Posts

Showing posts from April, 2005

பி.ஜே.யின் குடும்ப சொத்துதான் த.த.ஜ.

                          பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.        26.04.2005 கண்ணியத்திற்குரிய கேப்டன் ஷா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எத்தர்களின் செப்படி  வித்தை என்ற தலைப்பிலான தங்களது ஆக்கம்  http://www.pjvstmmk.com    என்ற சைட்டில் கண்டேன்.  ஏகத்துவம் என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் ஏமாத்து இதழில் ஏடாகூடமாக எழுதியவருக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தீர்கள் நன்றாக இருந்தது. அதன் முடிவுரை மட்டும் தவறாக விளங்கி எழுதி உள்ளீர்கள்.  தவறை சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பிரபல டிரஸ்டு மோசடியாளரும் தவ்ஹீது வியாபாரியுமான பி.ஜே. மாதிரி பிதற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பிதற்றக் கூடியவராக இருந்தால் பி.ஜே.யுடன் வெளியேறி இருப்பீர்கள். த.த.ஜ.வின் தலைமைப்; பொறுப்பாளர்களில்  ஒருவராகவும் அல்லவா ஆகி இருப்பீர்கள்.                  பி.ஜே. செய்து வந்த சதி திட்டம். ஜமாஅத்துத் தவ்ஹீது என்பது நீங்கள் நினைத்துள்ள மாதிரி த.த.ஜ. அல்ல. அது வெளிநாட்டில் உள்ள ஒரு அமைப்பு. பி.ஜே.யின் வார்த்தைப்படி வெளிநாட்டு நிறுவனம்.  1985லிருந்து அந்த வெளிநாட்டு ந

தவ்ஹீதுவாதிகள் யார்? தவ்ஹீது வேடதாரிகள் யார்?

Image
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உள்ளர்த்தம் வெளி அர்த்தம் என பேசும் பிராடு.... என்ற முந்தைய வெளியீட்டை கண்டிருப்பீர்கள். அதில் குறிப்பிட்டிருந்த முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.க.வுக்கு சொந்தமானது என்பதற்கு பி.ஜே. கையெழுத்துடன் கூடிய கடிதத்தில் என்ன எழுதி இருந்தது என்பதை காண உள்ளோம்.  முன்னதாக துபையில் நடந்தவற்றில் ஒன்றையும் உங்கள் கவனத்திற்கு தருகிறோம். அந்நஜாத் அபு அப்துல்லாஹ் அவர்களிடம் துவங்கி த.மு.மு.க.விலிருந்து விலகி அ.த.ஜ.கூ. என போய் இப்பொழுது த.த.ஜ. என்று நிற்கிறீர்களே! இதிலிருந்து விலகி இனி எங்கே போய் நிற்பீர்கள் என்றும் துபையில் கேட்டார்கள்.  இதுக்கு மேல் கேட்காதீர்கள் என்று கண்கலங்கினார் பி.ஜே. எந்தக் கேள்விக்கும் சரியான நேரடியான பதிலைச் சொல்ல முடியாமல் சுற்றி வளைத்து திசை திருப்பி ஏமாற்ற முயன்று தோற்றுப் போனார் பி.ஜே.  இதற்குப் பிறகுதான் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு என அழைக்கும்போதே யாரை அழைத்தால் எதிர் கேள்வி கேட்க மாட்டார்கள், யாருக்கு உண்மை விஷயங்கள் தெரியாது என சலக்ட் பண்ணி அழைக்க முடிவு செய்தார்கள். பிறகு அந்த மாதிரி ஆட்களையே தேடிப் பிடித்து அழைத்தார்கள்.  உதார

ஓராண்டுக்குள் ஒரு நூறாயிரங்களையும் தாண்டி விட்ட பொய்கள்.

