Posts

Showing posts from February, 2004

ஒழுக்கக் கேட்டில் விஞ்சி நிற்பவர்கள் யார்? பட்டி மன்றத்திற்கு நான் ரெடி பி.ஜே. சவால்.

ஒழுக்கக் கேட்டில் விஞ்சி நிற்பவர்கள் யார்? பி.ஜே. அணியைச் சார்ந்த லுஹா வகையறாவா? பட்டி மன்றத்திற்கு நான் ரெடி நீங்கள் ரெடியா? பி.ஜே. சவால். உண்மை, வணக்கம், கொள்கை, நாணயம் இவை இப்போது இல்லை லுஹாவிடம். இங்கே அன்புடன் விளக்கி உள்ளார் பி.ஜே. பெறுனர்: 04-02-2004 எஸ்.இ.எம். முஹம்மது மஸ்தான், 113ஏ. ஹாமீம்புரம் தெற்கு தெரு, மேலப்பாளையம். அன்புச் சகோதரருக்கு பீ.ஜெய்னுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது. தங்களின் மடல் கிடைத்தது. கடிதத்தில் விளக்கம் அளிப்பதை விட களத்தில் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன். எந்நக் குற்றச்சாட்டையும் நேரடியாகவே சந்திக்க நான் எப்போதும் தயங்கியதில்லை. இப்போதும் எனக்குத் தயக்கம் கிடையாது. லுஹாவாகட்டும் (பீ.ஜெய்னுல் ஆபிதீனாகிய) நானாகட்டும் நீங்களாட்டும் மனிதர்கள் என்ற முiறையில் தவறு செய்பவர்கள் தான், தவறு செய்பவர்களில் குறைந்த தவறு செய்தவர் யார் என்ற அடிப்படையில் தான் எவரைப் பற்றியும் முடிவு செய்ய முடியும். அப்படித் தான் நானும் முடிவு செய்தேன் இதைக் கவனத்தில் கொள்ளாமல் குற்றச்சாட்டு சுமத்துவோர் மலக்குகளாக இருக்க வேண்டும் உங்கள் ஊரில் லுஹா சுலைமான்

ரத்தம் கக்கி சாவார்கள் ஃபத்வா கொடுத்தார் லுஹா.

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மான்நிர்ரஹீம் தேதி : 01.02.2004 மதிப்பிற்குரிய வெளிநாட்டில் வாழும் மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாத்தார்களுக்கு, ராவுத்தர் மேலத்தெருவைச் சார்ந்த இமாம் ( 00971504601699- imamcivil@gmail.com , Ahamed.Imam@dewa.gov.ae , ) எழுதுவது, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ், சமீபத்தில் மவ்லவி சம்சுல் லுஹா செய்திருக்கின்ற இறையச்சமில்லாத காரியத்தை உங்களுக்கு தெரியப் படுத்தவே இக்கடிதம் எழுதுகிறேன். 26.01.2004 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் கமிட்டி பொதுக்குழு கூட்டமும், தர்பியா என்ற மார்க்க பயிற்சி விளக்கமும் நடைபெறப்போவதாக ஒரு அழைப்பிதழ் 25.01.2004 மாலை 4 மணிக்கு எனக்கு நேரில் கொடுக்கப்பட்டது. ராஜ்மஹால் திருமண மண்டபத்தில் நடந்த அந்த கூட்டத்தில் P.J. அவர்களை துணைக்கு வைத்து மவ்லவி சம்சுல் லுஹா நிகழ்த்தி இருக்கிற நேர்மையற்ற செயல்களை சொல்லுவதற்கு முன், நமது தவ்ஹீத் ஜமாத்தார்களே நம்மை விமர்சனம் செய்வார்களே! மற்றவர்கள் நம்மை சிறுமை படுத்தி பேசுவார்களே! அது நமது பிரச்சாரத்தை பெரிய அளவில் பாதிக்குமே! என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் மவ்லவி சம்சுல் லுஹா செய்திருக்கிற இச்செயலை எழுதுவதற்கு முன்னால், இத