Posts

Showing posts from 2013

K.M. ஜெய்னப் K. இஸ்மாயில்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் . அவனே    தண்ணீரால் மனிதனைப் படைத்தான் . அவனுக்கு   இரத்த சம்பந்தமான உறவுகளையும் , திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான் . திருக்குர்ஆன் 25:54 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் , அவனது தூதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் வழிமுறைப்படி நடை பெற இருக்கும் கா . அ . முஹம்மது பஸ்லுல் இலாஹி இல்லத் திருமணம் . காலம் :- ஹிஜிரி 1435 ரபிய்யுல் அவ்வல் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை   5-01-2014 காலை 10 மணி . இடம் :- இலாஹி இல்லம் , சமாயினா   ஷேக் முஹம்மது மூப்பன் தெரு , மேலப்பாளையம் . மணமகள் :- எங்களது சம்பந்தி காயங்கட்டி அஹமது அலி - சப்பாணி செய்னபு ஆகியவர்களின் பேத்தியும் எங்களது பேத்தியுமான , கா . அ . முஹம்மது பஸ்லுல் இலாஹி - சுல்தான் பல்கீஸ் ஆகியவர்களின் மகள் . K.M. ஜெய்னப் மணமகன் :- நாரங்கி நாகூர் மீரான் , நாரங்கி அபுபக்கர் ஆகியோர் பேரன்   N.A. காஜா பஸீர்   அவர்களின் மகன் K. இஸ்மாயில் மணமகன் மணமகளுக்கு வழங்கிடும் மணக் கொடை ரூபாய் 35,000 ---

நெல்லை தினகரனில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான நோன்பு கட்டுரை.

Image
அந்த நாளில் வெளியானதை இந்த நாளில் வெளியிட்டுள்ளோம்.

கபுராளிகள் தினமான பராஅத் இரவு வாழ்த்துக்கள்?

Image
அன்னையர் தினம், மங்கையர் தினம்,முதியோர் தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை  உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். பராஅத் இரவு வாழ்த்துக்கள்  http://arusuvai.com/tamil/node/19591 என்று வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள். அதை சிறப்பித்து பாவம் போக்கும் பரா அத் இரவு (Paavam Pokkum Baraath Iravu) என்ற தலைப்பில் பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரங்களாகைக் காட்டி தனது வாய்த் திறமைகளையும், அபத்தமான வாதங்களையும், விளக்கங்களையும் கொண்டு உரை நிகழ்த்தியுள்ள மௌலவி ஷெய்க் அப்த

திருமணத்தில் ஓதப்படும் அல்லிஃப் பைனஹுமாவின் அபத்தங்கள்!

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் __________________________ __________________________ ___http://annajaath.com/?p=2484 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு ...... இந்த பதிப்பை தெளிவாக நமக்கு வழங்கிய சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக........! திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் “”நபிமார்களைப் போல் வாழ்க” என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறி வருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையே மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர். ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வ பாரிஸா வ இப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா …” இவர்களைப் போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள். ## 1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க!## 1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக் கனியை உண்டத ற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள். 3.அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப் ப