Posts

Showing posts from April, 2009

பிறருக்காக தேர்தல் வேலை செய்யலாம் அவர் மட்டும் போட்டி இடக் கூடாது என்ற நிலைபாடா?

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பா? என்பது பற்றிய விபரத்தை காணும் முன் இன்றைய வரலாறாக ஆகி விட்ட நேற்றைய செய்திகளை நினைவு கூறுவது அவசியமாக இருக்கிறது. எனவே அதனை முதலில் பார்ப்போம். ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து ஜவாஹிருல்லாஹ் அவர்களுடையது மட்டுமல்ல. சகோதரர் சம்சுல்லுஹா, பி.ஜே. ஆகியவர்களுடைய கொள்கையும் இதுவாகத்தான் இருந்தது. 1988இல் துபை வந்திருந்த அ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்கள் வரக் கூடிய சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் சார்பில் பாளையில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். இது பற்றி சகோதரர் சம்சுல்லுஹா அவர்கள் மூலம் பி.ஜே.யிடம் கலந்த போது ஹராம் என்று கூறி விட்டார்கள். ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு, ஓட்டுப் போடுவது ஹராம் என்ற கொள்கை பி.ஜே.யின் அண்ணன் பி.எஸ். அலாவுதீன் உட்பட எஸ்.ஐ.எம்.(சிம்)முடன் தொடர்புடைய எல்லா மவுலவிகளிடமும் இருந்தது. 1995. ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என அருட்செல்வன் என்ற புனைப் பெயரில் ஜவாஹிருல்லாஹ் எழுதினார். 1996. அந்த ஜவாஹிருல்லாஹ் த.மு.மு.க துணைத் தலைவராக இருக்க பி.ஜே. த.மு.மு.க அமைப்பாளராக இருந்தார். சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது தேர்தலை கண்டு

இஸ்லாத்தில் அரசியல்-2

ரோமப் பேரரசு என்பது கிறிஸ்தவர்களின் அரசாங்கம். திருமறை குர்ஆன் 30ஆவது அத்தியாயத்தின் பெயர் அர்ரூம். அதாவது ரோமப் பேரரசு என்றே அந்த அத்தியாயத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ரோம் என்பது கிறிஸ்தவர்களால் ஆளப்பட்ட நாடு. ரோமப் பேரரசு என்பது கிறிஸ்தவர்களின் அரசாங்கம். கிறிஸ்தவ அரசாங்கத்தின் பெயரிலேயேதான் திருமறை குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது. இது அரசியலா இல்லையா?அந்த அத்தியாயத்தில் என்ன சொல்லப்படுகிறது ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில் ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் அல்லாஹ்வின் உதவியினால் வெற்றியடைவார்கள். சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான் (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்) அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும் அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். 30:2-6 கிறிஸ்தவர்களின் அரசாங்கமான ரோமப் பேரரசு விரைவில் வ

இஸ்லாத்தில் அரசியல் -1

தேர்தல் நேரம் வந்து விட்டால் அரசியல் பேசக் கூடாது என்ற போர்டுகள் டீக் கடைகளையும் ஹோட்டல்களையும் ஆக்கிரமித்திருக்கும். இவை வியாபார ரீதியான தனியார் நிறுவனங்கள். அவர்களை குறை சொல்ல முடியாது. ஆனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களிலும் அரசியல் பேசக் கூடாது என்ற போர்டுகள் வைக்கிறார்கள். இஸ்லாத்தில் அரசியல் ஹராம் என்பது போல குத்பா பிரசங்கங்களில் அரசியல் பேசக் கூடாது என்று கதீப்களுக்கும் பள்ளி நிர்வாகிகள் தடை விதித்து விடுகிறார்கள். இஸ்லாம் வேறு அரசியல் வேறு இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்ற தவறான கருத்துக்களே இதற்கு காரணம். திருமறை குர்ஆனில் உள்ள 6666 ஆயத்துக்களில் சுமார் 422 வசனங்கள் அரசியல் ஆட்சி அதிகாரம் சட்டங்கள் பற்றி கூறுகிறது. குத்பா பிரசங்கங்களில் அரசியல் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட பள்ளி கதீப்கள் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லி கைகளை கட்டி -நடைமுறை பாiஷயில் சொல்வதென்றால் தக்பீர் கட்டிக் கொண்டு அல்குர்ஆனின் 2:247ஆவது வசனத்தை தொழுகையில் படித்துக் காட்டுகிறார். நடைமுறை பாiஷயில் சொல்வதென்றால் ஓதுகிறார். அந்த வசனம் என்ன கூறுகிறது. தாலூத் என்பரை அல்லாஹ் உங்கள் ஆட்சிய

சின்னம் ஒரு சின்னப் பிரச்சனையா? சின்ன விஷயமா?

