Posts

Showing posts from 2008

சுவனத்தை நோக்கி மாநாட்டு தீர்மானங்கள்.

Image

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்

கோவை டிசம்பர்- 27 சிறையில் கைதிகளுக்கு பரோல் என்பது ஒரு மனிதவுரிமை. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. மதசார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைப்பது போல், கோவை சிறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். உதாரணம் : சுல்தான் மீரான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைபெற்று ஐந்து வருடங்களாக சிறையில் இருக்கும் பூரிகமல், ராஜேஷ் போன்ற இந்து பாசிஸ குற்றவாளிகளுக்கு வழிக்காவல் கூட இல்லாமல் மூன்று நாட்கள் வரை பரோல் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் 11 வருடங்களாக தன் குடும்பத்தாரை பிரிந்து சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தார்கள் மரணமடைந்தால் சில மணி நேரம் பலத்த போலீஸ் காவலுடன் பரோல் கொடுக்கப்படுகின்றது. இது முஸ்லிம் கைதிகளுக்கு அளிக்கும் ஒரு வெளிப்படையான அநீதியாகும். இது தொடர்பாக சம்சுதீன் என்ற சிறைவாசி 24.12.2008 அன்று முதல் எங்களுக்கும் சம நீதி வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தாருக்கு க

சுவனத்தை நோக்கி கண்காட்சி

Image
இதுவா கண்காட்சி இது கண்காட்சியே அல்ல இது கண்கொள்ளா காட்சி என பார்த்தவர்கள் சொல்லி மகிழ்கிறார்கள். பார்க் நேரம் காணாது பெண்கள் கூட்டம் அலை மோதியது.அதனால் வேக வேகமாக அனுப்பி விட்டார்கள் என்றார்கள் பெண்கள்.

press meet on suvanathai nokki manadu in tnly melapalym

Image

சப்பாணி முஹம்மது அலி

எனது சாச்சா(சிறிய தயாரின் கணவர்) சப்பாணி முஹம்மது அலி 12-12-08 வெள்ளி காலை 4 மணிக்கு இறந்து விட்டார்கள். தவ்ஹீது பிரச்சாரத்துக்கு ஒட்டு மொத்த ஊரும் எதிர்ப்பாக இருந்து கொலை மிரட்டல் செய்த காலம். இதோ ஜிந்த வாளுடன் வருகிறார். ரபீக் ஆட்களுடன் வந்து விட்டான் என்று பேசப்பட்ட 1986-1995 வரையிலான அந்த நாட்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தும் போதும் வால் போஸ்ட்டர்கள் ஒட்டும் போதும் இரவு 3 மணி வரை உறு துணய்யாக நின்றவர். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக ஆமீன்.

தமுமுக தொடங்கப்பட்ட வரலாறு

Assalamu Alaikkum, சிலர் தமுமுக சகோதரர் பி.ஜே அவர்களால் தொடங்கப் பட்ட இயக்கம் என்று எண்ணி பதில் அனுப்பியுள்ளார்கள். அதற்கு பதிலே இது. சகோதரர் ஷாஹுல் அவர்கள் தனது கடிதத்தில் தற்போதைய தமுமுக தலைவர்களால் தமுமுக தொடங்கப்படவில்லை என்று வரலாறு தெரியாமல் எழுதியுள்ளார். குணங்குடி ஹனிபா அவர்கள் பெயரளவில் வைத்திருந்த தமுமுகவை வெகுமக்கள் இயக்கமாக மாற்றுவது என்ற முடிவு ஆகஸ்ட் 1995ல் எடுக்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, துணைத் தலைவர் அப்துல் ஜலீல், தற்போது தமுமுகவின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் தமுமுகவின் முதல் பொருளாளர் சைய்யது நிசார் அஹ்மது, தமுமுகவின் முதல் பொதுச் செயலளார் பொறியாளர் அப்துஸ் ஸமது, இவர்களுடன் சகோதரர்.அலாவுத்தீன், சகோதரர்.பி. ஜெய்னுலாபுதீன், சகோதரர். குணங்குடி ஹனிபா ஆகியோர் சேர்ந்து தொடங்கியது தான் தமுமுக. தமுமுக வெளியிட்டுள்ள அமைப்பு நிர்ணயச் சட்டத்தில் இதனைப் பார்க்கலாம். சகோதரர். எஸ். எம். பாக்கர் கைதுச் செய்யப்பட்டுச் சிறையில் இருந்த போது இந்தக் கூட்டம் நடைபெற்றது. இருப்பினும்

