சங்கர மட தாஇ பற்றி சம்சுல் லுஹாவின் மைன்ட் வாயிஸ் என்ன?

நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா என்று போடுவார்கள். எதற்காக என்றால் நபிகள் நாயகத்தை புகழ்வதற்காக என்பார்கள். யாரை புகழ்வார்கள். அந்த ஹஜரத் இருக்கிறாரே அவர் பெரிய அல்லாமா என்பார் ஒரு ஹஜரத். அந்த ஹஸரத் வந்து இந்த ஹஸரத் இருக்கிறாரே இவர் மிகப் பெரிய குல்லாமா என்பார்

ஆக மீலாது விழா மூலம் நபிகள் நாயகத்தை புகழ்கிறோம் என்று சொல்லி விட்டு. ஒருவரை ஒருவர் புகழ்வார்கள் முதுகு சொரிந்து விட்டு போவார்கள். இப்படி விமர்சித்தவர்கள் யார்? தெரியாத பாடத்தை ஆடியோவில் சொல்லிக் கொடுத்த தலைவனின் கூட்டம்.
அவர்களாவது ததஜவினர் குற்றச்சாட்டுப்படி ஒருவரை ஒருவர் புகழ்ந்து முதுகு சொரிந்து விட்டார்கள். அவர்களை விமர்சித்த ததஜவினர் நிலை என்ன? .தர்பியா என்ற பெயரால் தங்கள் தலைவரான சங்கர மட தாஇயை மட்டுமா புகழ்ந்தார்? தலைவரின் மனைவியையும் அல்லவா புகழ்ந்தார். அவர்கள் பாஷையில் முதுகு சொரிந்து விட்டார் லுஹா.

இவர் புகழ்ந்த அந்த அம்மையாரையாவது லுஹா. விட்டு வைத்தாரா? அவருக்கு மார்க்கம் என்பதெல்லாம் கிடையாது. மூக்குதி கம்மல் போடக் கூடாது என பி.ஜே. ஊர் உலகுக்கு சொல்கிறார். இப்படி துவங்கி எழுத முடியாத வார்த்தைகளை வார்த்தவர்தான் தர்பியா மேடையில் சொரியும் வேலை செய்த லுஹா. 

2002ல் பி.ஜே. மனைவி மற்றும் பி.ஜே. குடும்பத்தார் பற்றி லுஹா என்னிடம் விமர்சித்திருக்க மாட்டார் என்று ததஜவினர் நம்பினால் எனக்கு எதிராகத் துஆச் செய்யலாம். ஏனெனில் அந்த துஆ லுஹா நோக்கியும் ததஜவினர் நோக்கியும்தான் திரும்பும்.  

ததஜவினரைப் பார்த்து நீங்கள் எப்படி உயிரோடு இருக்கிறது பிணமாக பார்க்கிறதா? மணமாக பார்க்கிறதா? என்று கேட்கும் லுஹா சாதாரண ஆள் கிடையாது. யாரையாவது செருப்பால் அடிக்க வேண்டும் என்றால் செருப்பை சிங்கப்பூர் சால்வையால் சுத்திதான்  அடிப்பார்.

எத்தனை பெண்கள் பெயர்கள் வெளிவந்து விட்டது. அப்போலோ ஹனீபா ஆடியோ அந்த ஆடியோ இந்த ஆடியோ செக்ஸ் ஆடியோ என எத்தனை ஆடியோக்கள் வெளி வந்து விட்டது. ததஜ மாவட்ட நிர்வாகிகளான நீங்கள் இன்னும் செத்த பிணமாகத்தானே இருக்கிறீர்தகள் என்பதை மறைமுகமாக சொல்லிக் காட்டி உள்ளார் லுஹா. 

இந்திரா காந்தியைப் பார்த்து கழுதை என்றால் குற்றம். ஆனால் கழுதைக்கு இந்திரா என்று பெயர் வைக்கலாம் என்ற  பழனி பாபா பேசியதை சொல்லிக் காட்டிய லுஹா. உங்களைப் பார்த்து செத்த பிணங்களே என்று பேச முடியவில்லை. ஆகவே பாபா வழியில் பேசி விட்டேன் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்.


பணத்தாசை இல்லாத பரிசுத்தவானாக, அப்பழுக்கில்லாத, அறிஞராக எளிமையை விரும்பும் ஏழையாக புகழை விரும்பாத புண்ணியாத்மாவாக பி.ஜே. பற்றி தர்பியாவில் லுஹா வாயால் புகழ்ந்த புகழ்ச்சிப்படி வெளியே காட்டிக் கொள்ளும் பி.ஜே.  உண்மையில் யார்?

சங்கரமட தாஇ பற்றி சம்சுல்  லுஹாவின் மைண்ட் வாயிஸை கேளுங்கள்.

