Posts

Showing posts from September, 2016

ஹிஸ்புல்லாஹ்க்களா? ஹிஸ்புஷ் ஷய்த்தான்களா?

Image
போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்த உடன் மதீனத்து மாமன்னர் முஹம்மது நபி ( ஸல் ) என்ன செய்தார்கள் ? விளக்கம் கூறினார்கள். போரின் நிர்ப்பந்தத்தை புரிய வைத்தார்கள் . காரியங்க ளில் அவர்களுடன் ஆ லோசனை செய் வீராக ( அல்குர்ஆன் 03:159) என்ற கட்டளைப்படி மக்களிடம் ஆலோசனையும் கேட்டார்கள் . எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் . ஆலோசனை செய்து கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் , ஒரு இயக்கத்தில் , ஒரு ஊரில் ஒரு நாட்டில் தலைவராக இருந்தால் . இந்த ஆலோசனை மிக மிக அவசியம் . நான் எடுக்கக் கூடிய முடிவுதான் சரியாக இருக்கும் என்று நினைப்பது ஒரு முஃமினுக்கு அழகு இல்லை . முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் இறைவனுடைய துாதராக இருந்தாலும் அவர்கள் தன்னிச்சையாக முடிவு செய்யவில்லை . இதைத்தான் இங்கு நாம் படிப்பினையாகவும் வழிகாட்டுதலாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்த தொடருக்கு தரப்பட்ட கால அளவு நிறைவு அடையப் போகிறது . அல்லாஹ் முந்தைய சமுதாயம் மற்றும் நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றை  படிப்பினைக்காக சொல்லிக் காட்டி உள்ளான் .  இறுதித் துாதரின் வாழ்க்கையை சுன்னத்தாக ( பின்பற்ற வேண்டிய வழிமுறையாக ) நமக்கு

வரலாற்றில் இன்று கர்நாடகம். அன்று இதே நாளில் த.மு.மு.க.வின் 2ஆவது போராட்டம் ஏன்? எது?

Image
இன்று செப்டம்பர் 16, 2016இல் கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்து கடை அடைப்பு போராட்டம்.  21 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் ஒரு போராட்டம். அது என்ன போராட்டம் என்று அறியும் முன். இதில்  பிறரை துாண்டி விடுபவன், துாண்டி விட்டவர்களைக் காட்டிக் கொடுத்தவன், கயவன்,  மூளையாகவும்  துாண்டுகோளாகவும்  இருந்தவன்.  சட்டாம்பிள்ளை ஷைத்தான்,  தூண்டி விட்ட  அயோக்கியன்,  முடிச்சுகளில் ஊதும் ஷைத்தான்  என்றெல்லாம் உள்ள து.   அவன் யார்? அவன் பெயரை வெளியிடுங்கள் என்று யாரும் கேட்காதீர்கள். முடிவில் கூறி உள்ளதை மட்டும் செய்யுங்கள் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.  இன்று  கர்நாடகத்தில் காவேரித் தண்ணீர் பெயரால் கலவரத்தைத் துாண்டி முஸ்லிம்களுக்கு பாதிப்புகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பின்னணியில் இருப்பவன் பி.ஜே.பி.க்காரன் என்பது வெட்ட வெளிச்சம். அன்று  பின்னணியில் இருந்தவன் யார் ? முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையை, வாலிபத்தை கெடுத்து நடுத் தெருவில் விட்டவன் யார்? என்று கேட்காதீர்கள். கடைசியில்  கூறி உள்ளதை மட்டும் செய்யுங்கள் புணரமைக்கப்பட்ட   த.மு.மு.க.   சார்பில்   1