வேலுார் இப்றாஹீம் விவகாரம் என்ன? சிறைவாசிகளில் சிறந்தவர்கள் மேன்மையானவர்கள் தியாகிகள் யார்?


மேலப்பாளையம் சிறைவாசிகளான எங்களுக்கு உதவ வேண்டாம் என்றவர்கள் தியாகிகாளா? எனக்கு மட்டும் தனியாக உதவுங்கள் என்றவர்கள் தியாகிகாளா?

வேலுார் இப்றாஹீம் அவரது சகோதரி ஜன்னத் பீவி, 2 வது மனைவியாக இருந்த சர்தார் பேகம் ஆகியவர்களை மிரட்டினார் என்று தடா றஹீம் அவர்கள் பதிவு போட்டுள்ளார். இதை ஒட்டியும் முந்தைய நிலைகளை ஒட்டியும் கேள்விகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன

https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_29.html

பொதுவாக யாரையாவது பார்க்கப் போனால் நண்பரை பார்க்கப் போவதாக சொல்வது இயல்பு. அதனால் அவர் நண்பர் என்று ஆகி விட மாட்டார். அந்த அடிப்படையில் அடிபட்ட  வேலுார் இப்றாஹீம் நண்பரை பார்க்க வந்தேன் என்று போலீஸில் புகார் செய்திருந்தார். அவ்வளவுதானே தவிர அவர் எனது நண்பர் என்பது கிடையாது.

வேலூர் இப்ராஹீம் நன்றி கெட்டவன் முத்தலாக் சட்ட கைதில் தன்னை காத்துக் கொள்ளவும் பந்தாவுக்காக போலீஸ் பாதுகாப்பு பெறவும் பீ.ஜே.பியில் உள்ளான் என்று நான்தான் பகிரங்கமாக அடையாளம் காட்டினேன்.  

மற்றபடி 2017 முதல் 2018 வரையிலான ஓராண்டில் பொருளாதார உதவி செய்தது. அன்றைய செயல்களின் அடிப்படையில்தான். சிறுமியை புணர்ந்த செக்ஸ் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்று வேலூர் இப்ராஹீம் பேசியது உண்மை இல்லை  அது பொய்  என்று தெரிந்த பிறகு எந்த உதவியும் வேலூர் இப்ராஹீமுக்கு நாம் செய்யவில்லை.


என்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள். நாட்டிலுள்ள சூழலில் இது தேவையா? என ஒதுங்கி விட்ட மாதிரி பொது தளத்தில் காட்டி விட்டு அந்தரங்கத்தில் மேல்சபை வேலையை காட்டி வருகிறார்கள்

மேல்சபை வழியாக பதவி பெறுபவர்கள் பற்றி -- வழியாக பதவி பெற்றவர்கள் என்பார்கள். புரிந்து இருப்பீர்கள். அந்த மாதிரி ராமநாதபுரம், கோவை, மேலப்பாளையம் மற்றும்  வளைகுடா நாடுகளுக்கும்  போன் போட்டு தங்கள் கபட நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.

தங்கள் தேவைக்கு ரைசுத்தீன் அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் பீ.ஜே.பி. ஸோர்ஸை பயன்படுத்தி எங்களுக்கு உதவுங்கள் என்றார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு சாராருக்கு போன் போட்டு ரைசுத்தீன் பீ.ஜே.பி.க்காரன் அவனோடு இலாஹி நட்புடன் இருப்பது சரியா? என்று கேட்டு வருகிறார்கள்.

ரைசுத்தீன் பீ.ஜே.பி.க்காரன், முனாபிக், ஷியா காபிர் என்று ஃபத்வா கொடுத்தார்கள். அதே வாய் இன்னொரு சாராருக்கு போன் போட்டு ரைசுத்தீன் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இலாஹி விஷயத்தில் ரைசுத்தீன் ஏன் தலையிடுகிறார் என்று கேட்டு வருகிறார்கள். 

