P.J,லுஹா மனைவியர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்கட்டுமாக. பொய்யர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் குடும்பத்தோடு நாசமாகட்டுமாக.

பி.ஜே.யின் கையெழுத்துடன் கூடி  முஸ்லிம் டிரஸ்ட் பணத்தை திருடியது யார்? தர்பியா - பயிற்சி என்ற பெயரால் 13.3.18 அன்று மைசூரில் நடத்திய நிகழ்ச்சியில் பி.ஜே.யும் லுஹாவும் உண்மைகளைக் கூறி இருந்தால் அவர்கள் இருவர் மீதும் அவர்களது குடும்தார் மீதும் அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக. பொய்களைக் கூறி இருந்தால் அவர்கள் இருவர் மீதும் (அவர்கள் குடும்பத்தார் மீது அல்ல) அவர்களை ஆதரித்து நிற்கக் கூடிய ஒவ்வொரு TNTJ யினர் மீதும் TNTJ யினர் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன்  பிடியை இறுக்கமாக ஆக்குவாயாக. உன் சாபத்தை இறக்குவாயாக என்று துஆச் செய்கிறேன். நியாயவான்களும் துஆச் செய்யுங்கள்http://mdfazlulilahi.blogspot.ae/2018/03/blog-post_15.html

நல்ல விஷயத்தில் அவர்கள் குடும்பத்தார் மீது அருள் உண்டாகட்டும். கெட்ட விஷயத்தில் அவர்கள் மேலும் மேலும் கெட்டுப் போக காரணமாக இருந்து துணை நிற்கும் ததஜவினர்தான் அழிய வேண்டும். ஆகவே கெட்ட விஷயத்தில் முட்டுக் கொடுக்கும் ததஜவினர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.

பழல் இலாஹி பற்றி மற்றவர்கள் குற்றச்சாட்டு வைத்ததாகவும் குற்றச்சாட்டு வைத்தவர்கள் சேர்ந்து கொண்டதாகவும் பி.ஜே. தர்பியாவில் பேசி உள்ளார். இது உண்மையா? 2002 ஜனவரியில் துபை வந்த லுஹா பி.ஜே.யும் பி.ஜே.யுடன் உள்ள ஆலிம்கள் எல்லாம் கலீல் ரசூலின் களஞ்சியம் பெண்கள் கல்லுாரி மாணவிகள், உஸ்தாதாக்களுடன் தவறாக நடந்து கொண்டார்கள் என அசிங்க அசிங்கமான குற்றச்சாட்டுக்களைக் கூறினார்.

இது பொய்யாக இருந்தால் என் மீதும் என் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும். லுஹாவின் மீதும் லுஹா குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் அருள் இறங்கட்டும். லுஹா என்னிடம் சொன்னார் என்பது உண்மையாக  இருந்தால் லுஹாவின் மீதும் (அவர் மனைவி மக்கள் மீது அல்ல)  லுஹாவுக்கு முட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு TNTJ யினர் மீதும் TNTJ யினர் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.

லுஹா கண்ணீர் வடித்துக் கூறிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பி.ஜே.யை விமர்சித்து அவருக்கு நேரடியாக கடிதம் எழுதினேன். பதில் சொல்ல முடியாத பி.ஜே. அவருக்கே உரிய இயல்புப் படி திசை திருப்பி மோசடி குற்றச்சாட்டுகள் கூற மற்றவர்களை ஏவி விட்டார்

யார் தலைவராக இருந்தாலும் பி.ஜே.தான் மம்மி மற்றவர்கள் டம்மிதான். ஆக பி.ஜே.யின் ஏவல்படி என் மீது பொருளாதார குற்றச்சாட்டுகள் பறந்தன.

படிப்புச் செலவுக்கு 2001 ஜுனில் வசூலித்த பணம் வரவில்லை என்று 2002ல் மோசடியாளனாக சித்தரித்தனர். மாணவரின் தந்தை நஸ்ருத்தீன் அவர்கள் பணம் தந்தார்கள். இலாஹி அனுப்பியது என்று சொல்லியே தந்தார்கள்   என்றார் ஆகவே அதில் தோற்றார் பி.ஜே.

அடுத்து என்னை மோசடியாளனாகக் காட்ட முஸ்லிம் டிரஸ்ட் பெயரால் ஒரு பிரசுரம் வெளியிட்டார்கள் முஸ்லிம் டிரஸ்ட் தலைவர் யார்? பி.ஜெ.

பயானுக்கு பயன்படுத்தப்படும் முஸ்லிம் டிரஸ்ட் இட வாடகை வகைக்கு மாதம் 5000 ஆயிரம் வீதம் வாங்கிய பணத்தை சில மாதங்களாக அனுப்பவில்லை என்ற பொருள்பட இருந்தது அந்த நோட்டீஸ்.

பழுலுல் இலாஹி அட்வான்ஸாக பணம் கொடுத்து விட்டு பிறகுதான் பணம் வாங்குவார். நீங்கள் நோட்டீஸ் போட்ட மாதம் வரை ரசீது வந்து விட்டது. எப்படி சில மாதங்களாக பணம் வரவில்லை என்கிறீர்கள்? என்றும் முஸ்லிம் டிரஸ்ட்டையோ, அதன் செயல்பாடுகளையோ நான் நேரில் பார்க்கவில்லை. பழ்லுல்-இலாஹி தான் 'தப்ஸீர்' பணி நின்று விடா வண்ணம் உதவ வேண்டினார் என்ற எதார்த்தத்தையும் சம்பந்தப்பட்ட அட்னாக் அப்துல் ரவூப்  அவர்களே பதிலாக அளித்தார்கள். இதிலும் பி.ஜே.க்கு தோல்வி.

