Posts

Showing posts from May, 2005

அற்புதமாம் அல்குர்ஆனில் விளையாடும் அற்ப வியாபாரி செயலை ஷிர்க் என்பதா? இறை(வார்த்தை) நிராகரிப்பு என்பதா

பி.ஜே. அவர்கள் வெளியிட்டுள்ள தர்ஜுமாவில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டி இதுவரை இரு இதழ்கள் வெளியிட்டுள்ளோம். இவற்றைப் படித்தவர்களில் நியாயவான்களெல்லாம் வரவேற்று இது ஒரு வித்தியாசமான ஆய்வு என்று பாராட்டினார்கள். பலர் காப்பிகளாக எடுத்து வினியோகித்துள்ளார்கள். சிலர் புத்தமாக வெளியிட உள்ளதாகவும் அதற்கு அனுமதி உண்டா என்றும் கேட்டார்கள். நான் ரகசிய ராயல்டியோ அந்தரங்க கூலியோ வாங்கும் கூட்டத்தைச் சார்ந்தவனல்லன். எனவே தாராளமாக வெளியிடுங்கள் என்று கூறினேன். அந்த அளவுக்கு நமது முந்தைய வெளியீடுகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் பி.ஜேயை கண் மூடித்தனமாக பின்பற்றக் கூடியவர்களிடம் கடுமையான எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இந்த எதிர்ப்பைக் கூட மொட்டைக் கடித கூட்டத்தினர் பப்ளிக் பூத்திலிருந்துதான் காட்டினார்கள். எழுத முடியாத கொச்சை வார்த்தைகள் அதிலும் பொறுக்கி எடுத்த பச்சை வார்த்தைகள்தான் அவர்களது எதிர்ப்பில் வெளிப்பட்டன. http://mdfazlulilahi.blogspot.com/2005/05/blog-post.html அவர்கள் பேசுவதெல்லாம் பச்சையானது கொச்சையானது. பார்ப்பதெல்லாம் புளுவானது. படிப்பதும் எழுதுவதும் மஞ்சல்களானத

ஈமானுடைய ஒவ்வொருவரும் உஷார் அடைய வேண்டிய தருணமா இல்லையா?

தான் என்பதை நிலை நிறுத்த வேண்டும் என்றால் தனது இமேஜை கூட்ட வேண்டும். தனது இமேஜை கூட்ட வேண்டும் என்றால் தன்னை உயர்வாகக் காட்ட வேண்டும். தன்னை உயர்வாக காட்ட வேண்டும் என்றால் பிறரை குறைவுபடுத்த வேண்டும். பிறரை குறைவுபடுத்த வேண்டும் என்றால் பிறரிடம் இல்லாததை இட்டுக் கட்டிக் கூறி இழிவுபடுத்த வேண்டும். இந்த திட்டப்படி செயல்பட்டு தன்னை உயர்வானவர் போன்று காட்டி தனக்கு என தனி மாயையை ஏற்படுத்தி வந்தவர்தான் பி.ஜே. அல்லாஹ்வின் வார்த்தைகளை நிராகரித்தால் அவன் காபிர். அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கினால் அவன் யார் ?  அவனுடைய ஈமானின் நிலை என்ன ?  ஈமானுடையவர்களே இவனிடத்தில் எப்படி இருக்க வேண்டும்? குர்ஆனில் உள்ள சில வசனங்கள் தங்கள் மூளைக்கு ஒத்து வராததால் மூலத்திலிருந்து அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று ராமகோபாலன் ,  அத்வானி ,  உமாபாரதி ,  முரளிமனோகர் ஜோஷி ,  அருண்ஜேட்லி ,  பால்தாக்ரே போன்ற பி.ஜே.பி.க்கள் சொல்லத்தான் செய்கிறார்கள். பி.ஜே.யோ மொழிக்கு தகுந்தவாறு மொழி பெயர்ப்பில்    சில வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சொல்லி அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கியும் விட்டார். இதில்   பி.ஜே.பி.க்கும் பி