நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? என்ற குர்ஆன் வசனத்திற்கு சரியான விளக்கம் எது?



நடந்து  விட்ட  விஷயங்களில்  ஏற்பட்டு  விட்ட  தப்புத்  தவறுகளை  ஒப்புக்  கொள்வது  என்பது  மட்டும்தான்  உண்மையாளர்களின்  அடையாளமாக  மனிதர்கள் கருதுகிறார்கள்.  நடக்கப்   போகிற  விஷயங்களில்  அளிக்கும்  வாக்குறுதிகளிலும் உண்மையாளராக  இருக்க  வேண்டும்  என்பதுதான்  அல்லாஹ்வின்  சட்டமாகும். அதைத்தான் 61:2 வசனம் கூறுகிறது.

நான்  ஜிஹாதில்  ஈடுபடுவேன்  என்று  இன்றைய  மனிதர்கள் குறிப்பாக இளைஞர்கள்  வாக்குறுதி  அளிக்கலாம்.  காரணம்  அதன்  விளைவுகளைத்   தெரியாமல்  அது  என்ன  மாதிரியான  சோதனைகளைத்  தரும்  என்று    அறியாமல்  புரியாமல்  அளிக்கும்  வாக்குறுதிதான்  இவை.


ஸஹாபாக்கள்  வாக்குறுதி அளித்தார்கள். எப்படிமார்க்க விஷயத்தில் என்ன  மாதிரியான  சோதனைகள்  வரும்  என்று  அறிந்து புரிந்துதான்  வாக்குறுதி  அளித்தார்கள்.  யாரிடம்  வாக்குறுதி  அளித்தார்கள் என்பதை இந்த 61:2 வசன விளக்கத்தில் கணலாம். 

இந்த ஆண்டு 2019 பிப்ரவரியில் 61:2 வசனத்தை   ஆதாரமாகக்  காட்டி தஃவா செய்ய ததஜ செயலாளராக இருந்த  செய்யது இபுறாஹீம் தகுதியற்றவர் என்று பலர் எழுதி இருந்தார்கள்.  குறிப்பாக இன்று எம்மை இப்லீஸ் என கடுமையாக விமர்சிப்பவர்களும் இந்த ஆயத்தை ஆதாரமாகக் காட்டி செய்யது இபுறாஹீம் தஃவா செய்ய  தகுதியற்றவர் என்று எழுதி இருந்தார்கள்.  

அது தவறான கருத்து குர்ஆன் ஹதீஸுக்கு முரணானது என சுட்டிக் காட்டி. அவர்கள் கருத்துக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து நாம் பதில் போட்டோம்.   அதை நளினப்படுத்தி மீண்டும்  தருகிறோம்.

அரபு
  இலக்கணப்படி  பேசத்   தெரியாத   எம்மைப்  போன்றவர்கள்  இந்த வசனத்தில்  மேலோட்டமாகத்  தெரியும்  அர்த்தத்தைக்  கூறலாம்.  அரபு  இலக்கணப்படி  பேசவும்  எழுதவும்   தெரிந்த  அறிஞர்களும்  மேலோட்டமாகத்  தெரியும்  இதே  அர்த்தத்தையே  விளக்கமாகக்  கூறுவது  சரியா? இது சம்பந்தமாக உள்ள கருத்துக்களையும்  உண்மை விளக்கம்  என்ன? என்பதையும் பார்ப்போம்.

61:2    வசனப்படி   குர்ஆன்  ஹதீஸ்களை ஓரளவு தெரிந்துள்ளவர்கள்  அவற்றை தமது நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தாதவர்கள் அவர்களுக்குத்  தெரிந்த அந்த குர்ஆன் ஹதீஸ்களை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி இஸ்லாமிய பிரச்சாரப்  பணி செய்யக் கூடாது.


தான் செய்யாமல் இருந்து கொண்டு  மக்களுக்குச்  சொல்வது  மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட   செயல். ஆகவே  தொழாதவர்  பிறரை  தொழும்படி  ஏவக்   கூடாது.  பீடி,  சிகரட்,  குடி  போன்ற  கெட்ட  பழக்கம்   உடையவர்  அதன்  தீமைகளை  எடுத்துச்  சொல்லி  அதை   விட்டும்  தடுக்கும்  பிரச்சாரத்தை  செய்யவே  கூடாது    என்று  பெரும்பாலானவர்கள்  சொல்கிறார்கள்.

யாராக  இருந்தாலும் அவர்களிடம் சில தவறான சிறிய பெரிய தீமையான  கெட்ட செயல்கள் இருக்கத்தானே செய்யும்.  அது போல் யாராக  இருந்தாலும் அவர்களிடம்  நல்ல  செயல்கள்  இல்லாமல் இருக்காதே? 

