Posts

Showing posts from July, 2015

நாகூர் அவ்லியா வரலாறும் ஆய்வும்

Image
யாஸிர் பப்ளிகேஷன்ஸ், 3466, T.N.H.B. காலணி, வில்லாபுரம், மதுரை 625011 என்ற முகவரியிலிருந்து வெளியாகி உள்ளது.  எத்தனையோ “உலவி”கள் உலவி வந்தாலும், உலவி என்றால்  நம்மைப் போன்றவர்களுக்கு ஞாபகத்துக்கு வரும் உலவி ஒருவர்தான். அந்த உலவிதான் இந்நுாலை எழுதியுள்ளார்கள். ஆம் மவுலவி K.M. முஹம்மது மைதீன் உலவி அவர்கள்தான் இந்நுாலை எழுதியுள்ளார்கள்.  பன்நுால் ஆசிரியரான இவரது எழுத்து பற்றிய சான்றுகளை  இன்று நாம் கூறுவதைவிட 23 ஆண்டுகளுக்கு முன் ஒரு இதழில் வந்த சான்றையே உங்கள் பார்வைக்கு தருகிறோம்.  மவுலவி K.M. முஹம்மது மைதீன் உலவி அவர்கள் எழுதிய பெண்ணுரிமை பேணிய இஸ்லாம் பற்றி 19.11.1992  இதழில் அ. ராபியா ஷர்புத்தீன் எம்.ஏ.பி.எல் அவர்கள் அளித்த சான்றை காண இங்கே கிளிக் செய்யவும். 

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மரணம் - த.மு.மு.க, ம.ம.க அறிக்கை

Image
அனைவராலும் விரும்பப்பட்ட பெருமகனை நாடு இழந்துவிட்டது! அப்துல் கலாம் மறைவுக்கு தமுமுக இரங்கல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: இந்திய நாட்டின் பெருமைமிகு மூத்த குடிமகன் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியடையச் செய்துள்ளது.  இந்தியாவின் ஏவுகணை இயலின் தந்தையாக அணு விஞ்ஞானத்தின் மூலம் நம்நாட்டை சர்வதேச அளவில் தலைநிமிரச் செய்த, துணிச்சலும் மிகுந்த அறிவாற்றலும் மிக்க அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்தியர் ஒவ்வொரு வருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஒவ்வொரு நொடியிலும் எதிர்காலத் தலைமுறை குறித்து கவலைப்பட்டார். இளம் தலைமுறையினருக்காக இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கல்வி கற்பிக்க பயணம் செய்தார். கண் துஞ்சாது கருமமே கண்ணாக வாழ்ந்த அறிவியல் விஞ்ஞானியாக மட்டுமல்ல சமூக விஞ்ஞானியாகவும் விளங்கினார். துளியும் அரசியல் மாறுபாடு, விருப்பு வெறுப்பற்ற மனிதராக வாழ்ந்து மறைந்துள்ளார். மேலும், மதச்சார்பற்ற நாட்டின் முதல் குடிமகனாக செயல்பட்டு அனைத்து மதத்தவராலும் மதிக்கப்படுபவ

கேக்குறவன் கேனையனா இருந்தா நம்புங்க...‎தவறுகளை_நியாயப்படுத்தலாமா ?100% உண்மை ? தான் நம்புங்க....!

Image
ஜூலை 28 போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்? மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்குள் புகுந்து மிருகவெறியாட்டம் போட்ட காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 28 போராட்டத்தை நாம் அறிவித்திருந்தோம். இப்போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டு அதிக நாட்கள சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்படலாம் என்பதால் பெண்கள் வர வேண்டாம் என்றும் முடிவு செய்தோம். போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் சகோதாரர்களுக்கு இதை விளக்கி விட வேண்டும் எனவும் இதை எற்றுக் கொண்டு தயாராக உள்ளவர்களுக்கு போராட்ட முறை பற்றியும் இடம் பற்றியும் தெரிவிப்பது என முடிவு செய்திருந்தோம். ஆனால் நமது போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அவசரமாக உயர் நிலைக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் உறுப்பினர்கள் பின் வரும் கருத்துக்களைப் பதிவு செய்தனர். ஆம்பூர் ஷமீல் பாஷாவை காவல் துறை அதிகாரி அடித்துக் கொலை செய்ததை ஒட்டி ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டது. சமூக விரோதிகள் புகுந்து கத்தி அரிவாள் மற்றும் கற்களால் தாக்கியதில் பெண் காவலர்கள் உட்பட பல காவலர்கள் காயமுற்றனர்

‎தவறுகளை_நியாயப்படுத்தலாமா ?

நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமுதாயத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர், நீங்கள் செய்தவைப் பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன்  49:6 ஜாண் ட்ரஸ்ட்) வாட்ஸப்பில் வந்தது க் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்". திருக்குர்ஆன் (49:6) ஆனால் பரபரப்பு செய்திகளைப் பரப்புவதில் இங்கே ஒரு போட்டியே நடக்கிறது. யாராவது ஒரு போலீஸ்காரர் அல்லது அதிகாரி முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி இழைத்துவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அல்லது அவரை சரிசெய்ய நியாயமான முறையில் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு பதிலாக, காவித்துறையே... எனத் தொடங்கி மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இதனால் களத்தில் பிரச்சனையைக் கையாளக் கூடியவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டு, பிரச்சனைகள் திசை மாறுகி

ஊடக சுதந்திரத்தை பற்றி பேசும் தலவைர்களே..!! "சன்" டிவியால் அரங்கேற்பட்ட அராஜகங்களையும், அடக்குமுறைகளையும் மறந்துவிட்டீர்களா

வாட்ஸப்பில் வந்தது "சன்" டிவிக்கு "லைசன்ஸ்" வழங்க மத்திய அரசு அனுமதி மறுப்பு விவகாரம் ;-  ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக மு.கருனாநிதி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், வைகோ, இ.கம்யுனிஸ்ட் டி.ராஜா ஆகியோர் சன் டிவிக்கு ஆதரவாக கருத்து. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஊடக சுதந்திரத்தை பற்றி பேசும் தலவைர்களே..!! "சன்" டிவியால் அரங்கேற்பட்ட அராஜகங்களையும், அடக்குமுறைகளையும் மறந்துவிட்டீர்களா ??? இதோ..! உங்களின் கவனத்திற்கு ..!! 1. புரட்சித்தலைவியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது படுக்கையறை முதல் பாத்ரூம் வரை படம் பிடித்தது யார் ?? 2. ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, தமிழ்திரை டிவி இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கப்பட்டது யாரால் ??? 3. தமிழகத்தில் 75% இருந்த "ஹாத்வே" கேபிள் டிவி நிறுவனத்தை அழிந்து யார் ?? 4. தமிழ்திரை துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தயாரிப்பாளர்களை மிரட்டி பெரும்பாலான திரைப்படங்களை குறைந்த விலையில் வாங்கி குவித்தது யார் ?? 5. "ராஜ்" டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத

சன் டி.வி. இப்போது துடிக்கிறது ஆனால் அது யாருக்கு சாதகமாக இயங்கியது? நிகழ்ச்சிகளை தயாரித்தது? நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது?

வாட்ஸப்பில் வந்தது +919444458712 சன் டி.வி. இப்போது துடிக்கிறது ஆனால் அது யாருக்கு சாதகமாக இயங்கியது? நிகழ்ச்சிகளை தயாரித்தது? நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது? திருவீரபாண்டியனை எதற்காக நீக்கினார்கள்? அங்கு எந்த சமுதாயம் ஆதிக்கம் செலுத்துகிறது? யாருக்காக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது? மூடநம்பிக்கைகளை தமிழக மக்கள் மத்தியில் விதைத்ததில் அல்லது வளர்த்ததில் சன் டி.வி.க்கு நிகர் சன் டி.வியே என்பதில் மாற்று கருத்துண்டா? காலை வணக்கம் என்ற நிகழ்ச்சியை மாற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் சூர்ய வணக்கம் என்று மாற்றினார்களே ஏன் தெரியுமா? சூரிய வழிபாட்டை ஆதரிக்கும் போக்குடனே இது நடந்தது. இதனூடே யோகாவும்! எளிய தமிழ் மக்களை மறைமுகமாக இந்துத்துவமயப்படுத்துதலில் சன் டி.வி. களமாடியது என்றால் அது மிகையல்ல என்பது யாவரும் அறிந்ததே. இப்போது அவர்கள் எதை ஆதரித்தார்களோ யாருக்காக ஆதரித்தார்களோ அவர்கள் வருவார்களா? இவர்களுக்காக போராட? அவர்களால் தானே தற்போது பிரச்சினையே என்பதை மாறன்கள் அறிந்து துடித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் சொல்லித் தானே திருவீரபாண்டியனை நீக்கினீர்கள் வினை விதைத்தவன் திணை அறுக்க முடியுமா? சாமானியர்களுக்க

சர்ச்சைக்குரிய கேள்வி -சன் தொலைக்காட்சி முடக்கப்படுமா..?

