Posts

Showing posts from November, 2017

சமுதாயமோ, சமுதாய உதவியோ தேவை இல்லை என்று மனிதனால் தனித்து வாழ முடியுமா?

மனிதனுக்குத் தான் விஞ்ஞான முன்னேற்றத்தின் நவீன கண்டு பிடிப்புகள் தேவை. அவற்றில் அத்தியாவசிய தேவையான வாகனங்கள் போன்றவை தேவை. அது மட்டுமல்ல டெலிபோன், ரேடியோ , டேப் ரிக்கார்டர் , டி . வி , வீடியோ , கம்யூட்டர் , லேப்டப் , டேப்லெட், கேஸட், சி.டி, பென் டிரைவ் என  விஞ்ஞான வளர்ச்சியின்  புதிய புதிய கண்டுபிடிப்புகள் பயனுள்ளவைகளாக வருகின்றன. அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல் பொழுது போக்காக பயன்படுத்த   அத்தனையும் தேவை என உள்ளான் . மிக மிக அடிமட்டத்தில் உள்ள ஏழையாக இருந்தால் குறைந்த பட்சம் ஆடை தேவை என்ற நிலையில் உள்ளான் .  மற்ற உயிரினங்களுக்கு ஆடை தேவையா ? ஆடை அணிந்து கொண்டுதான் அவைகள் நடமாட வேண்டுமா ? என்றால் . இல்லை தேவையும்   இல்லை . அந்த ஆடை அணியும் கலை நுட்பம் அவைகளுக்குத் தெரியவும் செய்யாது . அடிமட்டத்தில் உள்ள ஏழைக்கு மானத்தை மறைக்க ஒரு சாதரண ஆடை கிடைத்தால் போதும் என்ற தேவையில் உள்ளான்.  வசதியுள்ளவர்களுக்கு அந்த ஆடையிலும் நவீன கண்டு பிடிப்புகள் தேவை. அந்த தேவைகளை ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அவர்களாகவே நிறைவேற்றி கொள்

முபாஹலா பின் வாங்கியது யார்? நெல்லிக்குப்பம் தாஜுதீன் அவர்கள் பி.ஜே.க்கு அனுப்பிய கடிதம்.

Image
முபாஹலா செய்ய மேலப்பாளையம் வந்ததாகவும் பழுலுல் இலாஹியாகிய நாம் வரவில்லை என்றும்  பி.ஜே. தனது ஆன் லைனிலும் போட்டு வைத்துள்ளார். ஆங்காங்கே பேசியும் வருகிறார். அந்த கிளிப்புகளை பலர் பரப்பியும் வருகிறார்கள்.  பின் வாங்கியது யார்? என்பது சம்பந்தமாக  நெல்லிக்குப்பம் தாஜுதீன் அவர்கள்  18.9.05 அன்று பி.ஜே.க்கு கடிதம் அனுப்பி இருந்தார்கள். அதையே பதிலாக உங்கள் முன் வைக்கிறேன். நெல்லிக்குப்பம் தாஜுதீன்  அவர்கள் பி.ஜே.க்கு அனுப்பிய கடிதம் பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 18.9.05             அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.க. சொத்துக்களை அநியாயமாக அபகரித்து அனுபவித்து வரும் பி.ஜைனுல்ஆபிதீன் அவர்களே!      நீங்கள் களவாடிய பத்திரி-க்கையில் பகிரங்க அழைப்பும் பின் வாங்கிய பொய்யர்களும் என்று எழுதியுள்ள பித்தலாட்ட செய்தியைக் கண்டேன்.    இதற்கு முன் பகிரங்க அழைப்பு என்ற உங்களது பிராடுகள் , பித்தலாட்டங்கள் அடங்கிய அழைப்பு வெளியிட்டிருந்தீர்கள்.    உடனே , 14-09-2005 அன்று நீங்கள் பேச இருக்கும் மேலப்பாளையம் பசார் திடல் பொதுக் கூட்ட மேடைக்கே மனைவி மக்களுடன் முபாஹலா செய்ய வந்து விடுக

பணம் வாங்கவில்லை என்று பி.ஜே. சொல்வது பொய்யா? பி.ஜே. பணம் வாங்கினார் என்றுள்ள லுஹா கணக்கு பொய்யா?

