Posts

Showing posts from December, 2004

நிற்கதியாகி விட்டவர்களுக்கு நிரந்தர நிவாரணம் எது ?

Image
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிடமிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அல்குர்ஆன் 4:1 பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டு, பூமி, தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில் ) எறிந்து விடும்போது, மனிதன் திடுக்கிட்டு 'இதற்கென்ன நேர்ந்தது? (ஏன் இவ்வாறு அதிர்ந்தது?) என்று கேட்பான். அல்குர்ஆன் 99:1-3 வாடிக்கையான அந்த வேடிக்கைகள். கிழக்காசிய நாடுகளை குறி வைத்தாற்போல் தாக்கியுள்ள பூகம்பமும் கடல் கொந்தளிப்பும் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்பொழுதெல்லாம் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று பார்வை இடுவதும் செல்ல இயலாதவர்கள் அறிக்கை வெளியிடுவதும் நிதி திரட்டுவதும் வாடிக்கை. அந்த வாடிக்கையான வேடிக்கைகளைத்தான் இப்பொழுதும் பல அமைப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. கிரிமினல் வழக்குகளில் சிக்கி முன் ஜாமீன் பெற்றுள்ளவர்களில் சிலர் பூகம்ப நிதி கேட்டு வீதிகளில் உலவி வருவதையும் இதன் மூலம் அரசிடம் நற்பெயர் பெற முயன்று வருவதையும் பார்க்கிறோம். தொண்டரணி என வைத்திருப்பது எதற்கு? இந்த வேடிக்கைகளுக்கு மத்தியில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ்வின் அறிக்கையும் த.மு.மு.க. தொண்ட

17-12-2004 அன்று துபையில் நடந்த பி.ஜே. நிகழ்ச்சிகள்.

( நேற்றைய வெளியீட்டில் பெயர் போட மறந்து விட்டேன் எனவே கூடுதல் தகவல்களுடன் மறுபதிப்பு) அஸ்ஸலாமு அலைக்கும். துபையில் தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் ஒன்றான அல்கோஸில் உள்ள ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ உரையாற்ற பி.ஜே. சென்று கொண்டிருந்தார். 11-50க்கு பி.ஜே. ஜும்ஆ உரை ஆற்ற தடை என்ற உத்தரவு வெளியானது. வந்த வழியிலேயே திரும்ப அனுப்பப்பட்டார். 4 மணிக்கு துவங்க இருந்த சோனாப்பூர் ஹெச்.ஆர். கேம்ப் நிகச்சியும் தடை செய்யப்பட்டது. 6 மணிக்கு கல்ப் ஏர் பில்டிங்கில் நிகழ்ச்சி என்றார்கள். 5-20க்கு தடை செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. அடுத்து அதற்குப் பக்கத்தில் உள்ள சல்மானுல் பார்ஸி பள்ளியில் மஃரிபுக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்த அலாவுதீன் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு பர்துபையில் பாக்கிஸ்தான் கவுன்ஸிலேட் அருகில் உள்ள பள்ளியில் இஷh முடிந்து 7.30 க்கு துவக்கம் என்றார்கள். இஷhவுக்குப் பின் இமாம் மம்னூ (கூடாது) என கூறி விட்டு போய் விட்டார். 9 மணிக்கு மேல் அங்கு திருட்டுத்தனமாக கூடி உள்ளனர். இவை யாவும் பகிரங்க அறிவிப்பு இன்றி ரகசியமாக ஏற்பாடு செய்து போன் மூலம் மட்டும் அறிவிக்கப்பட்ட நிகிழ்ச்சிகளாகும்.

பயந்து பயந்துதான் ரகசியமாக நடத்தினோம்.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஷhர்ஜாவில் பி.ஜே. கூட்டம் கிரேட் சக்ஸஸ் என ஒரு ஆங்கில மெயில் வந்தது. இதை ஒட்டி பலர் கேள்விகள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். எனவே இந்த பதில் மடல். பி.ஜே. துபையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் இதுதான் உண்மை. யார் போன் போட்டாலும் எங்கு இருக்கிறார் என்ற பதிலை பொது மக்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த மெயிலைப் பார்ப்பவர்கள் உணர்வில் உள்ள போன் நம்பர்களுக்கு தொடர்பு கொண்டு பி.ஜே.யுடன் பேசிவிட்டு அவர் யாருடைய விஸாவில் வந்துள்ளார்? எந்த இடத்தில் தங்கி உள்ளார்? என்ற விபரத்தை தெரிந்து யு.ஏ.இ.யில் உள்ளவர்களுக்கு தகவல் சொல்லுங்கள். அல்லது மெயில் அனுப்புங்கள். அவரை நேரில் சந்திக்க பலர் ஆசையுடன் இருக்கிறார்கள். ஷhர்ஜா கூட்டம் எப்படி நடந்தது? ஷhர்ஜாவில் பி.ஜே. பேசுகிறார் எங்கே எப்பொழுது என தொடர்பு கொள்ளவும் என போன் நம்பர்களை மட்டும் போட்டிருந்தார்கள். அதுவும் 5 இடங்களில் மட்டும் ஒட்டி உள்ளார்கள். போன் போட்டு கேட்டால் நீங்கள் யார்? எங்கு இருந்து பேசுகிறீர்கள்? எந்த ஊர்? என்ன பெயர்? இப்படி கேட்டுவிட்டு இன்னொரு நம்பருக்கு பேசும்படி கூறுவார்கள். அவரும் இது மாதிரி க

