Posts

Showing posts from April, 2007

மணாளர் காதர் முஹைதீன். மணாளி சுமையா

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். ஷரீஅத் சட்டப்படி மாப்பிள்ளையிடம் பெண் வரதட்சணை வாங்கிடும் புரட்சித் திருமண அழைப்பிதழ். அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி, இன்ஷh அல்லாஹ் ஹிஜிரி1428 ரபிய்யுல் ஆகிர் பிறை 18 (06-05-2007) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 102. செய்குல் அக்பர் தெரு சுல்தான் அப்துல்லாஹ், தண்டன் ஹமீது பாத்திமா ஆகியவர்களின் மகனும் எனது மைத்துனருமாகிய S.A. காதர் முஹைதீன் மணாளர் J.A.Q.H. மேலப்பாளையம் முன்னாள் செயலாளர் தண்டன் Nஷக் மன்சூர், சிமிட்டி சுலைஹா ஆகியவர்களின் மகள் T.S. சுமையா மணாளியை ரூபாய் 10,000 பெறுமான தங்க நகையை மஹராக வழங்கி திருமணம் செய்து கொள்கிறார். இத்திருமணத்தின் சிறப்பம்சங்கள். திருமணத்தின் போது வரதட்சணை என்ற பெயராலும், திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயராலும் பெண் வீட்டாரிடம் பணம், பொருள்கள் கேட்டு வாங்கக் கூடாது. இந்த உயரிய கொள்கையுடன்தான் மாப்பிள்ளை மணப் பெண்ணுக்கு மஹர் நகை வழங்குகிறார். இது மட்டுமன்றி வரதட்சணை கொட

பாக்கரின் மிரட்டலுக்கு அடி பணிந்தார் பி.ஜெ.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.9.4.07 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பாக்கர் பி.ஜெ. ஆகியவர்களுக்கிடையிலேயான ராஜினாமா? நாடகத்தின் பின்னணி பற்றி நாம் எதுவும் எழுதாமல் இருந்தோம்.  பின்னணி பற்றி முன்பே எழுதி இருந்தால் பி.ஜெ.யால் முச்சந்தி சிரிக்க வைக்கப்பட்ட பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர் என்ற கீழ் தர முடிவை பி.ஜெ. இவ்வளவு விரைவாக எடுத்திருக்க மாட்டார்.  நமது எழுத்தைக் காட்டியே பாக்கரை ஏமாற்றி இருப்பார். பாக்கரும் பி.ஜெ.யை மிரட்ட முடியாத நிலைக்கு வந்திருப்பார். பிராடு பி.ஜெ.யின் முடிவுகள் பித்தலாட்டமானது என்பதும் இவ்வளவு சீக்கிரம் அம்பலமாகி இருக்காது.  பாக்கர் ராஜினாமாவை ஒட்டி பி.ஜெ. வள வள கொழ கொல  என ஒரு விளக்கெண்ணை விளக்கம் வெளியிட்டார். அது அப்பட்டமான பொய் பித்தலாட்டம் என அறிவுள்ளவர்கள் அனைவரும் விளங்கிக் கொண்டார்கள்.  எங்களுக்கு நாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டோம். கலீல் ரசூல் விஷயத்திலும் இந்த அடிப்படையில்தான் அவர் ராஜினாமா செய்தார் என கப்ஸா அடித்தார். பி.ஜெ. அடித்தது கப்ஸா இல்லை என்றால் இதே விளக்கத்தை கலீல் ரசூல் ராஜினாமாவின் போதும் கூறி இருப்பார். இது பி.ஜெ.யின்

மேலப்பாளையம் மும்தாஜ் கொலை நியாயம்தானா?

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 17-03-2007 சனி இரவு 8 மணிக்கு மேலப்பாளையம், அல்லாமா இக்பால் (பசார்) திடலில் கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி தலைமையில் இஸ்லாமிய எழுச்சிப் பொதுக் கூட்டம் என்ற தலைப்பில் பிரச்சார பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்பாரா விதமாக இந்தக் கூட்டத்தின் தலைப்பு மும்தாஜ் கொலை நியாயம்தானா? என்றாகி விட்டது. என்ன காரணம் என்பதற்கு கீழ் காணும் இதழ்களில் உள்ள செய்திகளே காரணம். இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தக்வா பள்ளி இமாம் M.A.S அஹ்மது மைதீன் உஸ்மானி அவர்கள் மீலாது விழாக்கள் என்ற தலைப்பிலும் தலைமை உரை ஆற்றிய கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி மும்தாஜ் கொலை நியாயமா? என்ற தலைப்பிலும் மவுலவி J.S. ரிபாஈ (மாநிலச் செயலாளர்:- த.மு.மு.க.) அவர்கள் மும்தாஜ் கொலை அநியாயமே! என்ற தலைப்பிலும் சிறப்புப் பேருரையாற்றிய பெரம்பலூர் நாஸர் அலி கான் (தலைவர்:- முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜார்ஜா மண்டலம்.) அவர்கள் இஸ்லாத்தில் அரசியல் நிலை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியின் சி.டி.க்கள் 2 பாகங்களாக வெளியாகியுள்ளன.