மறுமை சிந்தனைமிக்க சகோதரர்களின் கவனத்திற்கு..பி.ஜே. அப்போலோ ஹனீபா ஆடியோ தரும் ஆதாரங்கள்

சகோதரர் அமீர் ஷாஹித் வெளியிட்டுள்ள பீஜை அப்போலோ ஹனீஃபா உரையாடலில் உள்ள உண்மைகளைப் பாருங்கள்.
அவர்கள் பேசும் பேச்சில் பெருநாளைக்கு குர்பானி மாடுகள் இந்து முன்னணிக்காரர்களால் பிடிப்பட்டதும், அதை ஓபிஎஸ் செக்ரட்டரி மூலம் விடுவிக்கப்பட்டது என்பது உண்மை செய்தி. அதற்கான ஆதாரம் செய்தி தாள் கட்டிங் இதில் சகோதரர் இணைத்துள்ளார்.  


மேலும் பீஜை பேசும் பொழுது சொல்கிறார். நான் இந்தப் பெருநாள் உரை நிகழ்த்தவில்லை. எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. மனசு சரியில்லை, ஆகவே எனக்கு தொண்டை சரி இல்லை என சும்மா சொல்லியிட்டேன். கோவை ரஹ்மத்துல்லாஹ்வை பெருநாள் உரை நிகழ்த்த சொல்லி விட்டேன் என்கிறார். இதுவும் உண்மையானது.

2014 அக்டோபர் 6ஆம் தேதி தமிழகத்தில் பெருநாள் தொழுகை. அன்று பீஜை நடத்த வேண்டிய பெருநாள் உரை கோவை ரஹ்மத்துல்லாஹ் நடத்தியதற்கான ஆதாரமான படங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.





பீஜையின் விபச்சாரத்திற்கு கட்ட பஞ்சாயத்து பேசி ஒரு தொகையை பங்கு வைத்து கொடுத்துள்ளார் என்பது 1000% உண்மை.

மிமிக்ரி என உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். இவரை மறுமை வாழ்வுக்காகதான் பின்பற்றுகிறோம் என்றால், சுய ஒழுக்கம், இறையச்சம் இல்லாத இவரால் உங்கள் அமல்களும் பாழாகி விடும் என்பதை தயவு செய்து நினைவில் வையுங்கள். 

கண்ணியமிக்க இமாம்கள் ஹனஃபி, ஷாஃபி போன்றோரின் கருத்துக்களை கூட தள்ளி வைத்து விட்டு அல்லாஹ்வும், ரஸுலும் சொன்ன சரியான மார்க்கத்தை பின்பற்ற வந்த நாம், இறுதியாக மிக மிக சபலம் நிறைந்த ஆசையில் முழ்கி போன ஒருவரை இமாம் போல் பின்பற்ற முனைவது ஆபத்தானது என்பதை அவரின் செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.

நான் விபச்சாரம் செய்து விட்டேன், என்னை கல்லால் அடித்து கொல்லுங்கள் என தன் தண்டனையை கேட்டு பெற்றார்கள் கண்ணியமிக்க அருமை ஸஹாபா மாஈஸ் (ரழி) அவர்கள். அவர்கள் விபச்சாரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்களாக வந்து, தான் விபச்சாரம் செய்து விட்டேன் என்றார்கள்.

பீஜை விபச்சாரம் செய்தற்கான ஆதாரமாக ஆடியோ கேஸட் வந்தது. அது மிமிக்ரி என மறுக்கப்பட்டது. அதற்கு ஆதாரமாக அப்போலோ ஹனீஃபா பீஜையின் உரையாடல் வந்தது.


அதில் பீஜைக்காக செய்யப்பட்ட விபச்சார கட்டப்பஞ்சாயத்து (செய்திகள்) தவிர்த்து (மேலும்) உள்ள செய்திகள்.

1) குர்பானி ஆடுகளை இந்து முன்னணிக்காரர்கள் பிடித்தது, அதை அப்போலோ ஹனீஃபா OPS செக்ரட்டரி ரமேஷ் மூலம் விடுவித்தது.

2) பெருநாள் உரையை கோவை ரஹ்மத்துல்லாஹ் நிகழ்த்தியது.

மேலே உள்ள இரண்டு செய்தியும் அக்டோபர் 5, 6இல் நடந்ததற்கான ஆதாரம் உண்டு. இவை இரண்டும் உண்மை. இவை உண்மை என்றால் மற்ற விடயங்கள் பொய்யா? மிமிக்கிரியா?

மறுமை சிந்தனை உள்ளவர்கள் என்னை ஏசுவதுவதை விட்டு நியாயத்தை சிந்தியுங்கள்.

வஸ்ஸலாம்.
நன்றி : ஜமீல் காகா


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.