Posts

Showing posts from 2006

நோன்பு துஆவும் பி.ஜெ. பத்வாவும்.

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.  11.11.06 தனது பின்னால் உள்ளவர்களை எருமை மாடுகள் என பிரகடனப்படுத்தியுள்ள பி.ஜெ. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பி.ஜெ. பின்னால் உள்ளதுகளில் ஒன்று 2006 ஏப்ரல் ஏகத்துவத்தில் வானை விஷமாக்கம் வதந்திகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளது.  அதையும் அதற்கு முரணாக உள்ள அதுகளின் பத்வாக்களையும் பித்தலாட்டங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டு அதுகளின் முகத்தில் செமையாக அறைந்துள்ளார். முகவைத் தமிழன்.  உணரும் தன்மையற்ற ஜடங்கள் எங்கே திருந்தப் போகின்றன. இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என்பது போல் செயல்பட்டுள்ளன. பிராடு பி.ஜெ. தனது பிராடு தனத்தை மறைக்க மீண்டும் போர்ஜரி கடிதம் கொடுத்து அவரது பின்னால் உள்ளதுகளை வசமாக மாட்டி விட்டுள்ளார். நமது வெளியீடுகள் பலவற்றில் சுட்டிக் காட்டி இருக்கிறோம். பி.ஜெ.தான் மொட்டை மெயில், மொட்டைக் கடிதக் கூட்டத் தலைவர். கள்ள வெப் சைட் கதாநாயகர் என்பதை 2006இல் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார் ரைசுத்தீன். அதில் என்ன உத்தரவு உள்ளதோ. அதே செயலைத்தான் 1988லிருந்து பி.ஜெ. செய்து வருகிறார். இது பற்றி நமது வெளியீடுகள் பலவற்றில் சுட்டிக் காட்டி இர

நாங்கள் இரட்டை குழல் துப்பாக்கியாக இருப்போம்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.               அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பி.ஜே.யின் த.த.ஜ.வைச் சார்ந்த ஒருவர் அனுப்பிய விடியல்1,2 என்ற மெயிலைக் கண்டிருப்பீர்கள். ரைசுத்தீன் அவர்களின் ஆதாரப்பூர்வமான கூற்றுக்கு முறையாக பதில் சொல்லவில்லை. மல்லாந்து கிடந்து உமிழ்ந்து உள்ளார்.  அதில் ரைசுத்தீன் அவர்களுக்கும் எமக்கும் நடந்த விமர்சனத்தை மிகைப்படுத்தி எழுதி நாங்கள் சமாதானமாக ஆனதையும் கிண்டல் செய்துள்ளார். முகவைத் தமிழன் ரைசுத்தீன் அவர்களுக்கும் எமக்கும் நடந்த மோதல்களை நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் மனிதர்கள். செம்மறி ஆட்டுக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல. செம்மறி ஆட்டுக் கூட்டங்களாய் ஆகி விட்டவர்கள். செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் ஒரு ஆடு போனால் அதன் பின்னால் அந்த மந்தைகள் அப்படியே போகும். ஒன்றையொன்று இடித்துக் கொண்டும் போகும் உரசிக் கொண்டும் போகும் கொம்புகளால் ஒன்றை ஒன்று அப்படியே இழுத்துக் கொண்டும் போகும். முட்டிக் கொண்டும் போகும். ஏன் போகிறோம், எங்கு போகிறோம் என்பது அவைகளுக்குத் தெரியாது. காரணம் அவைகளுக்கு சிந்திக்கும் மூலை கிடையாது. இந்த மாதிரி சிந்தனையற்ற செம்மறி ஆட்டுக் கூட்டங்க

உறவுகளை வெட்டி (முறித்து) வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.

                        பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                 20-09-2006 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உண்மையை உரத்துக் கூறும் உமர் என்ற பெயரில் மெயில்கள் அனுப்பி வரும் முத்துப் பேட்டை பரகத் அலி அவர்களே!  உங்களைப் போன்றவர்கள் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்கும் மார்க்கக் கடமையை செய்து வந்திருக்கிறோம்.  அது போல் உபதேசம் என்ற மார்க்கக் கடமையை இந்த மெயில் மூலம் செய்கிறோம். நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை. வார்த்தைக்கு வார்த்தை பதில் எழுதி விட்டது போல் எண்ணிக் கொண்டு எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக என்ன என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.  அந்த வழியில் இலங்கை டூ காத்தான்குடி என்ற தலைப்பில் மெயில் அனுப்பியுள்ளீர்கள். அதிலுள்ள உங்கள் அறியாமையை நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை.  பலஹீனத்தினால் இப்படி எழுதி இருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்து விடக் கூடாது. அதனால் அந்த மெயிலில் நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளி;ல் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டி விட்டு இந்த மெயிலின் நோக்கத்

