மோசடியாளன் யார்? தர்பியாவில் பி.ஜே. பொறுப்பேற்றுள்ள நோட்டீஸே அடையாளம் காட்டுகிறது.

P.J.க்கும் லுஹாவுக்கும் யா அல்லாஹ் நீண்ட ஆயுளைக் கொடுப்பாயாக! அவர்களது தப்புகளை சுட்டிக் காட்டி தட்டிக் கேட்காமலும் அவர்களை திருந்த விடாமல் முட்டுக் கொடுத்து சைன் பண்ணி நிற்கும் ததஜ குடும்பத்தினர் மீது உன் சாபத்தை இறக்குவாயாக! நீ தடை செய்த பொய்களை பரப்பித் திரியும் ததஜ பொய்யர்களை கடும் பிடியாக பிடிப்பாயாக! வரட்டுக் கவுரவம் பிடித்த பெண்களின் அடிமைகளை கூண்டோடு அழிப்பாயாக என்று முதலில் துஆச் செய்து கொள்கிறேன். http://mdfazlulilahi.blogspot.ae/2018/03/blog-post_16.html 

2002ல் பி.ஜே.யோடு சண்டையாகி வந்த லுஹா பி.ஜே. மீது கூறிய குற்றச்சாட்டுக்களில் பெண்கள் விவகாரம் மட்டுமல்ல. கள்ளக் கணக்குகள் பொருளாதார மோசடிகள் பாதிக்கப்பட்ட மக்கள் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்தை எடுத்து செல்வந்தருக்கு கொடுத்தல் என்பது உட்பட பல பட்டியல்களை அடுக்கி இருந்தார். அவற்றையும் நாம் தட்டிக் கேட்டு கடிதம் எழுதினோம். பி.ஜே.யால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் பி.ஜே. தலைவராக உள்ள முஸ்லிம் டிரஸ்ட் பெயரால் பொருளாதார குற்றச்சாட்டுக்கள் வைக்கத் துவங்கினார்.

எடுத்த எடுப்பிலேயே நேரடியாக மோதினால் மாட்டிக்  கொள்வார்  என்பதால் பதுங்கித்தான் எல்லாருக்கும் பி.ஜே. காய்கள் நகர்த்துவார். 28 நிமிட ஆடியோக்கு 10 நாள் பதுங்கி, அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்களை தயாரித்து ஏமாற்றினார் அல்லவா. அது மாதிரி பல மாதங்கள் கழித்து சுற்றி வளைத்து குற்றச்சாட்டுக்கள் வைத்தார். பி.ஜே. உடைய அது மிக நீளமானது. எனவே அதில் உள்ள முக்கிய 2 பகுதியை வெட்டி வெளியிட்டோம். அந்த கட்டிங்கை எப்படி ஏற்க முடியும்? என்கிறார்கள. எனவே அதன் முழு வடிவத்தையும் வெளியிடுகிறேன் பாருங்கள்.

தலைப்புத்தான் முஸ்லிம் டிரஸ்ட்டின் செயல்பாடுகள் என்று போட்டுள்ளார். அது முஸ்லிம் டிரஸ்ட்டின் செயல்பாட்டை விளக்குவதற்காக வெளியிடப்பட்டது அல்ல.

அது முழுக்க முழுக்க டிரஸ்ட் தலைவர் பி.ஜெ.யின் சுய ரூபத்தை அடையாளம் காட்டி தட்டிக் கேட் என்னை களங்கப் படுத்திட வேண்டும். அதன் மூலம் என்னை யு.ஏ.இ. தலைமைப் பொறுப்பில் இருந்து ஓரங்கட்ட வேண்டும். இந்த உள் நோக்கத்துடன்தான் சதி திட்டத்துடன்தான் பி.ஜே. ஏற்பாட்டில் வெளியிடப்பட்டது.

செயல்பாட்டை விளக்கும் பிரசுரத்தில் நன்கொடை கேட்டிருப்பார்கள். அந்த நோக்குடன் வெளியிடப்படும் எந்தப் பிரசுரங்களிலும் நன்கொடை தருபவர், தராதவர் பற்றி குறிப்பிட மாட்டார்கள். வரவு செலவு பற்றிய விபரம் என்றாலும் கூட, அது எல்லா நன்கொடையாளர்களின் விபரங்களும் இடம் பெற்றிருக்கும்.

