இயக்க வெறியுடன் நம்மை ஆடியோவில் விலாசியுள்ள சகோ. உலகப் பிரச்சனை வேறு மார்க்கப் பிரச்சனை வேறு என்ற உங்கள் வாதம் சரியா?

அரபி பணம் அஜமி பணம் என்பதில் கடும் கோபம் அடைந்துள்ளீர்கள். இதை நான் சொல்லவில்லை. உங்கள் கதாநாயகன் லுஹாதான் சொல்லி உள்ளார். இணைப்பாக உள்ள பைல் அவர் எழுதியதுதான். வீடியோவில் 3 லட்சம் என்றும் ஒண்ணரை லட்சம் என்றும் சொன்னவர் லுஹாதான். பனைக்குளம் ஷாகுலுக்கு எழுதிய கடிதத்தில் ஒண்ணரை லட்சம் என்று எழுதியவர் லுஹாதான். அந்தப் பற்றாக்குறை அஹ்மது அல் அஹ்மது தந்த பணத்தில் அல்ல. உள்ளூர் வெளியூர் இருந்து வந்த நன்கொடையில் ஏற்பட்டதாகும் என்று எழுதியவரும் லுஹாதான்.


வீடியோவில் எனக்கு கணக்கு யாரு அஹ்மது அல் அஹ்மதுதான் என்கிறார். பள்ளிக்காக அரபி பணம் தந்து கொண்டிருக்கவே உள்ளூர் வசூல் எதற்கு என்று குறுக்கு கேள்வி கேட்டு கொச்சைப்படுத்தவில்லை.

பொதுவாகப் பணத்தை காணவில்லை என்று சொன்னதும் அவர்தான். காணாமல் போனது உள்ளூர் வசூல் பணம்தான் என்று சொன்னதும் அவர்தான். எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை என்றதும் அவர்தான்.

நீங்களும் லுஹாவும் சொல்லி உள்ள மஸ்ஜிர்றஹ்மானில் உள்ள ஆட்கள் என்பவர்கள் யார்? பிரச்சனையான கால கட்டத்தில் கிட்டே வராமல். சொத்து பில்டிங் என்று சேர்ந்தப் பிறகு வந்து சேர்ந்தவர்கள்தான். லுஹா மோசடி செய்து விட்டார் என்று குற்றச்சாட்டு வைத்தவர்கள். எதிர்ப்புகள் நிறைந்த காலத்தில் களத்தில் நின்ற காலித் சிபகத் மன்சூர் போன்றவர்கள்.

எப்படி எழுதனும் என்ற முறை எனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறேன். எழுதி வைக்கும்போது டோட்டலாக வந்து 3 லட்ச ரூபாய் அடி வாங்குகிறது என்றதும் லுஹாதான். எல்லாவற்றையும் எழுதி வைத்திருந்து முறை தெரியவில்லை என்பதால் பணம் காணாமல் போகுமா?

பல ஆண்டுகள் மதரஸாவில் ஓதியவர். 7 ஆண்டுகள் அரபிக் கல்லுாரியில் பயின்று பட்டம் பெற்றவர். பிறகு அரபிக் கல்லுாரியில் பேராசிரியராக(?) பணியாற்றிவர். காணாததற்கு ஆங்கிலத்தில் B.A. படித்துப் டிகிரி வாங்கியவர். அப்படிப்பட்டவருக்கு எப்படி எழுதனும் என்ற முறை தெரியவில்லை. என்ன ஞாபகம் வருகின்றது தெரியுமா

ஒரு கழுதையைக் கொண்டு போய் அரபிக் கல்லுாரி வாசலில் கட்டிப் போட்டால் 7 ஆண்டுகள் கழித்ததும் அந்தக் கழுதைக்கும் ஸனது கொடுத்து விடுவார்கள் என்று லுஹாவும் பி.ஜே.யும் பேசினார்களே. அந்த பேச்சுதான் ஞாபகத்துக்கு வருகின்றது. அது அனுபவ ரீதியான பேச்சு என்றே எண்ணத் தோன்றுகிறது.

3 லட்சத்தில் ஒண்ணரையை சம்பளமாகப் போட்டுக் கழிக்கணும் என்ற கள்ளக்கணக்குஎஎழுதச் சொன்னது பி.ஜே.தான் என்பது அவரது வாயில் வருகின்றது விழுங்கி விடுகிறார். 


பள்ளிப் பணம் பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று காலித் ஸாஹிப் நோட்டீஸ் போட்டார். உடனே  பணம் காணவில்லை என்று லுஹா எனக்குத்தான் போன் போட்டார். நான் என்ன சொன்னேன். பணத்தை காணவில்லை என்று எழுதி வையுங்கள் என்றேன். பி.ஜே. மாதிரி கள்ளக் கணக்கு எழுதச் சொல்லி ஹாரூண் போன்றவர்களை அனுப்பவில்லை.