அவர்கள் உண்மையாளர்கள் என்றால்...

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். துபையில் பி.ஜே. நிகழ்ச்சி தடையாகிவிட்டதை அனைவரும் அறிவீர்கள். இது சம்பந்தமாக பலரும் கேள்விகள் கேட்பதால் இந்த விளக்க மடல்.  முதலில் மழையின் காரணமாக ரத்து என்றார்கள். அஸருக்குப்பின் துவக்கம் என அறிவித்து இருந்தீர்கள். 3.40க்கு அஸர் ஜமாஅத் முடிந்து விட்டது 4 மணிக்கு மேல்தான் மிக மிக லேசாக விழுந்த தூரலை மழை என காரணம் காட்டுகிறீர்களே என்று அவர்களை நம்பி உள்ளவர்கள் யாரும் கேட்கவில்லை. சின்ன கூட்டத்திற்குத்தான் அனுமதி வாங்கினீர்கள். பெரிய கூட்டமாக அல்லவா தெரிகிறது என நாற்காலிகளை பார்த்துவிட்டு போலீஸ் ரத்து செய்து விட்டது என்றார்கள்.  ஆரம்பத்திலிருந்தே மாநாடு என்றுதான் அறிவிப்பு செய்து நோட்டீஸ்கள் வெளியிட்டிருந்தீர்கள். துபை முழுவதும் போஸ்டர்களும் ஒட்டி இருந்தீர்கள். துபையிலிருந்து வெளியாகும் பத்திரிக்கைகளிலும் புகழை விரும்பாத? பி.ஜே.யின் போட்டோவுடன் விளம்பரம் செய்தீர்கள் பிறகு எப்படி சின்ன கூட்டம் பெரிய கூட்டம் என காரணம் கூறுகிறீர்கள் என்று அவர்களை நம்பி உள்ளவர்கள் யாரும் கேட்கவில்லை. மறைந்த மன்னர் ஷேக் செய்யத் அவர்களுக்கு 40 முடியவில்லை எனவ

நான் தயார். நீங்கள் தயாரா? பகிரங்க சவால்.

இந்த ஆண்டு (2004) டிசம்பர் 6 போராட்டத்தில் சென்னையில் தான் தலைமை தாங்குவதாக விளம்பரப்படுத்திக் கொண்டவர் பி.ஜே. அரஸ்டின் போது அரஸ்ட் ஆகாமல் அங்கிருந்து ஓடி ஒளிந்து கொண்டவர் பி.ஜே.  அந்த மாவீரர் பி.ஜே. துபை வந்துள்ளார். பூகம்பம் ஏற்பட வேண்டுமானால் அது துபையில்தான் ஏற்பட வேண்டும் அதற்கு தகுதியான பூமி துபைதான். அங்கு பூகம்பம் ஏற்படும் முன் வந்து விடுங்கள் என்று பேசிய பி.ஜே துபை வந்துள்ளார்.   வெளிநாடுகளுக்கு போகக் கூடாது என்பதற்காக பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைக் கூட கிழித்து விட்டேன் என்று கூறிய பி.ஜே. துபை வந்துள்ளார். வெளிநாட்டிலோ வெளிநாட்டு நிறுவனங்களிலோ உதவி வாங்க மாட்டேன் என்று கூறிய பி.ஜே. துபை வந்துள்ளார். அவரிடம் பழுலுல் இலாஹியை நேரில் சந்திக்கத் தயாரா? என்று கேட்டதற்கு மறுத்து விட்டார். அவரது ஆதரவாளர்களோ வசூல் வேட்டையாட வளைகுடா வருகை தரும் வசூல் ராஜாவே வருக வருக என்று 3 பேரின் பெயரில் துபையில் வெளியான நோட்டீஸ் பழுலுல் இலாஹி போட்ட மொட்டை நோட்டீஸ் ஆகும். எனவே மொட்டை நோட்டீஸ்காரர்களை பி.ஜே. சந்திக்க மாட்டார் என பேசி வருகின்றனர். என்னை மொட்டை நோட்டீஸ் போட்டதாகக் கூறும் பி.ஜ

பாபரி மஸ்ஜிதும் பைத்துல் முகத்திஸும்.