சுவனத்தை நோக்கி

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நலம் நலம் பல விளைக. இத்துடன் I.P.P சார்பாக இன்ஷா அல்லாஹ் நடத்தபட இருக்கக் கூடிய சுவனத்தை நோக்கி மாபெரும் இஸ்லாமிய மாநாடு பற்றிய கோரிக்கை கடிதமும் முதல் பிரசுரமும் இணைத்துள்ளோம். மாநாட்டின் அவசியத்தை கருத்தில் கொண்டு எங்களது கோரிக்கையை பரிசிலிக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். தக்க பதிலை எதிர்பார்க்கின்றோம் வஸ்ஸலாம் -- js rifayee

இஸ்லாமிய மாநாடு

Image

பாபரி மஸ்ஜிதுக்காக ரயில் மறியல்

Image

ஆற்காட்டார் காதில் விழுமா? கரண்டு பிரச்சனை தீருமா?

Image

அரசியல் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம்.

மலேசிய நண்பன் » விரிவான செய்திகள் Print Article Wednesday, 17 September 2008 அரசியல் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம் தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி சிறப்பு பேட்டி (எம்.ஏ.சலீம் பாவா படம் : கி.குணசுந்தரி) கோலாலம்பூர், செப். 16- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்(தமுமுக) முன்னணி செயல் வீரர்களில் ஒருவராக செயல்பட்டதன் வ௞ தமிழக மக்களால் பரவலாக அறி யப்பட்ட வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரும் தமுமுகவின் மாநிலச் செயலாளரும் ஑மக்கள் உரிமைஒ வார இத௞ன் ஆசிரியருமான தமீமூன் அன் சாரி சமீபத்தில் நண்பன் பணிமனைக்கு நல்லெண்ண வருகை மேற்கொண்டார். அவருடன் நடத்திய சந்திப்பிலிருந்து... கே: தமுமுகவின் தற்போதைய செயல்பாடுகள் பற்றி... ப: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பணிகள் 13 ஆண்டுகளை கடந்து 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த காலத்தில் நாங் கள் நடத்திய உரிமை போராட்டங்கள் மற்றும் சமூக நல்லிணக்க செயல்பாடு களால் தென்னிந்தியா மக்கள் அனைவ ராலும் அறியப்பட்ட ஒரு வலுவான சக்தியாக எங்களை உருவாக்கி இருக்கிறது. தமிழக அரசாங்கத்தில் சிறுபான் மையினரான இஸ்லாமியர்களுக்க

திருந்துமா தினமலர்

Image

தென் காசி தென்காசி

Image

நாம் யார் ?

வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் ! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் ! நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் ! தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் ! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள் ! நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் ஏ. டி. எம். மெஷின்கள் ! பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் ! ஏ. சி. காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள் ! வளரும் பருவத்திலே வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத கல் நெஞ்சக்காரர்கள் ! தனிமையிலே உறங்கும் முன் தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோட

உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்.

திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப. சுரேஷ்குமார். அளவற்ற திறமைகளை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்கு செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம்! தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம

நாங்கள் அப்பாவிகள்: அப்துல் கபூர்-ஹீரா பேட்டி

நெல்லை: நெல்லையில் டைம் பாம் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஹீராவும், அப்துல் கபூரும் நாங்கள் அப்பாவிகள் என கூறியுள்ளனர். http://thatstamil.oneindia.in/news/2008/08/02/tn-we-are-innocent-says-heera-abdul-gafoor.html நெல்லையில் டைம்பாம் குண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல் கபூரும், ஹீராவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட் வளாகத்தில் போலீஸ் வாகனத்தில் காத்திருந்த அவர்கள் இருவரும் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசினர். அப்துல் கபூர் கூறுகையில், அப்பாவியான என் மீது டைம்பாம் உபகரணங்கள் தயாரித்ததாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். டைம் பாம் குண்டு, எலக்டாரனிக் சர்கியூட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சென்னை ஆலந்தூரில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் நிர்வாகியாக நான் உள்ளேன். இதை அந்த அமைப்பினர் தற்போது மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரே ஊர்க்காரர்கள் என்ற முறையில் எனக்கும், ஹீராவுக்கும் பழக்கம் உண்டு. சென்னையில் நான் பணியாற்றிய செருப்பு கடைக்கு அவர் அடிக்கடி வருவார். இரு அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில

சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

Image
கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு (23)உலகப்புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார். திருமதி ஷகீலா, " ஏ ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின் (Agency for Science, Technology and Research)இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளத்தைப் (Scholarship) கடும் போட்டிக்கிடையில் பெற்றார். உயிராய்வியல் மருத்துவத்தில் (Biomedical Sciences) டாக்டர் (PhD) பட்டம் பெறுவார். தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப் (Honours) பெற்ற ஷகீலா, "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. 'இளமையில் கல்' என்பதுதான் அவர் கணவரின் அறிவுரை. "குடும்ப வாழ்க்கைக்காக என் மனைவி தனது லட்சியத்தை விட்டுக்கொடுப்பதில் எ

"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை.

அன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ {, நேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் ---------- தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்? எதற்கு என்பதுதான் புரியவில்லை. " உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக" என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது. " ஐடிஎம்கே" அண்ணே! என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் ப

'குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!

60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் கழிப்பறை கட்டியதில் தான் முஸ்லிம்கள் முன்னேறி இருக்கிறார்கள். தலித்களைவிட கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் மிக, மிக பின் தங்கி உள்ளனர். இதற்கு காரணம் தகுதியற்ற தலைமைத்தனம் என்ற பிரண்ட்லைன் கூற்றை மறந்துவிட முடியாது. முஸ்லிம் லீக்கை குறை சொல்லி உரிமை, உணர்வு என வார்த்தைகளில் உஷ்ணத்தை ஏற்றி ஆர்ப்பாட்டம், போராட்டம், என போலி வேஷம் போட்டு ஆரவாரத்தோடு புறப்பட்ட த.மு.மு.க விழலுக்கு இறைத்த நீராய் 60 ஆண்டு முஸ்லிம் லீக்கின் ஏமாற்றும் வேலையை கச்சிதமாய் செய்து இருக்கிறது. ஆம் 2 சீட்டுக்கு திராவிட கட்சிகளிடம் அடகு வைக்கும் சாதனையை வெற்றிகரமாய் நிகழ்த்தி இருக்கிறது. கோவை 19 உயிர்கள் பலி, கப்ருஸ்தான் இடிப்பு, பள்ளி உடைப்பு, மீரட், மண்டைக்காடு, கான்பூர், குஜராத், என சமூகத்தின் அவலங்களை காட்சி பொருளாய் கடை விரித்து, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றவர்கள்.... இன்று அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் சூது வலையில் சிக்கி, உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அரசியல் இல்லை, தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர்பல்டி, இட ஒதுக்கீட்டு துரோகத்திற்கு பாராட்டு, அரசியல் ஹராம்

ஐ. உஸ்மான்கான் தகப்பனார் மரணம்.

நெல்லை மாவட்ட த.மு.மு.க. செயலாளர் ஐ. உஸ்மான்கான் (9443310150) தகப்பனார் காலமனார். அவரது ஜனாஸா இன்று (21.07.08 திங்கள்) அஸரில் டவுண் ஜாமிஆ பள்ளி கபரஸ்தானில் அடக்கம் செய்யப்படுகிறது. 9443310150

ஹைதர் அலி அவர்களின் கோவை நிகழ்ச்சி.

Image
த.மு.மு.க.மற்றும் ம.மு.க. பொதுச் செயலாளரும் வக்பு வாரிய தலைவருமான ஹைதர் அலி அவர்களின் கோவை நிகழ்ச்சி.

ஒரு முறை அல்ல பல முறை.

Image
பா.ம.க. துணைத் தலைவரும் திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ.யுமான கோ. இரவிராஜ் குணங்குடி ஹனீபாவின் கடிதத்திற்கு பதில் எழுதினார். எழுதியபடி நேரிலும் வந்து பார்த்து சென்றார். ஒரு முறை அல்ல பல முறை.

த.மு.மு.க. நிறுவனரும் பா.ம.க.வின் முதல் பொருளாளருமான குணங்குடி ஹனீபா.

