Posts

Showing posts from October, 2011

அண்ணன் ஜமாத்தின் அடாவடி போராட்டம்! - அப்துல் முஹைமின்

Image
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்... திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர். அடி உதைகளுக்கு ஆளானார்கள். ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டனர். பொய் புகார் கூறி சிறையில் அடைக்கப்பட்டனர். சொந்த பந்தங்களுக்குப் பகையாயினர். இப்படி ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் தான் கொள்கையைக் கடைப்பிடித்தனர். மேற்கண்ட 'டயலாக்' அண்ணன் ஜமாஅத்தினரால் அடிக்கடி பயன்படுத்துவதாகும். அல்லாஹ்விற்காக பாடுபட்ட நல்லடியார்கள் இதுபோன்று நாள்தவறாமல் சொல்லிகொண்டிருக்கவில்லை. இது கிடக்கட்டும். இவர்கள் 25 வருட சாதனையில் மேடையில் முழங்கியது தவிர வேறு என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்?  எத்தனை நபிமொழி நூல்களை இவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்? ஒரு திர்மிதியை அதுவும் ஒரே பாகத்தோடு ஊத்தி மூடி விட்டார்கள். ஏற்கனவே திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு உள்ள நிலையில், இவர்கள் பங்குக்கு ஒரு மொழிபெயர்ப்பை வெளியிட்டார்கள்.  அதில் ஆயிரத்த

பொய்யன் டிஜேயும் பொய் சொல்லும் பீஜேயும் - அண்ணன் ஜமாஅத் என்ன 'சைபர்கிரைம்' போலீசா?-அப்துல் முஹைமின்

Image
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்... அண்ணனைப் பற்றியோ, அண்ணன் ஜமாஅத்தைப் பற்றியோ ஆதாரப்பூர்வமாக வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டுக்கும்  அண்ணன் ஜமாத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ, அல்லது அடுத்தவன் காசில் தன் பெயரில் அண்ணன் நடத்தி வரும் இணையதளத்திலோ பதில் வராது. ஆனால் பதில் என்ற பெயரில் பாய்ந்து வந்து பிராண்டுவது பொய்யன் பீஜேயின் பினாமிதளம் என்றழைக்கப்படும் பொய்யன்டிஜே எனும் கள்ள பிளாக்குதான்.  அண்ணனை நோக்கியும், அண்ணன் ஜமாஅத்தை நோக்கியும் வீசப்படும் கேள்வி ஏவுகணைகளை நேரடியாக எதிர்கொள்ள துப்பில்லாத அண்ணன் ஜமாஅத்தினர் பொய்யன் டிஜே எனும் கள்ள பிளாக்கை கொண்டே தங்களை தற்காத்து வந்தனர். அய்யகோ! அதற்கும் வந்தது சோதனை. அண்ணன் வாயாலேயே இந்த பினாமி தளத்திற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று அல்லாஹ் அறிவிக்க வைத்து விட்டான் அல்ஹம்துலில்லாஹ். அண்ணன் ஜமாத்தின் தலைமைக்கழக செய்தி; poyyantj.blogspot.com  இணையதளத்தில் தரக்குறைவான விமர்சனங்களும், சொற்களும் பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் சார்பிலும் சென்னை சேப்பாக்கம் கிளை சார்பிலும

இதைத்தான் காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதை என்பார்களோ?

Image
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... ஐம்பதாயிரம் பேர் கூட அடங்காத தீவுத்திடலில் 15 லட்சம் பேரை கூட்டி மாநாடு நடத்தி, மயிரிழையில் கின்னஸ் விருதை தவறவிட்ட அண்ணன் ஜமாஅத், அடுத்த நாள் காட்சியாக பிரதமரையும்-காங்கிரஸ் தலைவி சோனியாவையும் சந்தித்தது. அதையொட்டி அவர்கள் வெளியிட்ட செய்தியில், சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம். அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார்.  இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள் . மேற்கண்ட செய்தி வெளியிடப்பட்டது 06-07-2010 செய்தி வெளியிட்டு ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்து விட்டது. ஆனால் 'எத்தனை சதவிகிதம்'