இஸ்லாமிய பைலாவுக்கு கட்டுப்படாதவர்கள், எதிரானவர்கள் இஸ்லாமியர்களா?

இயக்க கொள்கைக்கு  எதிராக செயல்படும் முஸ்லிம்களை இயக்கத்தில் இருந்து நீக்கும் முறை சரிதானா?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற ஒரு இயக்கத்தின் ஒற்றுமையை பாதுகாக்க இயக்கத்திற்கு எதிராக செயல்படும் நபர்களை இயக்கத்தில் இருந்து நீக்க   தீவிரம் காட்டும் இந்த பீ.ஜேயும் ததஜ நிர்வாகிகளும் இந்த முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பது ஏன்? ததஜவின் பைலாவிற்கு கட்டுப்பட்டவர்தான் ததஜ ஜமாஅத்தில் இருக்கமுடியும் என்று சொல்லும் பீ.ஜே அவர்கள் அல்லாஹ்வும் அவனுடை தூதரும் ஏற்படுத்தித்தி வைத்திருக்கின்ற பைலாவுக்கு மாறுசெய்தால் இஸ்லாத்தில் இருக்கமுடியாது முஸ்லிமாக இருக்கமுடியாது என்பதை ஏன் சிந்திக்க மறந்தார்? 

முஸ்லிம் என்பவன் யார்? அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுபவன். 

தன்னுடைய இயக்கத்தை,மத்ஹப்பை,கட்சியை கட்டுக்கோப்பாக ஒற்றுமையா கொண்டு செல்ல நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் மனிதர்களாகிய நீங்கள் உருவாக்கிய ஒரு இயக்கம் சீர்குலைந்துவிடக்கூடாது கூட்டம் குறைந்துவிடக்கூடாது யாரும் கொள்கைக்கு மாற்றமாக செயல்படக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்களே மனிதர்களாகிய நீங்கள் உருவாக்கிய கொள்கைக்கு எதிராக செயல்படும் முஸ்லிம்களை இயக்கத்தில் இருந்து,கட்சியில் இருந்து நீக்கி தண்டிக்கின்றீர்களே அதுபோல அல்லாஹ் உருவாக்கிய பைலாவை மீறும் முஸ்லிம்களை தண்டிக்கமாட்டானா? 

முஸ்லிம்களிடையே பிரிவினைகளை உருவாக்கியவர்களை இஸ்லாத்தைவிட்டே வெளியேற்றமாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது.... சிந்திக்கமாட்டீர்களா?.

21:92. நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்.   ஒரே முஸ்லிம் சமுதாயத்தை யார் பிரிக்கிறார் எதற்காக பிரிக்கிறார்கள் என்று யாராவது சிந்தித்துப்பார்த்ததுன்டா?

மத்ஹப் என்ற பெயராலும்,இயக்கங்கள் என்ற பெயராலும்,கட்சிகள் என்ற பெயராலும் ஒரே முஸ்லிம் சமுதாயத்தை பல பிரிவுகளாக பிரிக்கின்றார்கள்.
ஒருவருக்கு ஒருவர் தங்களுக்கு என்று ஒரு கொள்கையை உருவாக்கி கொண்டு அந்த கொள்கையளவில் தனித்தனிய செயல்படுகின்றனர்.இவ்வாறு பிரிந்து செயல்படுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருக்கிறதா? 

42:13. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” -சன்மார்க்கத்தை நிலைநிருத்துங்கள் அதில் பிரிந்துவிடாதீர்கள் என்று அல்லாஹ் நபிமார்களுக்கே கட்டளையிட்டு இருக்கிறான் என்றால் முஸ்லிம்களாக நாம் நமக்கு என்று ஒரு இயக்கத்தை உருவாக்கி அதற்கு கொள்கைகளை உருவாக்கி அந்த கொளைக்கு கட்டுப்பட்டுதான் நடப்பேன் என்று சொன்னால் நாம் முதலில் முஸ்லிமாக இருக்க முடியுமா? அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக செயல்பட்டால் அல்லாஹ்வை நிராகரிக்ககூடிய நிலைக்கு நாம் ஆகிறோமா? இல்லையா? நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம்.

3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்.
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும். 

இன்று முஸ்லிம்கள் அதிகமானவர்களாக இருந்தாலும் இயக்க,மத்ஹப்,கட்சி பிரிவினையின் காரணமாக தங்களின் உரிமையை கூட பெறமுடியாமலும் தங்களுக்கு எதிராக நடக்கும் அநிதிக்கு எதிராக ஒன்றினையாமல் தனித்தனி பிரிவுகளாக போராட்டம் என்ற பெயரில் போராடியும் நீதி பெறமுடியாமல் கோழைகளாக இருக்கிறார்கள்.

30:32. எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.- இன்று இயக்கங்களாக,மத்ஹப்களா,கட்சிகளாக செயல்படுபவர்கள் யாவரும் தங்களிடம் இருப்பதை கொண்டே மகிழ்ச்சி  அடைகிறார்கள்,ஒவ்வொருவரும் தாங்கள் தான் நேர்வழியில் இருப்பதாக எண்ணிக் கொண்டு மகிழ்ச்சி அடைக்கிறார்கள்.

