Posts

Showing posts from February, 2005

ஆய்வு செய்யப்பட வேண்டிய அந்த அறிஞர்.

முஸ்லிம்களில் தவ்ஹீதுவாதிகள் என்போர் சுன்னத் ஜமாஅத் என்போரை பின்பற்றித் தொழக் கூடாது என்று கூறி வருகிறார்கள். அவர்களது இந்த வாதத்திற்கு ஆதாரம் போல் அவர்கள் கூறியுள்ள ஆயத்து கலிமாச் சொன்ன முஸ்லிம்கள் பற்றியது அல்ல. அவர்கள் வைத்துள்ள வாதப்படி பார்த்தாலும் அவர்களின் கருத்தே அவர்களுக்கு முரண்படுகிறது ஆகியவற்றையும் எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதில் ஒரு சிலவற்றையும் முந்தைய வெளியீடுகளில் பார்த்தோம். அல் குர்ஆன் 9 வது அத்தியாயம் 28 வது வசனத்தில் எல்லா பள்ளிகளையும் குறிக்கும் வகையில் மஸாஜித் (பள்ளிகள்) என பன்மையில் கூறாமல் மஸ்ஜித் என ஒருமையில் குறிப்பிட்டு மஸ்ஜிதல் ஹராம - புனிதமான இப்பள்ளியை என்று, அந்த ஒரு பள்ளியை குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இவ்வளவு தெளிவாக மக்காவிலுள்ள புனிதமான அந்த ஒரு பள்ளியை குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளதை தெரிந்தும் உலகில் உள்ள எல்லா பள்ளிகளுக்குமான பொதுவான கட்டளையாக இட்டுள்ளது போல் கூறி அதில் கூறப்படாத இமாம் சட்டத்தை உண்டு பண்ணி திணித்து சுன்னத் ஜமாஅத் என்போரை பின்பற்றி தொழக் கூடாது என்று கூறி வருகிறார்கள். சிந்திக்கக் கூடியவர்கள் திறமையாளர்கள்? இப்படி கூறி வரும்

இதுதான் பி.ஜெ.யின் த.த.ஜ.

Image

முஸ்லிம்களை 'நஜீஸாக' ஆக்கிய கூட்டம் விமான ஓடு தளத்தில் தலை வைக்குமா?

கலிமாச் சொன்ன முஸ்லிம்களில் ஒரு சாராரை காபிர்கள் என்று கூறி சமுதாயத்தில் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த சிந்தனை தவறானது குர்ஆன் ஹதீஸ்களுக்கு எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதை உணர்த்தி, நபி வழியா நமது பாலிஸியா, சுன்னத் ஜமாஅத்தினரை பின் பற்றி தொழக் கூடாது என்றால் அவர்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடுவது கூடுமா? ஆகிய தலைப்புகளில் சரியான கருத்தை எழுதி இருந்தோம். அதில் ஆட்கள் பெயரை குறிப்பிட்டு எழுதாமல் அவர்கள் கூறி வரும் தவறான கருத்துக்களை மட்டும் விமர்சித்து எழுதி இருந்தோம். அந்த மாதிரி கருத்துக்களை கூறுபவர்களின் பெயரை குறிப்பிட்டு எழுத வேண்டும் என சில சகோதரர்கள் வலியுறுத்தியுள்ளனர். திசை திருப்ப வாய்ப்புகள் உள்ளது. முஸ்லிம் சமுதாயத்தை கூறு போட்டு சின்னா பின்னமாக சீரழித்து விடும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரணான கருத்துக்களை மட்டும்தான் அவற்றில் அடையாளம் காட்டி விமர்சித்திருக்கிறோம். முஸ்லிம்களின் பலம் குன்றிடச் செய்திடும் இஸ்லாத்தில் இல்லாத இந்த தவறான கருத்துக்களை சமுதாயத்தில் பரவச் செய்து வருபவர்களின் பெயர்களை குறிப்பிட்டு விமர்சித்தாலும் தவறு இல்லை. பெயர்களை குறிப்பிட

வெப் சைட்டில் போடப்பட்டுள்ள சந்தி சிரித்த சவால்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் அன்புள்ள அண்ணன் ரபி அஹ்மது அவர்கட்கு கா.அ.மு.வின் அஸ்ஸலாமு அலைக்கும். இரண்டு தரப்புகளுக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகளை எழுதுவதை இரண்டு தரப்பும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் முதலில் என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தினீர்கள். உங்களிடம் பேசுவதற்கு முன்பாகவே கள்ள வெப் சைட் என விமர்சிக்கப்பட்டதால் இளையவன் உடைய இணைய தளத்திலிருந்து எமது கடிதங்களை எடுத்து விடும்படி அக்டோபர் 2004லேயே கூறி விட்டோம். அதையொட்டி அவர்கள் எல்லார் கடிதங்களையும் எடுத்து விட்டார்கள். நீங்கள் என்னிடம் பேசும்போது ஆடியோ கேஸட்டை வெளியிடவில்லை வெளியிட மாட்டார்கள் என்றீர்கள். எனது தரப்புக்கு பாதகம் ஏற்படும் வகையில் எடிட் செய்யப்பட்டு திருவாரூர் கொடிக்கால்பாளையம் புலி வலம் பகுதிகளில் வினியோகிக்கப்பட்டுள்ளது. வெப் சைட்டில் போடப்பட்டுள்ள சந்தி சிரித்த சவால் என்பதை எடுத்துவிட சொல்கிறேன் என்றீர்கள். இன்று வரை இந்த நிமிடம் வரை அது எடுக்கப்படவில்லை. பி.ஜே. தரப்பிலிருந்து வெளிவரும் ஆதம் என்ற மொட்டைக் கடிதக்காரர் நிறுத்தி விட்டதாகக் கூறிக் கொண்டு திரும்பத் திரும்ப அவருக்கு நான் பதில் அளிக