Posts

Showing posts from June, 2008

நெல்லை த.மு.மு.க வின் கல்வி உதவி.

Image
ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு நெல்லை நகர த.மு.மு.க.சார்பாக நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி. டவுண் முகம்மது அலி தெருவில் நகரத் தலைவர் ஆ.ளு.காதர் தலைமையில் நடைபெற்றது. அனைத்து சமுதாய மாணவ, மாணவியர் அதிக அளவில் பயன்பெற்றனர்.அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், துணைத் தலைவர் மைதீன் பாருக், துணைச் செயலாளர் அன்சர் ஆகியோர் உரையாற்றினர்.

குவைத்தில் தத்தளிக்கும் 9 தமிழர்கள் - மீட்கப்போராடும் த.மு.மு.க.

Image
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர். Source: http://tmmkgulf.blogspot.com/2008/06/9.html பிழைப்புத் தேடி குவைத்திற்குச் சென்ற தமிழர்கள் ஒன்பது பேர் முதலாளியின் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல் அவரிடமிருந்து எப்படியோ ரகசியமாகத் தப்பியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாய் சோறு தண்ணியின்றி நடு ரோட்டில் அலையும் அவர்களை இந்தியத் தூதரகமும் அலட்சியப்படுத்தி விடவே, நாடு திரும்ப வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட த.மு.மு.க.வினர் அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்கியிருப்பது ஆறுதலான விஷயம். கடலூர்மாவட்டம் சாத்தப்பாடியைச்சேர்ந்த ரவிச்சந்திரன்,உதயகுமார், முருகன்,கருணாகரன், அப்துல்கனி மற்றும் திருவாரூர் மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்த மணிவண்ண பாண்டியன்,ராஜாராமன், முருகானந்தம்,இளையராஜா ஆகியோர்தான் குவைத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த அப்பாவி ஜீவன்கள். நெல்லைப் பக்கம் தாழையூத்தைச் சேர்ந்தவர் பீர் மரைக்காயர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயலாளராய் இருந்து பலவிதமான பொதுநலப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் பிழைப்பிற்காக குவைத் சென்றார். அங்கு பஸ் டிரைவராய்

தாழையூத்து த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்.

Image

சகீனா

Image
sakeena marks in sslc exam 494 manilathil 2 nd place palay yai serntavar.paditha palli sarah tuker girls higer secondary(melnilai palli)school. usman khan

ஜூம்ஆ தொழுகையின் சிறப்புகளும் அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்களும்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ... ஜூம்ஆ தொழுகையின் சிறப்புகளும் அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்களும் ஜூம்ஆ நாளின் சிறப்புக்களையும், அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்கள், சிறப்புகள் மற்றும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை இந்த கட்டுரையில் காண்போம். இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு,ஆடு, கோழி,முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதை தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார்.ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில் ! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை. 'ஓருவர் ஜூம்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடையஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில்

மொபைல் போன்கள் - சிறு கேமராக்கள் பெண்கள் எச்சரிக்கை

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி. மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம். குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள

பொது மக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை.

Image
----This guy killed 22 children (boys and girls) and raped some of them aged between 7 yrs to 13 yrs in Iran . He was caught lashed 100 times and hanged.