                             பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                   16-04-2005 அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தான் என்ற சர்வாதிகாரத்தன்மைக்கு எதிரான நிலை த.மு.மு.க.வில் ஏற்பட்டு விடவே தலைமையை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார் பி.ஜே. அது அம்பலமாகி விட்டது. வேறு வழி இன்றி இருப்பவர்கள் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி விட்டு 10.04.2004ல் வெளியேறினார்.  10.04.2005 அன்று அண்ணன் சொன்னதும் பொய்யே பொய்யே! அலாவுதீன் சொன்னதும் பொய்யே பொய்யே!!. என்ற தலைப்பில் இரு பக்க இதழ் வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்த பல சகோதரர்கள் ஓராண்டு நிறைவு சிறப்பு இதழா? அப்படியானால் கொஞ்சம் கூடுதலான பக்கங்களுடன் வெளியிட்டிருக்கலாமே ஏன் சுருக்கி விட்டீர்கள்? என கேட்டுள்ளனர்.  10.04.2005துடன் ஓராண்டு முடிந்து விட்டது.  இந்த ஓராண்டுக்குள் பி.ஜே. சொன்ன பொய்கள் எத்தனை என்ற பட்டியல் வெளியிட முடியமா? என்று ஒருவர் கேட்டுள்ளார். ... அன்வர் பாஷா  சொன்னதும் பொய்யே போய்யே!!! என நிறுத்தி விட்டீர்களே மற்றவர்கள் பொய்யர்கள் இல்லையா? எனவும் சிலர் கேட்டுள்ளனர். கேள்விகள் அனுப்பி உள்ள அனைவருக்கும் நன்றிகள்.

அண்ணன் சொன்னதும் பொய்யே பொய்யே! அலாவுதீன் சொன்னதும் பொய்யே பொய்யே!! அன்வர் பாஷா சொன்னதும் பொய்யே போய்யே!!!

                             பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                   10-04-2005 அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  வளைகுடா பயணத்தில் பி.ஜே. தன்னால் இயன்ற அளவுக்கு  வதந்திகளையும் பொய்களையும் பரப்பினார். அவற்றை சி.டி.க்களாக தொகுத்தும் வெளியிட்டுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள சி.டி.க்களின் வரிசைப்படி பி.ஜே. வளைகுடாவில் பரப்பி உள்ள பொய்களை தொடராக அடையாளம் காட்ட முடிவு செய்திருந்தோம். தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வரிசைப்படி எழுதவில்லை.  தான் என்பதை நிலை நாட்ட பி.ஜே. இலங்கைக்கும் சென்றார். அல்லாஹ்வின் நாட்டப்படி அங்கும் தான் என்ற அகம்பாவத்துக்கும் மமதைக்கும் அடி  விழுந்து விட்டது.  இலங்கை குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பி.ஜே. நாடு கடத்தப்பட்டார். இதை மறைக்க அவர்களது மீடியாக்கள் மூலம் அவசர அவசரமானப் பொய்களை இயன்ற வரை பரப்பினார்கள்.  குறிப்பாக பி.ஜே. வெளிநாடுகளுக்குச் சென்றதே தவ்ஹீது பயான் பண்ணத்தான் என்பது போலவும் மாயையை ஏற்படுத்தினார்கள். இந்த டி.வி. நிகழ்ச்சியின் துவக்கத்திலும் முடிவிலும் அலாவுதீன் இதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.  எனவே இ

பின்னங்கால் பிடரியில் அடிபட பின் வாங்கி ஓடும் “பி“னாமி பேரன்.

                        பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                     05-04-2005 கண்ணியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  மொட்டைக் கடித கூட்டத் தலைவர் பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இப்பொழுது இருப்பவர்களும்; பொய்யர்கள். எப்படிப்பட்ட பொய்யர்கள் என்றால், எப்படிப்பட்ட பொய்யையும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லி விடுவர்கள். இதற்கு பகிரங்கமான நிறைய ஆதாரங்கள் உள்ளன. அதில் ஒன்றைத்தான்   http://mdfazlulilahi.blogspot.com/2005/04/blog-post.html   என்ற வெப்சைட்டில் உள்ள அல் கத்தாபை விஞ்சி நிற்கும் அண்ணன் எனும் தலைப்பில் கண்டீர்கள்.  பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இருக்கும் வரை ஒவ்வொருவரும் பொய்யர்களாக பொய் சத்தியம் செய்பவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் பொய் சத்தியம் செய்யலாம் என்பதற்கு குர்ஆனிலிருந்தே பி.ஜே. ஆதாரம் காட்டுவார். அதனால்தான் 2002ல் முபாஹலாவுக்கு அழைத்தோம். அப்பொழுது சொந்த விவகாரங்களுக்கு முபாஹலா இல்லை என்றார்கள்.  பதில் கூற முடியாமல் ஓடி ஒளிந்து கிடந்தார்கள். நாம் அழைத்தபோது சொந்த விவகாரங்களுக்கு முபாஹலா இல்லை என்று 2002ல் கூறிய பி.ஜே. முபாஹலா பண்ணக் கூடாது என்ற க

தொடை நடுங்கும் தொண்டியான் பி.ஜே.

