Posts

Showing posts from March, 2005

முழுப் பூசணியை சோற்றில் மறைத்தவர்கள்.

நிச்சயமாக உமது இறைவனின் பிடி கடுமையானது. (அல்குர்ஆன் 85:12) தலைப்பைப் பார்த்ததும் முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முடியாது என்பதுதானே பழமொழி. அதற்கு மாற்றமாக முழுப் பூசணியை சோற்றில் மறைத்தவர்கள் என்று தலைப்பு உள்ளதே. யார் மறைத்திருப்பார்கள்! என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அப்படித்தானே.  ஆச்சரியப்படுவதால் நீங்கள் நவீன தக்லீதி இல்லை என்பது தெரிகிறது. நவீன தக்லீதியாக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டீர்கள். இலங்கை சென்ற பி.ஜே. கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட செய்திதான் சோற்றில் மறைத்த பூசணியாக உள்ளது. அது என்ன என்பதை இறுதியில் பார்ப்போம்.  அதன் துணைச் செய்திகளை முதலில் பார்ப்போம். பி.ஜே. கொடி அறிவித்ததும் தவ்ஹீதை சொல்ல கொடி எதற்கு என்று பொங்கி எழுந்த மாவீரர்களில் ஒருவர் எம். எஸ். சுலைமான் என்பவர். விடுவாரா முபாஹலா பூச்சாண்டி ஒரே ஒரு மிரட்டல்தான் விட்டார்.  அப்படியே ஆடிப் போய் விட்டார் சுலைமான்;. பாவம் பிழைப்பு போய் விடுமே. பிறகு என்ன சரண் அடைவதுதான் கதி என சரண் அடைந்து விட்டார். அண்ணன் கொடுத்த விளக்கத்தில் தெளிவு(?) அடைந்து கொடி தேவை என புரிந்து விட்டேன் என்று கூறி விட்டார்.

இலங்கை பத்திரிக்கை நிரூபிக்கிறது.

Image
லண்டன் பி. பி சியில் வெளியான செய்தி. செய்தியரங்கத்தில். இன்றைய தமிழோசை தமிழக முஸ்லிம் பிரமுகர் ஒருவர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம். இலங்கைக்கு விஜயம் செய்த முஸ்லிம் பிரமுகர் ஒருவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இலங்கையில் தங்கியிருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிலொருவரான பி.ஜெயினுலாப்தீன் அவர்கள் தமது சொந்த நாடான இந்தியாவிற்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டமைக்க கண்டனம் தெரிவித்தே இன்று மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச முஸ்லிம்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கை சென்றிருந்த இவர் முஸ்லிம்கள் வாழும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இஸ்லாமிய எழுச்சி மாகாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை திருக்குர்-ஆனும் நபிகளின் போதனையும் தான் என்றும்,, இறைநேசர்களின் வணக்கத் தலங்களான கபுறு வணக்கம் ப

இலங்கை சென்ற பி.ஜே. கைது செய்யப்பட்டார்.

விஸாவை ரத்து செய்து உடனடியாக நாடு கடத்தியது இலங்கை அரசு. தீவிரவாதி பி.ஜே. துபை வந்தபோது அவரை துபை உளவுத் துறை 24 மணி நேரமும் கண்காணித்தது. அவர் கண்காணிக்கப்பட்டதை உணர்ந்த பி.ஜே. தான் கண்காணிக்கப்படுவதை அவரைப் பார்க்கச் சென்றவர்களிடம் அவரே கூறினார். அந்த தீவிரவாதி பி.ஜே. இலங்கை சென்றதை அனைவரும் அறிவீர்கள். அவரை இலங்கைக்குள் நுழைய விடக் கூடாது என்ற கமாண்ட் கம்யூட்டரில் வரவே இலங்கை ஏர்போர்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டார். அரபு நாட்டில் டிரான்ஸ் போர்ட் வைத்துள்ள செல்வந்தரின் தம்பி இலங்கை அமைச்சர் அலவி முஹம்மது அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவரது பொறுப்பில் இலங்கையினுள் அனுமதிக்கப்பட்டார். பொதுக் கூட்டங்கள் தவிர யாருடனும் ரகசிய சந்திப்புகள் நடந்து விடாத வண்ணம் இலங்கை அரசும் முழுமையாக கண்காணித்து வந்தது. துபையில் கண்காணிக்கப்பட்டது போல் இலங்கையிலும் கண்காணிக்கப்பட்டார். எனவே அவரது திட்டம் நிறைவேறவில்லை. அவர் விரும்பியவர்களை சந்திக்க முடிந்ததில்லை. எனவே பி.ஜே. மிகவும் டென்சனாகி விட்டார். அதன் பிரதிபலிப்பு அவரது மேடைப் பேச்சு நாலாந்தர நடையில் ஆகிவிட்டது. தப்லீக் ஜமாஅத்தினரை அவர் சாடிப் பேசிய ப

எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது.

