Posts

Showing posts from October, 2007

தென்காசி பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?

நன்மையை சொல்லி தீமையை தடுங்கள் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. தென்காசிக்காக மீட்டிங். தென்காசியில் மீட்டிங். இது போல் அறிவிப்பு செய்து தென்காசிக்கு அப்பால் பல ஊர், பல மைல்கள் தாண்டி கூட்டம் போட்டு தென்காசி என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விளம்பரம் தேடும் கூட்டம் ஒரு புறம். உண்மையை எழுதினால் எதை எழுதினாலும் விமர்சனம் இன்றி எழுதுங்கள் என்ற அறிவுரை ஒரு புறம். விமர்சனம் இன்றி எழுதுங்கள் என்று எழுதும் உள்ளங்களின் எண்ணம் நல்ல எண்ணம். போல் தோன்றலாம். ஆனால் அது இஸ்லாம் காட்டிய வழி அல்ல. நன்மையை சொல்லுங்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை அல்ல. நன்மையை சொல்லி தீமையை தடுங்கள் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அபுஜஹ்லை விமர்சிக்கவில்லை. அவனது துரோகச் செயல்களை சமுதாயத்துக்கு அடையாளம் காட்டவில்லை என நிரூபித்து விட்டால். தன்னை அபுஜஹ்லை விட மோசமானவன் என்று சொன்னவனை நாம் விமர்சிப்பதையும் அவனது சமுதாய விரோத செயல்களையும் அடையாளம் காட்டாமல் விட்டு விடுவோம். மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டுமா? வேண்டாமா? சிந்தியுங்கள். கோத்ரா ரெயிலை எரித்து விட்டு அதைக் காரணம் காட்டி குஜராத்த

தென்காசி அப்பாவிகளை விடுதலை செய்

Image
தென்காசி அப்பாவிகளை விடுதலை செய்யக் கோரி கொட்டும் மழையில் கொந்தளித்த கூட்டம். அடாத மழையிலும் விடாது நடந்த த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்.

தவறில்லாத ஒன்று அல் குர்ஆன் மட்டுமே.

சுபுஹான மௌலிதில் தவறில்லை! பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது! என்று சகதுல்லாஹ் என்பவரிடமிருந்து மெயில் வந்துள்ளது. நடைப்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற த.த.ஜ. அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீன், மௌலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட மௌலிதைப்பற்றி எடுத்து வைக்காமல் பயந்து நடுங்கி, ஒடுங்கியிருந்தது ஏன்? த.த.ஜ. அணியின் சார்பாக தம்மோடு விவாதத்தில் பங்கேற்ற அரபி தெரியாதவர்களுக்கு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து, அவர்களால் பேசமுடியாமல் திணறி, கோபப்படுவதைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஏன்? மௌலிது பற்றிய விவாதத்தில் பேச முடியாமல் த.த.ஜ. அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீன் நாக்குக்கு பூட்டு போட்டவன் யார்? இப்படியெல்லாம் கேள்விகளை கேட்டு அவரது கொள்கையை நியாயப்படுத்த முயன்றுள்ளார். தூத்துக்குடியில த.த.ஜவினர் .பெருநாள் தொழுகை நடத்தினார்கள்? பி.ஜெ.யைப் பொறுத்த வரை அவர் ஒரு பொய்யர் ரகசிய கூலி என்பது உலகறிந்த உண்மை. தூத்துக்குடியில் த.த.ஜ. என்பவர்களுக்கு எந்த அட்ரஸும் கிடையாது. அட்ரஸ் இல்லாத விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் உள்ள அவர்கள் பெருநாள் தொழுகையை காயல்பட்டிணத்தில் தொழ

வாரியம் வாங்கியதால் வீரியம் இழந்தார்களா?

