அக்பர்ஷா ஆடியோ வெளிப்படுத்தியுள்ள ரகசியங்கள் அப்போலோ ஹனீபா ஆடியோவை தோற்கடித்து விட்டது.

த.மு.மு.க.விலிருந்து கொள்கைக்காகத்தான் வெளியேறியதாக சொன்ன பி.ஜே.யின் சங்கரமட தொடர்பு வெளிப்பட்டு விட்டது. மேலப்பாளையம் ரிபாஈ தரீக்கா மலரில் இடம் பெற உள்ள கட்டுரையை பி.ஜே. திருத்திக் கொடுத்தார் என்றால் நம்புவீர்களா
இப்பதான் மைசூரில் தர்பியா என போட்டு பி.ஜே.யை தவ்ஹீது புலி. என்று பூ(கூ)லி லுஹா கூவி கூவி எல்லார் தலையையும் தடவி கழுவி அனுப்பினார். அந்த மைசூரில் இருந்து வந்த உடன் பி.ஜே. LKS கோல்டு ஹவுஸ் அதிபர் அக்பர்ஷா பேசிய ஆடியோ வெளி வந்துள்ளது.

ததஜவுக்கு அனுப்பப்படும் பணங்கள் எல்லாம் விபச்சார செட்டில்மெண்ட் வகைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நாம் நீண்ட நாட்களாக அடையாளம் காட்டி வருகிறோம். ததஜ தொண்டர்களால் அதை ஜீரணிக்க முடிந்ததில்லை.

ததஜவால் விபச்சார குற்றச்சாட்டு கூறப்பட்ட ததஜ முன்னாள் தலைவர் அல்தாபிக்கு ததஜ இந்நாள் தலைவர் பி.ஜே. ஜகாத் பணத்தை கொடுத்துள்ளார். அதற்காக ஜகாத் பணத்தை தனியாக எடுத்து வைத்து காத்து இருந்திருக்கிறார்.  

அல்தாபி இந்தப் பணத்தை திரும்ப கொடுத்து விட்டாலும். விபச்சார குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுப்பதற்கு என்றே ஜகாத் பணம் எடுத்து வைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையும் வெளிப்பட்டு விட்டது. நமது குற்றச்சாட்டு நிரூபணமாகி விட்டது.

இதிலிருந்தும் பொது மக்களின் கவனத்தையும் குறிப்பாக ததஜ தொண்டர்களின் கவனத்தையும் திசை திருப்ப ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார்கள்

அதுதான் பி.ஜே.யும் LKS கோல்டு ஹவுஸ் அதிபர் அக்பர் ஷாவும் பேசியதாக உள்ள ஆடியோ. வேகமாக பரப்பப்பட்டுள்ளது. மிமிக்ரி கிடையாது ஒரிஜினல்தான். காயல்பட்டிணம் அக்பர்ஷா உறவினரிடமும் கேட்டு உறுதி செய்து கொண்டோம். ததஜ தொண்டர்களிடம் தொடர்பு கொண்டோம். பதில் இல்லை.

பி.ஜே.யின் திட்டப்படியும் வேண்டுகோள்படியும்தான் வேகமாக பரப்பி உள்ளார்கள். முன்னாடியே இன்ன இன்னதுதான் பேச வேண்டும் என்று தகவல் பரிமாறப்பட்டு. திட்டமிட்டு செட்டப் செய்து பேசிய  பேச்சு அது. பி.ஜே. திட்டமிட்டபடி கரக்டாக பேசி உள்ளார்.

உதவிக்கு வந்த அக்பர்ஷா மேடை பேச்சாளர் கிடையாது. அதனால் அவரால் திட்டமிட்டபடி பேச முடியவில்லை, பேசி நடிக்கத் தெரியவில்லை. அதனால் வஅலைக்குமுஸ்லாம்  காகா அஸ்ஸலாமலைக்கும் நீங்கதானா? பார்த்து ரொம்ப நாளாக ஆச்சு போனில் பேசிக் கொள்கிறோம் என்கிறார்.

இந்த ஆடியோவில் பேசப்பட்டுள்ள செய்திகளின் நோக்கம். பி.ஜே. பொருளாதார மோசடி செய்ய மாட்டார். ஜகாத் பணத்தை எடுத்து விபச்சார செட்டில்மெண்ட் வகைக்கு பயன்படுத்தி இருக்க மாட்டார். பொதுப் பணிகளுக்குத்தான் வாங்குவார். தனக்கு நோய் என்ற போதும் உதவி செய்ய வந்த யாரிடமும் பணம் வாங்கவில்லை. இப்படியாக பி.ஜே.யை நல்லவர் மாதிரி காட்டவும் சரிந்துள்ள. இமேஜைக்  கூட்டவும் ஒரு சர்ட்பிகேட்டாகத்தான் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.  

