Posts

Showing posts from June, 2013

கபுராளிகள் தினமான பராஅத் இரவு வாழ்த்துக்கள்?

Image
அன்னையர் தினம், மங்கையர் தினம்,முதியோர் தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை  உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். பராஅத் இரவு வாழ்த்துக்கள்  http://arusuvai.com/tamil/node/19591 என்று வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள். அதை சிறப்பித்து பாவம் போக்கும் பரா அத் இரவு (Paavam Pokkum Baraath Iravu) என்ற தலைப்பில் பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரங்களாகைக் காட்டி தனது வாய்த் திறமைகளையும், அபத்தமான வாதங்களையும், விளக்கங்களையும் கொண்டு உரை நிகழ்த்தியுள்ள மௌலவி ஷெய்க் அப்த

திருமணத்தில் ஓதப்படும் அல்லிஃப் பைனஹுமாவின் அபத்தங்கள்!

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் __________________________ __________________________ ___http://annajaath.com/?p=2484 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு ...... இந்த பதிப்பை தெளிவாக நமக்கு வழங்கிய சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக........! திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் “”நபிமார்களைப் போல் வாழ்க” என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறி வருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையே மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர். ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வ பாரிஸா வ இப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா …” இவர்களைப் போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள். ## 1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க!## 1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக் கனியை உண்டத ற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள். 3.அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப் ப