Image
சமூக விரோதிகளின் சமுதாய விரோதச் செயல்களால் தென்காசியில் அடிக்கடி மனித நேயம் பாதிப்புகளுக்குள்ளாகிறது. குறிப்பாக முஸ்லிம்கள் ஒவ்வொரு முறையும் பாதிப்புகளுக்குள்ளாகி வருகிறார்கள். இக்கட்டான இந்த நேரங்களில் தென்காசி என்ற இந்த ஊரை நோக்கி தலை வைத்து கூட படுக்க பயந்த டவுசர் கட்சியினர் பத்திரிக்கையில் மட்டும் பேட்டி கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டிருந்ததை அறிவீர்கள். அமைதி திரும்பிய பின் தென்காசி ஊருக்குள் நுழைந்த டவுசர் கட்சியினர் வாரியம் வாங்கியதால் வீரியம் இழந்தார்கள் என வசனம் பேசி சீன் போட்டவார்கள். முழுமையாக அமைதி ஏற்பட்டு ஒரு மாதம் ஆன பின் சுற்றுலாவுக்காக தென்காசி வழியாக குற்றாலம் சென்று குளித்து விட்டு வந்தவர்கள் இருக்கிறார்கள். குளித்து விட்டு தென்காசி வழியாக வந்தவர்கள் தாங்கள் மட்டுமே தென்காசி சென்று வந்ததாக டி.வி.க்களில் படம் காட்டியதை பார்த்து இருக்கிறீர்கள். பச்சை துரோகிகளான சமுதாய அமைப்பினர்(?) தென்காசியில் உள்ள பழைமை வாய்ந்த பள்ளிவாசலை புதுப்பித்து கட்ட விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் பண்டார பரதேசிகளை இப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்து கவுரவித்து பத்திரிக்கைச் செய்தியாக்கி பரவசமடைந

முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்கினார்களா?

ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயர் திரு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு info@dinmani.com,  editor@dinmani.com மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. முதற்கண் உங்கள் மீது ஏக இறைவன் சாந்தியும் சமாதானமும் உண்டாகச் செய்வானாக என்ற வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  14.10.2007 அரசியல் அரங்கம் எனும் தலைப்பில் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன் என்பவர் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி என்ற பெயரில் ஒரு பக்க விளம்பரம் இடம் பெற்றிருந்தது. அவரைப் பற்றி அவர் எப்படியெல்லாம் விளம்பரம் செய்து கொள்ள விரும்பினாரோ அந்த விளம்பர வாசகங்களை அப்படியே அவரது பேட்டி போல் வெளியிட்டிருந்தார்கள்.  தனக்கு விளம்பரம் தேடுவதற்காக, தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக, அவர் விரும்பியவாறு விளம்பரம் செய்ய அவருக்கு உண்டு . அதற்காக "முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள்" என்று ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால்தான் இந்த கண்டன மடல். அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து

24 மணி நேரத்துக்குள் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை.

Image
12.10.2007 வெள்ளி அன்று நோன்புப் பெருநாள் தொழுகை நடந்த நாடுகளும் இந்திய நேரங்களும். நாம் உம்மி சமுதாயமாவோம். விண் கலையை அறியாதவர்களாகவும் எழுதத் தெரியாதவர்களாகவும் உள்ளோம் என்பதால் பிறையை பார்த்து நோன்பு வையுங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் கூறியுள்ளார்கள்.   விண் கலையை அறிந்துள்ள காலத்தில் வாழும் நாம் கணித்து செயல்பட இந்த ஹதீஸும் ஆதாரமாக உள்ளது. விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ள இந்தக் காலத்திலும் பிறையை பார்த்தே நோன்பு வைப்போம் பிறையை பார்த்தே நோன்பை விடுவோம் என்பவர்கள் சரியான முறையில் பிறை பார்க்கத் தெரியாதவர்களாகவே உள்ளனர். சரியான முறையில் பிறையை பார்த்து வந்திருந்தால் 12.10.2007 வெள்ளி அன்றுதான் நோன்புப் பெருநாளை கொண்டாடி இருப்பார்கள். அறியாதவர்களாகவே முஸ்லிம்களை ஆக்கி வைத்திருக்கிறார்கள். சூரியன் தோன்றுவதை பார்க்க வேண்டுமானால் காலையில் 6 மணிக்கு முன் கிழக்கு நோக்கி நின்று பார்க்க வேண்டும். யாராவது மாலையில் 6 மணிக்கு மேல் மேற்கு நோக்கி நின்று கொண்டு சூரியன் தோன்றுவதை பார்க்கிறோம் என்று சொன்னால் அவர்களை அறியாதவர்கள

பள்ளிவாசலில் ஒலி பெருக்கியை உபயோகிக்கலாமா?