பி.ஜே. அவர்கள் துபை வந்திருந்தபோது பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட எந்த நிகழ்ச்சிகளையும் அவரது அமைப்பின் பொறுப்பாளர்களால் நடத்த முடிந்ததில்லை. அந்த நிலையில் உயர் அதிகாரிகளையும் அமைச்சகத்தையும் அணுகியவர் எந்த அமைப்பிலும் சேராத நடுநிலையாளரான ஒருவர். அந்த நடுநிலையாளர்தான் எம்மை அணுகி, பி.ஜே. தரப்புக்கும் எமக்கும் உள்ள விவகாரங்களுக்கும் பி.ஜே. தரப்பினர்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கும் பெயர் குறிப்பிட்டு அவர்களது நடையில் பதில் எழுதி வந்ததை நிறுத்தி விடுமாறு கேட்டுக் கொண்டார். பி.ஜே. தரப்பிலிருந்து எமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை கேட்டுத் தருவேன் என்றும் உறுதி அளித்தார். பி.ஜே. தரப்பிலிருந்து யாராலும் நியாயத்தை பெற்றுத் தர முடியாது. பி.ஜே. தரப்பிலிருந்து என்றைக்கும் நியாயம் கிடைக்காது என்பது அனுபவம். இருந்தாலும் அல்லாஹ்வுக்காக என்று அவர் கேட்டுக் கொண்டதால் அந்த விமர்சனங்களை அப்படியே நிறுத்தினோம். ஆனால் பி.ஜே. தரப்பின் வரம்பு மீறல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இப்பொழுதும் ஷம்சுல்லுஹா என்பவர் ஜும்ஆ குத்பாவில் மன நோயாளி என விமர்சித்துள்ளார். இது கொள்கை அடிப்படையிலானது. பி.ஜே.யை வைத்து கூட்டம் நட

பி.ஜே. அவர்களே உங்களது முபாஹலா அழைப்பை ஏற்கிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. டி.என்.டி.ஜே. துணைத் தலைவர் மவுலவி பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கட்கு, இளையான்குடி டி.கே. முஹம்மது மைதீன், மேலப்பாளையம் கே.ஏ. முஹம்மது பழுலுல் இலாஹி ஆகியவர்கள் எழுதும் முபாஹலா ஏற்புக் கடிதம். நீங்கள் விடுத்துள்ள முபாஹலா அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உங்களுடனும் உங்கள் அமைப்பினருடனும் கீழ் காணும் விஷயங்கள் உட்பட உங்கள் தரப்பு மீது நாங்கள் கூறியுள்ள அந்நஜாத் முதல் இன்று வரையுள்ள அனைத்து விஷயங்களுக்கும் நாங்கள் முபாஹலா பண்ணத் தயாராக உள்ளோம். 1. நீங்கள் அந்நஜாத்திலிருந்து விலக காரணம் அபுஅப்துல்லாஹ் மேசாசடி செய்து வாங்கிய நிலம் என்று கூறினீர்கள். அது எங்கு உள்ளது என்பதற்குரிய ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அதை நாங்கள் ஏற்க மறுத்தால் அதற்காக நாம் முபாஹலா பண்ண வேண்டும். 2. கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று கூறியதை நீங்கள் சொன்ன ஆடியோ சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். அல்லது நீங்கள் சொன்ன சாட்சிகளுடன் வந்து நாம் அனைவரும் முபாஹலா பண்ண வேண்டும். 3. நீங்கள் ஜாக்கிலிருந்து விலகியதற்கு நீங்களே கூறியுள்ள உண்மைக்

இளையான்குடி முஹம்மது மைதீன் அவர்களுக்கு

முபாஹலா முபாஹலா என பூச்சாண்டி காட்டித் திரியும் முபாஹலா பூச்சாண்டி பி.ஜே.யும் அவரது கூட்டமும் பழுலுல் இலாஹி என்ற எனது பெயரைக் கேட்டாலே தலை தெரிக்க ஓடி ஒளிந்து விடுவார்கள். அன்புள்ள இளையான்குடி முஹம்மது மைதீன் அவர்களுக்கு துபையில் பணிபுரியும் மேலப்பாளையம் காஅ.முஹம்மது பழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும். தொண்டியைச் சார்ந்த பி.ஜே. என்றழைக்கப்படும் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவருடனும் த.த.ஜ.வினருடனும் முபாஹலா பண்ணத் தயாரா? என்று கேட்டீர்கள். பி.ஜே.யுடனும் அவர் புதிதாக ஆரம்பித்துள்ள த.த.ஜ. என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பாளர்கள் மற்றுமுள்ளவர்ளுடனும் முபாஹலா பண்ணத் தயாராக உள்ளவன் நான் எனவே தயார் என்றேன். போனில் தயார் என்று சொல்வதால் மட்டும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படாது. எனவேதான் எனது வாக்கை உறுதிப்படுத்தி உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காக துபையில் உள்ள உங்கள் ஊர் இளையான்குடியைச் சார்ந்த சகோதரரையும் உங்களுடன் பேச வைத்தேன். அவர் பேசியது உங்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படத்தான். எனவே உங்களுடன் பேசிய உங்களூர் சகோதரரின் பெயரை நீங்கள் வெளியிட வேண்டாம். முபாஹலா முபாஹலா என பூச்சாண்டி காட்டித் திரியும