தாக்கத்தை ஏற்படுத்தியது நிஸார் குவ்வத்தி

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 10-09-2006 மவ்லித் ஓதுவதற்கு இலங்கையில் தடை! இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஃபத்வா!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலே காணும் தலைப்பு நம்முடையது அல்ல. தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத்தின் நெட்டில் போடப்பட்டுள்ள செய்தியின் தலைப்பு. தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத்தின் செய்திகளை தாங்கி வரும் பத்திரிக்கைகள் உட்ட அதன் எந்த ஊடகங்களையும் நாம் பார்ப்பது இல்லை. சகோதரர்கள் யாராவது அந்த ஊடகங்களிலிருந்து எதைப்பற்றியாவது கேள்வி கேட்டால் மட்டுமே அதனை நாம் பார்ப்போம். இலங்கையைச் சார்ந்த ஒரு சகோதரர் நேற்று போன் செய்து மேற்கண்ட தலைப்பு சம்பந்தமாக பேசினார். அதன் பின்தான் அதனைப் பார்த்தேன். அந்த தலைப்பில் அவர்கள் போட்டுள்ள செய்தியை பாருங்கள். இது போன்ற தீர்ப்புகளே போதும். சத்தியமே வெல்லும்! சமீபத்தில் களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் மவ்லிதின் குப்பை கூலங்கள், அசிங்கங்கள் அம்பலபடுத்தப்பட்டதின் விளைவாக இலங்கை ஜம்மிய்யதுல் உலமா ஷஷமவ்லித் ஓதுவது இஸ்லாத்திற்கு முரணானது, மேலும் அதை ஏற்பாடு செய்வதும் அதில் கலந்து கொள்வதும் பாவமாண காரியம் என்று அறிக்கை வெளியிட்டதுடன் இந்த அறிக்கையை இலங்கையில் உள்ள அனைத்த

இந்திய தூதரக செயல்பாடுகளும் பாதிப்புகளும்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 07-09-2006 அனுப்பு:- கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, தபால் பெட்டி எண்:- 19661, துபை, யு.ஏ.இ. fazlulilahi@gmail.com,mdfazlulilahi@hotmail.com தாயக முகவரி:- 55. சமாயினா சேக் முஹம்மது மூப்பன் தெரு மேலப்பாளையம், நெல்லை, 627005. பெருநர்:- பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள். தலைவர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். சென்னை. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. விஸா இல்லாதவர்கள், விஸா இருந்தும் சட்ட விரோதமாக வெளியில் வேலை செய்பவர்கள், பாஸ்போர்ட்டே இல்லாதவர்கள். இமிகிரேஷன் கோர்ட் மூலம் 3 மாதம் முதல் 3 வருடங்கள் வரை சிறை தண்டணையும் அபராதமும் விதிக்கப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களை பிடித்து இமிகிரேஷன் கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக லேபர்(களை பிடிக்கும்) ஆபீஸர்கள். லேபர் சட்ட குற்றவாளிகளுக்காக அவுட் ஜெயில் என்ற தனிச் சிறை என்றெல்லாம் இருந்தது. Nஷக் செய்யத் மறைவுக்குப் பிறகு அவரது மறுமை நன்மைக்காக இந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டது. லேப

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது சரியா?

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 01-08-2006 ஜாதி, மத, பேதமற்ற நீதியான ஆட்சியை நம்மால்தான் தர முடியும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு வந்ததும் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தும் வழக்கம் வந்து விட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள். முஸ்லிம்களுக்கு பங்கு உண்டு என்ற இந்த தலைப்பு உண்மைக்குப் புறம்பானது. உண்மைக்குப் புறம்பான இந்த தலைப்பில் முஸ்லிம்கள் பேசுவதுடன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்டும் முஸ்லிம்கள் பேச வைக்கிறார்கள். மீலாது மேடைகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி பேசுகிறார்கள் அல்லவா. அது போல் இந்த மேடையிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பேசுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக நம்பும்படியாக பேசி விட்டுச் செல்கிறார்கள். நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும்.