Posts

Showing posts from April, 2017

ஜெயலலிதா அவர்களின் மழை நீர் சேமிப்பு திட்டம் இஸ்லாம் காட்டிய வழிதான்

Image
கொடுங்கையூர் நஸ்ருதீன் வாட்ஸப் குரூப்பில் Ameer Aarif என்ற சகோதரர் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்ற தலைப்பில்  அறிவுரைகளை எழுதி இருந்தார்கள். அதில் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாம் செயல்படுத்தி வருவதும்  அறிவுரையாக  இடம் பெற்று இருந்தது.  10 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் செயல்படுத்தி வருவ தை படத்துடன் வாட்ஸப்பில் பதிவு செய்தோம். அதே நேரத்தில் இன்னொன்றையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த   மாண்புமிகு முன்னால் முதல்வர்  ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான  அ.தி.மு.க.  அரசு  கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டு வந்தது. அதைக்  சட்டமாகவும் ஆக்கியது.  இந்த  சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டடங்களும் கட்டயாமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோர்க்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும். இப்படி கடுமையான  சட்டமும் போட்டது. இதனால் ஏற்பட்ட பயன்  அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 50 சதம் வரை நிலத்தடி நீர்மட்