Posts

Showing posts from November, 2020

2:84 ஊரா? நாடா? வீடா? ஆய்வுடன் மொழி பெயர்ப்புகளை படித்தீர்களா?

Image
இவற்றில்  எது சரி?  என்கிறது உங்கள் ஆய்வு? இந்த வசனத்தில்  தியாரிகும்     என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.  இதற்கு  1.அன்வாறுல் குர்ஆன், 2. ஸலாமத், 3.மலிவு பதிப்பு, 4.திரீயெம் ஆகிய நான்கு பதிப்பகத்தார்  உங்கள்  நாடுகள் என்று மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.  1. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT,   2.  அதிரை ஜமீல் ஆகியோர் ஊர் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.  1. ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி   2. P.J.   3. K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி ,  4. ஜான் டிரஸ்ட்,  5.பஷாரத்  6.உமர் ஷரீப் காஸிமி  7. றஹ்மத் 8. அல்-மதீனா அல்-முனவ்வரா 9.  தாருஸ்ஸலாம் ,   ரியாத்   ஆகிய 9 வெளிியீடுகளிலும்  உங்கள் வீடுகள் ( இல்லங்கள்)     என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.  தார் என்பது  ஊர், நாடு,  வீடு, மறுமை வீடு, இவ்வுலகம் மறு உலகம்  என்று  இடத்துக்கு தக்கவாறு பல பொருள்கள் தரக் கூடிய வார்த்தைதான்.    இந்த வசனத்தின்  இந்த இடத்தில்  வீடு என்பதே பொருத்தமான மொழி பெயர்ப்பு. என்பது நமது கருத்தாகும். இந்த இடத்தில் (இந்த வசனத்தில்)  எது சரியானது பொருத்தமானது என்று நீங்களும்  ஆய்வுடன் மொழி பெயர்ப்புகளை படியுங்கள்.  அல்லாஹ்வின் அருளை பெறுங்க

மூபிகா பற்றி நாம் எழுதியது பொய்யா?

Image
மூபிகா பற்றி நாம் எழுதியது உண்மை அல்ல  பொய் என்பது மூபிகா ஆதரவாளர்கள் நிலை.  மூபிகா பற்றி நாம் தெளிவாக தெரிந்தே விளங்கியே எழுதி உள்ளோம்.  அது மட்டுமல்ல மூபிகா பற்றி நாம் எழுதியது உண்மை என்பதற்கு  மூபிகா ஆதரவாளர்களிடமிருந்தே  ஆதாரத்தை தருவோம் இன்ஷாஅல்லாஹ்.   இப்பொழுது   ரசூலுல்லாஹ்வை புகழப்படுவதாக சொல்லப்படும்  சுப்ஹான மவ்லுாதின் 3வது  பைத்தான  ஸ ல்லூ அலாகைரில் இபாத்தில் உள்ளதைப்  பார்ப்போம்.   இதில் மவுலுாதை எழுதியவர்  என்ன  சொல்கிறார்?    யா மன்தமாதா வஜ்தரம்  என்கிறார்.      இதற்கு என்ன அர்த்தம்? இதற்கு எமது மொழி பெயர்ப்பை தரவில்லை. TJM ஸலாஹுத்தீன் ரியாஜி, A.E. முஹம்மது அப்துர் றஹ்மான் போன்ற ஜ.உ.சாவினரின் அங்கீகாரம் பெற்ற, மவ்லிது ஓதக் கூடியவர்கள் செய்துள்ள  மொழி பெயர்ப்புகளையே  தருகிறோம் .   يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்து விட்டவனே! துன்புறுத்தி கொள்ளையடித்தவனே! அக்கிரமம் செய்து பாவம் செய்தவனே  குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!  என்று மவ்லிதை எழுதியவர் மக்களை கூப்பிடுகிறார். கூப்பிட்டு என்ன சொல்கிறார். تُبْ - துப்   மனந்திரும்பு -  பாவ  மன்ன

மேலப்பாளைம் ஆயிஷா ஸ்டோர் அதிபர் மைதீன் அவர்கள் மரணம்

Image
1987 முதல் 1991 வரை தவ்ஹீது சகோதரர்கள் சந்திக்கும் இடங்களில் ஒன்றாக இருந்தது  மேலப்பாளைம் ஆயிஷா ஸ்டோர்.  அந்தக் கடை உரிமையாளர் மைதீன் அவர்கள்  இன்று காலை இறந்து  விட்டார்கள்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/11/blog-post_27.html அவரது தம்பி  புகாரி இருந்த கடை அதிபர்  மைதீன் பாய் என்றாலும்,   ஆயிஷா ஸ்டோர்  புகாரி   என்றால்தான்  தவ்ஹீது சகோதரர்களுக்குத் தெரியும்.  ஒட்டு மொத்த ஊரே எதிர்த்த அந்தக் காலத்தில் கூலிக்கு மாரடிப்பவர்கள் இல்லாத    தவ்ஹீது சகோதரர்கள் கூடும் இடங்களில் ஒன்றாக இருந்தது ஆயிஷா ஸ்டோர் என்பதை மறக்க முடியாது.   

2:83 இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொல்லும் மொழி பெயர்ப்புகளும்

Image
ஒன்றுக்கு  மேற்பட்ட  வார்த்தைகளை   இணைக்கக் கூடிய    வாவு கள்     இடம்   பெற்ற   வசனங்களில் ஒன்றாக  இந்த 2:83 வசனம் உள்ளது.  இதில் 9  வாவு கள்  இடம் பெற்றுள்ளன.  https://mdfazlulilahi.blogspot.com/2020/11/283.html و      வாவு     இடத்துக்கு தக்கவாறு   பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்றாகும்.   ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை ,  பெயர்களை இணைக்கக் கூடிய இடங்களில்  ம் என்ற பொருள் தரும்.  இதற்கு உம்மைப் பொருள் என்பார்கள்.  ஒரு வசனத்தின் துவக்கமாகவோ முடிவாகவோ வரும்போது   பொருள் தராது .  ஒரு வசனத்தின் துவக்கம் முடிவு என விளங்கிக் கொள்ள வேண்டும் .  இது போன்ற  விரிவான   விபரங்களை    2:5  முதல் பல  வசனங்களில் விளக்கி இருக்கிறோம்.  ஒவ்வொரு வாவு க்கு இன்னும் மேலும் என்று மொழி பெயர்த்தே ஆக வேண்டும்.  யாருமே மொழி பெயர்க்காமல் விட்டதில்லை. அப்படி மொழி பெயர்க்காமல் விடுவது யூதக் கொள்கை என்ற கருத்துடையவர்களின் மேலான கவனத்திற்கு.  இந்த வசனத்தை வார்த்தைக்கு வார்த்தையாக (சொல்லுக்குச் சொல்லாக) மொழி பெயர்த்த உமர் ஷரீப் அவர்கள் 8 இடங்களில் (இ) இன்னும் என்று  மொழி பெயர்த்துள்ளார்.  வசன நடையில்