Posts

Showing posts from September, 2006

உறவுகளை வெட்டி (முறித்து) வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.

                        பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                 20-09-2006 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உண்மையை உரத்துக் கூறும் உமர் என்ற பெயரில் மெயில்கள் அனுப்பி வரும் முத்துப் பேட்டை பரகத் அலி அவர்களே!  உங்களைப் போன்றவர்கள் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்கும் மார்க்கக் கடமையை செய்து வந்திருக்கிறோம்.  அது போல் உபதேசம் என்ற மார்க்கக் கடமையை இந்த மெயில் மூலம் செய்கிறோம். நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை. வார்த்தைக்கு வார்த்தை பதில் எழுதி விட்டது போல் எண்ணிக் கொண்டு எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக என்ன என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.  அந்த வழியில் இலங்கை டூ காத்தான்குடி என்ற தலைப்பில் மெயில் அனுப்பியுள்ளீர்கள். அதிலுள்ள உங்கள் அறியாமையை நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை.  பலஹீனத்தினால் இப்படி எழுதி இருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்து விடக் கூடாது. அதனால் அந்த மெயிலில் நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளி;ல் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டி விட்டு இந்த மெயிலின் நோக்கத்

தாக்கத்தை ஏற்படுத்தியது நிஸார் குவ்வத்தி

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 10-09-2006 மவ்லித் ஓதுவதற்கு இலங்கையில் தடை! இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஃபத்வா!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலே காணும் தலைப்பு நம்முடையது அல்ல. தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத்தின் நெட்டில் போடப்பட்டுள்ள செய்தியின் தலைப்பு. தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத்தின் செய்திகளை தாங்கி வரும் பத்திரிக்கைகள் உட்ட அதன் எந்த ஊடகங்களையும் நாம் பார்ப்பது இல்லை. சகோதரர்கள் யாராவது அந்த ஊடகங்களிலிருந்து எதைப்பற்றியாவது கேள்வி கேட்டால் மட்டுமே அதனை நாம் பார்ப்போம். இலங்கையைச் சார்ந்த ஒரு சகோதரர் நேற்று போன் செய்து மேற்கண்ட தலைப்பு சம்பந்தமாக பேசினார். அதன் பின்தான் அதனைப் பார்த்தேன். அந்த தலைப்பில் அவர்கள் போட்டுள்ள செய்தியை பாருங்கள். இது போன்ற தீர்ப்புகளே போதும். சத்தியமே வெல்லும்! சமீபத்தில் களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் மவ்லிதின் குப்பை கூலங்கள், அசிங்கங்கள் அம்பலபடுத்தப்பட்டதின் விளைவாக இலங்கை ஜம்மிய்யதுல் உலமா ஷஷமவ்லித் ஓதுவது இஸ்லாத்திற்கு முரணானது, மேலும் அதை ஏற்பாடு செய்வதும் அதில் கலந்து கொள்வதும் பாவமாண காரியம் என்று அறிக்கை வெளியிட்டதுடன் இந்த அறிக்கையை இலங்கையில் உள்ள அனைத்த

இந்திய தூதரக செயல்பாடுகளும் பாதிப்புகளும்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 07-09-2006 அனுப்பு:- கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, தபால் பெட்டி எண்:- 19661, துபை, யு.ஏ.இ. fazlulilahi@gmail.com,mdfazlulilahi@hotmail.com தாயக முகவரி:- 55. சமாயினா சேக் முஹம்மது மூப்பன் தெரு மேலப்பாளையம், நெல்லை, 627005. பெருநர்:- பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள். தலைவர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். சென்னை. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. விஸா இல்லாதவர்கள், விஸா இருந்தும் சட்ட விரோதமாக வெளியில் வேலை செய்பவர்கள், பாஸ்போர்ட்டே இல்லாதவர்கள். இமிகிரேஷன் கோர்ட் மூலம் 3 மாதம் முதல் 3 வருடங்கள் வரை சிறை தண்டணையும் அபராதமும் விதிக்கப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களை பிடித்து இமிகிரேஷன் கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக லேபர்(களை பிடிக்கும்) ஆபீஸர்கள். லேபர் சட்ட குற்றவாளிகளுக்காக அவுட் ஜெயில் என்ற தனிச் சிறை என்றெல்லாம் இருந்தது. Nஷக் செய்யத் மறைவுக்குப் பிறகு அவரது மறுமை நன்மைக்காக இந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டது. லேப