Posts

Showing posts from November, 2012

கேள்வி கேட்போம் பதில் சொல்ல வாருங்கள் என்றால் வருவார்களா?

Image
கேள்வி கேட்க வாருங்கள் என்றால் வருவார்கள். நாங்கள் கேள்வி கேட்போம் பதில் சொல்ல வாருங்கள் என்றால் வருவார்களா? வந்தார்கள், அவா்கள் யார்? வால் போஸ்ட்டா்கள் ஒட்டவில்லை. பிட் நோட்டீஸ்கள் வினியோகிக்கவில்லை.  29.11.12  வியாழன் அன்று நிகழ்ச்சி நடத்திய இடத்தில்  மாலை 6 மணிக்கு மேல் அமைத்திருந்த ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தோம். இஷாவுக்குப் பின் 8 மணிக்கு மார்க்கம் சம்பந்தமாக நாங்கள் கேள்வி கேட்போம். நீங்கள் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல வாருங்கள் என்று அழைத்தோம். வந்தார்கள் பதில் சொன்னார்கள் அவா்கள்தான் சிறார்கள்.  கேள்வி -1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொன்னவா்  யார்? இந்தக் கேள்விக்கு அரசியல் கட்சிகளிலுள்ள  பெரியவா்களாக இருந்தால் அண்ணா  சொன்னார் என்று சிலரும்.  கலைஞா் சொன்னார்  என்று சிலரும். சொல்லி இருப்பார்கள்.  ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பதைச் சொன்னால் தலைவன் அண்ணல் அவா் சொல்லிய சொல்லை எந்நாளும் மறந்தது இல்லை என்ற பாடலை பாடியும்  காட்டி இருப்பார்கள்.  சிறுவா்களோ ஏழையின் சிரிப்பில் இறைவன் என்று சொன்னவா் இறைத்துாதா் முஹம்மது நபி(ஸல்) அவா்களே என்று

10:87 வசனத்திற்கு பள்ளிகளாக -கிப்லாவாக போன்ற மொழி பெயர்ப்புகள் சரியா?

Image
  وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّآ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ 10ஆவது அத்தியாயமான சூரத்துல் யூனுஸ் உடைய 87ஆவது வசனமாக இந்த வசனம் உள்ளது.  இதில் இடம் பெற்றுள்ள கிப்லதன் என்ற வார்த்தைக்கு எல்லா தமிழ் மொழி பெயர்ப்பாளர்களும் பள்ளிகளாக -கிப்லாவாக   என்றே மொழி பெயர்த்துள்ளார்கள்.  1988 ஆம் ஆண்டு மவுலவி பி.ஜைனுல் ஆபிதீன் உலவி ஜாக் அமைப்பாளராக இருந்தபோது  அவர்களால் திருத்தப்பட்ட ஜான் ட்ரஸ்ட் மொழி பெயர்ப்பிலும் அப்படித்தான் உள்ளது.  மேலப்பாளையம் நிஜாமுத்தீன் உதவியாளராக இருந்து   P.J. யால் திருத்தப்பட்ட  ஜான் ட்ரஸ்ட் மொழி பெயர்ப்பில்   10:87 வசனம் ஆகவே,  மூஸாவுக்கும்,  அவருடைய  சகோதரருக்கும்:  “நீங்கள்  இருவரும் உங்கள்  சமூகத்தாருக்காக  பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக ( கிப்லா வாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம். க

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதற்கு மட்டும் எத்தனை விதமான மொழி பெயர்ப்புகள்?

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  மொழி பெயர்ப்புகளை   பாருங்கள் படியுங்கள் ஆய்வு செய்யுங்கள். திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் 113 அத்தியாயங்களின் துவக்கங்களிலும் அந்நம்ல்-எறும்பு எனும் 27ஆவது அத்தியாயத்தில் 30ஆவது வசனமாகவும் இடம் பெற்றுள்ளது பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். இதற்கும் ஒவ்வொரு அறிஞர்களும் ஒவ்வொரு விதமாக மொழி பெயர்த்துள்ளார்கள். இக்திலாபில் அஇம்மா ரஹ்மதுல் உம்மா. அறிஞர்களிடையேயான கருத்து வேறுபாடுகள் சமுதாயத்துக்கு அருள் என்ற அடிப்படையில் இதனைப் படித்துப் பாருங்கள். நீங்களும் ஆய்வு செய்யுங்கள். தமிழில் பல தர்ஜுமாக்கள் வெளி வந்து விட்ட ன. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு சாராரின் தர்ஜுமா மட்டும்  கடும் விமர்சனங்களை கண்டுள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களிடம் இது போய் சேர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டது என்பதை இந்த தர்ஜுமாவை எடுத்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். தர்ஜுமாக்கள் எல்லாமே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாய் படிக்கும் வாக்கில் அமைந்துள்ளன.   அதாவது அரபி நூல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் இந்த தர்ஜுமாவோ தமிழ் ஆங்

வந்தவர்களிடம் கேள்வி கேட்கப்பட்ட நிகழ்ச்சி 5

Image
கப்பல் ஹபீப் அவர்களிடமிருந்து பரிசு பெறுவதுO.M.முஹம்மது நூருதீன்     மருமகள்கள் செய்னபு, ஹுதா ஆகியவர்களுக்காக பரிசை பெற்றுக் கொள்கிறார் தாய்மாமன் அப்துல் ஹமீது    தஸ்லீமா ஸாஹிபு முஹம்மது மைதீன் அவர்களிடம் பரிசு பெறுகிறார் அபுபக்கர் சித்தீக்   1. நயவஞ்சகனின் நான்கு அடையாளங்களைக் கூறுக. பதில்: பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், நம்பினால் துரோகம் செய்வான், தர்க்கம் செய்தால் (வழக்காடினால்) நேர்மை தவறுவான் (பாவம் புரிவான், வரம்பு மீறுவான்).   2. திடலில் நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகைகள் எவை? பதில்: பெருநாள் தொழுகை, மழைத் தொழுகை   3. தொழுவதற்கும் மய்யித்தை அடக்கம் செய்வதற்கும் தடை செய்யப்பட்ட மூன்று நேரங்கள் யாவை? பதில்: சூரியன் உதிக்கும் போது, சூரியன் உச்சியில் இருக்கும் போது, சூரியன் மறையும் போது.   4. குர்ஆன் ஒதுவதற்குரிய கூலி என்ன? பதில்: 1. ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை. 2. ஒரு எழுத்துக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்காகும். (இந்த இரண்டில் எது எழுதினாலும் சரி)   5. நல்ல நண்பனுக்கும் தீய நண்பன