Image
த.மு.மு.க. நிறுவனரும் பா.ம.க.வின் முதல் பொருளாளரும் ஜிஹாத் கமிட்டி தலைவருமான குணங்குடி ஹனீபா அவர்களுக்கு தமிழக அரசு அனுப்பிய கடிதம். த.மு.மு.க. நிறுவனரும் பா.ம.க.வின் முதல் பொருளாளரும் ஜிஹாத் கமிட்டி தலைவருமாக இருந்த அநியாயமாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் குணங்குடி ஹனீபா அவர்கள் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதம்.

முதல் தலைவருக்கு முதல் பொதுச் செயலாளர் எழுதிய ஆறுதல் கடிதம்.

Image
த.மு.மு.க.வின் முதல் பொதுச் செயலாளர் இன்ஜினியர் அப்துஸ்ஸமது அவர்கள் அநியாயமாக சிறையில் வாடும் த.மு.மு.க. வின் ஸ்தாபகர் முதல் தலைவர் குணங்குடி ஹனீபா அவர்களுக்கு எழுதிய கடிதம்.

சொன்னபடி பார்த்து விட்டும் சென்றார்.

Image
அநியாயமாக சிறையில் வாடும் குணங்குடி ஹனீபாவை பார்க்க பழ நெடுமாறன் வருவேன் என்றார். சொன்னபடி பார்த்து விட்டும் சென்றார்.

நெல்லை த.மு.மு.க வின் கல்வி உதவி.

Image
ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு நெல்லை நகர த.மு.மு.க.சார்பாக நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி. டவுண் முகம்மது அலி தெருவில் நகரத் தலைவர் ஆ.ளு.காதர் தலைமையில் நடைபெற்றது. அனைத்து சமுதாய மாணவ, மாணவியர் அதிக அளவில் பயன்பெற்றனர்.அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், துணைத் தலைவர் மைதீன் பாருக், துணைச் செயலாளர் அன்சர் ஆகியோர் உரையாற்றினர்.

குவைத்தில் தத்தளிக்கும் 9 தமிழர்கள் - மீட்கப்போராடும் த.மு.மு.க.

Image
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர். Source: http://tmmkgulf.blogspot.com/2008/06/9.html பிழைப்புத் தேடி குவைத்திற்குச் சென்ற தமிழர்கள் ஒன்பது பேர் முதலாளியின் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல் அவரிடமிருந்து எப்படியோ ரகசியமாகத் தப்பியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாய் சோறு தண்ணியின்றி நடு ரோட்டில் அலையும் அவர்களை இந்தியத் தூதரகமும் அலட்சியப்படுத்தி விடவே, நாடு திரும்ப வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட த.மு.மு.க.வினர் அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்கியிருப்பது ஆறுதலான விஷயம். கடலூர்மாவட்டம் சாத்தப்பாடியைச்சேர்ந்த ரவிச்சந்திரன்,உதயகுமார், முருகன்,கருணாகரன், அப்துல்கனி மற்றும் திருவாரூர் மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்த மணிவண்ண பாண்டியன்,ராஜாராமன், முருகானந்தம்,இளையராஜா ஆகியோர்தான் குவைத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த அப்பாவி ஜீவன்கள். நெல்லைப் பக்கம் தாழையூத்தைச் சேர்ந்தவர் பீர் மரைக்காயர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயலாளராய் இருந்து பலவிதமான பொதுநலப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் பிழைப்பிற்காக குவைத் சென்றார். அங்கு பஸ் டிரைவராய்

தாழையூத்து த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்.

Image

சகீனா

Image
sakeena marks in sslc exam 494 manilathil 2 nd place palay yai serntavar.paditha palli sarah tuker girls higer secondary(melnilai palli)school. usman khan

ஜூம்ஆ தொழுகையின் சிறப்புகளும் அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்களும்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ... ஜூம்ஆ தொழுகையின் சிறப்புகளும் அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்களும் ஜூம்ஆ நாளின் சிறப்புக்களையும், அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்கள், சிறப்புகள் மற்றும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை இந்த கட்டுரையில் காண்போம். இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு,ஆடு, கோழி,முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதை தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார்.ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில் ! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை. 'ஓருவர் ஜூம்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடையஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில்

மொபைல் போன்கள் - சிறு கேமராக்கள் பெண்கள் எச்சரிக்கை

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி. மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம். குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள

பொது மக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை.

Image
----This guy killed 22 children (boys and girls) and raped some of them aged between 7 yrs to 13 yrs in Iran . He was caught lashed 100 times and hanged.