Posts

Showing posts from January, 2016

துரு பிடித்த வாள்களையா துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வைத்து இருந்தார்கள்?

Image
நிர்ப்பந்தத்தில் நடந்த அந்தப் பத்ருப் போர் வேண்டும் என்று அன்சாரிகளும் விரும்பவில்லை . முஹாஜிர்களும் விரும்பவில்லை . ஏன் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது ( ஸல் ) அவர்கள் கூட அந்த ஏற்பாட்டில் , அந்த எண்ணத்தில் போகவில்லை . போர் வராமல் தடுப்பதற்காக எப்படி எட்டு முயற்சிகளை செய்தார்களோ அது போல் . பத்தோடு பதினொன்றாக அத்தோடு ஒன்றாக என்பார்களே அது போல் . எட்டு முயற்சிகளுக்குப் பிறகு ஒன்பதாவதாக சென்ற அந்த போர் தடுப்பு முயற்சி போராக ஆகி விட்டது. அந்த வரலாறை நாம் தெளிவாக நினைவு கொள்ள வேண்டும் . அதற்கு முன்னால் மதீனாவிலே ரசூல் ( ஸல் ) அவர்கள் ஆட்சியாளராக இருந்த அந்த பகுதியிலே வாழ்ந்த யூதர்களோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள் . இதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . இறைத்துாதர் ( ஸல் ) அவர்கள் காலத்தில் நடந்த போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே என்பதை இந்த பின்னணிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம் . தற்காப்புக்காக செய்த செயல்களை போர் செய்தார்கள் என்று சொல்ல முடியாது. எதிர்த்துப் போராடினார்கள். அதாவது போராட்டங்கள் செய்தார்கள் என்றே சொல்ல முடியும். ரசூல் ( ஸல் ) அவர்கள் தனது தோழர்கள

ஐந்து நேரத் தொழுகைக்கு அல் குர்ஆனில் ஆதாரம் உண்டா?

மூன்று நேர தொழுகைகளுக்குத்தான் குர்ஆனில் ஆதாரம் உள்ளது  என்று  அஹ்லே   குர்ஆன்கள்    குழப்பி விட்டு போய் விட்டதாக சொன்னீர்கள். நீங்களும் உங்கள் சகலையும் தேடிப் பார்த்த வரை 3 வேளை தொழுகைகளுக்குத்தான் குர்ஆனில் ஆதாரம் கிடைக்கிறது என்றீர்கள். நாம் அரேபிய   நாட்டில் இருப்பதால் இதை எளிதில் புரிய முடியும் . ஒருவர் என்பதை தமிழில் ஒரு ஆள் என்போம் . இருவரோ அதற்கு மேலோ சொல்வதாக இருந்தால் ஆட்கள் என்போம் . அரபியில் ஒரு ஆள் என்பதை நபர் என்போம் . இரண்டு ஆட்கள் என்பதை நபரீன் அல்லது நபரைன் என்போம் . மூன்று ஆட்களோ அதற்கு அதிகமானவர்களோ வந்தால் நபராத் என்போம் . திர்ஹம் (ஒரு திர்ஹம்) திர்ஹமைன் (2திர்ஹங்கள்) தலாத திராஹிம் (3 திர்ஹங்கள்) இதில் இருந்து என்ன புரிகிறோம் . ஒருமை ( சிங்குளர்) பன்மை (புளுரல்) ஆக இரண்டு சொல்லாடல்கள் தான் நாம் அறிந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உண்டு . அரபியில் ஒருமை, இருமை, பன்மை என்ற மூன்று சொற்கள் உள்ளன. அரபகத்தில் உள்ள நாம் அதை பயன்படுத்துகிறோம். நாம் தெரிந்த மற்ற மொழிகளிலிருந்து உள்ள இந்த வித்தி

ஜியாரத்து என்பது போராட்டமா?

Image
நாம் முதலில் அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும் . தெரியாத மொழியில் வார்த்தைகளை பயன்படுத்துவது மிகப் பெரிய குறைபாடு .  எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் . அந்த மொழியிலே சொல்லக் கூடிய வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன ? என்பது நமக்கு விளங்க வேண்டும். அது நமக்கு விளங்கியது என்று சொன்னால் . அதன் மூலம் எந்த தவறுகளும் தீமைகளும் ஏற்படாது . விளங்காமல் இருந்த ஒரு சில வார்த்தைகளினால் ஏற்பட்ட விபரீதங்களையும் நாம் சிந்தித்து விளங்க கடமைப்பட்டுள்ளோம் . அந்த கட்டாய காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது ஜியாரத் என்பது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு எதிராக செய்யப்படும் போராட்டம் போல் ஆக்கி விட்டார்கள். ஒரு காலத்தில் ஜியாரத்து என்று சொல்லுவார்கள் . கேள்விப் பட்டிருக்கிறோம் . இது அரபி வார்த்தை . தமிழர்களாகிய நாம் இதை எங்கே கேள்வி படுவோம் . ஜியாரத் என்று சொன்னால் கபுரை ஜியாரத் செய்தல் . இதைத் தவிர வேறு எந்த ஜியாரத்தையும் கேள்வி பட்டிருக்க மாட்டோம் . அது ஒரு காலம் . இப்பொழுது அரபு நாடுகளிலிருந்து விஸாக்கள் வருகின்றன . எம