Posts

Showing posts from July, 2011

பொய்யர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வால் அழிக்கப்பட வேண்டும்.

லுஹா பொய் சாட்சி சொன்னதை, பொய் சத்தியம் செய்ததை, முபாஹலாவிலிருந்து அவரது   சகாக்களோடு பின் வாங்கி விட்டு நாம் பின் வாங்கியதாக செய்தி வெளியிட்டதை நாம்   கூறிய வழியில்  நீங்கள் யாரும் மறுக்கவில்லை.   அதன் மூலம் சாஜிதுர்றஹ்மானும். அன்சாரி முஹம்மதுவும் மர்வானும் மற்றுமுள்ள   அனைத்து த.த.ஜ.வினரும் லுஹா பொய் சாட்சி சொன்னவர், பொய் சத்தியம் செய்தவர்,   முபாஹலாவிலிருந்து அவரது சகாக்களோடு பின் வாங்கி விட்டு நாம் பின் வாங்கியதாக   பொய் செய்தி வெளியிட்டவர் என்று சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி விட்டீர்கள்.   அதே வழியில்தான் இதையும் நாம் அணுக விரும்புகிறோம்.   மேலப்பாளையத்தில் நடந்துள்ள மோசடியில் ஈடுபட்டுள்ள கபூர், சாதிக், அக்பர் உட்பட   அனைவருமே த.த.ஜ.வினர்தான். இதற்கு ஆதாரமாக அவர்களது உறுப்பினர் கார்டை நம்மால்   காட்ட முடியாது. அதனால்தான் சொல்கிறேன்.   மேலப்பாளையத்தில் வியாபாரம் என்ற பெயரால் நடந்துள்ள மோசடியில் ஈடுபட்டுள்ள மூல   பிதாக்கள் அனைவரும் த.த.ஜ.வினர்தான் என்பது உண்மையாக இருந்தால்உண்மையை   வெளியில்கொண்டு வந்த பழுலுல் இலாஹிக்கு யா அல்லாஹ் நீ அருள் புரிவாயாக.   மோசடியாளர்களுக்கும்

கிறிஸ்தவ கோயிலில் ஜவாஹிருல்லாஹ்

ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்தார் என்பது உண்மையானால்   அதற்குரிய ஆதாரத்தை வெளியிடட்டும். ஒட்டு மொத்த சமுதாயத்தையும் திரட்டி   அவருக்கு எதிராக போராட தயார். பத்திரிக்கைச் செய்திகள் தெளிவாக இல்லை.   நடந்தது என்ன ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ கோயிலில் விழா   நடக்கிறது. அந்த விழாவில் ஒரு சமூக நல்லிணக்க நிகழ்ச்சியும் ஏற்பாடு   செய்திருக்கிறார்கள். அதில் கலந்து கொள்ள அனைத்து சமூக பிரமுகர்களும் உயர்   அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில்   தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்திருக்கிறார்கள்.   இது இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சியே தவிர இஸ்லாத்திற்கு   எதிரான செயல் அல்ல.   உமர் (ரலி) அவர்கள் தனது ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ கோயிலுக்குச் சென்றார்கள்.   பாதிரியார்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும்   கிளம்பினார்கள்.  பாதிரியார்கள் கிறிஸ்தவ கோயிலிலேயே தொழும்படி கூறினார்கள்.   பிற்காலத்தில் உமர் தொழுத இடம் என்று எனது சமுதாயத்தவர்கள் உரிமை கொண்டாடி   விடக் கூடாது எ

