்கள்.

இப்பூமியில் விரும்பிய இடத்தில் வசித்துக் கொள்ளும் வகையில் இவ்வாறே யூசுபுக்கு அதிகாரம் அளித்தோம். நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். 12:56 முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் நபி யூசுப் (அலை) அவர்கள் வகித்த அமைச்சர் பதவியையும் தனது அருள் என்றே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

அல்லாஹ் சொல்கிறான் அரசியல் தனது அருள் என்று. அண்ணன் சொன்னார் அரசியல் சாக்கடை என்று. அரசியல் சாக்கடை என்பவர்கள் யார் வழியில் நடக்கிறார்கள். அண்ணன் வழியா?அல்லாஹ் காட்டிய வழியா? எது சரி சிந்தியுங்கள்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் யார் முன் மாதிரி.

திராவிட கட்சிகள் பிரபலமாக வேகமாக வளர விளம்பரமாக மக்களிடம் வரவேற்பை பெற மூல காரணமாக இருந்தது எவை. உழுபவனுக்கே நிலம் சொந்தம். இடைத் தரகு இன்றி விவசாயியே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக உழவர் சந்தை. இது போன்ற திட்டங்களுக்குரிய சட்டங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பன போன்ற தத்துவங்கள்தான். உழுபவனுக்கே நிலம் சொந்தம் யார் முன் மாதிரி. இடைத் தரகு இன்றி விவசாயியே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் (அதாவது உழவர் சந்தை) என இவை யாவும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சி காலத்தில் போட்ட சட்டமாகும். ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பது ஹதீஸ் குத்ஸியில் இருந்து எடுத்த தத்துவமாகும்.

ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை சொல்ல வேண்டிய முஸ்லிம்கள் பல்வேறு பெயர்களில் இஸ்லாமிய பிரச்சார மேடை அமைத்தார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு யாரை அழைத்தார்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன் என திராவிட கட்சியினரை அழைத்தார்கள். இவர்கள் முஸ்லிம்களிடம் போய் பேச வேண்டுமே என்று இஸ்லாமிய நூல்களை படித்தார்கள். இஸ்லாம் கூறும் அரசியலை ஆட்சி முறையை அறிந்தார்கள். வாங்கும் சக்தியற்று வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்த விலையில் ரேசன் மூலம் அரசாங்கத்தின் சார்பாக உணவு பொருள் கொடுக்கும் திட்டத்தை உணர்ந்தார்கள். ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

அல்லாஹ் சொல்வது இஸ்லாமா? அண்ணன்கள் சொல்வது இஸ்லாமா?

பாய்மார்கள் (முஸ்லிம்கள்) விழித்துக் கொள்ளக் கூடாது தலையணை போட்டு உறங்க வேண்டும் என்பதற்காக அரசியல் சாக்கடை என்றார்கள். அரசியல் தனது அருள் என்று அல்லாஹ் சொன்னதை விட்டு விட்டு அரசியல் சாக்கடை என்று அண்ணன் சொன்னதை இஸ்லாமிய பிரச்சாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் சொல்வது இஸ்லாமா? அண்ணன்கள் சொல்வது இஸ்லாமா?

முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டால்தான் இவை மக்கள் நலனுக்கான இஸ்லாமிய சட்டங்கள் என்பதை பகிரங்கப்படுத்தி செயல்படுத்த முடியும். அதுவும் இஸ்லாமிய பிரச்சாரமாக அமைந்து விடும். இஸ்லாம் வளரும். இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆட்சியாளராக ஆன பின்தான் இஸ்லாம் வேகமாக வளர்ந்தது. இன்ஷhஅல்லாஹ் விழித்தெழுவோம். அரசியலில் முழுமையாக ஈடுபட்டு ஆட்சி அதிகாரம் மூலம் செயல்படுத்தி அனைத்துக்கும் முன்மாதிரி இஸ்லாம்தான் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.
தொடரும் இன்ஷhஅல்லாஹ்.



Monday, May 04, 2009

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ்

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற இந்த வாதம் வைக்கக் கூடியவர்களில் அதிகமானவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக முதலில் கூறக் கூடிய குர்ஆன் வசனம் 12:40என்பதாகும்.

இப்படி குறிப்பிட்டு விட்டு 12:40இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. 12:40இல் உள்ள இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்று மட்டுமே சொல்வார்கள்.

இது 12:40யின் முழு வசனம் இல்லை. 12:40ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது என்பதை முந்தைய வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம்.

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்ற வார்த்தை இதே அத்தியாயத்தில் 67ஆவது வசனத்திலும் சூரத்துல் அஃராப் 57ஆவது வசனத்திலும் இடம் பெற்றுள்ளது.

