Posts

Showing posts from August, 2016

கோவை முதல் மேலப்பாளையம் வரையிலான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் உண்மைக் குற்றவாளிகளா?

Image
காவல்துறையினர்  குற்றவாளிகள் என்று  எண்ணக் கூடியவர்களை பிடித்துச் சென்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.  கருணை நபியின் அறிவுரை என்ன?  கைதிகள் விஷயத்தில் கீழுள்ளவர்கள் தவறு செய்தாலும் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் எப்படி நடக்க வேண்டும்?  ஆட்சியாளர்களுக்கு பொறுப்பான ஆட்சியாளர் நபி ( ஸல் ) காட்டி உள்ள வழிமுறை என்ன?    நீதி நபி ( ஸல் )  வழி காட்டுதல்படி  அப்பாவிகளை ஆட்சியாளர்கள்  என்ன செய்ய வேண்டும். மேலும் விபரங்கள் அறிய தொடரை படியுங்கள். ஸஅது இப்னு முஆது (ர லி ) அவர்கள் மேலும் சொன்னார்கள். ”நீங்கள் விரும்பிய இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல லாம். அப்படிப்பட்ட உடலால் ஆன உதவியும் அன்சாரிகளின் புறத்திலிருந்து உண்டு.  நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ள லாம். நீங்கள் விரும்பியவன் உறவை துண்டித்துக் கொள்ளலாம். ஆகவே எங்களிடம் கருத்துக்கள் கேட்க வேண்டாம். நீங்கள் கட்டளை இடுங்கள். நாங்கள் கட்டுப்படுவதற்கு தயாராக இருக்கிறோம். நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக்

“மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று நபி(ஸல்) பொதுவாகக் கேட்டதன் நோக்கம் என்ன?

Image
எல்லார் மன நிலைகளையும் அறிவதற்காக ஆலோசனை கூட்டத்தை இறைத் துாதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் கூட்டினார்கள் . சூழ்நிலைகளை விளக்கினார்கள் . போர் விதியாக்கப்பட்டு விட்டதைக் கூறி ஆலோசனை கேட்டார்கள் .  அபுபக்கர் ( ரலி ) அவர்கள் எழுந்து களத்தை சந்தித்து விடுவோம் என்று கூறி விட்டு மக்கள் மத்தியிலே ஆர்வம் ஊட்டி அழகான உருக்கமான ஒரு உரையை நிகழ்த்தி மக்களுக்கு தெம்பூட்டினார்கள் . உமர் ( ரலி ) அவர்கள் எழுந்து அவர்களுக்கே உரிய வேகப்படி உறுதி கூறினார்கள். மக்கள் மத்தியிலே வீரத்தை ஊட்டி அழகான ஒரு உரையை நிகழ்த்தினார்கள் .  மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) எழுந்து பேசினார்கள். மிக்தாத் அவர்களின் உரை இருவரின் உரைகளையும் மிஞ்சி விட்டது. அது வரலாற்றில் சிறப்பாக பதியப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது. வரலாற்றில் எல்லா அறிஞர்களும் அந்த உரையை பாராட்டி உள்ளார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களே அந்த இடத்தில் பாராட்டி உள்ளார்கள். மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அப்படி என்ன சொன்னார்கள். “ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு என்ன உத்தரவு போடுகிறானோ அதைச் செ ய்யு ங்கள். என்ன வழி காட் டு