அது மட்டுமல்ல 28 நிமிட செக்ஸ் ஆடியோ, அப்பல்லோ ஹனீபாவின் பஞ்சாயத்து ஆடியோ ஆகியவற்றை பொய்ப்படுத்தும் நோக்குடனும் இந்த ஆடியோ வெளியிட்டுள்ளார்கள். சில நாள் கழித்து இந்த ஆடியோவையும் அந்த ஆடியோவையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று சொல்வதற்காகவும் வெளியிட்டுள்ளார்கள்.

இதில் பி.ஜே. உடைய பேச்சு வித்தியாசமாக உள்ளது. அவர் எப்பொழுதும் பேசும் தொண்டி பாஷையில் பேசவில்லை. அது மட்டுமல்ல இதில் பி.ஜே. சைடில் உள்ள வாய்ஸ் டிஜிட்டலி மோடிபைடு வாய்ஸ்

28 நிமிட ஆடியோ, அப்பல்லோ ஹனீபா ஆடியோ சாதாரண வாய்ஸ். அவற்றில் அவரது தொண்டி பாஷையில் பேசி  இருந்தார். அதாவது அந்தப் பேச்சு இயல்பானது.

28 நிமிட ஆடியோவை பொய்ப்படுத்த பி.ஜே. ஆட்டோ டிரைவர், ததஜ தாஇ ஆகியோர் பேசி வெளியிட்ட ஆடியோ ஊத்திக் கொண்டது. எனவே இந்த ஆடியோ தயாரித்துள்ளார். மக்களிடம் ரீச் ஆனதும் பார்த்தீர்களா? என காட்ட இருந்தார் இதுவும் ஊத்திக் கொண்டது. 

பி.ஜே. பிறை விஷயத்திற்காக போனில் உரையாடித்தான் வெளியிட வேண்டுமா? இந்த மாதிரி எத்தனை போன் உரையாடலை பி.ஜே. வெளியிட்டுள்ளார். இவரது நோக்கம் மக்களை ஏமாற்றுவது என்றாலும் இதன் மூலம் இன்னும் பல ரகசியங்களை அல்லாஹ் வெளி வர வைத்து விட்டான். 

ஆக பி.ஜே. தனது தகடு தத்தங்களை மறைக்க தயாரித்த இந்த ஆடியோவும் பி.ஜே.யின் இரட்டை வேடத்தை இன்னொரு முகத்தை அடையாளம் காட்டி உள்ளது.

30 வருஷ கூட்டாளி பி.ஜே. சொல்கிற காரியத்துக்கும் அனுப்பும் ஆட்களுக்கும் அக்பர்ஷா பணம் கொடுத்து வந்து இருக்கிறார். த.மு.முக.வுக்கு பணம் கொடுக்கவில்லை.

காஞ்சி சங்கர மடம் வெளியிடும் நுால்களுக்கு LKS கோல்டு ஹவுஸ் அதிபர் அக்பர்ஷா பணமும் கட்டுரைகளும் கொடுப்பார் என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் அந்த கட்டுரைகளை திருத்தக் கூடியவராக பி.ஜே. இருந்துள்ளார் என்ற ரகசியம் இப்பொழுது வெளிப்பட்டுள்ளது.

LKSயிடம் இறந்து விட்ட சங்கராச்சாரியாருக்கு மலர் வெளியிட ஆர்ட்டிகல் கேட்டுள்ளார்கள். LKSக்காக காஞ்சி சங்கர மட ஸ்ரீராம் எழுதிய கட்டுரையை சரி பார்க்க பி.ஜே. மகன் முஹம்மது மூலம் பி.ஜே.யிடம் போயிருக்கிறது.  அதில் உள்ள ஷிர்க்கான வார்த்தைகளை பி.ஜே. திருத்திக் கொடுத்துள்ளார். கடைசியில் LKSதான் அதை அனுப்பவில்லை.

பெரியவர் இறந்து விட்டார் ஜெயேந்திரர் சுவாமிகள் என்று LKS அக்பர்ஷா சொல்லிக் காட்டும்பொழுது கொள்கைப் புலி பி.ஜே. என்னங்க அவரைப் போய் பெரியவர் சுவாமிகள் என்றெல்லாம் சொல்கிறீர்கள் என்றாரா? கிடையாது.

இருபது வருடத்திற்கு முன்பு இதே அக்பர்ஷா  சங்கராச்சாரியாரை வைத்து கல்லாபெட்டிக்கு பூஜை செய்தார். அதனால்  உணர்வு வார இதழுக்கு அக்பர்ஷாவிடமிருந்து மாதா மாதம் வந்த 30,000 ரூபாய் நன்கொடையையும் விஜய் TV நிகழ்ச்சிக்கு வார வாரம் வந்த உதவியையும் பி.ஜே. வேண்டாம் என்று சொல்லி விட்டார். 