Image
மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்டவர்கள் நிலைப்பாடு எப்படி இருந்தது. தலைப்பைப் பார்த்ததும். பலருக்கு தலை சுற்றலாம். இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு கேள்வியா என்று ஆச்சரியப்படலாம். இது இன்றைய கேள்வி அல்ல. புதிதாக ஒலி பெருக்கிகள் அறிமுகமான நேரத்தில் ஆலீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த கேள்வி இது.  அதை ஏன் இப்பொழுது நினைவுக்கு கொண்டு வருகிறோம் என்பதை இந்த ஆக்கத்தின் இறுதியில் புரிவீர்கள். அறிவியல் முன்னேற்றத்தால் கண்டு பிடிக்கப்பட்ட ஒவ்வொரு நவீன கண்டு பிடிப்புகளும் மக்கள் பயனுக்கு வரும்போது மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்டவர்கள் நிலைப்பாடு எப்படி இருந்தது என்பதை ஓரளவுக்கு தொகுத்து தருவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். அறிவுள்ள வீரமுள்ள பள்ளி நிர்வாகிகள்தான். புதிதாக ஒலி பெருக்கிகள் அறிமுகமான நேரத்தில் மக்களால் ஆலிம்கள் என நம்பப்பட்ட பி.ஜெ. போன்று மார்க்க அறிஞர்கள் எனப்பட்டோர் இது ஷய்த்தானின் கருவி. அதனால் நாங்கள் மைக்கில் பேச மாட்டோம். அல்லாஹ்வுடைய பள்ளிகளில் ஷய்த்தானின் கருவிகளை நுழைய விட மாட்டோம் என்றார்கள். பி.ஜெ. போன்ற ஆலிம்களின் எதிர்ப்புகளை மீறித்தான் அன்று ஒரு சில பள்ளிகளில

ஷய்த்தான்களை ஒற்றுமைபடுத்த முடியாது.

Image
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே உங்களின் இந்த ஆரோக்கியமான ஆராய்ச்சிகள் நன்றாக இருக்கின்றது. இருப்பினும் இதில் காட்டுகின்ற அக்கறையை நீங்கள் சமாதானத்திற்கு காட்டியிருந்தால் உங்களின் மதிப்பு மேலும் கூடும் எனக்கு தெரிந்த நண்பர்கள் வரிசையில் பசுலுள் இலாஹியா அவர் நோட்டீஸ் மன்னனாச்சே என்றுதான் அனைவரும் குறிப்பிடுகின்றார்கள். ஆகவே இந்த ரமாளினிலிருந்தாவது இதனை எல்லாம் விட்டுவிட்டு சமாதானத்திற்காக முயற்சி எடுத்தால் மேலப்பாளைய மக்களின் ஒற்றுமைக்கு பாடுபட்ட நபர்களுள் நீங்களும் ஒருவராவீர் நன்றி -                          ரசிகவ்   rasikow @gmail.com பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.  அன்புள்ள ரசிகவ் ஞானியார் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிந்தவர்களை ஒற்றுமைபடுத்தி விடலாம். அது எவ்வளவு பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும் பேசி தீர்த்து இணைத்து ஒன்றுபடுத்தி விட முடியும்.  பதவி, பிழைப்பு போன்றவற்றை குறிக்கோளாகக் கொண்டு, சுய நலத்திற்காக பிரச்சனைகள் ஏற்பட்டது போல் காட்டிக் கொண்டு பிரிவினைகளை உண்டு பண்ணி பிரிந்த ஷய்த்தான்களை ஒற்றுமைபடுத்த முடியாது.