Posts

Showing posts from May, 2013

கடையநல்லூர் பேட்டையில் நடந்தது என்ன? சைபுல்லாஹ்வுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

Image
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்........    உங்களிடம் ஓர் உண்மையான நிகழ்வுகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.இந்த நிகழ்வு நடந்து வெகு நாட்களாகிவிட்டதே இப்போது இது தேவைதானா என்ற கேள்வி தங்களுக்கு வரலாம். நடந்தது உண்மையான தகவல்களா?என்று கண்டறியவேண்டியதுள்ளதாலும் எனக்கு செய்திகள் வருவது உண்மையானதாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு சிலநாட்கள் கடந்துவிட்டது என்பதை தெரிவிக்கிறேன்.               கடையநல்லூர் பேட்டையில் நடந்தது என்ன?       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு கடையநல்லூர் பேட்டைப் பகுதியில் ஒரு பள்ளிவேண்டும் என்று சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஞானோதயம் ஏற்பட்டு அதற்காக அந்நூர் பள்ளிவாசல் என்று பெயரிட்டு இடம் வாங்குவதற்காக டவுண் கிளை,ரஹ்மானியாபுரம் கிளை,பேட்டைக்கிளை என்று மூன்று கிளைகளும் வசூலில் இறங்கினார்கள்.பேட்டையிலுள்ள ஹனபி ஜமாஅத்தார்களும் பள்ளிக்காக கேட்கிறார்கள் என்று இவர்கள் யார் என்றுகூட பாராமல் உதவி செய்தார்கள்.(இது த த ஜாவினரே தன்னுடைய சைட்டில் பதிவு செய்துள்ளார்கள்) சிலநேரங்களில் ததஜாவை சாராத யூசுப

அண்ணன் பீஜேக்கு முதல் எதிரியே உங்கள மாதிரி உள்ள பக்த கோடிகள்தான்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்               அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.           சகோதரர் பீ ஜே அவர்களின் நலனை அக்கரைகொண்ட ஒரு சகோதரர் சகோ பீஜே அவர்களுக்கு ஓய்வு எடுக்கும்படி ஒரு மேட்டர் எழுதியுள்ளார். அதற்கு பதில் கொடுக்கிறேன்பேர்வழி   துபாய் ஜேடி மார்க்சின் தலைவராகவுள்ள , மேலும் துபையின் மிகப்பெரிய தாயி என்று சொல்லக்கூடிய மக்கட்டி முஹம்மது அலி என்பவன் எழுதியிருக்கும் பதிலை பாருங்கள்.இவர்களெல்லாம் தஃவா செய்து என்ன புண்ணியம் பாருங்கள் முழுக்க முழுக்க ஒரு தாயி என்ற அந்தஸ்து இல்லாமல் ஒரு கேடியைப்போல் இதற்குமேல் நீங்கள் என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் அதற்க்கு தகுதியானவர்தான் இந்த மக்கட்டி முஹம்மது அலி.               இதோ ஹசன் கனி   அவர்கள் பீஜேக்கு எழுதிய கடிதம்                    Moovanna Abu Ayesha 7:16pm May 20 IN THE NAME OF ALLAH அன்புள்ள சகோதரர் பீஜே அவர்களுக்கு!ஒரு சகோதரனின் அன்பான    வேண்டுகோள் உங்கள் மார்க்கப்பணி இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ்வினால் கிடைக்கபெற்ற பாக்கியம் என்பதில் என்னைப் போல் உள்ள சகோதரர்க

நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்..​. நாம் ஒரு முஸ்லீம் என்று

