அந்தக் கேஸட் விஷயத்தில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கமாலுத்தீன் மதனி மறுக்க வேண்டும் - P.J.

அன்புள்ள சகோதரர் ……………. அவர்களுக்கு P. ஜைனுல் ஆபிதீன் எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கும். என்று துவங்கும் பி.ஜே.யின் கடிதம் JPG பைலாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. குண்டுகள் வெடிப்பதற்கும் கொலைகள் செய்வதற்கும் கொள்ளைகள் அடிப்பதற்கும் இளைஞர்களை ஏவி விட்டு பத்வா கொடுத்த பி.ஜே.க்கு ஆபத்து ஏற்பட்டது. அவரைக் காத்துக் கொள்ள சமுதாயத்திற்கு ஆபத்து என்று கோஷமிட்டு T.M.M.K.ல் வந்து சரண் அடைந்து தஞ்சம் பெற்றார். 

S.K. ஏற்கனவே P.J.யிடம் ராஜினாமா கடிதம் வாங்கி விட்டதால் அமைதியாக இருந்து விட்டார். இதை அறியாதவர்கள். S.K, P.J. இடையே பிரச்சனை என எண்ணி சமாதான முயற்சிகள் செய்தனர்.

அப்படி செய்த சமாதான முயற்சிகளில் ஒன்றுதான் 27-08-1996 செவ்வாய் அன்று நடந்த கூட்டம். அதில் சமாதான முயற்சியாளர்களும் J.A.Q.H.ல் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். த.மு.மு.க. நிர்வாகிகள் யாரும் அதில் கிடையாது. அதில்தான் பி.ஜே. சொல்கிறார் த.மு.மு.க. என்பது என்னைக் காத்துக் கொள்ள போட்டுள்ள நாடகம். நான் காப்பாற்றப்பட்டு விட்டால் த.மு.மு.க.வை விட்டு நான் விலகி விடுவேன். அதுவரை நானும் த.மு.மு.க. போல் டிராமா பண்ணுவேன் என்று. இது நோட்டீஸாக வெளி வந்தது அதை ஒட்டி பி.ஜே. எழுதிய கடிதம்தான் இது. அதில் என்ன சொல்லி உள்ளார்?

நாம் ஜான் ட்ரஸ்ட் அலுவலகத்தில் கூடி T.M.M.K,J.A.Q.H இடையே எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றி விவாதித்து சுமுகமான முடிவுக்கு வந்தோம். அன்று பேசப்பட்டதை ஒலி நாடாவில் பதிவு செய்து J.A.Q.H அமீர் SK அவர்களிடம் மட்டும் யாருக்கும் அதைக் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அமானிதமாக ஒப்படைத்தோம்.


ஆனால் அவர் அந்தக் கேஸட்டை  அவருக்கு வேண்டப்பட்ட மொட்டைக் கடிதம் எழுதுவதை வாடிக்கையாகக் கொண்ட ஒருவரிடம் கொடுத்துள்ளார். அவரும் அதனடிப்படையில் T.M.M.K. நிர்வாகிகளுக்குக் கடிதம் எழுதி எங்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்றுள்ளார். 

மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டது போல் FM மைக் மூலம் பதிவு செய்ததாகக் கூறுவது பச்சைப் பொய் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதை நாம் அறிவுவோம். 

SK வழியாக தவிர வேறு எந்த வழியிலும் அந்த ஒலிப்பதிவு நாடா வேறு யாரிடமும் செல்ல வழியில்லை. 

எனவே நடுவர்களாக இருந்த நீங்கள் இதைப் பற்றி விசாரித்து எனக்கு நல்ல முடிவைக் கூற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

SK யாரிடமும் அதைக் கேட்கக் கொடுக்கவில்லை யென்றால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அதை மறுக்க வேண்டும். அல்லது ஒப்புக் கொள்ள வேண்டும். 

உங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்காமல் ஆவண செய்யும் படிக் கேட்டுக் கொள்கிறேன். 
அன்புடன் 
P. ஜைனுல் ஆபிதீன்

கமாலுத்தீன் மதனி அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுத்தார். 01.05.1997 அன்று நடந்த திருச்சி அரிஷ்ட்டோ ஹோட்டல் கூட்டத்திலும் 38 மவுலவிகள் முன்னிலையில் சத்தியம் செய்தார். 

மேற்கண்ட அந்தக் கடிதத்தை ஜான் ட்ரஸ்ட் மஷுராவில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அனுப்பியதாக 38 மவுலவிகள் சாட்சியாக பி.ஜே. கூறினார். இதில் உள்ளது பி.ஜே. கையெழுத்திட்ட காப்பி அல்ல, ஒரிஜினல். யாருக்கும் அனுப்பப்படாத ஒரிஜினல். இதைப் பார்ப்பவர்களில் 38 மவுலவிகளில் யாராவது இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள். இவர் யார் என்று. 

அந்தக் கேஸட் விஷயத்தில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கமாலுத்தீன் மதனி மறுக்க வேண்டும் என்ற P.J. இந்தக் கேஸட் விஷயத்தில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு  மறுக்காதது ஏன்? 

பி.ஜே.யுடன் பேசிய அந்தப் பெண்  ததஜவின் பிரபலமான  பெண் பிரச்சாரகர்தான் என்று தெரிந்து கொண்டே மேடையில் வந்து டிராமா - நாடகம் ஆடிய ஐவர்க்குழுவையும் அந்தப் பொய்யை உண்மை என்று பரப்பும் ஒவ்வொரு ததஜவினரையும் யா அல்லாஹ் நீ சரியான முறையில் பிடிப்பாயாக.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.