எதை வேண்டாம் என்கிறாறோ அது வேண்டும் என்று அர்த்தம் பணத்தை வேண்டாம் என்பார் பாக்கெட்டில் வைத்து திணிக்க வேண்டும் என விரும்புவார். 

எளிமை வேஷம் போடுவார் புதிதாக வரும் அனைத்து நவீன கருவிகளான ஆப்பிள் ஆரஞ் செல்போன்கள், சி.டி. டி.வி.டி. ரைட்டர்கள், மைக்கேமராவுடன் கூடிய  பேனா  போன்ற புலனாய்வு சாதனங்கள் இவருக்கு உடனடியாக வேண்டும் என்பார்.

எனக்கு ஏசி ரூம் வேண்டாம்மா என்று சொல்லி விட்டு பின்னால் வரும் நிர்வாகியிடம் நாளைக்கு புரோக்ராம் நல்லா வரனும்னா அண்ணன் நிம்மதியா தூங்கனும். 

அவர் வேணான்னு தாம்பா சொல்வார் நாம தான் ஏற்பாடு செய்யனும்! என்று சொல்ல வைப்பார். 

மேடைக்கு வரும் போது அடக்கமாக பின்னால் சென்று அமர்ந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்ப்பார்.

ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பதாக மற்றவர்களை குறை கூறுவார். உண்மையில்  ஜமாஅத்தை வைத்து சம்பாதிக்கக் கூடியவர்களாக  இவரும் இவரது குடும்பத்தினரும் தான்!  இருப்பார்கள்.

கொள்கைச் சொந்தமே சொந்தம். குருதி சொந்தம் தேவையில்லை புறக்கணிப்போம் எனக் கூறி குடும்பங்களையெல்லாம் பிரிப்பார் இந்த புண்ணியவான். ஆனால் அதை தன் குடும்ப விஷயத்தில் கடைப்பிடித்தாரா? என்றால் இல்லவே இல்லை. 

வெள்ளிக்கிழமை கூட தொழாத இவரது தம்பி காஜா இவர்தான் உணர்வின் விளம்பர ஏஜென்ஸியான பி டபில்யூ பி ஏஜென்ஸி போன்றவற்றை நடத்துவார்.  

இவரது பொறுப்பில் நடக்கும் உணர்வுக்கு திடீர்  திடிரென 5 லட்சம் 10 லட்சங்கள் கொடுங்கள் என கூறுவார் ஜமாஅத் - பணத்திலிருந்து கொடுக்கும் பொருளாளருக்கு கணக்கேதும் கிடைக்காது.

மஸ்ஜிதுர்றஹ்மான் இட வகை பணம் 10 லட்சத்தை மூனுக்கு அனுப்புங்கள் என்பார். 

தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத இவரிடம் வரும் தவ்ஹீத் சகோதரர்களிடம் எப்படி பேசுவது என்ற மரியாதையும் தெரியாத மைத்துனர்கள் இவருக்கும் சூரியனையும் (சன்) சந்திரனையும் (மூன்) வசப்படுத்தி கொடுத்துள்ளார்.

சன் பிரிண்டிங் ஏஜென்ஸியும், மூன் பப்ளிகேஷன் தான்! அவைகள். இந்த சன் பிரிண்டிங் ஏஜென்ஸிதான் ஜமாஅத்தின் பெரும்பாலான பிரிண்டிங் வேலைகளை எடுக்கும் தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டமாகத்தான் இருந்தது.

ஏனென்றால் அரசியல் வாதிகளிடம் நேரடியாக காசு வாங்க மாட்டோம் செலவு செய்துவிட்டு பில் தருவோம் நீங்கள் கொடுத்து விடவேண்டும் என பேரம் பேசி பெருந்தொகையை பிரிண்டிங்குக்கு என்று கறந்து விடுவார்கள்.

இப்படித்தான் கூட்டணி கட்சியினரிடம் தி.மு.க, அ.தி.முக. எல்லாரிடமும் பல லட்சம் பணத்தை தேர்தல் பிரசார செலவாக காண்பித்தார்கள்.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு தேதி வேண்டும் என்றால் ஏதாவது ஒரு பிரசுரத்தை3000 பிரிண்டிங் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம்  செய்து  கொடுமைப்படுத்துவார்கள்.

 பாக்கர் ஜமாஅத் பேரை பயன்படுத்தி சம்பாதிக்கிறார் என குய்யோ முறையோ என குதித்த ஹாமிம் இப்ராஹிம் ஜமாஅத் பெயரை பயன்படுத்தி பி.ஜே. மைத்துனர்கள் காலண்டர் போட்டு மட்டுமல்ல பல வகைகளில் சம்பாதிக்கிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் பிரபலமான போதும். 