அதே நோட்டீஸில் முஸ்லிம் டிரஸ்ட்டுக்கென சென்னை ராயப்பேட்டையில் இடம் வாங்க சவூதியில் இருந்துதான் பணம் வந்தது என்று எழுதினார். கத்தர், குவைத், பஹ்ரைன், ஒமான் போன்ற இடங்களிலிருந்து பணம் வரவில்லை என்று எழுதவில்லை. 

யு.ஏ.இல் உள்ள சகோதரர்களிடமிருந்து எந்த பணமும் வரவில்லை என்று மட்டும்தான் குறிப்பிட்டு உள்ளார். இதன் உள் நோக்கம் பழுலுல் இலாஹி பொருளாதார மோசடி செய்தார் என்று காட்டுவதே பி.ஜே.யின் நோக்கமாகும்.

என்னிடமிருந்த ஆதாரங்களையெல்லாம் நிர்வாகம் என்ற பெயரால் விஷமிகளை பயன்படுத்தி கைப்பற்றினார். என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று உறுதி செய்தி விட்டுத்தான் இந்த மாதிரி பொருளாதார குற்றச்சாட்டுக்களை அரங்கேற்றினார்.

பி.ஜெ. அவர்கள் சட்ட விரோதமாக வரும் பணத்தை திருப்பி அனுப்பி விடுவோம் என்று பகிரங்கமாக உணர்வில் அறிவித்த காலத்திலும். அனுபவப்பட்டப் பின் வேறு வழியில் அனுப்புங்கள் என்று ரகசிய அறிவிப்பு செய்த காலத்திலும். 

நீங்கள் தான் பில் கேட்பது இல்லை. சவூதி உட்பட எல்லோரும் பில் கேட்கிறார்கள். (நம்பர் ஒன் மாதிரியான) அன் அபீஷியலான செலவுகள் செய்ய முடிவதில்லை நீங்கள் அனுப்புவது தான் அன் அபீஷியலான செலவுகளுக்கு பயன் படுகிறது என்று பி.ஜே. சொன்ன காலத்திலும். நான் உண்டி மூலமே பணம் அனுப்பி உள்ளேன். 

எனவே எந்த ஆதாரமும் என்னிடம் இருக்காது. தப்பித் தவறி ரசீது அனுப்பி இருந்தாலும் அன் பீஷியலான ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டோம் என்பதை தெளிவாக அறிந்து விட்ட தைரியத்தில்தான் துணிந்து குற்றச்சாட்டுக்களை அரங்கேற்றினார் பி.ஜே.

1997ல் இருந்து இந்த முஸ்லிம் டிரஸ்ட் வகைக்கு உதவிய நாம் ரிஜிஸ்டர் செய்ய நாள் நெருங்கி விட்டது என்பதால் விரட்டி விரட்டி வசூலித்தோம். நன்கொடை எழுதியவர்களிடமிருந்து முழுமையாகப் பணம் வராத நிலையிலும் எழுதப்பட்ட பணத்தை அனுப்ப முடிவு செய்தோம். 

ரிஜிஸ்டர் செய்யப்படும் நாளுக்கு முன்பாக கிடைக்க வேண்டும். உண்டியில் என்றால் சில நேரங்களில் காலை வாரி விடும் என்பதற்காக காயல்பட்டிணம் தாவூது காகா அவர்களிடம் கடன் கொண்டு பேங்கில் அப்பினேன். பிற்காலத்தில் இப்படி ஒரு நிலை உருவாகும் குறைந்த பட்ச ஆதாரமாக இது இருக்கட்டும் என்று அல்லாஹ் நாடியபடி அது நடந்துள்ளது.




தமீமுல் அன்சாரி என்ற யு.ஏ.இ.ல் இருந்த சகோதரர். பத்தாயிரம், இருபதாயிரம் முப்பதாயிரம் என்று 1997-ல் இருந்து முஸ்லிம் டிரஸ்ட் கட்டிட வகைக்காக பல தடவையாக பணம் தந்து இருக்கிறார். அவர் கொடுத்துள்ள பணம் மட்டும் லட்சத்தைத் தாண்டும். கட்டிடம் வாங்கும் நேரத்தில் அவசர வசூலின் போது மட்டும் முப்பது ஆயிரம் கொடுத்தார். இதை அன்சாரி பார்த்தால் அவரிடம் உள்ள ஆதாரங்களை  அனுப்பித் தர வேண்டுகிறேன். 

இதே முஸ்லிம் டிரஸ்ட் வகைக்காக மதுக்கூர் ராவுத்தர்ஷா முயற்சியில் 2 அல்லது 3தடவையாக என் மூலம் பணம் அனுப்பி உள்ளார். அதற்குரிய டி.டி.காப்பி அவரிடம் இருந்தது. இப்படி பேங் ஆதாரங்கள் உள்ளவற்றையே துணிந்து மறுத்த, மறைத்த பி.ஜே. ஆதாரங்கள் இல்லாத-ஆதாரங்கள் சமர்ப்பிக்க முடியாத உண்டி மூலம் அனுப்பப்பட்ட பணத்தை எப்படி ஒப்புக் கொள்வார்கள்.

யு.ஏ.இ.யிலிருந்து பணமே வரவில்லை என்றால்  பி.ஜே.யின் கையெழுத்துடன் கூடி  இந்த முஸ்லிம் டிரஸ்ட் பணங்களை திருடியது யார்? யார்? என்று கேட்ட பிறகுதான் உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டாய்  என்ற  கூற்றுக்கள் அரங்கேரின. 

அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி  லுஹா, எம்.எஸ் சுலைமான் மீதும் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் ததஜவினர் மீதும் ததஜவினர் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.