Posts

Showing posts from January, 2005

சுன்னத் ஜமாஅத்தினரை பின் பற்றி தொழக் கூடாது என்றால் அவர்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடுவது?

தர்கா, தரீகா கொள்கை உடையவர்களை பின்பற்றி தொழக் கூடாது. சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது. நமது கல்லூரியில் பயிலாத பெண் தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் அந்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள் என்பன போன்ற நூதன பிரச்சாரங்கள் பற்றி நபி வழியா? நமது பாலிஸியா? ஏன்ற தலைப்பில் நமது கருத்தை வெளியிட்டிருந்தோம். நாம் வெளியிட்டிருந்த அந்த ஆக்கம் முஸ்லிம்களின் வரவேற்பை பெற்றிருந்தாலும் முஸ்லிம்கள் என்று சொல்வதில் தங்களுக்கு பெருமை இல்லை என்று கருதக் கூடிய சிலரது விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அந்த விமர்சனங்கள் 4 வகையாக உள்ளன. 1. கடுமையான வார்த்தைகள் பயன் படுத்தப் பட்டுள்ளது. 2. பெயர் குறிப்பிடபடாவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு சாராரை குறி வைத்தே விமர்சிக்கப்பட்டுள்ளது. 3.தனிப்பள்ளி என்று மேலப்பாளையம் தக்வா பள்ளியை விமர்சிக்கப்பட்டுள்ளது. 4.என்ன இருந்தாலும் முஷ;ரிக்குகள் முஷ;ரிக்கள்தான் அவர்கள் பின்னால் எப்படி தொழ முடியும்?. இவைதான் அந்த விமர்சனங்கள். புண் பட வேண்டுமா? பண்பட வேண்டுமா? இதில் முதலாவதான கடுமையான வார்த்தைகள் என்பது உண்மைதான். ஆனால் அவை மாற்று கருத்துடையவர்களை வ

தொ(நொ)ண்டிக் குதிரைகளுக்கு சறுக்கியதுதான் சாக்காம்.

தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணமானவர் பி.ஜே.தான் என்பதை அவரது துபை பயணம் மூலம் பெரும்பாலான மக்கள் புரிந்து கொண்டார்கள். எனவே இனி அவரைப் பற்றி எழுத வேண்டாம் என்று பலர் கேட்டுக் கொண்டார்கள். அதனால் நாமும் இனி அவரைப்பற்றி எழுத வேண்டாம் என்ற முடிவில் இருந்தோம். அந்த பி.ஜெய்னுல் ஆப்தீன் என்பவர் துபையில் இருந்தவரை எந்த பாகத்தில் இருந்தார் எங்கு தங்கி இருந்தார்? யாருடன் தங்கி இருந்தார்? என்ன செய்தார் என்பதையெல்லாம் மிக மிக ரகசியமாக வைத்திருந்தார். அவர் துபையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் அவரது பத்திரிக்கையில் துபை என்ற வார்த்தையையே எழுத பயந்து நடுங்கியவராக இருந்தார். அப்படிப்பட்ட மாவீரர் துபையை விட்டு போன பின்னர் நம்மைப் பற்றி பொய்களை எழுதி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டார். எனவே மீண்டும் அவரைப்பற்றிய உண்மைகளை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். பொய்யர்கள் என்பதை நிரூபித்திடும் சிறப்பு இதழ். பி.ஜே.யின் துபை நிகழ்ச்சிகள் தடையானது குறித்து பாக்கர், லுஹா, ஸைபுல்லாஹ் போன்றவர்கள் கூறிய தகவல்களை பொய்ப்படுத்த

அல்லாஹ்வுக்காக.

கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ஆதம் எனும் பெயரால் மொட்டைக் கடிதம் அனுப்புபவர் யார் என்பதை முன்பே அடையாளம் காட்டி விட்டோம்.  அவர் நேற்றும் ஒரு மொட்டைக் கடிதம் அனுப்பியுள்ளார். நமக்கும் நேரில் வந்தது. அதை மற்றொருவர் இன்று நமக்கு பார்வேடு பண்ணி இருந்தார். இன்னும் பலரிடமிருந்து பார்வேடு பண்ணப்படலாம். இனி இது மாதிரி மொட்டைக் கடிதங்கள் வந்தால் யாரும் நமக்கு பார்வேடு பண்ண வேண்டாம். ஜன. 07-13,2004 உணர்வு வார இதழுக்கு எனது தரப்பிலான பதிலை சுமார் 35 பக்கங்களில் 9-1-05 அன்றே எழுதி முடித்து விட்டேன். அந்த இதழ் துபையில் மிக மிக தாமதமாகவே தமிழ் பகுதிகளில் வெளியாகி இருந்தது.  05-01-05 அன்றே ஸ்கேன் செய்யப்பட்டு நமக்கு வந்து விட்டது. 35 பக்கங்களை மொத்தமாக அனுப்பினால் பெரிய பைலாக இருக்கும் என்பதாலும் வேறு சில நோக்கங்களுடனும் 6,4,2 ஆகிய பக்கங்களாக பிரித்து வெவ்வேறு தலைப்புகளில் அனுப்பி இருந்தோம்.  மீதமுள்ள தலைப்பை ஒரு குறிப்பிட்ட பொதுத் தலைப்பின் கீழ் அனுப்பவதாக அறிவித்து இருந்தோம்.  இந்த நிலையில் 9 ஆம் தேதியன்று சகோதரர் ரபி அஹ்மது அவர்கள் நம்மை சந்

விவாதத்தின் மூலம் உண்மை வெளிப்படாது.

நாம் சொல்லவில்லை. நம்மை படைத்த நாயன் அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகமும் (ஸல்) அவர்களும் சொல்லுகிறார்கள். (நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப்பேசும்பொழுது) தன்னுடைய (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு: அவன் (உம்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (பொய் சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான்). (உண்மையில்) அவன்தான் (உமக்கு) கொடிய எதிரியாவான். (ஆல்குர்ஆன் 2:204) இதன் தொடராக உள்ள 205,206 வசனங்களையும் படித்துக் கொள்ளவும். ''வாதத்தின் மூலம் ஒருவர் என்னிடமிருந்து எதையும் பெற்றுச் செல்வாரானால் அவர் நரக நெருப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுச் செல்லவில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம் புகாரி2458,2680,7169,7181) இந்த ஆயத்து ஹதீஸ்களிலிருந்து அமானித மோசடியாளர்களில் வாதத் திறமையுடையவர்கள் நபிகள் நாயகத்தையே ஏமாற்ற முடியும் என்று தெரிகிறது. இதை விளக்கம் என்ற போர்வையில் நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகமே சொல்லி உள்ளார்கள். நபிகள் நாயகத்தையே வ

பி.ஜே.யானிகளின் பித்தலாட்டங்கள் பாரீர்.

உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல் குர்ஆன் 31:18) பி.ஜே.யும் பி.ஜே.யானிகளும் பொய்யர்கள் என்பதை நிரூபித்திடும் சிறப்பு இதழாக இந்த வார உணர்வு வெளி வந்தது. அதில் பி.ஜே. முதல் பொய்யராக அடையாளம் காட்டப்பட்டிருந்தார். அந்த பொய்யரின் விவாத பித்தலாட்டங்களை முந்தைய இதழில் பார்த்தோம். பி.ஜே.யின் வளைகுடாப் பயணத்தில் முதல் நிகழ்ச்சியே தடையானது.  அது பற்றி பி.ஜே.யானிகளும் பி.ஜே.யானிகளின் தலைமைப் பொறுப்பாளர்களும் கூறிய பொய்யான தகவல்களில் ஒன்று 40 கழியவில்லை என்பது. அந்த பொய்யான 40 ஒரு புறமிருக்க இன்னொரு புதுப் பொய்யை புனைந்துள்ளார் அபுல் வாந்தி பி.ஜே. அவரது பொய்யை நிலை நாட்ட மற்ற தகவல்களை வாந்தி எடுத்தல் என்ற வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவரது விமர்சனப்படி 40 போன்ற காரணங்களைக் கூறிய பி.ஜே.யானிகள்தான் வாந்தி எடுத்தவர்களாக ஆகிறார்கள். பாவம் பி.ஜே.யானிகள். பொய்யர்களுக்குள்ளான அந்த போட்டி. 10-12-2004 அன்று துபை கிரசண்ட் ஸ்கூலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த