ஹாதமின் பேரன் என்ற புனைப் பெயரில் வந்த மொட்டைக் கடிதத்தை பலர் அனுப்பி இருந்தீர்கள். மொட்டைகளுக்கு பதில் எழுதக் கூடாது. பொய்யை எழுதும் பொய்யர்களால் மொட்டைதான் அனுப்ப முடியும். நான் எழுதுபவை அனைத்தும் உண்மை என்பதால் என் யெர் போட்டு எழுதுகிறேன். எனது தாயக முகவரி போன் நம்பர்கள் உட்பட முந்தைய வெளியீடுகளில் குறிப்பிட்டுள்ளேன். நமக்கு நேரடியாக பதில் தர முடியாமல் மொட்டைக் கடித பேர்வழிவகளாக ஆகி விட்டதே அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தி விட்ட மிகப் பெரிய இழிவுதான். அவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்பதை விளக்கிடும் நமது புதிய வெளியீடான "----அல் கத்தாபை" விஞ்சி நிற்கும் அண்ணன் என்ற வெளியீட்டைப் பாருங்கள். அது உங்கள் வெப் சைட்டில் உள்ளது என்று எழுதி இருந்தேன். இருந்தாலும் போன் செய்தவர்களில் பலர் மொட்டைக் கடித பேர் வழிக்குப் பதில் எழுத வேண்டாம். அந்த மொட்டைப் பேர்வழி பற்றி நாங்கள் புரிவதற்காக அவர்களை அடையாளம் காட்டுங்கள் என்றீர்கள். மொட்டைக் கடிதம் எழுதிடும் இந்தத் தொடை நடுங்கிக் கழிசடைகள் யார் என்பதை அந்த மொட்டைக் கடிதமே அடையாளம் காட்டியுள்ளது. தொண்டியப்பாவின் தம்பி கீழை ஜமீல். அபுஅவ்ன்,

"----அல் கத்தாபை" விஞ்சி நிற்கும் அண்ணன்.

கண்ணியத்திற்குரிய சவூதி வாழ் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்.. பத்தா - ரியாத் தமிழ் தஃவா கமிட்டி சார்பாக வெளியிடப்பட்டுள்ள பிரச்சனைக்கான கேள்விகளும் உண்மை விளக்கமும் என்ற தலைப்பில் யு.ஏ.இ.யில் உள்ளவர்களுக்காக பி.ஜே. பேசியுள்ள சி.டி.க்களை அனுப்பி இருந்தீர்கள். சவூதியில் உள்ள நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து எனக்கு அந்த சி.டி.க்களை அனுப்பியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் தஃவா கமிட்டி எனும் பெயரால் உள்ளவர்களால் வெளியிடப்பட்டுள்ள அந்த சி.டி.க்களில் என்ன தஃவா இருக்கிறது? வெளியிடப்பட்டுள்ளதோ தஃவா கமிட்டி சார்பாக அதில் உள்ள விஷயங்களோ, தான் வழி தவறியதோடு மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயத்தையும் வழி கெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் தன்னை புனிதப்படுத்தக் கூடியவைகளாகவே உள்ளன. தஃவா என்று சொல்வதற்கு எதுவம் அதில் இல்லை. தமிழ் தஃவா சென்டர் என பெயர் வைத்துள்ள இவர்கள் பற்றி சவூதியில் உள்ள சகோதரர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டு எழுதிய ஒரு விமர்சனத்தைத்தான் அவர்கள் வெளியிட்டுள்ள அந்த சி.டி.க்கள் உண்மைப்படுத்தியுள்ளன. சவூதியில் உள்ள டி.என்.டி.ஜே.காரர்கள் கே