Image
ஆக்கம்:- பெரம்பலூர் மாவட்டம் நாஸர் அலி கான் பெரம்பலூர் நாஸர் அலி கான் அவர்கள் உடைய கேள்வியாக மட்டும் இது இருக்கவில்லை. களவாடிய 'உணர்வு' உடையவர்களை தவிரஉண்மையான உணர்வுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களின் கேள்வியாகவும் இது இருக்கிறது.

வசூல் வேட்டையாட வளைகுடா வருகை தரும் வசூல் ராஜாவே வருக! வருக!!

அஸ்ஸலாமு அலைக்கும். முனாழராவானாலும் முபாஹலாவானாலும் அதில் உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த சவாலையும் எந்த ரூபத்திலும் சந்திக்க பச்சைக் குழந்தையைக் கூட தூக்கிக் கொண்டு ஓடியவன் நான். சவால் என்றால் சக்கரைப் பொங்கல் சாப்பிடுகிற மாதிரி. அதை இலங்கை சென்றும் சந்திக்க தயங்க மாட்டேன் என்று தங்களைப் பற்றி பெருமையாக வீரம் பேசி பீற்றிய பி.ஜே. அவர்களே! உங்கள் வீரம் என்ன ஆயிற்று? முபாஹலா பண்ணலாம் என்ற கொள்கையில் உள்ள பி.ஜே, ஸைபுல்லாஹாஜா, ஷம்சுல்லுஹா, எம்.எஸ். சுலைமான், எம்.ஐ. சுலைமான், அலாவுதீன், பாக்கர், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, காஜா பிர்தவ்ஸி உட்பட டி.டின்.டி.ஜே.யில் உள்ளவர்கள் மீது நான் கூறி உள்ள குற்றச்சாட்டுகளைக் கூறி முபாஹலா பண்ண நான் தயார். அதை மறுத்தும் என் மீது அவர்கள் கூறி உள்ள குற்றச்சாட்டுகளைக் கூறியும் முபாஹலா பண்ண அவர்கள் தயாரா? என்கிறார் பழுலுல் இலாஹி. நான் டிசம்பர் ஆறுக்கு ஃபழுலுல் இலாஹியிடம் நிதியாகக் கொடுத்த பெருந்தொகை கிடைத்ததா? என்று நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது அதிர்ச்சி அடைந்தோம். என்று நோட்டீஸ் போட்ட பி.ஜே. துபை வருகிறார். அதில் பி.ஜே. உண்மையாளர் என்றால் துபை வந

முபாஹலாப் பூச்சாண்டி என்ற தலைப்பில் 03-12-2004ல் எழுதியது பலரின் இன்றைய விமர்சனத்திற்கு இதில் பதில் உள்ளது.

ஒருவரை வழிகேடர், மோசமானவர், மட்டமானவர், கரைபடிந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என குறை கூறிவிட்டு அவர் பேசிய பயான் கேசட்களை காப்பி போட்டு கொடுப்பது சரியா? ஷய்த்தான் நெருங்காமலிருக்க ஷைத்தான் வழி சொன்னானா? காஞ்சி சங்கராச்சாரியார் பற்றி எழுத தேவை இல்லாத அளவுக்கு தெளிவான செய்திகள் வந்து விட்டன. அவரை பெரியவாள் என்றும் குறிப்பிடுவார்கள். இப்பொழுது பி.ஜே.யை பெரியவாள் என குறிப்பிட்டு எழுதினால் வம்புக்கு எழுதி உள்ளதாகக் கூறுவார்கள். மதுரை மாநாட்டில் பி.ஜே. நடந்து கொண்ட முறை பற்றி லுஹா மூலம் அறிந்ததும் பி.ஜே.யை பெரியவாள் என நமது முந்தைய வெளியீடுகளிலேயே குறிப்பிட்டு எழுதிவிட்டேன்.  https://mdfazlulilahi.blogspot.com/2004/12/blog-post_03.html எனவே அப்பொழுதே பெரியவாள் என குறிப்பிட்டு எழுதி விட்டதால் இப்பொழுது புரிந்திருப்பீர்கள். ஒவ்வொரு டிசம்பர் 6 ன் போதும் கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலிதா என்று தமிழக முதல்வரை கடுமையாக சாடி வந்த பி.ஜே. இந்த டிசம்பர் 6 பிரச்சார கூட்டங்களில் அடக்கி வாசிப்பதுடன் தமிழக முதல்வரை பாராட்டி அ.தி.மு.க.வினரை விஞ்சிடும் வண்ணம் புகழோ புகழ் என புகழ்ந்துப் பேசி வருகி