Posts

Showing posts from 2009

த.மு.மு.க. வின் முதல் பொதுச் செயலாளர்.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பிற்பகல் சென்னையில் காலமானார்கள். [இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்] அவருக்கு வயது 78 ஆகும். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்த ஹெச். அப்துஸ் ஸமது அவர்கள் ஒரு பொறியாளர் ஆவார். பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பொறியியல் கல்லுரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் அமைப்பின் முதல் பொதுச் செயலாளராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் துடிப்புடன் செயலாற்றினார். பின்னர் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். சமுதாய மற்றும் மார்க்கப்பணியில் அதிக நாட்டம் உடையவராக விளங்கிய இஞ்சினியர் அப்துஸ் ஸமது அவர்கள் தமது கடைசி மூச்சு வரை அப்பணிகளை ஆற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல மார்க்க நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் அறங்காவலர்களில் ஒருவராகவும் அவர் விளங்கின

இந்த பெண்கள் முஸ்லிம்களா?

Image
இப்படியும் சில சகோதரிகள் ஈமான் அடிப்படையை மறந்து வழிதவறி போய் உள்ளார்கள். அல்லாஹு தான் இவர்களுக்கு அல்லாஹுfவின் பயப்பக்தியை தரவேண்டும். நம்மிடையயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சகோதரர் ஏபி.முஹும்மது அலி இந்த செய்தி புகைப்படத்தை அனுப்பியுள்ளார். எந்த ஒரு சிறு உதவி என்றாலும் அல்லாஹுfவின் மூலமே வருகிறது என்ற உணர்வு நம் சமுதாய மக்களiடம் வர வேண்டும். அதற்கு நம் சமுதாயம் நன்கு கல்வி பெற்ற சமுதாயமாக மாற வேண்டும் அந்த கல்வி உலகம் மற்றும் மார்க்க கல்வியாக இருக்க வேண்டும். அப்போது தான் இம்மை மற்றும் மறுமையில் efவற்றி பெற முடியும். இளைய சமுதாயம் நல்வழியில் செல்ல அல்லாஹுf துணை புரிய வேண்டும். நாமும் முயற்சி செய்வோம். நம் சமுதாயத்தையும் முயற்சி செய்ய ஊக்கம் கொடுப்போம். கடைசியில் இதுபோன்ற வழிக்கேட்டிலிருந்து விடுதலை பெற்று அல்லாஹுfவிடம் நன்மதிப்பை பெறுவோம். ஆமீன் Photo News: Deccan Chronicles (23/9/2009) Br.AP Mohammed Ali (mdaliips@yahoo.com) மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகில் கிளி ஜோசியம் பார்க்க புர்கா அணிந்து வந்துள்ள இந்த பெண்கள் முஸ்லிம்களா? முஸ்லிம் பெண்களும் கோயில் அருகில் குறி

21-08-2009 வெள்ளி அன்று ரமழான் ஆரம்பிக்கிறது.

ஜாக் சார்பில் 21ல் ரமலான் தொடக்கம் ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஆகஸ்டு 20ம் தேதி சந்திரன் முழுமையாக தேய்ந்து அமாவாசை ஏற்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வளர்பிறை ஆகும். இதை கவனத்தில் கொண்டு 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்புடன் ரமலான் மாதத்தை கண்ணியப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்: நெல்லை தினகரன் (19-08 09) In the name of Allah, the Most Gracious the Most Merciful. According to Ahillah/Manaazil of the moon. (Quran 2:189) First day of Ramadan 1430H falls on Friday, August 21, 2009 And First day of Shawwal Eid-Al-Fithr falls on Saturday, September 19, 2009 21-08-2009 வெள்ளி அன்று ரமழான் ஆரம்பிக்கிறது, வெள்ளி பகலில் நோன்பு நோற்க வேண்டும். 18-09-2009 வெள்ளி அன்று 29 நோன்புகளுடன் ரமழான் முடிவடைகிறது. 19-09-2009 சனியன்று நோன்புப் பெருநாள். *************** புரோகிதர்களின் கேடுகெட்ட புத்தி! – அபு அப்தில்லாஹ் மனிதனைப் படைத்த இறைவன் அன்றிலிருந்து அதாவது முதல் மனிதரும் நபியுமான ஆதம் (அல

உயிரை பறித்த பள்ளி தாளாளரின் பேராசை.

Image
நெல்லை டவுணை சேர்ந்தவர் சாகுல் அமீது. சிறியதாக நகைக்கடை நடத்தி வந்ததோடு த.மு.மு.க-வின் நெல்லை நகர பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அன்பான மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அமைதியாக சென்று கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் பேரிடியாக, ஒருநாள் மதிய வேளையில் இவருடைய மூத்த மகன் முகம்மது ஆசிக் (8) 3-ம் வகுப்பு படித்து கொண்;டிருந்த லிட்டில் பிளவர் பள்ளியிலிருந்து ஒரு தொலைபேசி வந்தது. 'உங்கள் மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்' என கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது. குமுறும் நெஞ்சத்தை கட்டுப்படுத்தியபடி பள்ளிக்கு விரைந்த சாகுல் தம்பதியினர், பின்பு பாளை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு காண கிடைத்தது அந்;த பாலகனின் உடல் மட்டுமே. செய்தி கேள்விபட்டு அங்கு குழுமிய த.மு.மு.க-வினருக்கு கிடைத்த செய்தி, பள்ளியின் சார்பாக நீச்சல் பயிற்சி என அனைத்து மாணவர்களும் கட்டாயபடுத்தப்பட்டு ரூ.300 பெற்று கொண்டு, சுமார் 35 மாணவர்கள் ஒரு வேனில் பத்து தினங்கள் முன்பே பள்ளியில் பணிக்கு சேர்ந்த ஒரு ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியருடன். அண்ணா விளையாட்டு அரங்கத்த