அதிலும் கூட நன்கொடை தந்த விபரம்தான் இருக்கும். இவ்வளவு காலம் தந்த இவர் இவ்வளவு காலம் தரவில்லை. இன்ன இன்ன ஊர்க்காரர்கள் தந்தார்கள் ன்ன இன்ன ஊர்க்காரர்கள் தரவில்லை என்றெல்லாம் இருக்காது.   இந்த பிரசுரத்தைக் காணும் சாமான்யர்களாலும் டிரஸ்ட் தலைவர் பி.ஜே.யின் சதியை உள் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

அன்று என்னைக் களங்கப்படுத்த வேண்டும் மோசடியாளனாக காட்ட வேண்டும் என்ற சதி திட்டத்துடன் வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸின் முதல் வசனம் என்ன?

தமிழ்நாடு முஸ்லிம் முன்கேற்றக் கழகத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் முஸ்லிம் டிரஸ்ட்.
இந்த முதல் வார்த்தை யாரது கன்னத்தில் செருப்பால் அடித்த மாதிரி உள்ளது. யாரை திருடன் மோசடியாளன் பொய்யன் களங்கப்பட்ட கயவன் என்று அடையாளம் காட்டி நிற்கிறது. தன் வினை தன்னைச் சுடும். தவளை தன் வாயால் கெடும். சும்மாவா சொன்னார்கள்?

  
முஸ்லிம் டிரஸ்ட்டின் வாடகை வகைக்காக சகோதரர் அப்துல்ரவூப் மூலம் நான் ஏற்பாடு செய்தேன். அப்துல் ரவூப் அவர்கள் மூலம் பணம் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் நாள் முதல் ன்று வரை அவர் ரசீது கேட்டதும் கிடையாது. நான் கொடுத்ததும் கிடையாது. முடிந்த வரை முன்னதாகவே முஸ்லிம் டிரஸ்ட்டு பொறுப்பாளர்களிடம் பணத்தை கொடுத்து விடுவேன். ரசீதுகள் வரும் வராமலும் இருக்கும். வந்தால் நான் வைத்துக் கொள்ளமாட்டேன். ஐ.ஏ.ஸி. பொறுப்பாளர்களிடம் கொடுத்து விடுவேன். என்னிடம் எந்த ஆதாரமும் இருக்காது. இதை உறுதி செய்து கொள்கிறார். சூழ்ச்சிக்காரர்.

2002 மார்ச் மாத வரையிலான வாடகையை நான் அனுப்பிய ஆளிடம் நேரில் பெற்றிருக்கிறார். 05.04.2002 அன்று எழுதிய கடிதத்தில் ''முஸ்லிம் ட்ரஸ்ட் வாடகை மட்டுமே தங்களிடமிருந்து பெற்று வருகிறோம்'' என்று குறிப்பிட்டிருந்தார். 

12.04.2002 துபை ஐ.ஏ.ஸி. அமர்வில் கலந்து கொண்ட முனாபிக் மூலம் எந்த ரசீதுகளும் என்னிடம் இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்து கொண்டார்

இதற்குப் பிறகுதான் 14.04.2002 அன்று சில மாதங்களாக பணம் வரவில்லை என்று நோட்டீஸ் வெளியிட்டார். அதுவும் 05.04.2002ல் எழுதிய கடிதத்தில் அது மட்டும்தான் வருகிறது என்று குறிப்பிட்டு விட்ட காரணத்தால். இல்லை என்றால் வரவே இல்லை என்று எழுதி ருப்பார் டிரஸ்ட் திருடர் பி.ஜே.

''ப்துல் ரவூப் அவர்கள் தன் பெயர் போடக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். பழ்லுல் இலாஹி மூலம் கா.அ.மு. மூலம் என்றுதான் ரசீதுகள் போட்டு வரும். இனி என் மூலம் எந்த நன்கொடையும் வந்ததாக ரிக்கார்டு ஆகக் கூடாது என்பதற்காக கடைசியாகக் கொடுத்த 2002 மார்ச் வரையிலான 6 ரசீதுகளில் அப்துல் ரவூப் அவர்கள் பெயர் போட்டு தந்தார்கள்.