சில நாட்கள் கழித்து திரும்பவும் ஏதாவது வழி செய்யுங்கள் என்றார்எப்படித்தான் காணாமல் போனது என்று கேட்டேன். நானும் உங்களை மாதிரி செயல்பட எண்ணினேன். தலைவர்கள் வந்தால் எப்படி உங்கள் வீட்டில் விருந்து வைப்பீர்களோ அது போல் விருந்து வைத்தேன். புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி போன்றவர்களை வைத்து கூட்டம் போடும்பொழுது என் வீட்டில் விருந்து வைத்தேன். அந்த மாதிரிதான் செலவு ஆகி விட்டது என்றார். உடனே எவ்வளவு குறைகிறதோ அதை எனது பெயரால் பற்று எழுதுங்கள் என்றேன்.

அவர் தப்பு செய்திருந்தால் பள்ளி  கமிட்டியினர் சும்மா விட்டிருப்பார்களா? என்று கேட்டுள்ளீர்கள். உங்கள் வாதப்படி கமிட்டி இருந்திருந்தால் பள்ளிப் பணம் யாரிடம் இருந்திருக்க வேண்டும்? பொருளாளரிடம் இருந்திருக்க வேண்டும். வரும் பணங்களை பொருளாளரிடம் கொடுக்காமல் இவரே வைத்திருந்தார் என்பதும் குற்றச்சாட்டாக ஆனது. இது ஊழல் இல்லையா?

அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன பொய்யர் லுஹா என்பதை மறுத்து உங்களால் சத்தியம் பண்ண முடிந்ததா? விபச்சாரம் மற்றும் ஆடியோ விஷயத்தில்தான் உங்களால் சத்தியம் பண்ண முடிந்ததா?

விபச்சாரகன் மீதும் அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன பொய்யர்கள்  மீதும் இயக்க வெறியில் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருள் இறங்குமா? சாபம் இறங்குமா?

இனி உலகப் பிரச்சனை வேறு மார்க்கப் பிரச்சனை வேறு என்ற உங்கள் வாதம் சரியா? என்பதைப் பார்ப்போம்.

உங்கள் அமைப்புத் தலைமை பிறரையும் பிற அமைப்புகளையும் விமர்சித்தார்கள். ஏன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த உம்மத்தவரையும் முந்தைய நபிமார்களையும் விட்டு வைக்கவில்லை. வகையின்றி விமர்சித்தார்கள். அப்பொழுது உலகப் பிரச்சனை வேறு மார்க்கப் பிரச்சனை வேறு என்று பிரித்ததில்லை. 

உங்கள் அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டவர்கள் உலகப் பிரச்சனை வேறு மார்க்கப் பிரச்சனை வேறு என்ற  வாதத்தை வைத்தால், பொய்யர்களான வழி கெட்டவர்களே இப்படி  வாதம் வைப்பார்கள் என்று பதில் கூறினார்கள். காணாததற்கு விளக்கமும் தந்தார்கள். மார்க்கம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை முதலில் விளங்க வேண்டும் என்றார்கள்.

தரை மார்க்கம் கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் என்பார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? தரை வழி, கடல் வழி, ஆகாய வழி என்பதுதான். மார்க்கம் என்றால் வழி என்று அர்த்தம். வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லக் கூடிய மதம் அல்ல இஸ்லாம். அனைத்து விஷயங்களுக்கும் வழி காட்டக் கூடியது. அதனால்தான் இஸ்லாத்தை  மார்க்கம் என்கிறோம். அதாவது வழி காட்டக் கூடியது என்கிறோம்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள அனைத்தும் மார்க்கத்திற்கு, இஸ்லாமிய வழிகாட்டலுக்கு உட்பட்டதுதான். இதுதான் இஸ்லாமிய நெறி. ஒரு தவறைச் செய்பவரிடத்தில் ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்டால் இது உலக விஷயம் தானே? இதில் என்ன பாதகம் ஏற்பட்டு விடப் போகின்றது என்று அவரும் அவரைச் சார்ந்தவர்களும் கேட்கின்றனர்.

ப்படிக் கேட்பதும் சொல்வதும் தப்பான செயலாகும். மறுமையில் நன்மையையோ தண்டனையையோ பெற்றுத் தரக்கூடிய விஷயங்கள் எப்படி உலக விஷயமாக இருக்க முடியும்? என்று கேட்டவர்கள்  உங்கள் இயக்கத்தவர்கள். அந்த இயக்கத்திற்கு என்று வரும்பொழுது இஸ்லாமிய நெறியை விட்டு விட்டு இயக்க வெறியுடன் நம்மை விலாசி உள்ளார்கள். நீங்களும் விலாசி  உள்ளீர்கள்.  

உங்கள் இன்றைய வாதப்படி  உலக விஷயம் மார்க்க விஷயம் என்று இரண்டு வகையாகப் பிரித்தாலும் மறுமையில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது மார்க்க விஷயம் தான். http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_12.html


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.