வாட்ஸப்பில் வந்தவை 27/07 11:10] ‪+91 94444 58715‬: கேரள ஹைகோர்ட் உதவியாளர் பணிக்காக நடந்த எழுத்துத்தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று எழுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள், பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் ஹைகோர்ட் உதவியாளார் பணிக்காக நடைபெற்ற தேர்வு வினாத்தாளில் மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது என்ற சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்ந்தெடுக்க விடைகளாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் கொரியா ஆகிய 4 நாடுகள் தரப்பட்டுள்ளன. இதனையடுத்து பாஜகவினரிடையே இக்கேள்வித்தால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கேள்வியைப் பார்த்து தான் ஆச்சர்யமடைந்ததாகவும், பிரதமர் மோடியை சீண்டிப் பார்க்கும் நோக்கம் உள்ளவர்களே தேர்வில் இந்த கேள்வியை வைத்திருக்க வேண்டுமென்றும் இந்த தேர்வில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வினா குறித்த சர்ச்சையைப் பற்றிய விசாரணையை நடத்த கேரள நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. [27/07 11:11] ‪+91 94444 58715‬: ***சன் தொலைக்காட்சி முடக்கப்படுமா..? ****கடந்த

பெருநாள் முடிந்தும் பிறை பிரச்சனை முடியவில்லை

Image
முக்கிய அறிவிப்பு:- எனும் தலைப்பில் வந்துள்ள பொய்ச் செய்திக்கு மறுப்பு  [26/07 13:24] My Number: On 16-July-2015, Thursday Saudi Arabia: Eid announced: ArabNews.com reported:  http://www.arabnews.com/ featured/news/777491 The Supreme Court declared Thursday as the last day of Ramadan 2015 and Friday as the start of the Eid al-Fitr holidays. In a statement carried by the Saudi Press Agency (SPA), the Royal Court said a number of adult witnesses in a number of provinces across the kingdom have testified to have seen with the naked the new moon of the month of Shawwal 1436. NOTE: None of the Saudi Hilal Committees were able to sight the 14 hrs old moon anywhere in the country, but the usual witnesses have claimed a sighting from Shaqra/Sudair near Riyadh (Ref: Saleh Al-Saab, KACST). Moonsighting.com believes that these sightings are not authentic. May be they saw something that they thought was the moon. wallahu A'lam http://moonsighting.com/ 1436shw.html [26

அப்துல் கலாம் போட்டோவுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்திய ஜார்க்கண்ட் பெண் அமைச்சர்

Image
 Posted by: Sutha Published: Wednesday, July 22, 2015, 15:18 [IST] Read more at: http://tamil.oneindia.com/news/india/jharkhand-education-minister-pays-homage-apj-abdul-kalam-231639.html   கோதர்மா, ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சரான நீரா யாதவ், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போட்டோவுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தியது பெரும் கண்டனங்களை குவித்துள்ளது. இந்து பாரம்பரியப்படி ஒருவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. எனவே நீரா யாதவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் இப்படி நடந்து கொண்டார் அமைச்சர் நீரா யாதவ். சம்பந்தபட்ட நிகழ்ச்சியானது ஒரு பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழாவாகும். இதற்கு சிறப்பு விருந்தினராக நீரா யாதவ் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு முன்பு அவர் அப்துல் கலாம் படத்திற

செருப்பணிந்து பாங்கு சொல்லலாமா? தொழலாமா? தவ்ஹீது வியாபாரிகளின் நிலை என்ன?

பூட்ஸ் காலுடன் பள்ளிக்குள் நுழைந்து விட்டார்கள். இந்த   கோஷத்தின் மூலமும் வேஷத்தின் மூலமும்  ஒப்பாரி  வைத்து புதிய வழியில்  பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்களை அறிவீர்கள். ரகசிய கூலிக்கு மாரடிக்கும்  கொள்கை வியாபாரிகளான  இந்த கூட்டத்தின் அசல் நிலை என்ன பாருங்கள்.  https://www.youtube.com/watch?v=KVdGmvkM_zE   செருப்பணிந்து பாங்கு சொல்லலாமா Published on: January 12, 2012, 9:08 AM Views: 2147  சீனி  பதில் செருப்பு அணிந்து பாங்கு சொல்லக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இது மார்க்கச் சட்டமாக இருந்தால் இதைத் தடை செய்யும் விதமாக குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கூறப்பட்டிருக்கும். ஆனால் குர்ஆனும் நபிமொழிகளும் செருப்பணிந்து பாங்கு சொல்லக்கூடாது என்று கூறவில்லை. மேலும் வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு செருப்பு ஒரு தடையில்லை என்பதை நபிமொழிகளைப் படிக்கும் போது அறிந்து கொள்ளலாம். பாங்கை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைக்கே இப்படி தடை ஏதும் இல்லை. செருப்பில் அசுத்தம் ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியும் போது அதைக் கழற்றிவிட்டு தொழ வேண்டும். அசுத்தம் தெரியாவிட்டால் செருப்பணிந