Posts

Showing posts from July, 2020

முதன் முதலாக கச்சை கட்டி நின்ற பெண்மணி யார்?

Image
இன்று கச்சை கட்டி நிற்கிறான் என்றால் எதிர்த்து நிற்கிறான் என்று பொருள். அன்று அந்தப் பெண்மணி  கச்சை கட்டி நின்றது ஏன்? எதற்காக? இன்று நாம் ஆற்றிய உரை நாம் ஹஜ்ஜுடைய மாதத்தில் இருக்கிறோம்.  ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.  இம் மாதத்தில்  ஹாஜிகள் செய்யும்  ஹஜ் என்ற வணக்கத்திலும். நாம் செய்யும் வணக்கங்களும்  இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சுற்றியே இருக்கிறது. https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_37.html )இணைப்பில் உள்ளது விண்வெளியில் இருந்து மெக்கா நகரை துபாய் செயற்கைகோள்  2013ல் படம் பிடித்து அனுப்பியது) இப்ராஹீம் (அலை) அவர்களுக் கு யாருக்கும் அளிக்காத மாபெரும் தனிச் சிறப்புக்களை அல்லாஹ் வழங்கி இருக்கிறான்.  அதில் ஒன்று உலகில் அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை புனர் நிர்மானம் செய்கின்ற மகாத்தான பணியை பாக்கியத்தை இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் வழங்கினான். وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ

பெண் குழந்தை ஹாஜர் பிறந்துள்ள நற்செய்தி

Image
முகர்ரமா,  முனவ்வரா, அரFபா,   ஸஃபா, மர்வா வரிசையில்  ஹாஜர் எனது மகள் காயங்கட்டி நிஃமத், எனது மருமகன் சுல்தான் துர்ருல் முக்தார் ஆகிய தம்பதிகளுக்கு   பெண் குழந்தை பிறந்துள்ளது  என்ற நற்செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இன்று (29-07-2020) புதன்  காலை  இந்திய நேரம் 4 மணிக்கு  பிறந்துள்ளது.  ஹஜ், உம்ரா  அமல்களில் ஒன்று ஸபா மர்வாவுக்கு இடையில் ஓடுவது. இந்த அமல்   அன்னை  ஹாஜர் அவர்கள் தண்ணீர் தேடி ஓடியதை நினைவாக கொண்டு உள்ள வணக்கமாகும்.  ஆகவே ஹஜ் செய்யும் மாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஹாஜர் என்று பெயர் வைத்துள்ளோம். அல்லாஹ் பரகத் செய்வானாக ஆமீன். https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_29.html மக்கள் நடைமுறையிலும் பேச்சு வழக்கிலும் உள்ளபடி ஹாஜரா என்றே பெயர் முடிவு செய்யப்பட்டது. P.J,  K.F.N,  நாஸர்அலிகான் போன்றவர்கள். ஹதீஸில் உள்ளதை நினைவூட்டினார்கள். உடனே திருத்திக் கொண்டோம். அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆளரவமற்ற வனாந்திரத்தில் தமது மனைவியையும் , குழந்தையாக இருந்த மகன் இஸ்மாயீலையும் இப்ராஹீம் ( அலை ) விட்டு வந்தார்கள் . ( அ

கிறிஸ்தவ ஃபாஸ்டராக இருந்த M.C முஹம்மத் மரணம்.

Image
ஸ்ரீவைக் குடம் டாக்டர் மீரான் அவர்களுடைய உடன் பிறந்த கடைசி சகோதரர் டாக்டர் பிலால்  மரணம். இரண்டு பேரின் மரணச் செய்திகளும் ஒரே நேரத்தில் நமக்கு வந்துள்ளன கிறிஸ்தவ ஃபாஸ்டராக இருந்தவர் கிறிஸ்துராஜ்.  1995 ஜனவரி 21 ஆம் தேதி மேலப்பாளையத்தில் நடந்த திரு குர்ஆன் மாநாடு 22ஆம் தேதி நடந்த தடா எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் சொன்னது. இஸ்லாத்தில் குறை கண்டு விமர்சிக்கும் நோக்குடன் குர்ஆனை படித்தேன்.  இஸ்லாமிய மார்க்கத்தை என் வாழ்வியலாக ஏற்றுக் கொள்ள வைத்தது திரு குர்ஆன். கிறிஸ்துராஜாக இருந்த நான்  M.C முஹம்மத் ஆக ஆனேன் என்றார்.  தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வந்தார். இன்று  இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்.  JJ டெய்லர்ஸ் உறவினரும் பிரச்சனையான கால கட்டங்களில் நமக்கு துணை நின்றவர். தவ்ஹீது மாநாடுகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியவர்.  ஸ்ரீவைக் குடம் டாக்டர் மீரான் அவர்கள். அவருடைய உடன் பிறந்த கடைசி சகோதரர் டாக்டர் பிலால்  அவர்கள் கடந்த பல வருடங்களாக சவுதியில் டாக்டராக பணி புரிந்து வந்துள்ளார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்ப

2:56. நீங்களுக்காக, நீங்களுடன், நீங்களுடைய, நீங்களில் என்று மொழி பெயர்த்தால் என்ன ஆகும்?

Image
பின்னர்   –   பின்   –   பின்னும் -   பிறகு என்று மொழி பெயர்க்கப்படக் கூடிய சொற்களில்  இரண்டு   இந்த வசனத்தில்  இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன.  ஒரு   இடத்தில்   து(ஸு)ம்ம  என்பதும்  ஒரு இடத்தில்    பஃஹ்தி   என்பதும் இடம் பெற்றுள்ளது.  Fப  என்பதையும் இந்த பொருளில்  மொழி பெயர்ப்பார்கள்.   இவற்றுக்குள்ள வித்தியாசம் என்ன? https://mdfazlulilahi.blogspot.com/2020/07/256.html து(ஸு)ம்ம  என்பது ஹர்பு - எழுத்து, இணைச் சொல் என்பார்கள். இதை தனியாக  ( பிறகு என்று) மொழி பெயர்க்க முடியாது.  து(ஸு)ம்ம  என்ற எழுத்துடன்   பஅ(ஸ்)துனாகும்   என்ற வார்த்தை சேர்ந்தால் தான் பிறகு   உங்களை நாம்  எழுப்பினோம்  எனும் பொருள் வரும். து(ஸு)ம்ம  என்பது  வ  ( வாவு),   Fப  மாதிரியானது தான்.  வ,   Fப வு டன் சேர்ந்தது தான்.  து(ஸு)ம்ம  என்பது.   இன்னும் மேலும் என்பது போலத்தான்.  இந்த பொருளுடன் கால தாமதத்தையும் பிறகு என்பதையும் சேர்த்து பொருள் தரக் கூடியது தான்  து(ஸு)ம்ம  என்பது.  Fப  வுக்கும் பிறகு என்ற பொருள் வரும் என்று பார்த்தோம். இந்த  Fப  வுக்கும்   து(ஸு)ம்ம  வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?