அன்றைய பொதுச் செயலாளரே அது தவறு என்று ஒப்புக் கொண்ட பிறகும் கூட ஹாமிம் இப்ராஹிம் கண்டு கொள்ளவே இல்லை. லுஹாவாகிய நானும்தான்.

இது (சன்) சூரியத் தொல்லை என்றால், (மூன்) சந்திர தொல்லைக்கு எல்லேயே இல்லை! மூன் பப்ளிகேசன் என்ற பெயரில் குர்ஆனில் அடிக்கும் கொள்ளையோ குடும்பக் கொள்ளை!

தமிழகத்தில் யாரும் வைக்காத விலை வைத்து குர்ஆனை விற்று வருடத்திற்கு குறைந்தது பத்தாயிரம்  குர்ஆன் டார்க்கெட்.

மற்ற வியாபாரங்களை எல்லாம் பார்த்து வாங்குங்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி என்பதற்காக வாங்கி விடாதீர்கள். என்று விளம்பரம் செய்வோம். மற்ற தர்மாஜுக்களை விட இவர் தர்ஜமாவின் தரம் குறைந்து இருக்கலாம் என விளம்பரம் செய்ய மாட்டோம்.

மற்ற வியாபாரங்களை பற்றி வந்த புகார்களை விட இவரது குர்ஆன் விலை குறித்து வந்த புகார் அதிகம். மற்ற வியாபாரத்தில் நடந்த தவறுகள் குறித்து வந்த புகாரைவிட தர்ஜமா தவறுகள் குறித்து உலக முழுவதும் உள்ள மார்க்க அறிஞர்களிடத்தில் இருந்து புகார் அதிகம். 

இதைபற்றிக்கேட்டால் பிர்தவ்ஸியை வைத்து கையை மடக்கி டிவியில் விளக்கம் கொடுப்போம்.

உயர்தர பிரிண்டிங், உயர்தர பைண்டிங், என்று சப்பைக்கட்டு  கட்டுவோம் அதுவும் ஜமாஅத் காசை பயன்படுத்தி மக்கள் பயான் பார்க்கும் நேரத்தில். ரஹ்மத் டிரஸ்ட் புகாரி தமிழாக்கம் எவ்வளவு தெரியுமா? என்று வியாக்யானம் பேசுவோம்.

ரஹ்மத் டிரஸ்ட் தங்கள் பணத்தை செலவழித்து டிரஸ்ட் வைத்து, அலுவலகம் வைத்துமொழிபெயர்ப்பு குழு அமர்த்தி, அதில் பல மவ்லவிகளுக்கு சம்பளம் கொடுத்து, பணியார்கள் வைத்து, லட்சக்கணக்கில் விளம்பரம் செய்து தங்களின் தாய் தந்தையருக்கு நன்மை சேர்க்க பணத்தை இழக்கின்றனர்.

பி.ஜே.யோ குடும்பத்திற்கு பணம் சேர்க்க, ஜமாஅத் ஆலிம்களை இலவசமாக பயன்படுத்தி ஜமாஅத் பணியாளர்களையும், தாவா சென்டர் மாணவர்களையும் பயன்படுத்தியுள்ளார். 

யாருக்காவது சம்பளம் கொடுத்ததுண்டா? சம்பளம் வேண்டாம்! டிவியில் தினமும் வருகிறதே விளம்பரம் அதற்கு எப்போதாவது கொடுத்ததுண்டா ?

சாதாரண கிளை நிகழ்ச்சி விளம்பரத்திற்கு நச்சரித்து காசு வாங்கும் தலைமை, குடும்ப கொள்ளை கூட்டத்திடம் காசு வாங்கிய துண்டா?

இலாஹி கொடுத்த 2000 மதுரை மாநாடு மிச்ச பணத்திலிருந்து இன்று வரை உள்ள கணக்கு வழக்கை காட்ட துணிவுண்டா?  ஜமாஅத்தின் அவ்வளவு வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தி சுரண்டும் பி.ஜே.யை ரஹ்மத் டிரஸ்ட்க்கு ஒப்பிட தகுதி உண்டா?

மற்றவர்களை வழிகேட்டில் உள்ளவர் என சொல்கின்றோம். கோவை குர்ஆன் அறக்கட்டளை 75000க்கு மேல் குர்ஆனை இதுவரை முஸ்லிம்மல்லாதவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளது.

கொள்கைக்காக என மார்தட்டும் பி.ஜே. எத்தனை குர்ஆனை இலவசமாக கொடுத்துள்ளார். குர்ஆனை இலவசமாக கொடுத்தவர்கள் வழிகேடர்கள்.  குர்ஆனை  விற்று லாபம் சம்பாதிக்கும் இவரது குடும்பம் நேர்வழி பெற்றவர்களாசங்கரமட தாஇக்கு ஜால்ரா அடிக்கும் சம்சுல் லுஹாவே பதில் சொல் என்று கேட்டு விடாதீர்கள்.