ஒருவர் சில தவறுகளைச் செய்கிறார் என்பதற்காக மற்றவர்களுக்கு  தஃவா செய்யும்  தகுதியை இழக்கிறார்  என்றால் உலகில் யாரும் எக்காலத்திலும் பிரச்சாரம் செய்ய முடியாதே? இப்படிக் கேட்டால் அதற்கு சிலர் தரும் பதில் என்ன? ஒரு இயக்கத்தின் வலை தளத்தில் உள்ளதைத்தான் தர உள்ளேன்.. அந்த இயக்கப் பெயரை போட்டால் நோக்கம் திசை மாறிப் போய் விடும். ஆகவே கருவை மட்டும் காண்போம்.


ஒருவர்  எந்த  அமலை  செய்யாமல் இருக்கிறாரோ  அந்த  அமலைப்  பற்றி மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதிதான் அவருக்கு இல்லையே தவிர. தானே கடைப்பிடித்து  வரும்  நல்ல அமல்களை எடுத்துச் சொல்ல அவருக்கு தகுதி உள்ளது  என்கிறார்கள்.

இப்படிப்  பார்த்தால்  ஜகாத்  மற்றும்   தர்மங்கள்  வாங்கும்  நிலையில்   உள்ளவர்கள் ஹஜ் செய்ய முடியாதவர்கள்  அதை  செய்யும்படி  ஏவ  முடியாது. 

வசதி  இருந்து ஜகாத்   மற்றும்  தர்மங்கள்  வழங்கி ஹஜ் செய்தவர்கள்  தான்  அந்த  அமலை  ஏவ  முடியும்  என்ற  நிலை  வரும்.  ஆகவே  மார்க்கத்தை  அறிந்துள்ளவர் அவற்றை தனது நடைமுறையில் செயல்படுத்த முடியவி்ல்லை அல்லது   செயல்படுத்தவில்லை,  என்றாலும். அவர்   அடுத்தவருக்கு எத்தி வைக்கலாம்..

அப்படியானால் நீங்கள்  செய்யாததை  ஏன்  சொல்கிறீர்கள்?  என்ற   வசனத்தின்   நிலை  என்ன? 

இப்படியான  ஏதாவது  ஒரு  குர்ஆன்  வசனத்திற்கு  விளக்கம்  கேட்டால்.  நமக்கேன் வம்பு  என  நழுவும் பெரும்பாலான  நல்ல(?)  நழுவல் ஆலிம்களிடம்  இருந்து  வரும்   பதில்  என்ன?  தெரியுமா?

ஸபப்   நுஸுல்   பார்க்கனும்   என்பதுதான். (ஸபப்    காரணம்.  நுஸுல்- இறக்கி)  அதாவது  இறக்கி  அருளப்பட்ட  காரணங்களைப்  பார்த்துதான்   விளக்கம்  சொல்ல  முடியும்  என்பார்கள்.  சரியான  பதில்  தான்.  அதே  மாதிரிதான்  இந்த  ஆயத்துக்கும்  இறக்கி  அருளப்பட்ட  காரணங்களை  அறிந்து    விளக்கம்   சொல்வதே  சரியானதாகும்.

மனிதர்கள்  தம்மை  உண்மையாளராக  ஏற்றுக்  கொள்ள  வேண்டும்  என்றுதான்  எல்லாரும்  விரும்புகிறார்கள்.  அதனால்  மனிதர்களிடம்  உண்மையாளராகக்  காட்ட  கடுமையாக  முயற்சி  செய்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். 

ஆனால்  அல்லாஹ்விடம்  யாரும்  தம்மை   உண்மையாளராகக்  காட்டி  வெற்றி  பெற  முடியாது.  அல்லாஹ்விடம்  உண்மையாளராக  நடந்து   கொண்டால்தான்  வெற்றி  பெற  முடியும்.

நடந்து  விட்ட  விஷயங்களில்  ஏற்பட்டு  விட்ட  தப்புத்  தவறுகளை  ஒப்புக்  கொள்வது  என்பது  மட்டும்தான்  உண்மையாளர்களின்  அடையாளமாக  மனிதர்கள்  கருதுகிறார்கள். 

நடக்கப்
   போகிற  விஷயங்களில்  அளிக்கும்  வாக்குறுதிகளிலும்  உண்மையாளராக  இருக்க  வேண்டும்  என்பதுதான்  அல்லாஹ்வின்  சட்டமாகும்.