என் மீது உள்ள வெறுப்பில் அப்துல் ரவூப் பெயரையும் போட்டதில் அல்லாஹ் நன்மையை வைத்து விட்டான். வழக்கம் போல் இலாஹி மூலம் என்று போட்டு இருந்தால். அதுவும் சில மாதங்களாக வரவில்லை என்று பிரசுரம் போட்டவர். அப்துல் ரவூப் இதை ஆதாரமாக காட்டும்போது, இந்த ரசீது உங்களுடையது அல்ல என்று மறுத்தும் இருப்பார். இது கற்பனை அல்ல இதற்கு முந்தைய பிந்தைய அவரின் நடவடிக்கைகள் ஆதாரங்களாக உள்ளன.

லட்சக் கணக்கில் வந்த பணத்தை வரவில்லை என்று சொன்ன பி.ஜே. தரப்பு தவறை சுட்டிக் காட்டி எழுதிய ஒரு நடுநிலையாளருக்கு என்ன பதில் எழுதி இருக்க வேண்டும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தவறான தகவல் தந்தமைக்கு வருந்துகிறோம் என்று எழுதி இருக்க வேண்டும். என்ன எழுதியது பி.ஜே. தரப்பு

இது கவனக் குறைவான தகவலில் ஏற்பட்ட தவறு என்று நீங்கள் நினைத்திருக்க வேண்டும். அவ்வாறு நினைக்காமல் உங்களைத் தடுத்தது எது என்பது உங்களுக்கும் இறைவனுக்கும் தெரிந்த விஷயமாகும்  என்று கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தினார்கள். இன்று அவர்களாலேயே கொச்சைப்பட்டு அசிங்கப்பட்டு  நிற்கிறார்கள்.

இப்படி யு.ஏ.இ.யில் கேவலப்படுத்த செய்த முயற்சி தோற்ற பின். தாயகத்தில் ஒரு விலை மாடன் விலைக்கு வாங்கப்பட்டான். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய நன்றிகெட்ட அந்த விலை மாடன் யார்? இன்ஷாஅல்லாஹ் அடையாளம் காட்டுவோம்.

கவனக் குறைவான தகவலில் ஏற்பட்ட தவறு என்று நினைத்திருக்க வேண்டும் என்ற பதிலை அறிந்த மற்ற நடுநிலையாளர்கள் அன்று சொன்ன வார்த்தை.

எதையும் அலசி ஆராய்ந்து ஆதாரம் இல்லாமல் எழுத மாட்டார்கள். அது அல் ஹதீஸ்களாக இருந்தாலும் சரி, அமெரிக்க பண்டங்கள் பற்றிய செய்திகளாக இருந்தாலும் சரி. இப்படி மக்களால் நம்பப்படும் மாபெரும் அறிஞர் பி.ஜே. தன் தலைமையிலான அமைப்பின் சென்னைத் தகவலையே சரியாகத் தர முடியவில்லையே. இவர்கள் உலக அளவில் நடப்பதை ஆய்ந்து எழுதுவதாக கூறுவதை எப்படி நம்ப முடியும்?  

1997ல் இருந்து 2002 மார்ச் வரை எனது மூலம் முழு  வாடகையையும் பெற்ற முஸ்லிம் டிரஸ்ட் தலைவர் பி.ஜே. அந்த 1997-2002 காலக் கட்டத்தில் வாடகை கட்ட முடியவில்லை என்று பொய் சொல்லியும் பொது மக்களிடம் வாலி ஏந்தி வசூல் செய்தார். கட்டணமின்றி பதிவு செய்ய வீடியோ கேமரா மற்றும் டெக்குகள் நாம் வாங்கிக் கொடுத்து இருந்தும். 

அள்ளி போடுங்கம்மா எனக்கு இல்லை. வீடியோ, இட வாடகை குர்ஆன் கிளாஸ் மட்டும் நடைபெற்று வரும் முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை என்றால்  குர்ஆன் கிளாஸ் நிறுத்தப்படும் இப்படி வித வித  வசூல் பண்ணினார். அந்த பணம் எங்கே யாருக்கு? என்று தட்டிக் கேட்ட  கேள்விக்கு பதில் இல்லை.

தவளை தன் வாயால் கெடும் பழமொழி. தவளை தன் ஆடியோ வாயிஸால் கெடும் புது மொழி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.