Posts

Showing posts from May, 2019

மம்தா வீடியோ மாதிரிதான் பீ.ஜே. மீதான குற்றச்சாட்டுக்களுமா? மம்தா வைரல் வீடியோ உண்மையா

புனித குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் நோன்பு வைத்துக் கொண்டு பரப்பப்பட்ட பொய்கள் ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல?  எதிரிகளுக்கு எதிரான செய்தி என்று எண்ணி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றமாக  நடக்க தயாராகி விட்டீர்களா? மக்கமா நகரில் உள்ள புனித மஸ்ஜிதிதா ன கஃபத்துல்லாஹ் வுக்கு போக விடாமல் தடுத்தவர்களை விடவா மாபாவிகள் உலகில் உள்ளார்கள்? அப்படி தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது கூட , அவர்கள்மீது நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டி விட வேண்டாம் என்கிறான் அல்லாஹ். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதமாக நடந்து உண்மை க்கு சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். அவர்களுக்கு இடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் , நியாயமான தீர்ப்பே அளியுங்கள். ஏனென்றால் , நிச்சயமாக அல்லாஹ் நீதி மா ன்களை யே நேசிக்கின்றான். https://mdfazlulilahi.blogspot.com/2019/05/blog-post_30.html எவ்வளவு பெரிய எதிரிகளாக இருந்தாலும் நீதியை நிலைநாட்டுங்கள் என்பது அல்லாஹ் திரும்பத் திரும்ப திரு குர்ஆனில் கூறி உள

ஈமானுக்கு வேட்டு வைக்கும் வீடியோ செய்திகள் ஆதாரங்களாகுமா? கதற வேண்டியவனிடம் கதற மாட்டீர்களா?

யா அல்லாஹ் அரசியலுக்காக மாட்டிறைச்சி பெயராலும் ஜெய்ராம் போன்ற மத கோஷங்கள் பெயராலும் முஸ்லிம்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்த ஒவ்வொருவன் மீதும் அவன்களை துாண்டி விட்டு பின்புலமாகவும் பக்கபலமாகவும் இருந்தவர்கள் மீதும் இருப்பவர்கள் மீதும் உன் பிடியை இறுக்குவாயாக! அவர்கள் அத்தனை பேர் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்! என்று வல்லவன் அல்லாஹ்வை வேண்டிக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் மனமுருகி எதிரிகளுக்கு துஆச் செய்து விட்டு அடுத்த வசனத்தைப் படியுங்கள். https://mdfazlulilahi.blogspot.com/2019/05/blog-post_28.html அமைதி அளிக்கக் கூடிய   பாதுகாப்பு அல்லது பீதி ஏற்படுத்தக் கூடிய பயம் பற்றிய   ஏதாவது ஒரு செய்தி அவர்களுக்கு வந்து (கிடைத் து) விட்டால்   உடனே அவர்கள் அதை பொது மக்களிடம் பரப்ப ஆரம்பித்து விடுகின்றார்கள். அவ்வாறு செய்யாமல் அத னைத் தூத ரிடமோ, தங்களில் அதிகார ம் உ ள் ள அதிகாரிகளிடமோ பொறுப்புள்ள தலைவர்களிடமோ மட்டும் தான் தெரிவிக்க வேண்டும் . அவர்களிடம் மட்டும் தெரிவித்தால் அதை ஊகித்து - சிந்தித்து - நுணுகி ஆராயும் திறமை   உ டைய அவர்கள் அச்செய்தியின் உண்மைத் தன்மையை, ந

இன்று நடந்ததா? இந்தியாவில் நடந்ததா? இறைவனுக்கு அஞ்ச மாட்டீர்களா?

Image
அந்த வீடியோவில் உள்ள  ஐரோப்பிய  மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா?  புர்கா  போட்டுள்ள முஸ்லிம் பெண் மீது தாக்குதல் என்ற வீடியோவை வேகமாக பரப்பி வருகின்றனர்.  இதை நேற்று Mohamed sidik என்பவர் போட்டிருந்தார். இது இந்தியாவில் நடந்தது இல்லை. 6 வருஷங்களுக்கு முன் ஐரோப்பாவில் நடந்தது. இதை இன்று இந்தியாவில் நடந்தது என்பது போல்   போட்டிருப்பது சும்மா இருப்பவர்களை   துாண்டி விடுவது போல் உள்ளது என்று நாம் சுட்டிக் காட்டி இருந்தோம். சும்மா இருப்பவர்கள் இது போன்றவற்றை பார்த்து விட்டு இப்படியும் செய்யலாமோ என்று ஈடுபட்டால் அந்த பாவம் யாருக்கு? https://mdfazlulilahi.blogspot.com/2019/05/blog-post_25.html பாவகாரியமாகிவிடும் என்று இன்னொரு சகோதரர் எழுதி இருந்தார்.  Mohamed sidik நேற்றே அந்த  பதிவை நீக்கி விட்டார். இந்த மாதிரி பொய்யான பழைய வீடியோக்களை இன்று இந்தியாவில் நடந்தது போல் பலர் போட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் போட்டு உண்மைகளை விளக்கி உள்ளோம்.  இன்று Abdul samad என்பவர் போட்டுள்ளார்.  முஸ்லிம்களை பலி கடா ஆக்க என்னும் டி.வி.க்களும்   இந்த மாதிரி பொய்யான பழைய வீடியோக்களை ஒளிபர

1947ல் ஏற்றப்பட்ட கொடி பிரச்சனையும் மேலப்பாளையம் துப்பாக்கி சூடுகளும்.

Image
இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1947 லி ல் முதல் துப்பாக்கி சூடு நடந்த இடம் மேலப்பாளையம் ஜின்னா மைதானம் அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் (இன்றைய ஆஸ்பத்திரி) ரோ டுதான் . 1992 ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தும் மேலப்பாளையம் ஜின்னா திடல் அருகில் உள்ள அதே (ஆஸ்பத்திரி)   காயிதே மில்லத் ரோட்டில் தான் துப்பாக்கி சூடு நட ந் தது. வரலாறுகளை அல்லாஹ்வும் அவனது துாதரும் சொல்லிக் காட்டியது படிப்பினைகளுக்காகத்தான். ஆகவே வரலாறுகளை படிப்பினைகளுடன் பார்க்க வேண்டும். மேம்போக்காகவோ உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவோ பார்க்கவும் கூடாது சொல்லவும் கூடாது. https://mdfazlulilahi.blogspot.com/2019/05/1947.html தி.கவிலிருந்து உருவான திமு.க, ம.தி.மு.க. போன்ற கட்சிக் கொடிகள் மட்டுமல்ல பல கூறாக உள்ள எல்லா தி.க.க்கள் கொடிகள் நிறங்களும் கறுப்பு சிகப்புதான். அதன் அமைப்பில் உள்ள மாற்றங்களை கூர்ந்து கவனித்துதான் எந்தக் கட்சி கொடி என முடிவுக்கு வர முடியும். அதுவே கரை வேட்டியாக இருந்தால் ரொம்பவும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதுபோலத்தான் அ.தி.மு.க, அ.ம.மு.க கொடிகள் நிலை. TNTJ கொடியின் கலர்களும் துப்புரவு தொழில