Posts

Showing posts from May, 2007

ஈமானுடையவர்களே இவனிடத்தில் உஷாராக இருங்கள்.

Image
பி.ஜே. தன்னை பெரிய தமிழ் பண்டிதர்போல் காட்டிக் கொண்டு தனது இமேஜை கூட்டிக் கொள்ள குர்ஆனையும் விட்டு வைக்கவில்லை. அவரது தர்ஜுமாவின் 4ஆவது வெளியீட்டில் 1211ஆம் பக்கம் (முதல் வெளியீட்டின்) 1341 ஆம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள். அரபு மொழியில் "யார் உங்களை அடித்தார்களோ அவர்களை நீங்களும் அடியுங்கள்" என்பன போன்ற சொற்றொடர்கள் சர்வ சாதாரணமாகவே பயன்படுத்தப்படும். அதுதான் அம்மொழியில் நல்ல நடைக்கு அடையாளமாகவும் இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் மிக மிக அரிதாகவே இது போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவோம். எனவே "உங்களை அடித்தவர்களை நீங்களும் அடியுங்கள்" என்று இதைத் தமிழ்ப்படுத்துவது தான் தமிழுக்கு நெருக்கமான நடையாகும். "யார் உங்களை ஏமாற்றினார்களோ அவர்கள்" என்பதை உங்களை ஏமாற்றியவர்கள் என்று நாம் தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று எழுதியுள்ளார். குர்ஆனில் உள்ள வசனத்தை குறிப்பிட்டுக் காட்டி அதை இப்படி எளிதாக்கியுள்ளேன் என்று எழுதவில்லை. குர்ஆனில் இல்லாத ஒரு வசனத்தை இவராகவே கற்பனை செய்துகொண்டு அதை இப்படி எழுதினால் (உம்மா வழியில்) தமிழுக்கு நெருக்கம். (வாப்பா வழியில்
முபாஹலாவுக்கு கடலூர் மாவட்ட முன்னால் த.தஜ. நிர்வாகிகள் தயார்! பி.ஜெ. தயாரா? உண்மைக்கு புறம்பாக பொய் பித்தலாட்டங்களை பேசி, எழுதி வரும் பி.ஜெ. யுடன் கீழ்கண்ட விசயங்களுக்கு முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் த.த.ஜ. நிர்வாகிகள் தயார்! பி.ஜெ. தயாரா? 1. பாக்கரின் ஒழுக்ககேடு விசயத்தில் பி.ஜெ. லால்பேட்டையில் சொன்ன செய்திகளில் உண்மையில் பாக்கர் ஒழுக்கக்கேடானவரா? அல்லது பி.ஜெ. பொய்யரா? முபாஹலாவுக்கு கடலூர் மாவட்ட முன்னால் த.தஜ. நிர்வாகிகள் தயார்! பி.ஜெ. தயாரா? 2. கடலூர் மாவட்ட முன்னால் த.தஜ. நிர்வாகிகள் பாக்கர் குறித்து விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்தில் "பதில் தரும் வர" ஜுலை 4 உட்பட அனைத்து செயல்பாட்டையும் நிறுத்தி வைப்பதாக எழுதியது மட்டும் தான் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உண்மையான காரணமா? இதற்கும் பி.ஜெ. முபஹலாவுக்கு தயாரா? 3.ஜூன் 3 கடலூரில் த.தஜ. வால் கூட்டப்படும் சமூக விழிப்புணர்வு மாநாடு அல்லாஹ்விற்காக வேண்டி உண்மையில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவா? அல்லது கடலூரில் முன்னால் மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக பலத்தை காட்டவா? இதற்கும் பி.ஜெ. முபஹலா செய்ய

ஜாலிலோ ஜிம்கானா ஜோலி ஹம்கானா

Image
மாண்புமிகு மத்திய அமைச்சர் அனுப்பிய வாழ்த்து

மஞ்சள் மகிமை

Image
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி நடை பெற்ற ஷரீஅத் சட்டப்படி மாப்பிள்ளையிடம் பெண் வரதட்சணை வாங்கிடும்புரட்சித் திருமணம். ஹிஜிரி1428 ரபிய்யுல் ஆகிர் பிறை 18 (06-05-2007) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 102. செய்குல் அக்பர் தெரு சுல்தான் அப்துல்லாஹ், தண்டன் ஹமீது பாத்திமா ஆகியவர்களின் மகனும் கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி மைத்துனருமாகிய S.A.காதர் முஹைதீன் மணாளர் J.A.Q.H. மேலப்பாளையம் முன்னாள் செயலாளர் தண்டன் ஷேக் மன்சூர், சிமிட்டி சுலைஹா ஆகியவர்களின் மகள் T.S. சுமையா மணாளியை ரூபாய் 10,000 பெறுமான தங்க நகையை மஹராக வழங்கி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு தலைமையேற்க இருந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளருமான மாண்புமிகு S. ஹைதர் அலி ஸாஹிப் அவர்கள் மதுரையிலிருந்து வந்து சேர கால தாமதமானதால் முன்னிலை வகிக்க இருந்த சுற்றுப்புறச் சூழல், விளையாட்டுத் துறை, மற்றும் வக்பு வாரிய அமைச்சர்மாண்புமிகு T.P.M. மைதீன் கான் அவர்கள் தலைமை வகித்தார்கள். இத்திருமணத்தின் சிறப்பம்சங்கள் என்