Posts

Showing posts from May, 2016

நபி(ஸல்) கோட்டை கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருந்தார்களா?

Image
மதீனாவில் ஸஹாபிகளில் யாராவது ஒருவர் மாறி மாறி வந்து இரவில் கண் விழித்து நபி ( ஸல் ) அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்கள் . பல இரவுகள் இவ்வாறு கழிந்து கொண்டிருந்தது. இப்படி இருக்கும்பொழுது ஒரு இரவில் அல்லாஹ்விடமிருந்து வஹி வந்தது . “.. அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.. ”( திரு குர்ஆன்   5;67)   மனிதர்களால் அல்லாஹ்வின் துாதரை கொலை செய்துவிட முடியாதவாறு மனிதர்களிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற உத்தரவாதத்தை அல்லாஹ் தந்து விட்டான் . இந்த வசனம் ஒரு முன்னறிவிப்புமாகும். கடைசி வரை நபி(ஸல்) அவர்கள் கொலை செய்யப்படவில்லை. அல்லாஹ்வின் விதிப்படியிலான அஜல் வந்துதான் மரணம் அடைந்தார்கள். முன்னறிவிப்பும் நிறைவேறியது. இந்த வசனம் வந்த உடன் இறைவனின் துாதர் அல்லாஹ் நமக்கு பாதுகாப்பு அளித்து விட்டான். இனி மனிதர்களுடைய பாதுகாப்பு தேவை இல்லை என்று முடிவு எடுத்தார்கள். அதன் பிறகு அல்லாஹ்வின் துாதருடைய செயல்பாடுகள் அனைத்தும் திறந்த புத்தகமாக இருந்தது. யாருடைய பாதுகாப்பும் கிடையாது. எங்கு போனாலும் பாதுகாப்பு என்பது கிடையாது. துணைக்கு ஆட்கள் இன்றி தனியாகவ

இஸ்லாமிய பெயருடைய எம்.எல்.ஏ.க்கள் அல்லாஹ்வின் பெயரால் பதவி ஏற்காதது ஏன்?

Image
15ஆவது சட்ட மன்றம் கூடியது . அ . தி . மு . க . வினர் அனைவரும் ஆத்திகர்கள் . கடவுள் உண்டு என்ற கொள்கை உடையவர்கள் . தி . மு . க . வினர் அனைவரும் நாத்திகர்கள் . கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர்கள் . இதை அவர்களது பதவி ஏற்பு தெளிவுபடுத்தியது . அ . தி . மு . க . வைச் சார்ந்த எம் . எல் . ஏ . க்கள் அனைவரும் கடவுளின் பெயரால் என்றும் , தி . மு . க . வைச் சார்ந்த எம் . எல் . ஏ . க்கள் அனைவரும் உளமாற என்றும் பதவி ஏற்றார்கள் . இது இந்த வாரம் தினப் பத்திரிக்கைகளில் வந்த செய்தி . அல்லாஹ்வை மறந்த தி . மு . க முஸ்லிம்கள் என்ற தலைப்பில் 1996 ஆம் ஆண்டு ஒரு வார பத்திரிக்கையில் செய்தி வந்தது . அது மேலப்பாளையத்து கவுன்சிலர்களை குறி வைத்து எழுதப்பட்ட விமர்சனம் ஆகும் . அதில், சங்கரலிங்கத்துக்கு இருக்கும் சமய உணர்வு கூட இந்த முஸ்லிம்களுக்கு இல்லை என்றும் எழுதி இருந்தார்கள் . அந்த வார இதழ் ஆசிரியர் அதில் மார்க்கத்தை எழுத மாட்டேன் . இது மார்க்க பத்திரிக்கை அல்ல என்று பிரகடனப்படுத்தி இருந்த காலம் அது . மார்க்க ரீதியாக எ