20 ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு நீதிபதி தான் கற்ற கல்வியாலும் தன் பழுத்த அனுபவத்தாலும் பெற்ற ஞானத்தில் வழங்கிய தீர்ப்பு   மார்ச் 13, 2012, காட்டு ராஜா என்ற வாட்ச் மேன் தன் சக பெண் தொழிளாலியை கற்பழித்து கொன்று விடுகிறார். இந்த வழக்கை விசாரனை செய்த காஞ்சிபுரம் செஷன்ஸ் நீதிபதி : “ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனியாக இருப்பார்களேயானால் அவர்கள் அடுத்த செயல் உடலுறவு கொள்வதாகத்தான் இருக்கும். என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.   http://articles.timesofindia. indiatimes.com/2013-05-14/ chennai/39255063_1_trial- court-raja-confession     நமது கண்மனி நாயகம் ( ஸல் ) அவர்கள் , நமக்கு 1400 வருடங்களுக்கு முன் அளித்த எச்சரிக்கை ...   “ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனித்து இருந்தால் அங்கு மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான். “  அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ்.   (புகாரி 25 5403)   இதைப்போன்ற 1000 கற்பழிப்புகள் நடந்தாலும் இதற்கான மூல காரணங்களை சரி செய்யாமல் ,கற்பழித்தவனுக்கு தூக்கு தண்டனை என்று மீடியா விளம்பரங்களுக்காக போராடி விட்டு அடங்கி போகும் மாதர் சங்

ஆபரேஷன் செய்து கொண்ட பி.ஜே. நலம் பெற துஆச் செய்வோம்.

துஆ மட்டும் போதும்     அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.   எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.   அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள்.   என் மீது அன்பு வைத்திருந்த கொள்கைச் சகோதாரர்கள் மட்டுமின்றி கொள்கையில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மதிப்பு வைத்திருந்த சகோதரர்களும் ஆங்கில மருத்துவம் தான் சரியானது எனவும் வலியுறுத்தினார்கள். அமெரிக்கா போகலாம். லண்டன் போகலாம். சிங்கப்பூர் போகலாம் எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பல சகோதரர்கள் முன்வந்தனர். ஏழை எளிய மக்கள் கூட எனது நிலத்தை விற்றுத் தருகிறேன்; நகையை அனுப்புகிறேன் என்றெல்லாம் எனக்கு உறுதுணையாக நின்றார்கள்.   என் உறவினர்களில் எவ்வளவு செய்வதற்கு தகுதிபடைத்தவர்கள் உள்ளனர். மனமகிழ்வோடு செலவு செய்ய அவர்கள் தாயாராக இருந்தனர்.   அவர்களின் அ

ஜ.உ.ச, த.த.ஜ. இரண்டும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் நாம் சொல்லவில்லை நபி வழி சொல்கிறது

ஜ.உ.சாவின் இஜ்மா, கியாசுக்கோ, த.த.ஜாவின் லாஜிக், பாலிசிக்கோ இது இஸ்லாத்தின் அடிப்படையிலான  முடிவு அல்ல இது எங்கள் இயக்க முடிவு எங்கள் தலைமை எடுத்த முடிவு என்பதற்கோ மார்க்கத்தில் அனுமதி இருக்குமா? சிந்தியுங்கள். இப்போது இந்த இஜ்மா பற்றி எழுதும் போது 1986ல் நஜாத் ஆரம்பித்தவுடன் இடம் பெற்ற ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. 30.10.1984ல் திருச்சி கிறித்தவ குருமடத்தில் நாம் ஆற்றிய உரை நூல் வடிவில் வெளிவந்ததைப் பார்த்து விட்டு, சகோ.எஸ்.கமாலுத்தீன் மதனி 1985 ஆரம்பத்தில் அப்போது 43 வயதே நிரம்பிய எம்மை “”சீர்தி ரு த்தப் பெ ரி யார்” என அடைமொழியிட்டு, அவர் ஊரான கோட்டாறில் மவ்லவிகள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் வந்து அந்நூலிலுள்ள கருத்துக்களை எடுத்து வைக்க அழைப்பு விட்டார். நாமும் அவரது அழைப்பை ஏற்று அங்கு சென்று மவ்லவிகளுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினோம். அப்போது எம்மை மிகக் கடுமையாக எதிர்த்த மவ்லவிகளில் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முக்கியமான ஒருவர். அப்போது அவர் அங்குள்ள மதரஸாவின் தலைமை ஆசிரியராக இருந்தார். அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் கொடுத்து குர்