சூப்பர் ஸ்டார் ரஜினி உலமாசபை சந்திப்பால் அ.தி.மு.க. அரசு அசைந்தது என்பது உண்மையா?

எத்தனை முரண்பாடுகள் வந்தாலும் இன்னமல் அஃமாலு பின்நிய்ய என்ற ஹதீஸ்படி உள்ளத்தைப் பார்ப்பவன் அல்லாஹ் என்பது மார்க்க விஷயத்தில் அல்ல. மார்க்கத்தை அல்லாஹ்  தெளிவு படுத்தி விட்டான். ஆகவே மார்க்கத்தில் முரண்பட்டு பிளவு பட்டு விடக் கூடாது என்பதே இஸ்லாம்.


சூப்பர் ஸ்டார் ரஜனி சந்திப்பு போன்ற விஷயங்களில் முரண்பாடுகள் வந்தால் அது எண்ணத்தின் அடிப்படையில் முரண்பட்ட இரு சாராருக்கும் அல்லாஹ் நன்மைகளை தருவான்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_5.html



சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தது சரிதான் என்று தன் மனம் சொல்வதைச் சொன்னால் நன்மை. தன் மனசாட்சிக்கு விரோதமாக காழ்ப்புணர்ச்சியிலும் விமர்சனங்களுக்கு அஞ்சியும் எதிர்த்தால் தீமை. சூப்பர் ஸ்டார் ரஜினி சந்திப்பை தன் மனசாட்சி ஏற்றுக் கொள்ளாத நிலையில் சார்புத் தன்மையால் புகழ்பாடினால் பொய்களை அவிழ்த்து விட்டால் உள்ளத்தைப் பார்க்கக் கூடிய அல்லாஹ் நன்மைகளை தர மாட்டான்.


மத குருமார்கள் தான் துாண்டி விடுகிறார்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜனி  காந்த் சொன்ன வார்த்தை சாதாரணமானது அல்ல. கல்யாணராமன், அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் லட்சம் பேர் சொன்னாலும் அது கண்டு கொள்ளப்படாது.  அவ்வளவாக மக்களை சென்றடையாது. தாக்கத்தை ஏற்படுத்தாது

ஒரு தடவை சொன்னால் நுாறு தடவை சொன்ன மாதிரி என்ற டயலாக்கின் சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன இந்த வார்த்தை. லட்சம் தடவை சொன்ன மாதிரி அல்ல. கோடிக் கணக்கானவர்களிடம் நேரில் போய் சொன்ன மாதிரி.


இதன் தாக்கத்தை அதன் வலியை எதிர் வினைகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை எல்லாம் அதிகாலையில் தன்னந் தனியாக சுபுஹுக்கு இமாமத் செய்யப் போகும் சம்பந்தப்பட்டவர்களால் மட்டுமே உணர முடியும்


மத குருமார்கள் என்று சொன்ன இடத்தில் ஒரு இயக்கத்தையோ அதன் தலைவரையோ துாண்டி விடுகிறார்கள் என்று கூறி இருந்தால் இன்றைய சூழலில் அது எவ்வளவு பெரிய பாதிப்பு என்று அவர்கள் உணர்ந்து இருப்பார்கள்.


ஆகவே துாண்டி விடுகிறார்கள் என்ற விமர்சனத்தால் மனதால் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள் உலமா சபையினர். உடலால் பாதிக்கப்பட இருந்தவர்களும் உலமா சபையினரே. 

விபரீத விளைவுகளை சந்திக்கும் முன். அது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட. ரஜினியை சந்தித்தது சரிதான். உப்புமா சபை தந்தூர் றொட்டி கந்தூரி  ரோட்ட்டி  கந்தூரி சட்டி கந்து வட்டி என்று விமர்சனங்கள் செய்தது சரி இல்லை.


அதற்காக, இயக்கத்தவர்கள் ரஜினியை சந்திக்க முயற்சி செய்தார்கள். மத குருமார்களைத்தான் சந்திப்பேன் என்று ரஜினி இயக்கங்களை புறக்கணித்தார் என்று எல்லா இயக்கங்களையும் பாதிக்கும் வண்ணம் ஒரு உலமா மொட்டையாக சொன்னது சரி இல்லை. அது எந்த இயக்கம் என்று தெளிவாக கூறி இருக்க வேண்டும்.


ஏன்? என்ற கேள்விக்கு பல விஷயங்களில் நேரடியாக பதில் சொல்ல முடியாதுதான் அது போல்  ரஜினி சந்திப்பு ஏன்? என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், தெளிவுபடுத்தாமல் இருப்பது தவறு இல்லை. 

மஷுரா செய்ய கட்டளை இட்டுள்ள அல்லாஹ் முடிவு எடுக்கும் உரிமையை தலைவர் என்ற ஒருவருக்குத்தான் கொடுத்துள்ளான்.

அல்லாஹ்  இட்ட கட்டளைப்படி மஷுரா செய்தோம். தலைவர் எடுத் முடிவுக்கு கட்டுப்படுகிறோம். என்று குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை கூறி இருக்க வேண்டும். 

அதை விடுத்து பதவி ஆசை இல்லாதவர் என்று கூறும்போது. அப்துர்றஹ்மான் ஹஜரத்தை எதிர்த்து நின்றது பதவி ஆசை இல்லாமலா? போன்ற எதிர் கேள்விகள் வரத்தான் செய்யும்.

மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் பதவி யதார்த்தமான தேர்வா? அல்லது அல்லாஹ்வால் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வா? என்று கதை விட்டால். வரலாறு தெரியாதவர்கள், கப்ஸாக்களை கேட்டே பழக்கப்ப்ட்டவர்கள் தலையாட்டிக் கொண்டு போவார்கள். வராலாறு உள்ளவர்கள் சும்மா இருப்பார்களா?


1992ல் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் V.P.சிங் தலைமையில் அனைத்துக் கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்தார்கள்

அதற்கு  முன்னதாக மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் அறிவித்தார்கள். அனுபவசாலி செ.காமு.யூசுப் போன்றோர் வேண்டாம். இந்திய அளவில் அறிவித்துள்ள அன்று சேர்ந்து நடத்துவோம் என்றார்கள். கேட்கவில்லை. தமிழகம் முழுவதும் அமைதியாக இருக்க மேலப்பாளையத்தில் நடந்தது என்ன?  


முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மேலப்பாளையத்தில் முஸ்லிம்கள் பகுதியில் இன்று ஷாஹீன் பாக் நடைபெறும் ஜின்னா திடல் அருகில் வலது புறம் இருந்த தலைமை போஸ்ட் ஆபீஸையும் இடது புறம் இருந்த பத்திர பதிவு அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தினார்கள். கொளுத்தியவர்கள் யார் இரண்டிலும் எரிந்தது மேலப்பாளையம் முஸ்லிம்களுடைய டாக்மெண்ட்கள் தான்.


தீயை அணைக்க வந்த தீ அணைப்புத் துறை வண்டிகளையும் தீயிட்டுக் கொளுத்தியவர்கள் யார்

துப்பாக்கி சூட்டில் இரண்டு உயிர்கள் பலியானது. 40க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தார்கள். அதில் 35  பேர்கள் மிகவும் கஷ்டப்பட்டவர்கள். 

கதை அளந்தவர் ஆதாரமாகக் காட்டி உள்ள மறுமலர்ச்சியில் 25 இளைஞர்கள் என்றுதான் போட்டிருக்கும். எத்தனையோ லட்சம் பேர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டாலும். நிருபர்களை கவனிப்பவர்கள் பெயர்தான் பத்திரிக்கைகளில் வரும். பத்திரிக்கையில் என் பெயர் வரவில்லை உன் பெயர் வரவில்லை என்பதாலேயே பள்ளிவாசல்கள் நிர்வாகங்கள் திடல் தொழுகையில் இரண்டாக ஆகின. இயக்கங்களை சொல்ல வேண்டுமா?

1992 மேலப்பாளையம் சம்பவங்களுக்கு.   யாருடைய பேச்சும் செயல்பாடுகளும் காரணமாக இருந்தது? பீ..கே.வே மறுக்க மாட்டார்.

அந்த அனுபவம்தான், தமிழ்நாடு முழுவதும் முதன் முதலில்  உலமா சபை சார்பில் கண்டன பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடக்க

PAK தலைமையில் மேலப்பாளையம் ஜின்னா திடலில் பொதுக்கூட்டம் மட்டும் நடந்தது

எத்தனையோ பேர் வற்புறுத்தியும் பேரணியோ ஆர்ப்பாட்டமோ வேண்டாம் என்று உறுதியுடன் நின்றார் PAK. 

முற்றுகை என்பது 23 +4+1  கூட்டமைப்புகள் சார்பில் நடந்ததுதான். உலமா சபையை தலைமை ஏற்க வைத்தார்கள்.

ரஜனி உலமா சபை சந்திப்பு தான், .தி.மு.. அரசை அசைய வைத்தது23 +4+1 கூட்டமைப்புகளும் ஜமாஅத்களும் சேர்ந்து நடத்திய வரலாறு கண்டிராத பிரம்மாண்டமான முற்றுகைப் போராட்டத்தைக் கண்டும் மிரளாத, அசையாத .தி.மு.. அசைய வைத்தது என்கிறார்கள்.

கடந்த மாதமே தமிழக அரசு மத்திய அரசிற்கு அனுப்பிய கடிதத்தில் என்.பி.ஆர் கணக்கு டுப்பில் ஆறு விதமான விபரங்களுக்கு விலக்கு கேட்டு கேட்டது. 

அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம் ஆந்திரா தெலங்கானா மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டது போல மூன்று விதமான கேள்விகளை விலக்கிக் கொள்னுமதி அளித்துள்ளது. இதைத்தான் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இது ஒரு மாதத்திற்கு முன்னே எழுதிய கடிதம்.

உலமா சபா சார்பில் T.V. விவாதத்தில் பேசிய .மவுலவி மூன்று விதமான கேள்விகளை விலக்கிக் கொள்வது போதாது. ஆறு விதமான விபரங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.


C.A.A யும் வேண்டாம்.  NRIC யும் வேண்டாம்.  NPR யும் வேண்டாம் என்றுதான் தமிழகம் முழுவதும் தாய்மார்கள் கோஷம் போடுகிறார்கள்

NPR தான் NRC வழியாக C.A.A மூலம் பல லட்சம் பேரை அஸாமில் அகதிகளாக ஆக்கியது

ஆகவே NPR என்ற நம்பியாரும் வேண்டாம். NRIC என்ற அசோகனும் வேண்டாம். C.A.A வீரப்பாவும் வேண்டாம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற சென்ஸஸ் நடத்தட்டும்.     

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.