42:14. அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை.. இயக்கவாதிகளாக,மத்ஹப்வாதகிளாக,கட்சிகளாக நீங்கள் ஏன் பிரிந்து செல்கிறீர்கள் என்று முஸ்லிம்களிடம் கேட்டால் மார்க்கத்தை பற்றி பேசுவார்கள் அவர்கள் அல்லாஹ்விற்கு இணைக்கிறார்கள் அவர்களுடன் நாம் எப்படி ஒன்றாக இருக்கமுடியும் என்று சொல்வார்கள் ஆனால் அல்லாஹ் சொல்கிறான் 

2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார்

6:107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.

7:188 நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”-

 நபிமார்களின் பணியே அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது மட்டுமே  காஃபிர் பத்வா கொடுப்பது அல்ல என்பதை விளங்கிக்கொண்டால் யாருக்கும் நெருக்கடி ஏற்படாது.நான் சொல்வதை கேட்டால் மட்டுமே உன்னுடன் இருப்பேன் என்று சொல்வதே வழிகேடு.உங்களுக்குள் மார்க்க காரியங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள்.அல்லாஹ்வின் தூதர் இல்லாத இந்த காலத்தில் குர்ஆன் ஸஹிகான ஹதிஸ் அடிப்படையில் செயல்படுங்கள்... தீர்வு ஏற்ப்படாதபட்சத்தில் தீர்வை மறுமைக்காக ஒத்திவையுங்கள் பிரிவினைகளை ஏற்படுத்தாது ஒற்றுமையாக இருங்கள் அல்லாஹ் மறுமையில் தீர்ப்பு அளிக்கக்கூடியவன் என்பதில் உறுதியாக இருங்கள்  அப்படி இருந்தால் ஏன் பிரிவுகள் வரப்போகிறது?. 

அதை செய்வார்களா செய்யமாட்டார்கள் காரணம் அவர்கள் மார்க்கத்திற்காக பிரியவில்லை தங்களுக்குள் உள்ள பொறாமை காரணமாகவே பிரிந்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.இன்று புதிய புதிய இயக்கங்கள்,மத்ஹப்கள்,கட்சிகள் உருவாகுவதற்கு காரணம் என்ன? இஸ்லாமிய மார்க்கமா? மார்க்கத்திற்காகவா முஸ்லிம்கள் பிரிகிறார்கள் இல்லை இல்லவே இல்லை? 
பின்னர் எதற்காக? 

1.தான் கொண்ட கொள்கையே சரி தான்னுடைய கருத்தே சரி என்று சொல்லக்கூடிய நிலையில் முஸ்லிம்கள் பிரிகிறார்கள்.

2.பதவி ஆசையின் காரணமாக பிரிகிறார்கள்.பதவி ஆசையில் பிரிகிறார்கள் என்றால் நிச்சயமாக அதில் பொருளாதாரம் அடங்கும்.ஆனால் பிரிவுக்கு காரணம் மார்க்க நிலைபாடு சரி இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படும்.

3.உலக காரியங்களுக்காக பிரிதல்.கட்சி மாறுபடுதல் பல கட்சிகளை உருவாக்குதல் ஒரே கட்சியில் இருந்தால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை தனித்தனி கட்சியில் இருந்தால் எந்த கட்சி அட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.அதனையும் நம்பி முஸ்லிம் கட்சிகளை ஆதரிக்கக்கூடிய முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.

4.இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவருவதே நோக்கமாக ஒரு கொள்கையை உருவாக்கிக்கொண்டு முஸ்லிம்களின் ஆட்சியை கொண்டு வந்துவிடவேண்டும் என்ற ஒரே கருத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரா செயல்களை செய்தாலும் சரி முஸ்லிம்  ஆட்சிவரவேண்டும் என்ற எண்ணத்தில் பிரிவுகளை உருவாக்கிக்கொண்டு செயல்படக்கூடய கூட்டமும் இன்று இருக்கிறார்கள்.அவர்கள் சொல்லக்கூடியது என்ன? நாங்கள் தான் முஸ்லிம்களை பாதுகாக்கிறோம் என்பது அவர்களின் அடிப்படை கருத்து அதற்காக உயிரைவிடவும் தயங்க மாட்டார்கள்.அவர்கள் சிந்திக்கமறுக்கிறார்கள் என்ன? இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக செயல்பட்டு இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர முடியுமா? அப்படியே கொண்டுவந்தாலும் அது இஸ்லாமிய ஆட்சியாக இருக்குமா? இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுவது வழிகெடு அந்த வழிகெட்ட கொள்கைக்காக உயிரைவிடுபவன் சொர்க்கம் செல்லமுடியுமா? சிந்திக்கவேண்டாமா?.
  
ஆக பெரும்பான்மை முஸ்லிம்கள் தங்களுக்கு தாங்களே ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு இதுதான் இஸ்லாம் நாங்கள் தான் முஸ்லிம் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு செயல்படக்கூடிய முஸ்லிம்களின் நிலை என்ன?

39:46. “அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!..

6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.

6:153. நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.

3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்

22:78. இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்.

புகாரி 3606 ஹதிஸ்- நீங்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் தலைவரையும் பற்றிப்படித்துக்கொள்ளுங்கள் பிரிந்துவிடாதீர்கள்.ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பது அனைத்து முஸ்லிம்களுக்குமானது யாரும் தனிப்பட்டு பதிவு செய்துகொண்டு உரிமை கொண்டாட முடியாது.

24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

புளியங்குடிஅபுகனிபா
ஜமாஅத்துல்முஸ்லிமீன்
9750617443

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.