2:20 இருளா இருள்களா? இருள் என்று ஒருமையாகப் பேசுகிறோம் அல் குர்ஆன் இருள்கள் என்கிறதே ஏன்?

2:20  வது வசனத்தின் வார்த்தைக்கு பார்க்கும் முன்  இருள் என்று மக்கள்  ஒருமையாகப்  பேசும்போது  அல் குர்ஆன் இருள்கள் என்கிறதே ஏன்இருளா இருள்களா? எது சரி என்பதை முதலில் பார்ப்போம்
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/220.html
அல்லாஹ் திரு குர்ஆனில் ஒளியைப் பற்றிக் கூறும்போதுஅனைத்து இடங்களிலும் ஒளி என்று ஒருமையாகக் கூறுகின்றான்.

ஆனால் இருளைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் 'இருள்கள்என்று பன்மையாகக் கூறுகின்றான்

இருள் என்று ஒருமையாகப் பேசுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கும்போதுமக்களின் பேச்சு வழக்கிற்கு மாற்றமாக பன்மையாகக் கூறியிருப்பதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து கிடக்கின்றது.

ஒளியை ஒரே நிறத்தில் நாம் பார்த்தாலும் அது ஏழு வண்ணங்களின் தொகுப்பாகும். இந்த வண்ணங்களின் ஊடுறுவும் ஆற்றல் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகும்.

உதாரணமாகசூரியனிலிருந்து வரும் ஒளியில் அனைத்து நிறங்களும் உள்ளன. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அலை நீளம் உண்டு. அலை நீளம் குறைவாக உள்ள ஒளிஊடகத்தினால் அதிகமாகச் சிதறடிக்கப்படுகிறது. அலை நீளம் அதிகமாக உள்ள ஒளிஊடகத்தினால் குறைவாகச் சிதறடிக்கப்படுகிறது.

சில வண்ணங்கள் குறுகிய தொலைவுடன் நின்று விடும். இன்னும் சில வண்ணங்கள் அதை விட சற்றுத் தொலைவுடன் நின்று விடும்.

ஒவ்வொரு நிறமும் அதன் அலை நீளத்திற்கேற்ப ஊடுறுவாமல் தடுக்கப்படும்போது அந்த நிறத்தைப் பொறுத்த வரை அது இருளாகின்றது. மூன்று நிறங்கள் தடுக்கப்பட்டு மற்ற நிறங்கள் நம்மை வந்தடைந்தால் அங்கே மூன்று இருள்கள் ஏற்பட்டுள்ளன என்று பொருள்.

ஒரு அறிவிப்புப் பலகையில் சிவப்புமஞ்சள்நீலம் மூன்று நிறங்களில் எழுதப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பலகையின் அருகில் நின்று பார்க்கும்போது மூன்று நிறங்களில் எழுதப்பட்டதையும் நம்மால் வாசிக்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் சென்று பார்க்கும்போது நீல நிற எழுத்தை நம்மால் பார்க்க முடியாது. அந்த இடத்தில் வெளிச்சம் இருந்தாலும் நீல நிறத்தைப் பொறுத்த வரை இருளாகி விடுகின்றது.

இன்னும் சற்றுச் தொலைவுக்குச் சென்றால் மஞ்சள் நிறமும் தடுக்கப்பட்டுசிவப்பு நிற எழுத்து மட்டுமே கண்களுக்குத் தெரியும். அந்த இடத்தில் வெளிச்சம் இருந்தாலும் நீலம்மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களைப் பொறுத்த வரை இரண்டு இருள்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இவ்வாறு நிறங்களின் அலை நீளத்திற்கு ஏற்பஅவை ஊடுறுவுவது தடுக்கப்படுவதால் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு இருள் ஏற்பட்டுபல இருள்கள் ஏற்படுகின்றன.

எனவே இருள் என்று ஒருமையில் கூறாமல்இருள்கள் என்று பன்மையாகத் திருக்குர்ஆன் கூறுவது மிகப் பெரிய அறிவியல் சான்றாக உள்ளது.

