ஏழை பாளை தவறு செய்தால் அவர்கள் வீட்டு மீது கல் வீசுவார்கள். பணம் படைத்தவன் தவறு செய்தால்?

இது இஸ்லாமிய சட்ட குழுமம் இது முஸ்லிம்கள் குழுமம் இதில் எல்லா கட்சியினரும் இருக்கிறார்கள். ஆகவே பிரச்சனைகளை எழுதாதீர்கள். தனி நபர் தாக்குதல் வேண்டாம். மார்க்கம் மற்றும் முஸ்லிம்கள் சம்பந்தமானதை மட்டும் எழுதுங்கள் என்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் ஆயத்து ஹதீஸ்களை மட்டும் வெளியிடுகிறார்கள்.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_47.htm

இவர்கள் வெளியிடும் ஆயத்துக்களை அல்லாஹ் சம்பந்தமில்லாத நேரத்தில் சும்மா, சும்மாதான் அருளினானா? காரண காரியங்களுடன் இறக்கி அருளினானா? அவர்களுக்கு புரியும் பாஷையில் சொல்வது என்றால் சபப் நுஸுல் என்ன?

அபூலஹபின் இரு கைகளும் நாசாமகட்டும் என்ற குர்ஆன் வசனத்தை அன்றைய மக்களில் தனி நபர் தாக்குதல் என்று சொன்னவர்கள் யாராக இருப்பார்கள்?

திருமறையின் ஒவ்வொரு வசனங்களும் ஒவ்வொரு சம்பவங்களையும் பிரச்சனைகளையும் ஒட்டிதான் இறங்கியது. நல்லடியார்கள் செயல்களை ஆதரித்தும் தீயவர்கள் செயல்களை விமர்சித்தும்தான் வசனங்கள் உள்ளன.

மேலே உள்ள தானியத்தை காய்ந்ததாகவும் கீழே உள்ள தானியத்தை ஈரமானதாகவும் வைத்திருந்த வியாபாரியிடம் போய் நபி(ஸல்) அவர்கள் அச்ச மூட்டி எச்சரிக்கை செய்தார்களா?

இல்லை நீங்கள் வெளியிடும் ஹதீஸ்களைப் போல் நபி(ஸல்) அவர்கள் சம்பந்தமில்லாமல் சும்மா அப்படியே யார் மனமும் புண்படாத வண்ணம் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போனார்களா?

பிரச்சனைகளுக்குரிய கேள்வியா? கண்டு கொள்ளாதே என்பதுதான் நபி வழியா?

இஸ்லாம் மனித சமுதாயத்துக்கு அருமருந்து - அல்குர்ஆனும் ஹதீஸும் அருமருந்துகள்  (10:57 41:44) ஆலிம்களாகிய நாங்கள் டாக்டர்கள் என்கிறீர்கள். மாற்றுக் கருத்து இல்லை.

டாக்டராக உள்ள ஒருவர் இந்தா பல் வலி மாத்திரைஇந்தா வயிற்றுப் போக்குக்கு மாத்திரை என்று போகிற போக்கில் மருந்து மாத்திரைகளை சப்ளை செய்து கொண்டு போவாரா?  கால் வலிக்கு தேய்க்கிற காந்தல் தைலத்தை கண் வலிக்காரன் கண்ணில் ஊற்றுவாரா? பிரச்சனை என்ன என்று அறிந்து அதற்குரிய மருந்து கொடுத்தால்தான் டாக்டர்.

நபிக்கு பஷீர்நற் செய்தி கூறுபவர் என்ற பெயர் மட்டும்தான் உண்டா? நதீர்எச்சரிக்கை செய்பவர் என்ற பெயரும் உண்டா? இல்லையா?

தஷ்வந்துக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு சம்பந்தமாக 17;33, 2;179 வசனங்களை மேற்கோல்காட்டி ஒருவர் எழுதி இருந்தார் அருமை.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. முஸ்லிம்களில் இளைத்தவன் முஅத்தின் என்கிற உலக நடப்பைத்தான் முன் மாதிரியாகக் கொண்டும் பின்பற்றியும்    பெரும்பாலானவர்கள்     செயல்பட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.

யாரை முன் மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்? யாரை முன் மாதிரியாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? யாரை பின்பற்ற வேண்டும் யாரை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்?

ஆட்சியாளன் – தலைவன் தப்பு செய்தால் தண்டிக்கக் கூடாது என்கிறது மத்ஹபு  என்று கூறி மத்ஹபுகளை கேலி, கிண்டல் செய்து விமர்சித்தார்கள். இன்று அவர்களின் நிலை என்ன? அவர்கள் தலைவர் விஷயத்தில் மத்ஹபை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் பாவம்.

ஏழை பாளை தவறு செய்தால் அவர்கள் வீட்டு மீது கல் வீசுவார்கள். பணம் படைத்தவன் தவறு செய்தால் கூட இரண்டை கூட்டிக் கொண்டு போய் கொடுப்பார்கள் காணாததற்கு காவலும் காப்பார்கள். இந்த உலக நடப்பைத்தான் அழகிய முன் மாதிரியாகக் கொண்டு இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்மையை போட்டு உடையுங்கள். ஆயத்து ஹதீஸ்கள் சபப் நுஸுலுடன் அருளப்பட்டது போல். காரண காரியங்களை ஒட்டி ஆயத்து ஹதீஸ்களை எழுதுங்கள்.


Comments

shahul said…
தங்களின் பதிவுகள்,மனோ இச்சையை மார்க்கமாக ஆக்கி கொண்ட தலைவர்களுக்கும் அவர்கள் சொல்வதை தலையை ஆட்டி கொண்டு திரியும் ஆட்டு மந்தை கூட்டத்திற்கும் சவுக்கடியாக இருக்கிறது.அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடும் இவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.