ஃபித்ரா தொகையை, ஜக்காத் நிதியில் கரைத்த அண்ணன் ஜமாஅத்! - அப்துல் முஹைமின்

Image
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.. ரமலான் இதோ நெருங்கி விட்டது; அண்ணன் ஜமாஅத்தினர் தங்களின் ஃபித்ரா வசூல் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் ஃபித்ரா தொகையில் ஒரு பகுதியை என்ன செய்கிறார்கள் என்று நாம் மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். ஆனாலும் மக்களின் மறதி  இவர்களுக்கு  ஒரு வரப்பிரசாதமாகும். கடந்த ஆண்டு ஃபித்ரா தொகையில் ஒரு பகுதியை ஜகாத் நிதியில் கரைத்தார்கள். அதையொட்டி நாம் கடந்த  20-10-10 அன்று அண்ணன் ஜமாஅத்தினரை நோக்கி கீழ்கண்ட கேள்விகளை வைத்தோம். அடுத்த ரமளானும் வந்துவிட்டது. இன்னும் பதிலைக் காணோம்..? அந்த கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு- அப்துல்முஹைமின். ''நீங்கள் எந்த வகைக்கு வழங்குகிண்றீர்களோ அந்த வகைக்கு மட்டுமே செலவிடப்படும்'' இது ஒவ்வொரு வசூல் வேட்டையின் போதும் அண்ணன் ஜமாஅத் அடிக்கும் ஸ்டான்டாகும். ஆனால் உண்மை நிலவரமோ பெரும்பாலும் நேர்முரனாகத் தான் இருக்கும். சுனாமி நிதியில் தனது இயக்கத்தவருக்கு  சீருடை, உணர்வுக்கு ஒரு தொகை, இவ்வாறாக சுனாமித் தொகையில் ஒரு பங்கு பினாமியாக போனதாக பரவலாக குற்றச்சாட்டு அந்த நேரத்தில் எழுந்ததை ம

வக்காலத்து வாங்குபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டு வேலையாட்கள் பற்றி மோசடி குற்றச்சாட்டு   வருகிறது. அதில் ஒருவரைப் பற்றி மட்டும் சம்பந்தமில்லை என்று ஒரு சாரார்   கூறுகிறார்கள். அப்படியானால் என்ன அர்த்தம். மோசடி குற்றஞ்சாட்டப்பட்ட இருவரில்   ஒருவருக்கு சம்பந்தம் உள்ளது என்று உறுதியாக கூறுகிறார்கள் என்றே அர்த்தம்.   *குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும் மஸ்ஜிதுர்றஹ்மானில் வேலை செய்யும் லுஹா, மசூது ஆகிய இரண்டு த.த.ஜ. மவுலவிகள்   மீது குற்றச்சாட்டுக் கூறியுள்ளோம். த.த.ஜ.விலுள்ளவர்களோ லுஹாவுக்கு மட்டும்   வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாடியானால் த.த.ஜ.வின்   மவுலவிகளில் ஒருவரான மசூது ஆலீமை மோசடி கும்பலைச் சார்ந்தவர் என்று ஒப்புக்   கொள்கிறார்களா? லுஹாவுக்கு மட்டும் வக்காலத்து வாங்குபவர்கள் தெளிவுபடுத்த   வேண்டும். குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்.   இரண்டு முறை கொட்டுப் படமாட்டான் பொய் சாட்சி சொல்லக் கூடியவன். பொய் சத்தியம் செய்யக் கூடியவன். பொய்யாக   முபாஹலா செய்யக் கூடியவன். முபாஹலாவிலிருந்து பின் வாங்கி விட்டு எதிர் தரப்பு   வரவில்லை என வஞ்சகம் இல்ல

லுஹாவும் முபாஹலாவும்.

த . த . ஜ . வை சார்ந்த பலர் கடுமையாக சாபமிட்டுக் கொண்டிருக்கின்றனர் . வரவேட்கிறேன்   அந்த காபத்துக்கு உரியவன் நான் என்றால் அது என்னை வந்து சேரட்டும் . இல்லை எனில்   அவர்களுக்கே திரும்ப செல்லட்டுமாக ஆமீன் . வார்த்தை விளையாட்டால் பொய் சத்தியம்   செய்யலாம் பொய்யாக முபாஹலா செய்யலாம் என்ற கொள்கை உடையவர்களில் லுஹாவும்   ஒருவர் . இதை இன்று எழுதவில்லை 9 ஆண்டுகளுக்கு முன்பே ஆதாரத்துடன் எழுதி   அடையாளம் காட்டி உள்ளோம் . அதை மீண்டும் உண்மைப்படுத்தியுள்ளார் லுஹா .   ஒரே பள்ளிவாசலில் வேலை செய்பவர்கள்தான் .   நாம் மஸ்ஜிதுர்றஹ்மானில் கதீபாக வேலை செய்யும் லுஹா இமாமாக வேலை செய்யும்   மசூது யூசுபி ஆகிய இருவர்களின் பெயர்களை குறிப்பிட்டே எழுதி இருந்தோம் . இரண்டு   பேருமே தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் என்ற ஒரே அமைப்பில் இருப்பவர்கள்தான் . ஒரே   பள்ளிவாசலில்தான் வேலை செய்கிறார்கள் . இரண்டு உத்தமர்களின் பெயரால் அல்லவா   முபாஹலா அழைப்பு வந்திருக்க வேண்டும் . இரண்டு பேரின் பெயரால் அல்லவா மறுப்பு   அறிக்கை வந்திருக்க வ