காஃபிர்கள், அநியாயக்காரர்கள், பாவிகள்

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல. இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்ற இந்த ஆயத்து. நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு. இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம். இதுவரையிலும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை. இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) என்பதை ஆதாரமாகக் காட்டி ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று எழுதியவர் இன்று அந்த கருத்தில் இல்லை. இருந்தாலும் இன்றும் சிலர் அந்த கருத்தில் இருக்கிறார்கள்.

இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம்.

இனியாவது சட்டம் இயற்றும் அவைகளில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிட முயற்சிகள் செய்வோம். இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அல்லது அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. மொழி பெயர்ப்பை எப்படி வைத்துக் கொண்டாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல இந்த ஆயத்து. நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு. இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம். இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம். யார் அல்லாஹ

இறுதி வெற்றி யாருக்கு?

நம்பிக்கை உடையவர்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் ;  சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்!  ( எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள்.  அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! (எதிரியை சந்திக்கும் போது) ஒருவருக்கொருவர் உறுதியாக இருந்து கொள்ளுங்கள் மேலும் (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் சித்தமாயிருங்கள்   ( ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் ; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் ; ( இம்மையிலும் , மறுமையிலும்)   நீங்களே வெற்றியடைவீர்கள். https://mdfazlulilahi.blogspot.com/2009/05/blog-post_16.html   ------------------------------------------------------------------------- . நம்பிக்கை கொண்டோரே! நீங்கள்  உங்களை விடுத்து (உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர)  மற்றவர்களை உற்ற நண்பர்களாக, (உங்கள் அந்தரங்க நண்பர்களாக) ஆக்கிக்  கொள்ளாதீர்கள்.   ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டா

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி யார் முன் மாதிரி.

யாருக்கு யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள். அல்லாஹ்வின் சட்டங்களையே அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஆயத்துக்கள் அனைத்தும் முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்த பின் செயல்படுத்துவதற்கே சான்றாக உள்ளன. அவற்றையும் அடுத்தடுத்து பார்ப்போம் என்று முந்தைய வெளியீட்டை முடித்து இருந்தோம். அதன் தொடருக்கு முன்னதாக இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறி;ந்தவன் பேணிக் காப்பவன் என்று( 12:55) கூறிய யூசுப் (அலை) அவர்களிடம் உள்ள அரசியல் முன் மாதிரிகளை நினைவு கூறுவது இன்றைய சூழலுக்கு பொருத்தமான ஒன்று. தேர்தல் நேரமாக - சாதனை பிரச்சார நேரமாக இருப்பதால் மிக பொருத்தமானது. எனவே அதனை முதலில் பார்ப்போம். ரேஷன் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன் மாதிரி அரசியல்வாதி. ரேஷன் முறையை கொண்டு வந்தது காங்ரஸ் ஆட்சிதான். இல்லை திமு.க. ஆட்சிதான். இல்லை இல்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் ரேஷன் முறையை கொண்டு வந்தார்கள். இப்படி வயதுக்கு தக்கவாறு வாதிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு தேவைப்படும் பொருள்களில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டால் பஞ்சம், தட்டுப்பாடு வரும

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ்

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற இந்த வாதம் வைக்கக் கூடியவர்களில் அதிகமானவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக முதலில் கூறக் கூடிய குர்ஆன் வசனம் 12:40என்பதாகும். இப்படி குறிப்பிட்டு விட்டு 12:40இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. 12:40இல் உள்ள இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்று மட்டுமே சொல்வார்கள். இது 12:40யின் முழு வசனம் இல்லை. 12:40ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது என்பதை முந்தைய வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம். இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்ற வார்த்தை இதே அத்தியாயத்தில் 67ஆவது வசனத்திலும் சூரத்துல் அஃராப் 57ஆவது வசனத்திலும் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்துடையவர்கள் அனைவருமே 12:40தையே ஆதாரமாக கூறுவார்கள். அதில்தான் அவர்களுடைய ஆய்வும் கருத்தும் தவறானது என்பதற்குரிய ஆதாரமும் உள்ளது. குர்ஆனில் ஒரு சில வசனங்களை அந்த ஒரு வசனத்தின் மூலமே முழுமையாக விளங்கலாம். ஒரு சில வசனங்களில் அந்த ஒரு வசனத்தின் ஒரு சிறு பகுதி பகுதியிலேயே முழுமையான விளக்கம் கிடைத்து விடும். பல வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கும். குர்ஆனுக்கு விளக்கம் கு