நான்  ஜிஹாதில்  ஈடுபடுவேன்  என்று  இன்றைய  மனிதர்கள் குறிப்பாக இளைஞர்கள்  வாக்குறுதி  அளிக்கலாம்.  காரணம்  அதன்  விளைவுகளைத்  தெரியாமல்  அது  என்ன  மாதிரியான  சோதனைகளைத்  தரும்  என்று  அறியாமல்  புரியாமல்  அளிக்கும்  வாக்குறுதிதான்  இவை.

ஸஹாபாக்கள்  வாக்குறுதி அளித்தார்கள். எப்படி? மார்க்க விஷயத்தில் என்ன  மாதிரியான  சோதனைகள்  வரும்  என்று  அறிந்து புரிந்துதான்  வாக்குறுதி  அளித்தார்கள்.  யாரிடம்  வாக்குறுதி  அளித்தார்கள்.  

அல்லாஹ்விடம் வாக்களித்தார்கள்.  அதில் பெரும்பாலானவர்கள் வாக்குறுதியை நிறைவேற்ற தயாராக ஆனார்கள்.  சிலர் வாக்குறுதியை நிறைவேற்ற தயாராக ஆகவில்லை.  யாரெல்லாம் தயாராக இருக்கவில்லையோ அவர்களை நோக்கி இறக்கப்பட்ட வசனம்தான். லிம தகூலுான மா லா தFப்அலுான

 لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ
 

நீங்கள்  செய்யாததை  (செய்ய இயலாததை)  ஏன்  சொல்கிறீர்கள்?  என்று.

இந்த  வசனம்  எதற்கு  அருளப்பட்டது?  இதன் அடுத்துள்ள வசனங்கள் என்ன கூறுகின்றன? எதைச்  செய்வதாகச்  சொல்லி  விட்டு  நபித்  தோழர்கள்  செய்யாமல்  இருந்தார்கள்? அதை கவனிக்க வேண்டும்.

யா  அல்லாஹ்  எங்களுக்கு  ஜிஹாதை  கடமையாக  ஆக்கு  என்று   நிறைய  நபித்  தோழர்கள்  சொல்லிக்  கொண்டிருந்தார்கள் . ஜிஹாதை  கடமையாக  ஆக்கியதும்  என்ன  சொன்னார்கள். ரப்பனா லிம கதப்த ஃஅலைனல் ஃகிதால

رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ ۚ


எங்கள் இறைவா! எங்களுக்கு போர் (யுத்தம்) செய்வதை ஏன் கடமையாக (விதியாக- சட்டமாக) ஆக்கினாய்? லவ்லா அஃக்கர்தனா இலா அஜலின் ஃகரீ(பின்)ப்


 لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍ‌

சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் தந்திருக்கக் கூடாதா ( தாமதப்படுத்தி  பிற்படுத்தி  தவணை  தந்து)  இருக்கக்  கூடாதா?  என்று  கேட்டார்கள்.

குர்ஆனின்  ஒரு  வசனத்திற்கு  இன்னொரு  வசனம்  விளக்கமாகும்  என்ற  அடிப்படையில்  இந்த  61:2  வசனத்திற்கு  4:77 தான்  விளக்கமாகும்   என்பதை   தந்து விட்டோம்.   61:2  வசனத்திற்கு அடுத்துள்ள வசனங்களையும் பாருங்கள்.

61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.

61:4. எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.

61:2 க்கு  அடுத்துள்ள இந்த வசனங்கள்  ஜிஹாது சம்பந்தமாக அருளப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரமாக உள்ளன. 

இதன் பிறகும்,  நீங்கள்  செய்யாததை (செய்ய இயலாததை)  ஏன்  சொல்கிறீர்கள்?  என்ற வசனத்திற்கு  மேலோட்டமாகத்  தெரியும்   அர்த்தத்தையே  விளக்கமாகக்  
கூறுவார்கள் என்றால், அவர்கள் யார்?

குர்ஆனின் ஒரு  வசனத்திற்கு   இன்னொரு  வசனம் கூறிய  விளக்கத்தை நிராகரிப்பவர்களே! அதாவது அல்லாஹ்வின் விளக்கத்தை நிராகரிப்பவர்களே!

இது 2004லேயே நாம் எழுதியதை தழுவியதுதான். கடந்த ஆண்டும் 2018 ஏப்ரல் 11ல் அல்தாபி விஷயத்தில் 2004ல் எழுதியதை மீள் பதிவு செய்து இருந்தோம்.  கடின வார்த்தைகளுடன்  இப்பொழுதும்  மீள் பதிவு முடிந்தவரை நளினமான செய்கிறோம்.

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) புகாரி (3461)




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.