அத்துடன் தொடர்பையும் துண்டித்துக் கொண்டார் என்றெல்லாம் கதை விட்டார் பி.ஜே. அவருடன் உள்ள மவுலவிகள் இன்றும் சொல்லிக் காட்டி விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நடந்தது என்ன?

 LKS கோல்டு ஹவுஸுக்கு சங்கராச்சாரியார் வந்து விட்டுப் போனது பற்றி பி.ஜே. உணர்வில் எதுவுமே எழுதவில்லை. LKS கோல்டு ஹவுஸில் வேலை செய்தவர்களே தங்கள் எதிர்ப்பை உணர்வுக்கு அனுப்பினார்கள். 

உணர்வில் இது பற்றி கண்டித்து எழுதாதது பற்றி பொது மக்களின் எதிர்ப்புகள் வலுத்தது. பொது மக்களின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டும். செல்வந்தர் LKS அக்பர்ஷாவின் கோபத்திற்கும் ஆளாகி விடக் கூடாது. என்ன செய்ய என்று கொள்கைப்புலி யோசித்தது.

எனவே நேரடியாக கொள்கைப்புலி பி.ஜே. சார்பில் கண்டித்து எழுதவில்லை. அக்பர்ஷாவை விமர்சித்து உணர்வுக்கு வந்த வாசகர் விமர்சினங்களில் மிகக் குறைந்த சினங்கள் உடைய வாசகர் விமர்சனத்தை தேர்வு செய்து போட்டார். அதனால் கோபம் கொண்ட அக்பர்ஷா உடனே உதவிகளை நிறுத்தினார். உடனே பி.ஜே. வேண்டாம் என்று சொன்னதாக கதை விட்டனர். நானும் செருப்பால் அடித்த மாதிரி கடிதம் எழுதினேன்.

துபையில் உள்ள அக்பர்ஷா உறவினர் என்னைத் தொடர்பு கொண்டு சொன்னார். காகா, சங்கராச்சாரியார் வந்து விட்டுப் போன பிறகு காகா (அக்பர்ஷா) வீட்டுக்கு பி.ஜே.யை விருந்துக்கு அழைத்துள்ளார். சங்கராச்சாரியாரை அழைத்து சங்கைபடுத்தியதால் வரமாட்டேன் என்று பி.ஜே. சொன்னாரா? இல்லை.

பி.ஜே. தனது படை பட்டாளம் சூழ  விருந்துக்கு வந்தார். சங்கராச்சாரியார் கடைக்கு வந்து விட்டு போன வீடியோ கேஸட்டையும் போட்டு காட்டி உள்ளார். கேஸட்டைப் பார்த்து விட்டு பி.ஜே. குற்றம் குறை எதுவும் இல்லை. மார்க்க முரணான செயல்கள் ஒன்றும் நடக்கவில்லை என்று நற்சான்று கொடுத்து விட்டு வந்துள்ளார். 

இப்ப என்ன காகா இப்படி? ஆகவே காகா (அக்பர்ஷா) த.மு.மு.க.வுக்கு இனி ஒரு பைசா கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார் என்றார். அக்பர்ஷாவும் இப்பொழுது த.மு.மு.க.வுக்கு பணம் கொடுக்கவில்லை என்று ஆடீயோவில் கூறி உள்ளார். நடந்தது என்ன?

வெளிரங்கமாக விமர்சனத்தை வெளியிட்ட பி.ஜே. கோபம் கொண்ட அக்பர்ஷாவிடம் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. நான் உங்களை விமர்சிப்பேனா? அது எனது எழுத்தா? எனக்குத் தெரியாமல் மற்ற த.மு.மு.க.வினர் போட்டு விட்டார்கள் என்று கூறி அக்பர்ஷா உடனான தனது நட்பை பலப்படுத்தி ரகசியமாக வைத்துக் கொண்டார். ரகசிய நன்கொடைகளையும் பெற்று வந்தார்.


03.05.2002 துபை ஐ.ஏ.ஸி. கூட்டத்தில்  பி.ஜே.க்கு   சங்கராச்சாரியார்  ஆசி உள்ளது  என்று பேசினேன். கொதித்து விட்டார்கள். வானுக்கும் பூமிக்குமாக குதித்து விட்டார்கள் அன்று கொதித்தெழுந்து குதித்தவர்களே இப்பொழுதாவது புரிந்து கொண்டு திருந்துங்கள். 

சங்கர மடம் வெளியிடும் நுால்களை திருத்திக் கொடுப்பவன் கொள்கைவாதியா? குழப்பவாதியா? இவர் ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் வெளியேறியதன் பின்னணி என்ன? இவரது பின்னணி என்ன? பி.ஜே.யை இயக்குவது யார்? சங்கர மடத்துக்கும் பி.ஜே.க்கும் உள்ள ரகசிய தொடர்புகள் என்ன? விரைவில் அல்லாஹ் வெளிப்படுத்துவானாக!



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.