Image
முபாஹலா சம்பந்தமாகப் பேசிய பி.ஜே.  மேடைகளில் பேசி விட்டு பணம் வாங்கவில்லை என்று பொய் சொல்கிறார். இவ்வளவு பேர் இருக்கிறார்களே என்று புதிய தம்பிகளை சாட்சிக்கு அழைக்கிறார்.  ஆயிரம் பேர் கூடினால் ரகசியமாக பணம் தருகின்றவன் ஒருவனாகத்தான் இருப்பான். நானே ரகசியமாக தந்தபோது இப்படித்தான் மேடையில் சொல்வார். நான் வாய் மூடி இருப்பேன். தேவை இல்லாமல் சத்தியம் செய்து பணம் வாங்கவில்லை என்று சொன்னதாலும் தன்னை மனிதப் புனிதராகக் காட்ட பிறர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை புனைந்ததாலும் தான் அடையாளம் காட்டினோம். அவரின் புதிய கண்டுபிடிப்பு. போக்கு வரத்து செலவு என்ற பெயரால் கூட்டம் நடத்தும் கிளையிடமிருந்து தலைமை வாங்கி விட வேண்டும்.  தலைமையிலிருந்து பேச்சாளருக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்பொழுது அவர் பேசி விட்டு பணம் வாங்கினார் என யாரும் சொல்ல முடியாது என்று கூறி செயல்படுத்தி வருகிறார். த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்ட்டின் ரமழான் நிகழ்ச்சிக்கு லட்சக் கணக்கில் வாங்கினார் என்பதெல்லாம் பெரிய இடத்து விஷயம். மேடைகளில் பேசி விட்டு பழுலுல் இலாஹியிடம் ஐயாயிரம் பத்தாயிரம் பணம் வாங

அல்லாஹ் அளித்த சிறந்ததற்கு பகரமாக தாழ்ந்ததை மட்டமானதை மாற்றிக் கேட்டவன் யார்?

Image
பசி வந்து விட்டது மனிதன் சாப்பிட வேண்டும் என எண்ணுகிறான் . உடனே சாப்பிட முடியாது . அடுப்புகளை அமைத்து பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்துதான் சாப்பிட வேண்டும் . வித விதமான உணவு வேண்டும் . வித்தியாசமான உணவு வேண்டும். பர்கர் வேண்டும். படைத்த இறைவனான அல்லாஹ்வே சாப்பிட தயாராக உள்ள உயர் தரமான உணவை தந்தாலும் வேறு விதமான உணவு வேண்டும் என்று கேட்டான் மனிதன். ….  ஒரே விதமான உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். ஒரே வகையான உணவைக் கொண்டு பொறுமையாய் இருக்க முடியாது ... .. பூமி விளைவிக்கின்ற பூமியில் முளைக்கக்கூடிய கீரை( வகை) கள் , வெள்ளரிக்காய் , கோதுமை ,   பூண்டு , பருப்பு , வெங்காயம்... ஆகிய வை  வேண்டும். இப்படி அல்லாஹ் அளித்த சிறந்த உணவு க்கு பகரமாக மிகத் தாழ்ந்ததை மட்டமானதை மாற்றிக் கேட் டான் மனிதன்.  இதை திரு குர்ஆன் 2:  57, 61, 7:160, 20:80)  ஆகிய வசனங்களில் காணலாம் . அல்லாஹ் அளித்த மிகச் சிறந்த உணவான அந்த உணவையே விமர்சித்தான் மனிதன். அல்லாஹ் அளித்த மிகச் சிறந்த உணவை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் .