மைத்துனர்கள் கதை இதுவென்றால் மகன் கதை அதைவிட மோசம் ஒரு பெண்ணை காதலித்து அவளோடு கலந்துறவாடி, இவரை நம்பி இஸ்லாத்தை ஏற்ற பெண்னை அவளது தந்தையோடு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டு துரத்தியவர் பி.ஜே.   

அப்படிப்பட்ட மகனுக்கு ரிக்கார்டிங், எடிட்டிங் என ஜமாஅத்தை வைத்து சம்பாத்தியம். மாநில நிர்வாகிகளுக்கு! ரீசார்ஜ் கூட இவரது மூன் கடையில் தான். எடிட்டிங் வகையில் இருந்து குடும்பத்திற்கு  போய்ச் சேர்ந்த கோடிகள் எத்தனை?

சிடி போட்டு யபரோ சம்பாதித்தார் என குற்றம் சாட்டிய ஹாமிம் இப்ராஹீமே ரிக்கார்டிங் போட்ட குடும்பம் நினைவுக்கு வராதது ஏனோ? என்று லுஹா தர்பியாவில் கேட்காதது ஏனோ?

மூன் மார்ட்டில் வாடிக்கையாளரை கவர  கடையில் நின்று வியாபாரம் செய்யும் அண்ணனே ஏன் எந்த வக்துக்கும் தொழபோகவில்லை என கேட்காதது ஏனோ?

ஆக எல்லாரும் இப்ராஹிம் நபி வழியில் குருதிச் சொந்தங்களை புறக்கணிக்க வேண்டும் என்பார்.  பி.ஜே. மட்டும் தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத, ஏன் கொள்கையே இல்லாத, சொந்தங்களை புறக்கணிக்காமல் இருப்பதோடு, அப்பாவி தவ்ஹீத் கொள்கைச் சொந்தங்களை கொள்ளை அடித்து குடும்ப ஆட்சி நடத்துவார்.

ஏஜென்ஸி, சிடி, புக்ஸ், குர்ஆன், எடிட்டிங் ரிக்கார்டிங், ரீசார்ஜ் பிரிண்டிங் என ஏகத்துவ சகோதர்களிடம் சுரண்டி கொழுக்கிறார். அரசியல்வாதிகளை விட கேவலமாக தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வைத்து ஜமாஅத்தை உறிஞ்சுகிறார்.

அப்பாவி தவ்ஹீத் சகோதரன் பார்த்தால் அண்ணன் சிடி,  படித்தால் அண்ணன் புக், மாட்டினால் சன் காலண்டர், நோட்டிஸ் போட்டால் சன் பிரிண்டிங், மிட்டாய் வாங்கினால் மூன், ரீசார்ஜ் பண்ணினால் மூன் என கொண்டு போய் கொட்டி விட்டு இன்னும் நடுத்தெருவில் நிற்கிறான்!

இதற்காகவா ஏகத்துவம் பேசினோம். இதற்காகவா தவ்ஹீத்தை வளர்த்தோம்! இவருக்காகவா குடும்பத்தை பகைத்தோம். ஊரை பகைத்தோம். உறவை வெறுத்தோம். நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இது கேவலமாக இல்லையா

அடிவாங்கி உதைவாங்கிய தியாகம் செய்தது எல்லாம் ஒரு குடும்பம் பிழைக்கவா? வேறுயாராவது இப்படி இந்த ஜமாஅத்தில் குடும்பத்தோடு பிழைக்க ஜமாஅத் அனுமதிக்குமா?

ஜமாஅத் நிர்வாகிகள் உண்மையிலேயே நியாய வான்களாக இருந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கட்டும் ! இல்லையேல் பரிசுத்தமான ஜமாஅத், என்றெல்லாம் கூறுவதை விட்டு பிஜே அன்டு கோ என பேரை மாற்றட்டும்.  

இப்பயெல்லாம் தர்பியாவில் பேச ஆசைதான். என்ன செய்ய நிர்ப்பந்தத்தில் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன மாதிரி.  தர்பியாவில் பேசி விட்டேன்.

பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை கட்சியிலோ பதவிகளிலோ புகுத்தினால் அதை வாரிசு அரசியல் என வசைபாடுவோர். ஏகத்துவம் பேசி மக்களை சுரண்டும் மனிதர்களை மறந்து விடுகின்றனர். மன்னித்தும் விடுகின்றனர்.

இத்துடன் சங்கரமட தாஇ பற்றி சம்சுல்  லுஹாவின் மைண்ட் வாயிஸ் ஆப் ஆகி விடுகிறது. 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.