ஒரே நேரத்தில் ஒரு  சாராரிடம் ஒரு விதம். இன்னொரு சாராரிடம் இன்னொரு விதம். இப்படி அவர்களின் இரட்டை வேட நாடகங்கள் நடந்து வருகின்றன.

சென்ற ஹிஜ்ரி ஆண்டு 1440 ரமழானுக்கு முன் ஒரு வியாபாரி போன் போட்டு இன்னவர் சிறைவாசி பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்.  இந்த ஆண்டு நீங்கள் செய்யும் ரமழான் உதவியில் இவருக்கும் உதவுங்கள் என்றார். இன்ஷாஅல்லாஹ் என்றோம்.  

அவரது பெயர் முகவரிகள் வந்த பிறகு 2004ல் நடந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.  உடனே கோட்டை தங்கப்பாவுக்கு போன் போட்டு அவர்தானே இவர் என்று கேட்டேன். தான் ஒதுங்கி விட்டதாக கூறினார்.

மேலப்பாளையம் சிறைவாசி நம்மிடம் வைத்த வேண்டுகோள் அண்ணா நீங்கள் இந்த ஆண்டு மேலப்பாளையம் சிறைவாசிகளான எங்களுக்கு உதவ வேண்டாம். கஷ்டத்தோடு கஷ்டமாக நாங்கள் இருந்து கொள்கிறோம்.  நீங்கள் இந்த ஆண்டு அதிகபட்சமாக முயற்சி செய்து கோவை மக்களுக்கு உதவுங்கள். அவர்கள் அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் என்றார். 

மேலப்பாளையம் சிறைவாசி வேண்டுகோளை ஏற்று காயல் S.K. கோட்டை தங்கப்பா ஆகியவர்களுக்கு விஸா எடுத்து CTM சார்பில் துபைக்கு வர வரவழைத்து  வசூலிக்க கூட்டி சென்றோம்.  இப்றாஹீம் ஜமாலி தலைமையில் செயல்பட்டவர்கள் தங்கி இருந்த தேரா கோட்டை பள்ளி அருகில் இருந்த ரூமுக்கு சென்றோம்.  

CTM சார்பில் வந்தவர்கள் கோரிக்கை கடிதம் படித்த பின் ஒரு சிறைவாசியின் கடிதம் படித்தார்கள். அதில். CTM சார்பில் வசூலிக்க வந்துள்ளதாக அறிந்தேன்.  எனக்கு வழக்கம் போல் தனியாக அனுப்பி விடுங்கள். CTM முடன் சேர்த்து விட வேண்டாம் என்று எழுதி இருந்தார். 

அப்போது நான் சொன்னேன் எங்கள் ஊர் மேலப்பாளையம் சிறைவாசிகள் கோவை மக்களுக்காக தங்களுக்கு வேண்டாம் என்று தியாகம் செய்து உள்ளார்கள். இவர் இப்படி எழுதி உள்ளார்.   CTM தான் எல்லார் வழக்கையும் பார்க்கிறார்களே அவர்களிடம் இவர் வழக்கையும் பார்க்க சொல்லலாமே என்று. அந்த சிறைவாசி ஒத்துக் கொள்ளவில்லை.  அவர் யார்?

அவர் தான் இவர் அன்றிலிருந்து அல்ல அதற்கு முன்பிருந்தும் இன்று வரையும் இப்படி தனி வசூல் செய்தே தன்னை தியாகியாக காட்டி வருகிறார்.  என தெரிந்னே். அதனால் நான் உதவவில்லை.  வாட்ஸப்பில் பலர் போட்டி போட்டுக் கொண்டு உதவினார்கள்.  ஆனால் அவரை நான் இப்படிப்பட்டவர் என்று அடையாளம் காட்டவில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் சிறைவாசிகளில் சிறந்தவர்கள் மேன்மையானவர்கள் தியாகிகள் யார்மேலப்பாளையம் சிறைவாசிகளான எங்களுக்கு உதவ வேண்டாம் என்றவர்கள் தியாகிகாளா? எனக்கு மட்டும் தனியாக உதவுங்கள் என்றவர்கள் தியாகிகாளா?