வக்பு வாரிய தலைவர் பொறுப்பையும் திரும்ப கொடுத்து தெருவில் நிற்பது நியாயம்தானா? 16-04-2009 அன்று துபை எம்.எம்.கே. நிகழ்ச்சியில் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி ஆற்றிய உரை. ''இதுகாலம் வரையில் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு திராவிட கட்சிகள் ஒரு ஸீட் வழங்குவதும் இரட்டை இலை அல்லது உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதும்தானே வழக்கமாக இருக்கிறது?'' மு.லீக் தலைவர் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்றுதானே கோர்ட் தீர்ப்பு உள்ளது. 1906 ஆண்டு துவங்கப்பட்ட கட்சி இ.யூ.முஸ்லிம் லீக். 100 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க கட்சியே தனி சின்னத்தில் போட்டியிடவில்லை. அப்துஸ்ஸமது ஸாஹிப், அப்துல் லத்தீப் ஸாஹிப், காதர் மைதீன் ஸாஹிப் என முஸ்லிக் லீக்கின் தலைவர்களாக இருந்த எல்லா ஸாஹிப்களும் இரட்டை இலை, உதய சூரியன் என பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டி இட்டுதான் பாராளுமன்றத்துக்கும் சட்ட மன்றத்துக்கும் போயிருக்கிறார்கள். அப்படி இருக்க துவங்கி 6 மாதம் கூட் ஆகாத த.மு.மு.க.வின் மனித நேய மக்கள் கட்சி சின்னம் என்ற ஒரு சின்ன பிரச்சனைக்காக கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது நியாயம்தான

100பேர் கொண்ட கருணாநிதி குடும்பத்துக்கு 5 பதவி.

சுமார் ஒரு கோடி பேர் கொண்ட முஸ்லிம் சமுதாயத்துக்கு தி.மு.க.வில் ஒரு எம்.பி. சீட் கூட கிடையாதாம் சிந்தியுங்கள். 16-04-2009 அன்று துபை எம்.எம்.கே. நிகழ்ச்சியில் கீழக்கரை ஹஸன் ஆற்றி உரையில் மனதில் ஆழமாகப் பதிந்த கருத்து ஆறரை கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் முஸ்லிம்கள். கருணாநிதியின் குடும்பத்தவரோ சுமார் 100பேர்தான். நூறு பேரைக் கொண்ட கருணாநிதி குடும்பத்துக்கு தி.மு.க. மூலம் ஒரு முதலமைச்சர் பதவி, மகனுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி, மகளுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி, பெயரனுக்கு மத்திய அமைச்சர் பதவி, இப்பொழுது இன்னொரு மகனுக்கும் மத்திய அமைச்சர் பதவி என்ற ஆசையுடன் மதுரை எம்.பி. தொகுதி 100பேர் கொண்ட கருணாநிதி குடும்பத்துக்கு 5 பதவி. தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் கொண்ட முஸ்லிம் சமுதாயத்துக்கு தி.மு.க.வில் ஒரு எம்.பி. சீட் கூட கிடையாதாம் சிந்தியுங்கள்.

செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்…

அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி சத்தியம் செய்து நாங்கள் ஒருகாலமும் எங்களுக்காக ஓட்டு கேட்டு வரமாட்டோம் என்று சொன்னவர்கள் என்ற விமர்சனத்துடன் அடிக்கடி மெயில்கள் வந்து கொண்டிருக்கிறன. அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக இரு ஹதீஸ்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு இந்த இரு ஹதீஸ்கள் போதுமானது. செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்… நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது பெரும் பாவமாகும். (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வது சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6624-6625 அபூஹூரைரா (ரலி). என் நண்பர்கள் என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் - உஸ்ராப் போரே தபூக் போராகும் - அப்போது நா

வாள் போர் புரிய வானவர்களை அனுப்பிய அல்லாஹ் வாக்களிக்கவும் வானவர்களை அனுப்புவான்.

மனித நேய கட்சி துவங்கப்பட்ட உடன் சந்திக்கும் முதல் தேர்தல் இது. ம.ம.க.வின் இன்றைய தேர்தல் நிலைப்பாடு பற்றி பல கருத்துக்கள் உள்ளன. இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் சந்தித்த பிரதானமான முதல் போர். இஸ்லாம் கண்ட முதல் பிரதான போர் எனப்படும் பத்ருப் போர் பற்றி அனைவரும் அறிவோம். இந்தப் போரில் ம.ம.க.வினருக்கு அதிக படிப்பினை இருக்கிறது. அல் குர்ஆன் கூறுவதைப் பாருங்கள். (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் . இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான். நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் 3:13) 313 பேர்களைக் கொண்ட இஸ்லாமிய படை 1000பேர்களைக் கொண்ட பெரும் படையை எதிர்க்க வேண்டி இருந்தது. இந்த பத்ருப் போருக்கு ஸஹாபாக்கள் விரும்பிச் சென்றார்களா? இந்தப் போரை ஸஹாபாக்

சிங்கங்கள் யார். அசிங்கங்கள் யார்.

