பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர். பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ”எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது. சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது. பழனி பாபா அவர்களுடைய துஆவேண்டுதல் என்னவென்றால், காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும். இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது. அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார்
https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html

(இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து ) 


https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8



முஸ்லிம்களால் முஸ்லிம் பெயரால் உள்ள நய வஞ்கர்களால் (பாபாவை) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.

1996ல் குணங்குடி ஹனீபா .மு.மு..வின் தலைவராக இரு்ந்தார்அப்பொழுது சிறையிலிருந்த ஷஹீத் இமாம் அலி அவர்கள் பழனி பாபாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்அப்பொழுது .மு.மு..விலிருந்துமுக்கியமான நபர் (பி.ஜே.யின்பெயர் சொல்லிஅவர் பாபாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்உடனடியாக  பாபாவுக்கு தகவல் கொடுங்கள் என்றார் ஷஹீத் இமாம் அலி.

உடனே நான், .மு.மு..வின் தலைவராக இரு்ந்த குணங்குடி ஹனீபா அவர்கள் வீட்டுக்குப் போய் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை சொன்னேன். செய்தி கேள்விபட்டதிலிருந்து ஒரு வாரமாக எனக்கு மனது சரி இல்லை என்றேன். 

அதன் பிறகு குணங்குடி ஹனீபா அவரது அமைப்பினரிடம் பேசி உள்ளார். 2 நாட்கள் கழித்து  வந்து இல்லை என்றார். அவர்கள் இல்லை என்று உங்களிடம் சொன்னதற்கு மாற்றமாக நடந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று (எச்சரித்து) சொன்னேன்.

பழனி பாபாவை கொலை செய்ய பி.ஜே. ஆட்கள் அனுப்பியது உட்பட யார் யார் அனுப்பப்பட்டார்கள் என்ற நபர்கள் விபரம் வரை சிறையில் உள்ளவர்கள் சொல்லி உள்ளார்கள். நீங்கள் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் என்றும் சொல்லி விட்டு வந்தேன்.

அதன் பிறகு பழனி பாபாவை கொலை செய்ய பி.ஜே. ஆட்களை அனுப்பியது உண்மை என்பதை நான் சிறை சென்ற பிறகு அறிந்தேன். 

பழனி பாபாவை கொலை செய்ய யார் போனார்களோ அந்த சகோதரர்களே என்னிடம் சொன்னார்கள். பாபாவை கொலை செய்ய நாங்கள்தான் போனோம்.

பொள்ளாச்சிக்குப் போய் பார்த்து விட்டு இவரையா கொலை செய்வது? என்று வந்து விட்டோம் என்னிடம் நேரிடையாக சொன்னார்கள். அதே போல் வேவு பார்க்க போனவர்களும் சொல்லி இருக்கிறார்கள். பாபாவின் பெரம்பூர் வீட்டிற்கே போய் பார்த்து விட்டு வந்தோம். ஆனால் நாங்கள் செய்வதற்கு முன்னாடி அவர்கள் செய்து விட்டார்கள் நாங்கள் அந்த பாவத்தில் இருந்து தப்பித்து விட்டோம்.

பாபாவை பாதிப்புக்குள்ளாக்கிய இன்னொரு விஷயம். அவர் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் என்ற அமைப்புடைய தலைவராக இருக்கக் கூடிய பி.ஜே. என்பவர். அவருடன் இருந்த ஒரு தலைவரை அனுப்புகிறார். அவர் வந்து என்னிடம் சொல்கிறார் பாபா  ஒரு பெண்ணை கற்பழித்து விட்டார் என்று ஓபனாகச் சொன்னார். நான் சிரித்துக் கொண்டே அப்படியெல்லாம் இல்லீங்க என்றேன். அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று சொன்னேன்.

அதற்கு அவர், இல்லை அரும்பாக்கத்தில் உதவும் கரங்கள் என்ற ஒரு மகளிர் விடுதியில் அந்தப் பெண் இருக்கு என்றார். நான் அவருடன் சென்றேன். அது பொய் என்பதை வித்தியாசாகர் உட்பட இன்னும் சிலர் இன்றும் இருக்கிறார்கள் அவர்கள் எல்லார் முன்னாடியும் நிரூபித்தேன்.

அவர்கள் முன்னாடி வைத்து நான் விசாரணை பண்ணினேன். அப்பொழுது அந்தப் பெண் (பி.ஜே.யின் அந்த பினாமியிடம்) பணம் கேட்கிறார்கள். பணத்திற்காகவே அந்தப் பெண் (இவர்கள் சொல்படி பொய் சொல்லி உள்ளார்) என்று புரிகிறது.