அதுபோல் ஆழ்கடலில் ஏற்படும் இருள்களைப் பற்றியும் 24:40 வசனத்தில் திருக்குர்ஆன் விளக்கமாகக் கூறுகிறது.

ஒருவன் கடலுக்குள் மூழ்கும்போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன் கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

பட்டப்பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளிசிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர்.

சூரியனின் வெளிச்சத்தில் ஊதாகருநீலம்நீலம்பச்சைமஞ்சள்ஆரஞ்சுசிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.

சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது.

சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது.

இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும்போது அந்த ஒளியைப் பொறுத்த வரை இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும் முழுமையாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்கு நிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

"கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும்போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது'' என அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார்.

இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும்பூமியின் மேற்பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விடபட்டப்பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பதுகுர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

2:17, 2:19, 2:20, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 10:27, 13:16, 14:1, 14:5, 17:78, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11 இவையே அந்த வசனங்களாகும்.


يَكَادُ - யகாது

சமீபமாகிறது


الْبَرْقُ - அல்  பர்ஃகு

மின்னல்

يَخْطَفُ - யஃக்தFபு 

பறிக்கிறது

أَبْصَارَ- அப்ஸார
பார்வைகள்

هُمْ- ஹும் 

أَبْصَارَهُمْ - அப்ஸாரஹும்  

அவர்களுடை பார்வைகள்


كُلَّمَا - குல்லமா

போதேல்லாம்

أَضَاءَ - அழாஃஅ

ஒளியூட்டியது

لَهُم - லஹும்

அவர்களுக்கு


مَّشَوْا - மஷவ்
நடந்தார்கள்

فِيهِ - Fபீஹி

அதில்

وَ -   

 இன்னும் - மேலும் - அன்றி

إِذَا - இதா(ரா) 

போது - ல் -ட்டால்- போது - என்றால் 


أَظْلَمَ - ஃஅழ்லம

இருள்கள்

عَلَيْ-அலை
மீது - மேல்

هِمْ-ஹிம்
அவர்கள்

عَلَيْهِمْ - அலைஹிம்
அவர்கள் மீது 

قَامُوا -ஃகாமூ 

நின்றுவிடுகிறார்கள்
(இகாமத் சொல்லும் போது கத் காம திஸ்ஸலாஹ் என்பதில் வரும் காம என்ற வார்த்தையில் உள்ளது தான் இது)


وَ - மேலும்

لَوْ- லவ் 
இருந்தால்

شَآءَ - ஷாஃஅ
நாடி

وَلَوْ شَاءَ اللَّـهவ லவ் ஷாஃஅல்லாஹு 

அல்லாஹ்  நாடியிருந்தால்

لَذَهَبَ - லத(ர)ஹப

போக்கிவிடுவான் -போக்கியிருப்பான்.

بِ - பி - 

கொண்டு - மீது - யும்

سَمْعِ- ஸம்ஃஇ
செவி-  கேள்விப் புலன்

هِمْ- ஹிம்
அவர்களுடைய
بِسَمْعِهِمْ - பி ஸம்ஃஇஹிம்  

அவர்களுடைய கேள்விப் புலன்

وَ -     
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி   

اَبْصَارِ-அப்ஸாரி
பார்வைகள்


هِمْ- ஹிம்
அவர்களுடைய

وَأَبْصَارِهِمْ -  வஃஅப்ஸாரி ஹிம்  

மேலும் அவர்களுடைபார்வைகள்



إِنَّ - இன்ன
நிச்சயமாக  - திண்ணமாக - உறுதியாக


اللَّـهَ - அல்லாஹ்


عَلَىٰ - அலா
மீது - மேல்



كُلِّ - குல்லி 
எல்லா - அனைத்து - ஒவ்வொன்றின் -


شَيْءٍ - ஷய்ஃஇன்

பொருள்


قَدِيرٌ  - ஃகதீ(ருன்)ர்
ஆற்றல் உடையவன்

இணைத்து ஓதுவோம்.

يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ ۖ كُلَّمَا أَضَاءَ لَهُم مَّشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا ۚ وَلَوْ شَاءَ اللَّـهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ ۚ إِنَّ اللَّـهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ


யகாதுல்   பர்ஃகு யஃக்தFபு  அப்ஸார ஹும்  குல்லமா அழாஃஅ லஹும் மஷவ் Fபீஹி வ  இதா(ரா) ஃஅழ்லம அலைஹிம்  ஃகாமூ வ லவ் ஷாஃஅ ல்லாஹு லத(ர)ஹப பி ஸம்ஃஇஹிம்  வஃஅப்ஸாரி ஹிம்  இன்னல்லாஹ அலா குல்லி ஷய்ஃஇன்  ஃகதீ(ருன்)ர்

2:20. அவர்களின் பார்வைகளை மின்னல் பறிக்கப் பார்க்கிறது. (அது) அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும்போது அதில் நடக்கின்றனர். அவர்களை இருள்கள்303 சூழ்ந்து கொள்ளும்போது நின்று விடுகின்றனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களின் செவியையும்பார்வைகளையும் போக்கியிருப்பான். எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். PJ

அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடும் பேரொளியுடன் மின்னல் வெட்டுகிறது. அது ஒளியுமிழும் போதெல்லாம் அவர்கள் அதன் துணையினால் சற்றே நடக்கிறார்கள். மின்னல் அடங்கி, அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்று விடுகிறார்கள். அல்லாஹ் நினைத்தால் அவர்களுடைய செவிப்பறைகளைக் கிழித்து, பார்வைகளைப் பறித்து விடுவான். திண்ணமாக அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆதிக்கப் பேராற்றல் உடையவன். (அதிரை ஜமீல்)


அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம்அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும்பார்வைகளையும் போக்கிவிடுவான்நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.( ஜான்- அன்வாருல் குர்ஆன்)


அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம்அதில் (அவ்வொளியில்) அவர்கள் நடக்கிறார்கள்அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், அவர்களின் பார்வைகளையும் போக்கிவிடுவான்நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன் (மலிவு பதிப்பு)


அம்மின்னல் அவர்களது பார்வைகளைப் பறித்திட முனைகின்றது. அவர்களுக்கு அது வெளிச்சம் தரும் போதெல்லாம்அதில் (வெளிச்சத்தில்) அவர்கள் நடக்கின்றனர்அவர்களின் மீது இருள் சூழ்ந்து கொள்ளும் பொழுது (நிலை குலைந்து) அவர்கள் நின்றுவிடுகின்றனர் மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களின் கேட்கும் ஆற்லையும் பார்வைகளையும் போக்கி விடுவான்நிச்சயமாக அல்லாஹ் அனைத்து பொருள்ளின் மீதும் ஆற்றல் பெற்றவன் ( பஷாரத்)


(தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால்அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்து கொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வைகளையும் போக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன். அப்துல் ஹமீது பாகவி


அவர்களுடைய பார்வைகளைப் பறிப்பது போல் (பயங்கரமாக) மின்னல் வெட்டுகிறது. அவர்களுக்கு அது (கொஞ்சம்) ஒளிதரும் போதெல்லாம் அதில் (சிறிது தூரம்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். மேலும்இருள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்போது நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலன்களையும்பார்வைப் புலன்களையும் முழுமையாகப் பறித்திருப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவனாய் இருக்கின்றான். (IFT)


அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகின்றதுஅது அவர்களுக்கு ஒளி தரும்போதெல்லாம்அதில் நடக்கிறார்கள். மேலும் அது அவர்களுக்கு இருளாகிவிட்டால் நின்றுவிடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுடைய செவிப் புலனையும்அவர்களுடைய பார்வைகளையும் போக்கிவிடுவான்நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றல் உடையவன். (சவூதி)


2:20. அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப்  பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம்மின்னல்) அவர்களுக்கு ஒளி தரும்போது , அவர்கள் அதில் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன் இம்தாதி)





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.