Posts

Showing posts from March, 2016

பிற கட்சிகளோடு கூட்டணி சேர மார்க்கத்தில் அணுமதி இருக்கிறதா?

Image
எந்த ஜாதியாக இருந்தாலும் , எந்த மதமாக இருந்தாலும். ஒரு நாட்டு எல்லைக்குள் வாழ்ந்தால். நபி ( ஸல் ) அவர்கள் யூதர்களோடு செய்த ஒப்பந்தத்தைப் போல் அவர்களுக்கு மத்தியிலே ஒரு ஒப்பந்தத்தை வைத்துக் கொள்ள வேண்டும் .  அப்படி வைத்துக் கொண்டால் அங்கு ஜாதி , மத வெறி வராது . ரத்த ஆறுகள் ஓடாது . உடுமலை காதல் சாதல்கள் நடக்காது . போட்டி பொறாமை என்பது இருக்காது . ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வார்கள். ஒருவருக்கு ஒருவர் நலம் நாடுவார்கள். நல்ல நண்பர்களாக பழகுவார்கள் . பல சாரார் ஒன்றாக பழகுவதற்கு இது காரணமாக அமைகிறது . இதை இந்த ஒப்பந்தத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம் . யூதர்களிலே அவ்ஸ் கிளையைச் சார்ந்தவர்கள் தலைவர் போன்ற அந்தஸ்த்துக்கு உரியவர்களாக இருந்தார்கள்.  மனிதருள் மாணிக்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஒரு சமுதாயம் அல்லது ஒரு கூட்டம் மதிக்கக் கூடியவராக ஒருவர் இருந்தால். அவரை இகழ்ந்து பேசாதீர்கள் என்று. நான்கு பேர் ஒருவரை மதித்தால் அவரை நாம் இகழ்ந்து பேசக் கூடாது. பேசினால் நாம்  சொல்லும் உண்மை அவர்களிடம் எடுபடாது. அவர்கள் மதிப்பவரை இகழ்ந்து விட்டு அவர்களிடம் உண்மையைச் சொல்

ஆட்டை வெட்டாதே மாட்டை வெட்டாதே என்றால் சொன்னவனை என்ன செய்ய வேண்டும்?

Image
எந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்களின் சந்ததிகள் ஏற்றுக் கொள்ளக் கூடும் என்று இறுதித் துாதர் முஹம்மது ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள் அல்லவா . அந்த மனப் பக்குவமும் மன்னிக்கும் வியப்புக்குரிய மனப்பான்மையும் முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும் . மார்க்க விஷயத்திற்காகத்தான் நபி வழியில் கோபப்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, அதிகமாக இஸ்லாத்தை நேசிப்பது போல் காட்டிக் கொள்வது. அல்லாஹ்வுடைய பள்ளிவாசலை சண்டைத் தலமாக ஆக்குவது. சொந்தப் பிரச்சனையை மார்க்கப் பிரச்சனைகள் போல் ஆக்குவது . எங்கோ சண்டை செய்து விட்டு பள்ளிவாசலில் அடைக்கலம் புகுவது . தொழும் பள்ளியையும் அதைச் சூழ்ந்தும் சண்டைக் களமாக ஆக்குவது என்பது சாதாரணமாக ஆகி விட்டது . இதைத்தான் மார்க்கத்தை நிலை நிறுத்துவதற்காக எதிர்த்து போராடுதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவா நபி வழி? இந்த மாதிரி சம்பவங்களை நபி(ஸல்) வாழ்விலிருந்து காட்ட முடியுமா ? பள்ளிவாசலுக்குள் வந்து சிறு நீர் கழித்தவரிடம் கூட கோபப்படவில்லை . மென்மையாக சொல்லி அனுப்பினார்கள் . அந்த அழகான முன் மாதிரிக்கு சொந்தக்காரர்கள் நாங்கள