பாபா மாதிரி நம்ம தலைவரால் (பி.ஜே.யால்) ஆக முடியாது என்பதால் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை பரப்பினார். அந்த மாதிரி குற்றச்சாட்டு சொன்னவர்கள் (மீது) மிக கேவலமான நிலையில் ஆடியோக்கள் எல்லாம் வெளியே வந்து ஊர் சிரித்தது. நாடு சிரித்தது.

(தவளை தன் வாயால் கெட்டது.  தன் வாயே தனக்கு எதிரான சாட்சியாக ஆனது. உலக வரலாறாகும்)

நாகூரில் ஆலிம் ஜார்ஜ் என்பவரை கொலை செய்ய ஆள் அனுப்பினார்கள். அந்த நபர்களிடம் என்ன சொல்லி அனுப்பினார்கள் என்றால். நீங்கள் மாட்டிக் கொண்டால், இந்தக் கொலையை செய்யச் சொன்னது பழனி பாபாதான் என்று சொல்லுங்கள் என்று.

(பாபாவைக் கொன்ற  RSS காரர்கள் யாரல் அனுப்பப்பட்டவர்களாக இருப்பார்கள்? யாரது ரகசிய கூலியாக இருப்பார்கள். ஒப்பிட்டுப் பாருங்கள் - நமது கருத்து ) 

அதே மாதிரி அவர்கள் மாட்டி கைது செய்ப்பட்டதும் விசாரணையில்  பழனி பாபா (கொலை) செய்யச் சொன்னார் என்று சொல்லி உள்ளார்கள். போலீஸ் அதிகாரிகள் அதை நம்பவில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள் பாபா பேசுவாரே தவிர கொலை செய்ய (எல்லாம் சொல்ல) மாட்டார் என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியும் என்று மறுத்து விட்டார்கள்.

யார் இந்த விஷயங்களையெல்லாம் சொன்னார்கள் என்றால் (பழனி பாபா கொலை செய்யச் சொன்னார் என்று போலீஸில் சொன்ன) இதில் ஈடுபட்ட சகோதரர்களே சிறையில் வைத்து எங்களிடம் சொல்லும்பொழுது எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய அதிர்ச்சி.

பழனிபாபா வெளியில் உள்ளவர்களாலும் பாதிப்புக்குள்ளானார்கள். சமுதாயத்தில் உள்ள நயவஞ்சர்களாலும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த மாதிரி (கொடுமைகளை) கடுமையாக அனுபவித்தோம். இந்த மாதிரி நன்றிக் கடன் பாபாவுக்கு சில நயவஞ்சகர்களால் ஏற்பட்டது.

இந்த விஷயங்களை பதிவு பண்ணுவதன் நோக்கம். நான் (பாபா) உடன் இருந்ததாலேயும் சிறையில் இருந்ததாலேயும் இந்த உண்மைகளை மக்களுக்கு சொல்வது கடமை என்று கருதியதால் சொல்கிறேன். இவ்வாறு புனிதப் போராளி முஹம்மது காமில் பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார்கள்.

நாகூர் ஆலிம் ஜார்ஜ் என்பவரை கொலை செய்து விட்டு பழனி பாபா  பெயரை விற்கச் சொன்ன கோழையான அந்த ஆடியோ ஜமாஅத் தலைவன். இந்த மாதிரி நிறைய பேரை துாண்டி விட்டு விட்டு. அப்பாவிகளை மாட்ட வைத்துள்ளான். 

பழனி பாபாவை கொலை செய்ய பி.ஜே. பத்வா கொடுத்து ஆட்களை அனுப்பினார் என்று 2002ல் துபை வந்த ஷம்சுல்லுஹா சொன்ன நாட்களிலிருந்து சொல்லி வருகிறேன். அல்லாஹ்வின் அருளால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உண்மையை மேடையில் சொல்லிக் காட்டிய முஹம்மது காமில் அவர்களுக்கு யா அல்லாஹ் பேரருள் புரிவாயாக! 

சமுதாய விரோத சக்திகளான ஆடியோ சமாச்சார சமாஅத்தினர்களை உன்னிடம் ஒப்படைக்கிறோம். நீ அவர்களை கூண்டோடு சரியான முறையில் பிடிப்பாயாக.

இதை ஒட்டிய முந்தைய வெளியீடுகள்.

பழனி பாபா மீது பி.ஜே வைத்த மோசடி. குற்றச்சாட்டுக்களும் பி.ஜே. செய்த மோடி மஸ்தான் வேலைகளும் (இதில் பி.ஜே. விருப்பப்படி பாபாவுக்கு எதிராக சிறைவாசிகள் எழுதிய கடித காப்பிகளைக் காணலாம்)

https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.