Image
தமிழ் முரசு இது தி.மு.க.வின் தினகரன் குரூப் பத்திரிக்கை. அதில் ம.ம.க. பற்றி வந்துள்ள செய்தியை பாருங்கள். ஒரு ஐ.டி.யிலிருந்து வந்தததை எனக்கு அனுப்பி இருந்தீர்கள். பிறரை விமர்சிப்பவர் தன்னைப் பற்றிய விமர்சனத்தையும் சந்திக்க திராணி வேண்டும். யோக்கியதையும் வேண்டும். இந்த ஐ.டிக்கு சொந்தக்காரர்களுக்கு அந்த திராணியும் இல்லை. யோக்கியதையும் இல்லை. பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்காக ஒதுக்கப்படும் நேரங்களில் கொறடா அனுமதியளிக்கும்போதுதான் நான் பேச முடியும். என்று மு.லீக் தலைவர் காதர் மைதீன் கூறியதையே கேள்வியும் நீயே பதிலும் நீயே என்ற தலைப்பில் அவர்கள் கேள்விக்கு பதிலாக அனுப்பினேன். இதற்கு அவர்களால் முறையாக பதில் சொல்ல முடியவில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் பெயரால் சீட்டு வாங்கி விட்டு பிற கட்சிகளின் அடிமையாக இருக்கக் கூடாது என்பதால்தான் ம.ம.க. அவர்களை விட்டும் தனித்து நிற்கிறது. பதவி கிடைத்தால் போதும் என்றிருந்தால் உதய சூரியனில் நின்றிருக்கலாம். வக்பு வாரியத்தை தக்க வைத்திருக்கலாம். உலமாக்கள் வாரியத்தையும் பெற்றிருக்கலாம். எம்.பி.யாகவும் ஆகி இருக்கலாம். இப்பொழுது சொல்லுங்கள் இனமானம

சுய நலனுக்காக சமுதாயத்தின் பெயரால் வாங்கப்பட்ட சீட்டு.

கேள்வியும் நீயே பதிலும் நீயே குடிசை, தராசு, சிங்கம், ஏணி போன்ற தனிச் சின்னத்தில் நின்றபோதுதான் மு.லீக் ஒரே நேரத்தில் 24 எம்.எல்.ஏ.க்கள் லோக்சா, ராஜ்யசபாவிலுமாக 5 எம்பிக்கள் இருந்துள்ளனர். என்றைக்கு பிற கட்சிகளிக் அடிமைச் சின்னத்தில் மு.லீக் நிற்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்துதான் அழிவு கண்டது மு.லீக். தி.மு.க.வின் உதய சூரியன் சின்னத்திலோ, அ. தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலோ நின்றால் இதுதான் கதி. சுயமாக பேச முடியாது. சின்னம் தந்த கட்சிகளின் அடிமைகளாகவேதான் இருக்க முடியும். கொறடா சொல்லும் புருடாக்களைத்தான் பேச வேண்டும். அடுத்த கட்சிகளின் கொறடா சொல்லும் புருடாக்களை பேச சமுதாயத்தின் பெயரால் ஏன் சீட்டு வாங்க வேண்டும். அதனால்தான் த.மு.மு.க.வின் ம.ம.க. சமுதாயத்தின் தன் மான அரசியல் காண தனித்து நிற்கிறது. 2004இல் துபை வந்த காதர் மைதீனிடம் முஸ்லிம் சிறைவாசிகளுக்காக பாராளுமன்றத்தில் பேசுங்கள் என்றபொழுது. நான் தி.மு.க. உறுப்பினர் பேச முடியாது என்றார். சீட்டு வாங்கியவுடன் காதர் மைதீன் அளித்த பேட்டியே qmfuae@gmail.com,noordeen@hotmail.com அவர்களுக்கு பதிலாக உள்ளது. http://www.adhikaalai.com/index.

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்

தேர்தல் செய்திகள் http://election.dinamalar.com/news/1543/மனிதநேய-மக்கள்-கட்சி-தலைமையில்-4வது-அணி!-:-தி.மு.��.html மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் 4வது அணி! : தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால் சென்னை : லோக்சபா தேர்தல் களத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இதில், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல் வேறு சமூக அமைப் புக்கள் இணைந் துள்ளன. இந்தக் கூட்டணி, தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., வுக்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிகள், தே.மு.தி.க., என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது, மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து, நான்காவது அணியாக களம் இறங்குகின்றன. தமிழக முஸ்லிம்களை ஒன்று திரட்டி, அவர்களை சமூக, பொருளாதார நிலையில் முன்னேற்ற, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டது. கடந்த தேர்தல்களின் போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளுக்கு இக்கட்சி மாறி மா

"ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?news_id=8915 செயற்குழு கூட்டத்திற்குப் பின், காதர் மொய்தீன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் முடிவுப்படி வேலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன். இதை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சியை தி.மு.க.,வில் அடகு வைத்து விட்டதாக பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இந்த முறை "ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன் கடந்த முறை காதர் மைதீன் அடகு வைத்தார். இந்த முறை அடகு வைப்பது யார் யுனானி டாக்டர் ஹக்கீம் சையத் சத்தாரா அப்துல் ரஹ்மானா என்பது பற்றி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் முடிவு செய்யும். மொத்தத்தில் மு.லீக் தி.மு.க.வின் ஒரு பிரிவுதான் சென்னை: வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் காதர் மொய்தீனை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியதால், அவர் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து வேறு வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார். காதர் மொய்தீன் கடந்த 2004