இருந்தாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்துடையவர்கள் அனைவருமே 12:40தையே ஆதாரமாக கூறுவார்கள். அதில்தான் அவர்களுடைய ஆய்வும் கருத்தும் தவறானது என்பதற்குரிய ஆதாரமும் உள்ளது.

குர்ஆனில் ஒரு சில வசனங்களை அந்த ஒரு வசனத்தின் மூலமே முழுமையாக விளங்கலாம். ஒரு சில வசனங்களில் அந்த ஒரு வசனத்தின் ஒரு சிறு பகுதி பகுதியிலேயே முழுமையான விளக்கம் கிடைத்து விடும். பல வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கும்.

குர்ஆனுக்கு விளக்கம் குர்ஆன் என்பதை அனைவருமே ஏற்றிருக்கிறோம். குர்ஆனின் ஒரு வசனத்துக்கு இன்னொரு வசனம் விளக்கமாக இருக்கும். ஒரு வசனத்துக்கு இன்னொரு வசனம் தொடர்புடையதாக இருக்கும். அந்த வசனங்கள் வெவ்வேறு அத்தியாயங்களிலும் இடம் பெற்றிருக்கும். முன் பின் வசனங்களாகவும் இடம் பெற்றிருக்கும். ஒரு வசனத்தை முழுமையாக விளங்க அதன் முன் பின் வசனங்களையோ, வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ள அந்த கருத்துடன் தொடர்புடைய வசனங்களையோ பார்க்க வேண்டும். 12:40ஆவது வசனத்தை பொருத்தவரை முழுமையாக விளங்க அதன் முன் வசனமான 39ஆவது வசனத்தையும் படிக்க வேண்டும்.

குர்ஆன் அல்லாஹ்வுடைய கலாம்தான் குர்ஆன் முழுவதுமே அல்லாஹ்வுடைய வார்த்தைகள்தான் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து கிடையாது. அன ரப்புக்குமுல் அஃலா என்று பிர்அவ்ன் சொன்னதை அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளான். இதை பிர்அவ்ன் சொன்னான் என்றே சொல்லுவோம்.

மனிதர்களின் முன்னும் பின்னும் வலமும் இடமும் வந்து வழிகெடுப்பேன் என்று சைத்தான் சபதம் ஏற்றதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டியுள்ளான். இதை சைத்தான் சொன்னான் என்றுதான் சொல்லுவோம். அல்லாஹ் சொன்னான் என்று சொல்ல மாட்டோம். குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளதையெல்லாம் அல்லாஹ் சொன்னான் என்று சொன்னால் பல இடங்களில் அர்த்தம் அனர்த்தனமாக ஆகி விடும்.

12:40இல் இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்று அல்லாஹ் சொல்லவில்லை. யூசுப் அலை அவர்களே தங்களது பிரச்சாரத்தின் போது இப்படி குறிப்பிடுகிறார்கள். இதைக் கூட சரியாகப் புரியாமல்தான் 12:40இல் அல்லாஹ் சொல்லி உள்ளதாக அவசர கோலத்தில் இந்தக் கருத்துடையவர்கள் அனைவரும் சொல்லி வருகிறார்கள்.

யூசுப்(அலை) அவர்களின் பிரச்சாரத்தை பாருங்கள்.
''சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளகின்ற ஒருவனான அல்லாஹ்வா? (12:39 )

''அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் பற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும் ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.(12:40)

இதுதான் யூசுப்(அலை) அவர்கள் செய்த பிரச்சாரம். இப்படி பிரச்சாரம் செய்த நபி யூசுப்(அலை) அவர்கள்தான் ''(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக் நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.'' 12:55 என்று உணவு அமைச்சர் என்ற ஒரு பொறுப்பை கேட்டுப் பெற்றுள்ளார்.

இப்படி பதவியை கேட்டுப் பெற்ற யூசுப் (அலை) அவர்கள் அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்று பிரச்சாரம் செய்த யூசுப் (அலை) அவர்கள் நபியாக இருந்தும் முழு ஆட்சி அதிகாரத்தையும் கேட்டுப் பெறவில்லை. ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் மன்னரின் ஆட்சியில்தான் ஒரு துறையை மட்டும் கேட்டுப் பெற்றார்கள். அந்த மன்னரின் கீழ்தான் மந்திரியாக இருந்துள்ளார்கள். அந்த நாட்டு மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதை செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும்தான் நபி யூசுப் (அலை) அவர்கள் இருந்துள்ளார்கள். இதற்குரிய ஆதாரமும் இந்த அத்தியாயத்தில்தான் உள்ளது.

அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார் என்பது அல்குர்ஆன் 12:76இல் உள்ள ஒரு சிறு பகுதியாகும். இதன் மூலம் நபி யூசுப்(அலை) அவர்கள் ஏனைய விஷயங்களில் அந்த நாட்டின் சட்டங்களையே செயல்படுத்தி வந்திருக்கிறார். அவரது சகோதரரை எடுத்துக் கொள்ள அந்த நாட்டின் சட்டத்தில் இடமில்லை. ஆனால் அல்லாஹ்வின் சட்டத்தில் இடமிருக்கிறது.

அதனால்தான் திருடர்களுக்குரிய தண்டனை என்ன? (அல்குர்ஆன் 12:74) என்று அவர்களிடம் கேட்டுள்ளார்கள். நபி யாகூப் (அலை) அவர்கள் சமுதாயத்துக்கு அல்லாஹ் அருளிய சட்டத்தை கேட்டு செயல்படுத்தி இருக்கிறார். அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்ற வசனப்படி அல்லாஹ்வின் சட்டத்தைத்தான் அமுல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கேட்ட கேள்வி அல்ல. அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார் அதனால்தான் என்பதும் குர்ஆன் மூலமே மிகத் தெளிவாக ஆகி விட்டது.

ஒரு ஆட்சியாளரின் கீழ் இருக்கும்போது அந்த ஆட்சியாளரின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கலாம். அந்த சட்டத்தை அமுல்படுத்தக் கூடிய அமைச்சர்கள் போன்ற பொறுப்புகளில் இருக்கலாம். இது இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்ற ஆயத்துக்கு முரணானது இல்லை என்பதற்குரிய தெளிவான ஆதாரமாகும்.

எந்த நபி இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்று பிரச்சாரம் செய்தார்களோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களைக் கொண்டே நிரூபிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும்.

அல்லாஹ்வின் சட்டங்களை அமுல்படுத்தாமல் அமுல்படுத்த முடியாமல் ஒரு நாட்டின சட்டத்தை அமுல்படுத்தக் கூடிய அமைச்சர் பதவியையும் அல்லாஹ் தனது அருள் என்றே குறிப்பிட்டுள்ளான்.

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். (அல் குர்ஆன் 12:56)

ஜனாதிபதி, பிரதமர், எம்.பி, எம்.எல்.ஏ. என கவுன்சிலர் வரை அனைத்துமே அல்லாஹ்வுடைய அருள்தான். அல்லாஹ்வே தனது அருள் என்று சொன்ன பிறகு யார்தான் இதை ஹராம் என கூற முடியும். எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகள் சம்பந்தமான சட்டங்களை தவிர மற்ற மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்கு கட்டுப்படலாம். அதை நடைமுறைப்படுத்தலாம். அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளாக அமைச்சர்களாக இருக்கலாம். அவை அல்லாஹ்விடத்தில் குற்றமாக ஆகாது. இதற்கு சான்றாகத்தான் சகோதரர்கள் ஆதாரம் என காட்டியுள்ள 12:40இல் இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்பதன் முன் பின் வசனங்களும் தொடர்புடைய வசனங்களும் உள்ளன.

அல்லாஹ்வின் சட்டங்களையே அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஆயத்துக்கள் அனைத்தும் முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்த பின் செயல்படுத்துவதற்கே சான்றாக உள்ளன. அவற்றையும் அடுத்தடுத்து பார்ப்போம். இன்ஷhஅல்லாஹ்.

Friday, May 01, 2009

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து தவிடுபொடியாகிவிடும்.

சொத்தை வாதங்கள் மெத்தை போட்டு நடு வீட்டில் படுத்துக் கொள்ளும்.

ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்று 1995ஆம் ஆண்டு எழுதிய அருட்செல்வன் ஜவாஹிருல்லாஹ் இப்பொழுது தேர்தலில் போட்டியிடுவதால் அவர் இப்பொழுது அந்தக் கருத்தில் இல்லை என்பது உறுதியாகி விட்டது.

அருட்செல்வன் எழுதுவதற்கு முன்பே இந்த வாதம் வைக்கக் கூடியவர்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறார்கள். ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்ற வாதத்தை நிலை நாட்ட நீண்ட நெடுந் தொடர்களையும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது வாதத்தின் மூலம் ஜனநாயகம் என்றாலே ஷpர்க். ஜனநாயகம் என்ற வார்த்தையே ஷpர்க். ஜனநாயகம் என்றாலே ஹராம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அதற்கு முதல் காரணம் ஜனநாயகம் என்ற வட மொழி சொல்லுக்கு நமது தாய்மொழியான தமிழில் என்ன அர்த்தம் என்பது தெரியாததுதான். ஜனநாயகம் என்பதை ஒரு மந்திரச் சொல்லாகவே பயன்படுத்தி வருகிறார்கள். எனவே ஜனநாயகம் என்ற வட மொழி சொல்லுக்கு நமது தாய்மொழியான தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெரிய வைத்து விட்டால் அந்த மாயை தமிழ் மக்களை விட்டும் விலகி விடும். அந்த தாக்கம் தனாக தகர்ந்து விடும் இன்ஷhஅல்லாஹ். எனவே ஜனநாயகம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை முதலில் பார்ப்போம்.