சிறைவாசிகளில் உண்மை தியாகிகளை புகழ்ந்தால் வியாபார கூட்ட தலைவர் நீ சிறைவாசிகள் பற்றி கூறியதை அவர்களுக்கு அனுப்புவேன் என்று மிரட்டுகிறார்.

2004ல் ஒரு சிறைவாசிக்கு நாம் எழுதிய பதிலில் இருந்து ஒரு பகுதியை தருகிறேன் பாருங்கள். 

பொதுவாக வழக்கு நடத்த உதவி என்றாலே உதவ பயப்படுவார்கள். தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்குள்ளான வழக்கு என்றால் சொல்லத் தேவை இல்லை. குண்டு வெடிப்பு வழக்கு என்றால்? அதுவும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு என்றால் பயந்து ஓடாதவர்களே இருக்க மாட்டார்கள்.

அவர்களுக்கு உதவக் கூடாது, உதவினால் ஆபத்து என்று அவர்களை வைத்து வளர்ந்தவர்களே அவர்களது அமைப்பு மூலமும் அதன் கிளைகள் மூலம் பயமுறுத்துவதையும், அப்படி சிறைவாசிகளுக்கு உதவணும் என்ற எண்ணம் இருந்தால், நாங்கள் கூறும் சிறைவாசிகளுக்கு உதவுங்கள் என்று போட்டி டிரஸ்ட் நடத்தி நிதி திரட்டி வருவதையும், அறியாதவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களிடம் அளிக்கும் நிதி சிறைவாசிகள் எல்லோருக்கும் போய் சேர்வது போன்ற மாயை ஏற்படுத்தி வசூலித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.


இந்த நிலையில் விபரமுள்ள இரக்க குணம் உடையவர்கள் மனம் இறங்கி உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவது பற்றி சிந்தித்தால், சிந்தித்ததே தப்பு என்ற முடிவுக்கு வரும் வகையில் சிறைவாசிகள் செயல்கள் பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன.

விரக்தியினாலோ, நமக்கு விடுதலை இல்லை என்ற முடிவினாலோ என்னவோ? கோர்ட்டிலும் அதன் வளாகத்திலும் கோஷம் போடுகிறார்கள். தேவையற்ற சவால் விடுகிறார்கள்.

..... வந்தபோது மிரட்டல் எச்சரிக்கை செய்தார்கள். இந்தக் குறைகளை நீங்கள் (சிறைவாசிகள்) நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றை தவிர்ப்பது சமுதாயத்திற்கும் சிறைவாசிகளுக்கும் செய்யும் நன்மையான செயலாகும். எளிதில் விடுதலை ஆகக் கூடியவர்களுக்கும் உள்ள தடைகள் நீங்கும் இன்ஷா அல்லாஹ்.
  
இது 2004ல் நாம் இலவசமாக வெளியிட்ட இஸ்லாமிய லைப்ரரி என்ற டாடா சி.டி.யில் P.J. என்ற பைலுக்குள் ஜெயில் முஸ்லிம் என ஒரு பைல் இருக்கும். அதில் சி.டி.எம். பற்றிய விபரம் இருக்கும். (அன்று சிறையில் இருந்த) 391 கைதிகள் பற்றிய பயோடேட்டா இருக்கும். அதன் கடைசியில்  ஒரு சிறைவாசி பெயரில் ஒரு வேர்டு பைல் இருக்கும் அதில்தான் இந்த மேட்டர் இருக்கிறது.

இதைத்தான் அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். இது சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அக்கறை உள்ள சொல்லா? எதிரானதா? நாம் போனில் பேசியதை அப்படியே வெளியிட்டால் வேடதாரிகள் பற்றிய பல உண்மைகள் வெளி வரும். சமுதாய அமைப்பு தலைவர்கள் பற்றி எந்த மாதிரி கொச்சைபடுத்த மோசடியாளர் முயற்சி செய்தார் என்று புரியும்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.