Posts

Showing posts from October, 2016

கேப்டன் பிரபாகரனின் மகனை என்ன செய்தார்கள்?

Image
அநியாயமாக எந்தக் காரணமும் இல்லாமல் யார் ஒரு அடியான் உடைய உயிரை பறிக்கிறானோ அவன் அல்லாஹ் உடைய பார்வையில் மனித சமூகத்தையே கொன்றவனைப் போல் ஆவான் . காரணம் எல்லாருமே அல்லாஹ் உடைய அடியார்கள் . எல்லாருமே அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மக்கள் . யாராவது அநியாயமாக எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு உயிரைப் பறித்தால் எப்படிப்பட்ட குற்றத்திற்கு உரியவனாக அல்லாஹ் உடைய நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவான் ? உலக மக்கள் அனைவரையும் கொன்றவனைப் போல் குற்றவாளியாக விசாரிக்கப்படுவான் . ஒரு உயிரை நீங்கள் இந்த பூமியில் வாழ வைத்தால் உலக மக்கள் அனைவரையும் நீங்கள் வாழ வைத்தவர்கள் போல் ஆவீர்கள் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் . ( அல்குர்ஆன் 5 ;32) இப்படிப்பட்ட வசனம் வேறு எந்த வேதத்திலாவது உண்டா ? முஸ்லிம்களுடைய ஆட்சியின் கீழ் பிற மதத்தவர்கள் யாராவது இருந்து . அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்டால் . அந்த முஸ்லிம்கள் சொர்க்கத்துடைய வாசனையைக் கூட நுகர முடியாது என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம்   ( புகாரி 6914)  இது போல் சொன்ன மதங்கள் உலகில் உண்டா ? அப்படி சொன்ன மதம் உண்டு என்றால் அது இஸ்லாம் மார்க்கம்

(கோவை போன்ற ஊர்) கொடுமைக்காரர்கள் பற்றி அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்?

Image
அந்தக் காபிர்களுக்கு வலிமை ( சக்தி ) இருந்து முடியும் என்றால் உங்களை மார்க்கத்திலிருந்து திருப்பி அனுப்பும் வரை உங்களிடத்தில் போர் செய்து கொண்டே இருக்க தயாராக இருக்கிறார்கள் (2;217) என்று அல்லாஹ் தெள்ளத் தெளிவாக சொல்லிக் காட்டி உள்ளான் . அவர்களது மன நிலையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளான் . இந்தக் கொடூர மனம் படைத்தப் பாவிகள் . ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் அல்ல . 15 வருடங்களாக தொடர்ந்து சொல்ல முடியாத அளவு தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் . அப்பொழுதெல்லாம் பொறுமை நபி நாதர் போதித்தது என்ன?  இன்னல்லாஹ மஅஸ்ஸாபிரீன் . பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதுதான் . எப்படிப்பட்ட பொறுமை ? சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பத்ரு பத்ரு என்று அலைபவர்கள் சிந்திக்க வேண்டும் . இதுவெல்லாம் முன்னாள் சென்ற சமுதாயத்தினருக்கு ஏற்பட்ட சோதனைகள்தான் . சோதனைகளை தாங்குங்கள் . உறுதியான ஈமானுடன் இருங்கள் . முழு பொறுப்பையும் அல்லாஹ்விடத்தில் ஒப்படையுங்கள் . அல்லாஹ் அவர்களை பார்த்துக் கொள்வான் . இப்படித்தான் இறைத்துாதர் முஹம்மது ( ஸல் ) அவர்கள் போதித்தார்கள் . ஒரு நாள் அல்ல. இரண்டு நாட

ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பேர் பலி

Image
பத்ரில்தான் அல்லாஹ்  முஸ்லிம்களுக்கு போர் செய்ய அணுமதி தந்து விட்டேன் என்று பிரகடனம் செய்தான் .  எதிரிகளின் கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள் . அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்! ' ( 8:12)  கண்ட இடத்தில் கொல்லுங்கள் . அவர்களைப் பிடியுங்கள் ; அவர்களை முற்றுகையிடுங்கள் , ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்க ளுக்காக காத்திருங்கள் ( 9:5)       பிடரிகளை வெட்டுங்கள் (47 :4 ). இப்படி அல்லாஹ் ஆயத்துகளை இறக்கியுள்ளான்.  ஆயத்துகள் உண்மைதான். எங்கே இறக்கினான் ? எப்பொழுது இறக்கினான் ? இதை மட்டும் மறைத்து மறைத்து விடுவார்கள். இஸ்லாத்தை விரும்பாதவர்கள் போர்க் களத்தில் இறக்கினான் என்பதை மறைத்து விட்டு. இப்படிப்பட்ட ஆயத்துக்களை மட்டுமே எடுத்துக் கொண்டு . வாளால் பரப்பப்பட்ட மார்க்கம், மதத்தை பரப்புவதற்கு போர் செய்ய துாண்டுகிற மார்க்கம், மனித நேயத்தை மதிக்கத் தெரியாத மார்க்கம், மனித நேயத்தோடு விளையாடுகின்ற மார்க்கம். இப்படியெல்லாம் பரப்புகின்றார்கள் .  குர்ஆனில் உள்ள இந்த மாதிரி வசனங்களை நீக்க வேண்டும் என்கிறார்கள் . இந்தியாவில் மட்டும் அல்ல உலககெங்கும் உள்ள இஸ்லாத்தை விரும்பா

பத்ரு என்ற பெயர் எப்படி வந்தது?

Image
பத்ருப் போரை திட்டமிட்டது அல்லாஹ்தான் . மற்றவையெல்லாம் காரண காரியங்கள் . அவ்வப்போது பத்ருப் போர் என அபுஜஹ்ல்களை கத்த வைத்தவனும் அல்லாஹ்தான் .  இரவிலும் போர் துவங்கும் போதும் இருந்தது போலவே போர் நடந்து கொண்டு இருக்கும்போதும் அபுஜஹ்லின் பின்னால் உள்ளவர்களை முஸ்லிம்களின் கண்களுக்கு குறைவாகவே காட்டினான். அதன் மூலம் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை ஊட்டினான் . ஆனால் அபுஜஹ்ல் கூட்டத்தின் நிலையையோ மாற்றமாக ஆக்கினான் . போர் துவங்கும் வரை அபுஜஹ்ல் கூட்டத்தின் கண்களுக்கு முஸ்லிம்களை 300 ஐ விட குறைவாகவே களத்தில் காட்டினான். போர் துவங்கியதும் அவர்களின் கண்களுக்கு முஸ்லிம்களை இரண்டாயிரமாகக் காட்டினான். ( 3 ;13) இதனால் அவர்கள் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான்.  போர் துவங்கிய பின் அபுஜஹ்ல்களின் கண்களுக்கு முஸ்லிம்களை இரு மடங்காக காட்டி பீதியை ஏற்படுத்திய அல்லாஹ். முதலிலேயே இப்படிக் காட்டி இருந்தால். அவர்களிடம் கலக்கம் ஏற்பட்டு இருக்கும். போருக்கு வராமல் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி இருப்பார்கள். அல்லாஹ்வின் நோக்கம் இதுவாக இருந்திருந்தால். இப்படித்தான் செய்து இருப்பான். போர் நட