ஜனம் என்றால் மக்கள் என்று அர்த்தம். நாயகம் என்றால் தலைவர், தலைமை என்று அர்த்தம். ஜனநாயகம் என்றால் மக்கள் தலைவர், மக்கள் தலைமை என்று அர்த்தம். தமிழ் மக்களுக்கு புரியும்படியான மக்கள் தலைமை என்ற வார்த்தையை பயன்படுத்தி ஹராம், ஷpர்க் என்ற வாதம் வைத்திருக்க வேண்டும் அப்படி வைத்திருந்தால் மக்கள் தலைமை ஹராமா? மக்கள் தலைமை ஷpர்க்கா? எப்படி என்ற எதிர் கேள்வி விரைவாக வந்திருக்கும்.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பவர்கள் தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்க இஸ்லாமிய சட்டம்தான் ஆள வேண்டும் என்பார்கள். இஸ்லாமிய ஆட்சி என்ற கோஷத்தையும் வைப்பார்கள். கோஷம் நன்றாகத்தான் இருக்கிறது. மார்க்கத்தை பேணக் கூடிய பேணாத எல்லா தரப்பு முஸ்லிம்களையும் எளிதில் ஈர்க்கக் கூடிய கோஷம்தான் இது. எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விரும்பக் கூடிய கோஷமாகத்தான் இருக்கிறது.

ஒரு நாட்டை இஸ்லாமிய சட்டம்தான் ஆள வேண்டும் என்றால் முதலில் சட்ட திட்டங்களை வகுக்கக் கூடிய அதிகாரத்துக்கு முஸ்லிம்கள் வர வேண்டும். அதற்கு முதல்படி ஆட்சியில் அமர்வது. இந்த வாதக்காரர்கள் கூற்றுப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வருவது ஹராம், ஷpர்க் என்றாகி விட்டது. அப்படியானால் இஸ்லாமிய முறைப்படி ஆட்சிக்கு வருவது எப்படி? ஆட்சியில் அமர்வது எப்படி? எந்த முறையில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று இஸ்லாம் கூறி இருக்கிறது என்பதை இந்த வாதக்காரர்கள் கூற வேண்டும். இது பற்றி அவர்கள் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் வாழ்ந்த மதீனாவில் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியாளராக ஆனது எப்படி? இந்தக் கேள்விக்கு ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பவர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள். அனைத்து தரப்பு மக்களாலும் குறிப்பாக பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மக்கள் தலைவராக இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களா? பலாத்கார முறையில் மக்களை அடக்கி மதீனாவின் ஆட்சியை கைப்பற்றினார்களா? இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றும் முஹம்மது நபி ஒரு சர்வாதிகாரி என்றும் இஸ்லாத்தின் எதிரிகள் கூறுவது போலவா.

இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மக்காவில் அவர்கள் குடும்பத்தார் நிறைந்து இருந்த மக்காவில் இருந்தவரை ஆட்சியாளராக ஆகவில்லை. இறுதி நபி ஆட்சிக்கு வந்த முறையை ஆய்வு செய்தாலே போதும். ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து தவிடுபொடியாகிவிடும். ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பது இஸ்லாத்திற்கு விரோதமான கொள்கை என்பதும் விளங்கி விடும். இஸ்லாத்தை களங்கப்படுத்த இஸ்லாத்தின் எதிரிகள் கட்டி விட்ட புத்தக கதையை நம்மவர்கள் தூக்கி சுமக்கிறார்கள் என்பது புரிந்து விடும்.

மதீனாவில் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியாளராக ஆனதே ஜனநாயக(ம் எனும் மக்கள் தலைமை) வழியில்தான். அப்படி இருக்கும்போது ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்ற வாதம் தவறானது என்பதை நிரூபிக்க நீண்ட நெடுந் தொடர்களை எழுத வேண்டியதில்லை. இருந்தாலும் வாதம் என்ற பெயரில் வலம் வந்து விட்டதால் அந்த வாதங்கள் எப்படியெல்லாம் சொத்தையானது என்பதை விளக்கியே ஆக வேண்டும். பதில் அளிக்கா விட்டால் அந்த சொத்தை வாதங்கள் மெத்தை போட்டு நடு வீட்டில் படுத்துக் கொள்ளும். எனவே அந்த சொத்தை வாதங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.